Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முத்தம்மா பாட்டி
Page 1 of 1 • Share
முத்தம்மா பாட்டி
முத்தம்மா பாட்டிக்கு முன்னூறு புள்ளைக
நம்பாம பாக்காதீக
நாஞ்சொல்றது நெசந்தாங்க..
எங்கூருல புதுசா பொறக்குற
அம்புட்டு புள்ளைகளையும்
ஆளாக்கி விடுறதுதான் அவ வேல..
பொறந்த பச்சப்புள்ளக்கி
சக்கரத்தண்ணி குடுக்குறதுல ஆரம்பிப்பா
நெதம் போயி குளிக்க வச்சி
வெளாட்டு காட்டி சிரிக்க வச்சி
நடவண்டி புடிச்சி நடக்க வச்சி
பொரண்டு அழுவுத புள்ளக்கி
தேன் மிட்டாய் வாங்கிக் குடுத்து
பள்ளிக்கொடம் கூட்டிப் போவா
அம்மா அடிக்கையில
அள்ளிப் போயி அரவணைப்பா
அப்பா வையும்போது
அவன் கெடக்கான் நீ வான்னு
அலட்சியமா அங்கிட்டு அழச்சிப் போவா
பண்டம் பலகாரம் பழம் பட்சணம்
எது கெடச்சாலும்
தேடி வந்து பங்கு வைப்பா
படிக்க பட்டணம் போவையிலயும்
வேலைக்கு வெளியூர் போவையிலயும்
முத்தம்மா கிட்ட சொல்லாம
ஒரு புள்ளயும் போவாது
கண்ணாலம் கட்டி
புருசன் வீடு போற புது பொண்ணுவளும்
அவ கால்ல விழுகாம போகாதுக
புள்ள பெத்து எடுத்து வர்றவளும்
அவகிட்டதான் புள்ளய குடுப்பா
காதலிக்குத ஆணுக்கும் பொண்ணுக்கும்
அவ அடைக்கலச்சாமியா இருப்பா
கோயில் கொடையிலயும்
பண்டிகை கொண்டாட்டத்துலயும்
அவளுக்கு வந்து சேருத
அம்புட்டு புடவையவும்
வாரி குடுப்பா வயசு பொண்ணுகளுக்கு
ஊருக்குள்ள ஆபத்துன்னு யாருக்குன்னாலும்
மொத ஆளா ஒதவிக்கு நிக்குதவ
அவளாத்தான் இருக்கும்
சண்ட போட்டு
வெட்டுவேன் குத்துவேன்னு
சிலுத்துகிட்டு நிக்குதவனும்
அவ வந்து சத்தம் போட்டா
பொசுக்குன்னு அமைவானுக
பொட்டி பாம்பாட்டம்
இம்புட்டு செய்யுதாளே
அவளுக்குன்னு ஆருமில்லையா
குடும்பம் குட்டிக
இல்லியான்னுதான கேக்குதீக
அவ குடிகார மாமன்
அவள கட்டிகிட்ட மேடையிலயே
சுருண்டு விழுந்து செத்துப் போனான்
கள்ளால குடல் அவிஞ்சி போனதால
அப்பன் ஆத்தா இல்லாதவ
ஆதரவுக்கு எங்கிட்டும் போவாம
ஊரோடவே ஒண்ணாயிட்டா
தொண்ணூத்தியொரு வயசாச்சி
முத்தம்மா பாட்டிக்கு
இப்ப எங்கூரு சனங்களோட
ஒத்த வேண்டுதல் என்னாங்குதீக
அவ நூறு வயசு பொறந்தநாள
பதினெட்டு பட்டிக்கும்
கறி சோறாக்கிப் போட்டு
பத்து நாளு கொண்டாடணும்
எங்கூரு குலசாமி
அவ உசுர காத்து வைக்கணுமுன்னு
ஊரு மக்க கும்புடாத நாளில்ல
நீங்களும் கும்புடுங்க
சொல்லியனுப்புதோம்
குடும்பத்தோட வந்து சேருங்க
முத்தம்மாவோட
நூறாவது பொறந்தநாளுக்கு!
நம்பாம பாக்காதீக
நாஞ்சொல்றது நெசந்தாங்க..
எங்கூருல புதுசா பொறக்குற
அம்புட்டு புள்ளைகளையும்
ஆளாக்கி விடுறதுதான் அவ வேல..
