Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அருள்மிகு சாரதா தேவி திருக்கோயில், கோயம்புத்தூர்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
அருள்மிகு சாரதா தேவி திருக்கோயில், கோயம்புத்தூர்
அருள்மிகு சாரதா தேவி திருக்கோயில், கோயம்புத்தூர்
]
மூலவர் : சாரதா தேவி
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை :
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் :
ஊர் : கோயம்புத்தூர்
மாவட்டம் : கோயம்புத்தூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, பிரதோஷம், சங்கரர் ஜெயந்தி, நவராத்திரி
தல சிறப்பு:
சிருங்கேரி மடத்தில் உள்ள சாரதாம்பாள் கோயிலில் நடக்கும் பூஜை முறைகள் போன்றே இங்கும் நடைபெறுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 8 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சாரதா தேவி திருக்கோயில், ரேஸ் கோர்ஸ்,கோயம்புத்தூர்.
பொது தகவல்:
சாரதா தேவி கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்மன் சன்னதியின் தெற்குப் பக்கத்தில் பால கணபதி, வடக்குப் பக்கத்தில் பாலமுருகன் சன்னதி உள்ளன. விநாயகர் சன்னதியின் தெற்குப் பகுதியில் வடக்கு நோக்கி ஆதி சங்கரரின் சன்னதி அமைந்துள்ளது. தினசரி மூன்று கால பூஜைகள் நடைபெறுகிறது. கோயிலின் தெற்குப் பக்கம் பிரவசன மண்டபம் உள்ளது.
பிரார்த்தனை
தடைபட்ட திருமணங்கள் நடைபெறவும், குழந்தைகள் நன்றாக படிக்கவும் பக்தர்கள் இங்குள்ள சாரதா தேவியை வேண்டிச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள சாரதாதேவிக்கு புது புடவை சார்த்தி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
பிரதான தெய்வமாக விளங்கும் சாரதா தேவியின் திருமேனி ஐம்பொன்னால் ஆனது. பின் வலக்கையில், தேன் குடத்தையும், முன் வலக்கையில் சின் முத்திரையும், முன் இடக்கையில் புத்தகத்தையும் ஏந்தி அமர்ந்த நிலையில் சாந்த சொரூபிணியாக அருள்பாலிக்கும் அம்பாளைக் காண கண்கோடி வேண்டும். சாரதா தேவி கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்மன் சன்னதியின் தெற்குப் பக்கத்தில் பால கணபதி, வடக்குப் பக்கத்தில் பாலமுருகன் சன்னதி உள்ளன. விநாயகர் சன்னதியின் தெற்குப் பகுதியில் வடக்கு நோக்கி ஆதி சங்கரரின் சன்னதி அமைந்துள்ளது. தினசரி மூன்று கால பூஜைகள் நடைபெறுகிறது. கோயிலின் தெற்குப் பக்கம் பிரவசன மண்டபம் உள்ளது. சிருங்கேரி மடத்தில் உள்ள சாரதாம்பாள் கோயிலில் நடக்கும் பூஜை முறைகள் போன்றே இங்கும் நடைபெறுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். சிருங்கேரி சென்று வழிபட இயலாதவர்களுக்கு இக்கோயில் ஒரு வரப்பிரசாதம்! சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, பிரதோஷம், சங்கரர் ஜெயந்தி என பல விழாக்கள் நடந்தாலும், இத்தலத்தின் தலையாய பெருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவாகும். மகா அபிஷேகத்துடன் நவராத்திரி பூஜைகள் ஆரம்பமாகிறது. அதற்குப் பின்னர் மூன்று நாட்கள் லட்சார்ச்சனையும், அதையடுத்து 4 நாட்கள் தேவிமகாத்மியம் பாராயணமும் நடைபெறும். நவமியன்று சத சண்டி யாகமும் தசமியன்று வித்யாரம்ப பூஜைகளும் நடைபெறும். இக்கோயிலில் சாரதாம்பாள் சரஸ்வதி சொரூபமாக அருள்பாலிக்கின்றாள். குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாக இங்கு வித்யாரம்ப பூஜைகளில் கலந்து கொண்டால், அவர்கள் நன்றாக படிப்பார்கள் என்பது நம்பிக்கை! வருடா வருடம் நடைபெறும் இப்பூஜையில் பெருவாரியான குழந்தைகள் கலந்து கொள்வது சிறப்பு. நவராத்திரி நாட்களில் பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி மற்றும் கஜலட்சுமி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அன்னை அருள்பாலிப்பாள். நவராத்திரி விழா காலங்களில் அம்மன் தங்கத்தேரில் தினமும் பவனி வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவாள்.
