Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கால் மாறி ஆடிய கதை!
Page 1 of 1 • Share
கால் மாறி ஆடிய கதை!
-
விராலிமலை திருப்புகழில்
"சீரான கோல கால நவமணி'' என்று துவங்கும்
பாடலில் "ஏராரு மாட கூட மதுரையில் மீதேறி
மாறியாடு மிறையவர்'' என்ற அடியில் ஒரு
புராணக் கதையைச் சுட்டுகிறார் அருணகிரி நாதர்.
-
மதுரையை ஆண்ட விக்கிரம பாண்டியனின்
புதல்வன் ராஜசேகர பாண்டியன் சோமசுந்தரக்
கடவுள் மேல் தீவிர பக்தி கொண்டவன்.
நீதி வழுவாது ஆட்சி புரிந்து வந்த அவன் ஆய
கலைகள் அனைத்திலும் பெரும் பயிற்சியும்,
திறமையும் பெற்று விளங்கினான்.
ஆனால், நடனக் கலை பற்றிய பரத சாத்திரத்தை
அவன் பயிலவில்லை.
-
அந்தச் சமயம் சோழ நாட்டிலிருந்து ஒரு புலவன்
பாண்டியன் பேரவைக்கு வந்தான். அவன்
கரிகாற்சோழனின் அவைப்புலவன். அவன்,
"பாண்டிய வேந்தே! எமது மன்னர் 64 கலைகளிலும்
வல்லவர். ஆனால், நீங்களோ ஏனைய 63
கலைகளிலும் வல்லவராய் இருந்தும்
சிவபெருமானுக்கு உகந்த நடனக் கலையை மட்டும்
பயிலாது இருப்பதன் காரணம் புரியவில்லை!''
என்றான்.
-
ஆமாம். பாண்டியனுக்கும் அது புரியவில்லைதான்!
இத்தனை நாள் நடனக் கலையை ஏன் தான் கற்க
வில்லை என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.
பின்பு அந்தக் கலையையும் கற்று அதிலும்
பாண்டித்தியம் பெற்று விடுவது என்று உறுதி பூண்டு
பரதக் கலை வல்லுநர்களை வரவழைத்து
அவர்களுக்குத் திரண்ட பொன்னும் பொருளும் தந்து
ராப்பகலாய் உழைத்து பரதக் கலையைப் பயின்றான்.
-
ஒருநாள் நெடுநேரப் பயிற்சிக்குப் பின் அவனுக்குக்
கால் மிகவும் வலித்தது. அப்போது அவன் மனதில்
ஒரு எண்ணம். சிறிது நேரப் பயிற்சிக்கே நமக்குக்
கால் இப்படி வலிக்கிறதே.. நடராஜமூர்த்தி
அனவரதமும் ஓயாது நடனம் புரிந்தவாறே இருக்கிறாரே.
அவருக்குக் கால் எப்படி வலிக்கும்?
ஆனால், அவர் கால் வலிக்கிறது என்று நடனமாடுவதை
நிறுத்திவிட்டால் உலக இயக்கமே நின்று விடுமே.
அதனால் காலை மாற்றி ஆட வேண்டுவோம் என்று
நடராஜ மூர்த்தியை விழுந்து வணங்கி,
"பெருமானே! எப்போதும் நீங்கள் வலது காலை
ஊன்றியே நடனம் புரிகின்றீர்கள். இப்படி ஓய்வேயின்றி
வலது காலை ஊன்றி நீங்கள் நடனமாடுவதைக்
கண்டு எனக்குக் கால் வலிக்கிறது! பெருமானே!
அருள்கூர்ந்து இடது காலை நிலத்தில் ஊன்றி
நடனமாடுங்கள். வலது காலுக்குச் சற்று ஓய்வு
தாருங்கள். நீங்கள் அப்படிக் கால் மாறி ஆடித்
தரிசனம் தரவில்லை என்றால் இதோ இந்த
வாளின் மீது விழுந்து உயிர் விடுவேன்!'' என்று
ஆவேசமாகக் கூறித் தன் உடைவாளை உருவிச்
செங்குத்தாய் நிறுத்தினான் பாண்டியன்!
-
பாண்டியனின் தீவிர பக்தியைக் கண்டு உள்ளூர
வியந்து இறைவன் தன் இடக்காலை ஊன்றி வலது
காலைத் தூக்கி மாறி நடனம் புரிந்தார்! பாண்டியன்
அக்காட்சியைத் தரிசித்து மனம் மகிழ்ந்து இந்த
அற்புதத் திருநடனத்தை எல்லோரும் கண்டு மகிழ
இதுபோலவே வெள்ளியம்பலத்தில் விளங்க வேண்டும்
என்று வரம் கேட்க இறைவனும் அப்படியே அருள்
பாலித்தான்.
-
அன்று முதல் இன்றளவும் மற்ற தலங்களில்
விளங்கும் நடராஜப் பெருமான் வலக்காலை ஊன்றி
இடது காலைத் தூக்கி விளங்க, மதுரை நகராகிய
வெள்ளியம்பலத்தில் மட்டும் இடது காலை நிலத்தில்
ஊன்றி வலது காலைத் தூக்கி நடனம் புரிவதைக்
காணலாம்!
-
-----------------------------------
>மயிலைசிவா
விராலிமலை திருப்புகழில்
"சீரான கோல கால நவமணி'' என்று துவங்கும்
பாடலில் "ஏராரு மாட கூட மதுரையில் மீதேறி
மாறியாடு மிறையவர்'' என்ற அடியில் ஒரு
புராணக் கதையைச் சுட்டுகிறார் அருணகிரி நாதர்.