பொறந்த பச்சப்புள்ளக்கி
சக்கரத்தண்ணி குடுக்குறதுல ஆரம்பிப்பா
நெதம் போயி குளிக்க வச்சி
வெளாட்டு காட்டி சிரிக்க வச்சி
நடவண்டி புடிச்சி நடக்க வச்சி
பொரண்டு அழுவுத புள்ளக்கி
தேன் மிட்டாய் வாங்கிக் குடுத்து
பள்ளிக்கொடம் கூட்டிப் போவா
அம்மா அடிக்கையில
அள்ளிப் போயி அரவணைப்பா
அப்பா வையும்போது
அவன் கெடக்கான் நீ வான்னு
அலட்சியமா அங்கிட்டு அழச்சிப் போவா
பண்டம் பலகாரம் பழம் பட்சணம்
எது கெடச்சாலும்
தேடி வந்து பங்கு வைப்பா
படிக்க பட்டணம் போவையிலயும்
வேலைக்கு வெளியூர் போவையிலயும்
முத்தம்மா கிட்ட சொல்லாம
ஒரு புள்ளயும் போவாது
கண்ணாலம் கட்டி
புருசன் வீடு போற புது பொண்ணுவளும்
அவ கால்ல விழுகாம போகாதுக
புள்ள பெத்து எடுத்து வர்றவளும்
அவகிட்டதான் புள்ளய குடுப்பா
காதலிக்குத ஆணுக்கும் பொண்ணுக்கும்
அவ அடைக்கலச்சாமியா இருப்பா
கோயில் கொடையிலயும்
பண்டிகை கொண்டாட்டத்துலயும்
அவளுக்கு வந்து சேருத
அம்புட்டு புடவையவும்
வாரி குடுப்பா வயசு பொண்ணுகளுக்கு
ஊருக்குள்ள ஆபத்துன்னு யாருக்குன்னாலும்
மொத ஆளா ஒதவிக்கு நிக்குதவ
அவளாத்தான் இருக்கும்
சண்ட போட்டு
வெட்டுவேன் குத்துவேன்னு
சிலுத்துகிட்டு நிக்குதவனும்
அவ வந்து சத்தம் போட்டா
பொசுக்குன்னு அமைவானுக
பொட்டி பாம்பாட்டம்
இம்புட்டு செய்யுதாளே
அவளுக்குன்னு ஆருமில்லையா
குடும்பம் குட்டிக
இல்லியான்னுதான கேக்குதீக
அவ குடிகார மாமன்
அவள கட்டிகிட்ட மேடையிலயே
சுருண்டு விழுந்து செத்துப் போனான்
கள்ளால குடல் அவிஞ்சி போனதால
அப்பன் ஆத்தா இல்லாதவ
ஆதரவுக்கு எங்கிட்டும் போவாம
ஊரோடவே ஒண்ணாயிட்டா
தொண்ணூத்தியொரு வயசாச்சி
முத்தம்மா பாட்டிக்கு
இப்ப எங்கூரு சனங்களோட
ஒத்த வேண்டுதல் என்னாங்குதீக
அவ நூறு வயசு பொறந்தநாள
பதினெட்டு பட்டிக்கும்
கறி சோறாக்கிப் போட்டு
பத்து நாளு கொண்டாடணும்
எங்கூரு குலசாமி
அவ உசுர காத்து வைக்கணுமுன்னு
ஊரு மக்க கும்புடாத நாளில்ல
நீங்களும் கும்புடுங்க
சொல்லியனுப்புதோம்
குடும்பத்தோட வந்து சேருங்க
முத்தம்மாவோட
நூறாவது பொறந்தநாளுக்கு!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: முத்தம்மா பாட்டி
எங்கூரு குலசாமி
அவ உசுர காத்து வைக்கணுமுன்னு
ஊரு மக்க கும்புடாத நாளில்ல
நீங்களும் கும்புடுங்க
நிச்சயமா கும்புடுதேன்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» பாட்டி …
» பாட்டி வைத்தியம்.......
» பாட்டி வைத்தியம் :-
» பாட்டி வைத்தியம் #5
» பாட்டி வைத்தியம் சில...
» பாட்டி வைத்தியம்.......
» பாட்டி வைத்தியம் :-
» பாட்டி வைத்தியம் #5
» பாட்டி வைத்தியம் சில...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|