தல வரலாறு:
சுமார் 12 நூற்றாண்டுகளுக்கு முன், ஆதி சங்கரர் சிருங்கேரியில் துங்கபத்ரா நதிக்கரையில் மடமும், கோயிலும் எழுப்பி சாரதாதேவியை பிரதிஷ்டை செய்தார். காலப்போக்கில் புகழ்பெற்று விளங்கிய அந்தக் கோயிலுக்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வரத் தொடங்கினர். சில வருடங்களுக்கு முன்பு, கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சிருங்கேரி சாரதா பீடத்திற்குச் சென்றார். அங்கு அபினவ வித்யா தீர்த்த மகா சுவாமியைச் சந்தித்து ஆசி பெற்ற பின், கோவையில் சாரதாம்பாள் கோயில் ஒன்றைக் கட்ட விரும்புவதாகத் தெரிவித்தார். அதே சமயத்தில் சூலூரைச் சேர்ந்த நஞ்சுண்டையர் என்ற பக்தர் ஒருவரும் சுவாமியிடம் ஆசி பெற வந்தார். அவரிடம் கோவையில் சாரதாம்பாள் கோயில் கட்ட ஓர் இடம் தேவை என சுவாமிகள் கேட்டார். அடுத்தநாளே தனது சகோதரருடன் மகா சுவாமிகளைச் சந்தித்த அவர், கோவையின் முக்கிய பகுதியாகத் திகழும் ரேஸ்கோர்ஸ் சாலையில் ஒரு ஏக்கர் நிலத்தை சாரதாதேவிக்கு கோயில் கட்ட வழங்குவதாகத் தெரிவித்தார். பக்தர்களின் ஒத்துழைப்புடன் கோயில் விரைவில் உருவானது. கட்டுமான செலவுகள் அனைத்தையும் கோவை தொழிலதிபர் ஏற்றுக் கொண்டார். 1979-ம் ஆண்டு கார்த்திகை மாதம் தேய்பிறை சஷ்டி தினத்தில் சாரதாதேவி கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: சிருங்கேரி மடத்தில் உள்ள சாரதாம்பாள் கோயிலில் நடக்கும் பூஜை முறைகள் போன்றே இங்கும் நடைபெறுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
நன்றி தினமலர்
]
மூலவர் : சாரதா தேவி
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை :
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் :
ஊர் : கோயம்புத்தூர்
மாவட்டம் : கோயம்புத்தூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, பிரதோஷம், சங்கரர் ஜெயந்தி, நவராத்திரி
தல சிறப்பு:
சிருங்கேரி மடத்தில் உள்ள சாரதாம்பாள் கோயிலில் நடக்கும் பூஜை முறைகள் போன்றே இங்கும் நடைபெறுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 8 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சாரதா தேவி திருக்கோயில், ரேஸ் கோர்ஸ்,கோயம்புத்தூர்.
பொது தகவல்:
சாரதா தேவி கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்மன் சன்னதியின் தெற்குப் பக்கத்தில் பால கணபதி, வடக்குப் பக்கத்தில் பாலமுருகன் சன்னதி உள்ளன. விநாயகர் சன்னதியின் தெற்குப் பகுதியில் வடக்கு நோக்கி ஆதி சங்கரரின் சன்னதி அமைந்துள்ளது. தினசரி மூன்று கால பூஜைகள் நடைபெறுகிறது. கோயிலின் தெற்குப் பக்கம் பிரவசன மண்டபம் உள்ளது.