-
மதுரையை ஆண்ட விக்கிரம பாண்டியனின்
புதல்வன் ராஜசேகர பாண்டியன் சோமசுந்தரக்
கடவுள் மேல் தீவிர பக்தி கொண்டவன்.
நீதி வழுவாது ஆட்சி புரிந்து வந்த அவன் ஆய
கலைகள் அனைத்திலும் பெரும் பயிற்சியும்,
திறமையும் பெற்று விளங்கினான்.
ஆனால், நடனக் கலை பற்றிய பரத சாத்திரத்தை
அவன் பயிலவில்லை.
-
அந்தச் சமயம் சோழ நாட்டிலிருந்து ஒரு புலவன்
பாண்டியன் பேரவைக்கு வந்தான். அவன்
கரிகாற்சோழனின் அவைப்புலவன். அவன்,
"பாண்டிய வேந்தே! எமது மன்னர் 64 கலைகளிலும்
வல்லவர். ஆனால், நீங்களோ ஏனைய 63
கலைகளிலும் வல்லவராய் இருந்தும்
சிவபெருமானுக்கு உகந்த நடனக் கலையை மட்டும்
பயிலாது இருப்பதன் காரணம் புரியவில்லை!''
என்றான்.
-
ஆமாம். பாண்டியனுக்கும் அது புரியவில்லைதான்!
இத்தனை நாள் நடனக் கலையை ஏன் தான் கற்க
வில்லை என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.
பின்பு அந்தக் கலையையும் கற்று அதிலும்
பாண்டித்தியம் பெற்று விடுவது என்று உறுதி பூண்டு
பரதக் கலை வல்லுநர்களை வரவழைத்து
அவர்களுக்குத் திரண்ட பொன்னும் பொருளும் தந்து
ராப்பகலாய் உழைத்து பரதக் கலையைப் பயின்றான்.
-
ஒருநாள் நெடுநேரப் பயிற்சிக்குப் பின் அவனுக்குக்
கால் மிகவும் வலித்தது. அப்போது அவன் மனதில்
ஒரு எண்ணம். சிறிது நேரப் பயிற்சிக்கே நமக்குக்
கால் இப்படி வலிக்கிறதே.. நடராஜமூர்த்தி
அனவரதமும் ஓயாது நடனம் புரிந்தவாறே இருக்கிறாரே.
அவருக்குக் கால் எப்படி வலிக்கும்?
ஆனால், அவர் கால் வலிக்கிறது என்று நடனமாடுவதை
நிறுத்திவிட்டால் உலக இயக்கமே நின்று விடுமே.
அதனால் காலை மாற்றி ஆட வேண்டுவோம் என்று
நடராஜ மூர்த்தியை விழுந்து வணங்கி,
"பெருமானே! எப்போதும் நீங்கள் வலது காலை
ஊன்றியே நடனம் புரிகின்றீர்கள். இப்படி ஓய்வேயின்றி
வலது காலை ஊன்றி நீங்கள் நடனமாடுவதைக்
கண்டு எனக்குக் கால் வலிக்கிறது! பெருமானே!
அருள்கூர்ந்து இடது காலை நிலத்தில் ஊன்றி
நடனமாடுங்கள். வலது காலுக்குச் சற்று ஓய்வு
தாருங்கள். நீங்கள் அப்படிக் கால் மாறி ஆடித்
தரிசனம் தரவில்லை என்றால் இதோ இந்த
வாளின் மீது விழுந்து உயிர் விடுவேன்!'' என்று
ஆவேசமாகக் கூறித் தன் உடைவாளை உருவிச்
செங்குத்தாய் நிறுத்தினான் பாண்டியன்!
-
பாண்டியனின் தீவிர பக்தியைக் கண்டு உள்ளூர
வியந்து இறைவன் தன் இடக்காலை ஊன்றி வலது
காலைத் தூக்கி மாறி நடனம் புரிந்தார்! பாண்டியன்
அக்காட்சியைத் தரிசித்து மனம் மகிழ்ந்து இந்த
அற்புதத் திருநடனத்தை எல்லோரும் கண்டு மகிழ
இதுபோலவே வெள்ளியம்பலத்தில் விளங்க வேண்டும்
என்று வரம் கேட்க இறைவனும் அப்படியே அருள்
பாலித்தான்.
-
அன்று முதல் இன்றளவும் மற்ற தலங்களில்
விளங்கும் நடராஜப் பெருமான் வலக்காலை ஊன்றி
இடது காலைத் தூக்கி விளங்க, மதுரை நகராகிய
வெள்ளியம்பலத்தில் மட்டும் இடது காலை நிலத்தில்
ஊன்றி வலது காலைத் தூக்கி நடனம் புரிவதைக்
காணலாம்!
-
-----------------------------------
>மயிலைசிவா
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» 64 திருவிளையாடல்-கால் மாறி ஆடிய படலம்!
» பனியும் வெயிலும் மாறி மாறி அட்டாக் : உடல் சோர்வு ஏற்படுத்தும் புதுவித வைரஸ் நோய்
» கை மாறி போன கச்சத்தீவு.....கச்சதீவும் நமதே கீழை கடலும் நமதே!
» மனிதா நீ மாறி விடு
» அடுத்தவர் நகலாய் மாறி விடாதீர்கள்!
» பனியும் வெயிலும் மாறி மாறி அட்டாக் : உடல் சோர்வு ஏற்படுத்தும் புதுவித வைரஸ் நோய்
» கை மாறி போன கச்சத்தீவு.....கச்சதீவும் நமதே கீழை கடலும் நமதே!
» மனிதா நீ மாறி விடு
» அடுத்தவர் நகலாய் மாறி விடாதீர்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|