பிரார்த்தனை
தடைபட்ட திருமணங்கள் நடைபெறவும், குழந்தைகள் நன்றாக படிக்கவும் பக்தர்கள் இங்குள்ள சாரதா தேவியை வேண்டிச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள சாரதாதேவிக்கு புது புடவை சார்த்தி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
பிரதான தெய்வமாக விளங்கும் சாரதா தேவியின் திருமேனி ஐம்பொன்னால் ஆனது. பின் வலக்கையில், தேன் குடத்தையும், முன் வலக்கையில் சின் முத்திரையும், முன் இடக்கையில் புத்தகத்தையும் ஏந்தி அமர்ந்த நிலையில் சாந்த சொரூபிணியாக அருள்பாலிக்கும் அம்பாளைக் காண கண்கோடி வேண்டும். சாரதா தேவி கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்மன் சன்னதியின் தெற்குப் பக்கத்தில் பால கணபதி, வடக்குப் பக்கத்தில் பாலமுருகன் சன்னதி உள்ளன. விநாயகர் சன்னதியின் தெற்குப் பகுதியில் வடக்கு நோக்கி ஆதி சங்கரரின் சன்னதி அமைந்துள்ளது. தினசரி மூன்று கால பூஜைகள் நடைபெறுகிறது. கோயிலின் தெற்குப் பக்கம் பிரவசன மண்டபம் உள்ளது. சிருங்கேரி மடத்தில் உள்ள சாரதாம்பாள் கோயிலில் நடக்கும் பூஜை முறைகள் போன்றே இங்கும் நடைபெறுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். சிருங்கேரி சென்று வழிபட இயலாதவர்களுக்கு இக்கோயில் ஒரு வரப்பிரசாதம்! சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, பிரதோஷம், சங்கரர் ஜெயந்தி என பல விழாக்கள் நடந்தாலும், இத்தலத்தின் தலையாய பெருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவாகும். மகா அபிஷேகத்துடன் நவராத்திரி பூஜைகள் ஆரம்பமாகிறது. அதற்குப் பின்னர் மூன்று நாட்கள் லட்சார்ச்சனையும், அதையடுத்து 4 நாட்கள் தேவிமகாத்மியம் பாராயணமும் நடைபெறும். நவமியன்று சத சண்டி யாகமும் தசமியன்று வித்யாரம்ப பூஜைகளும் நடைபெறும். இக்கோயிலில் சாரதாம்பாள் சரஸ்வதி சொரூபமாக அருள்பாலிக்கின்றாள். குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாக இங்கு வித்யாரம்ப பூஜைகளில் கலந்து கொண்டால், அவர்கள் நன்றாக படிப்பார்கள் என்பது நம்பிக்கை! வருடா வருடம் நடைபெறும் இப்பூஜையில் பெருவாரியான குழந்தைகள் கலந்து கொள்வது சிறப்பு. நவராத்திரி நாட்களில் பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி மற்றும் கஜலட்சுமி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அன்னை அருள்பாலிப்பாள். நவராத்திரி விழா காலங்களில் அம்மன் தங்கத்தேரில் தினமும் பவனி வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவாள்.
தல வரலாறு:
சுமார் 12 நூற்றாண்டுகளுக்கு முன், ஆதி சங்கரர் சிருங்கேரியில் துங்கபத்ரா நதிக்கரையில் மடமும், கோயிலும் எழுப்பி சாரதாதேவியை பிரதிஷ்டை செய்தார். காலப்போக்கில் புகழ்பெற்று விளங்கிய அந்தக் கோயிலுக்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வரத் தொடங்கினர். சில வருடங்களுக்கு முன்பு, கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சிருங்கேரி சாரதா பீடத்திற்குச் சென்றார். அங்கு அபினவ வித்யா தீர்த்த மகா சுவாமியைச் சந்தித்து ஆசி பெற்ற பின், கோவையில் சாரதாம்பாள் கோயில் ஒன்றைக் கட்ட விரும்புவதாகத் தெரிவித்தார். அதே சமயத்தில் சூலூரைச் சேர்ந்த நஞ்சுண்டையர் என்ற பக்தர் ஒருவரும் சுவாமியிடம் ஆசி பெற வந்தார். அவரிடம் கோவையில் சாரதாம்பாள் கோயில் கட்ட ஓர் இடம் தேவை என சுவாமிகள் கேட்டார். அடுத்தநாளே தனது சகோதரருடன் மகா சுவாமிகளைச் சந்தித்த அவர், கோவையின் முக்கிய பகுதியாகத் திகழும் ரேஸ்கோர்ஸ் சாலையில் ஒரு ஏக்கர் நிலத்தை சாரதாதேவிக்கு கோயில் கட்ட வழங்குவதாகத் தெரிவித்தார். பக்தர்களின் ஒத்துழைப்புடன் கோயில் விரைவில் உருவானது. கட்டுமான செலவுகள் அனைத்தையும் கோவை தொழிலதிபர் ஏற்றுக் கொண்டார். 1979-ம் ஆண்டு கார்த்திகை மாதம் தேய்பிறை சஷ்டி தினத்தில் சாரதாதேவி கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: சிருங்கேரி மடத்தில் உள்ள சாரதாம்பாள் கோயிலில் நடக்கும் பூஜை முறைகள் போன்றே இங்கும் நடைபெறுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அருள்மிகு சாரதா தேவி திருக்கோயில், கோயம்புத்தூர்
அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் -திருவேற்காடு
» அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்
» சிங்காநல்லூர் அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்
» சிங்காநல்லூர் அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|