Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கர்ப்ப பையில் பிளவு ஏற்படலாம்
Page 1 of 1 • Share
கர்ப்ப பையில் பிளவு ஏற்படலாம்
பெயரைக் கேட்டாலே பீதி கிளம்புகிறதல்லவா? கர்ப்பப் பை பிளவு படும் என்கிற தகவலே பலருக்கும் புதிதாக இருக்கும் நேரத்தில், அது எப்போது, எப்படி, எதற்கெல்லாம் பிளவு படலாம், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணங்கள் எவை என எல்லாவற்றையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.
‘‘கர்ப்பத்தின் 20 வாரங்களுக்குப் பிறகு பல்வேறு காரணங்களினால் கர்ப்பப் பையானது பிளவுபடும் வாய்ப்புகள் அதிகம். பிரசவ வலி வரும் போதும் கர்ப்பப் பை பிளவு பட்டு, குழந்தை வெளியே வரக்கூடும். இது தாய், குழந்தை என இருவருக்குமே ஆபத்தானது.சில பெண்களுக்கு முதல் பிரசவம் சிசேரியனாக இருந்திருக்கும். அடுத்ததும் சிசேரியனாகவே இருக்கும் என்கிற நிலையில், சிலர் வேண்டுமென்றே சுகப்பிரசவத்துக்காக காத்திருப்பதுண்டு. அவர்களுக்கு வலி வரும் போது, முதலில் செய்த சிசேயரியன் தழும்பானது விரிவடைந்து, கர்ப்பப் பை பிளவு படலாம்.
கர்ப்ப்பையில் கோளாறுகள் இருப்பவர்களுக்கும், இரட்டை கர்ப்பப் பை உள்ளவர்களுக்கும்கூட இது சகஜம். நஞ்சுக் கொடியானது கர்ப்பப் பையின் உள்ளேயே புதைந்துபோய், முதலில் செய்த சிசேரியன் தழும்பானது பலவீனமடைந்து, அதன் தொடர்ச்சியாக அடுத்த பிரசவத்தின் போது, கர்ப்பப் பை பிளவு ஏற்படலாம். அடிக்கடி டி அண்ட் சி செய்தவர்களுக்கும், அதன் ஒரு விளைவாக கர்ப்பப் பை பிளவு உண்டாகலாம். சுகப்பிரசவத்திலும்கூட, ஆயுதம் போட வேண்டிய தேவை ஏற்படுகிற போது சில நேரங்களில் கர்ப்பப் பை பிளவு நிகழலாம்.
கர்ப்பப் பையில் வேறு ஏதேனும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, அது சரியாகக் கையாளப்படாத பட்சத்தில், அந்தப் பெண்கள் கருத்தரிக்கும் போது கர்ப்பப் பை பிளவுக்கான அபாயங்கள் அதிகம்.ஏற்கனவே சொன்ன மாதிரி முதலில் சிசேரியன் செய்ததன் விளைவாக, குழந்தையை வெளியே எடுக்க வெட்டப்பட்ட அந்தப் பகுதியில் அடுத்த பிரசவத்தின் போது பிளவு ஏற்படுவது சகஜம். சுகப்பிரசவத்திலும்கூட கர்ப்பப் பை பிளவுக்கான வாய்ப்புகள் அதிகம். அதாவது, சிலருக்கு பிரசவ வலி வந்திருக்கும். அழுத்தம் அதிகமாகியிருக்கும்.
ஆனாலும், கர்ப்பப் பையின் வாய் திறக்காமலிருக்கும். அப்போது கர்ப்பப் பையின் மேல் ஓரம் மற்றும் பக்க வாட்டுப் பகுதிகளில் பிளவு ஏற்படலாம். எனவே சுகப்பிரசவமா, சிசேரியனா என்பதை கர்ப்பிணிப் பெண்கள் தாமாக முடிவு பண்ணாமல், தனக்கு சிகிச்சையளிக்கிற மருத்துவரின் பொறுப்பில் விட்டு விடுவதே பாதுகாப்பானது. கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற வலியை அலட்சியம் செய்யாமல், உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டியது அவசியம். மருத்துவருக்கு சந்தேகம் வந்தால், சுகப்பிரசவத்துக்காக காத்திருக்கச் செய்யாமல், உடனே சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுப்பதற்கான முயற்சிகளை அவசரமாகச் செய்வார். தாய், குழந்தை என இரண்டு உயிர்களும் காப்பாற்றப்படும்...’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.
நன்றி: தினகரன்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கர்ப்ப பையில் பிளவு ஏற்படலாம்
அவசியமான விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» எத்தனை 'சி' பையில் இருந்தாலும் மன அமைதிக்கு இந்த 'சி' முக்கியம்!
» கட்டிடங்களாலும் நோய் ஏற்படலாம்
» குளிர்பானங்கள்-நீரிழிவு நோயும் ஏற்படலாம்
» தெரிந்து கொள்வோம்-பித்தப் பையில் கல்
» எத்தனை 'சி' பையில் இருந்தாலும் மன நிம்மதிக்கு இந்த 'சி' முக்கியம்!
» கட்டிடங்களாலும் நோய் ஏற்படலாம்
» குளிர்பானங்கள்-நீரிழிவு நோயும் ஏற்படலாம்
» தெரிந்து கொள்வோம்-பித்தப் பையில் கல்
» எத்தனை 'சி' பையில் இருந்தாலும் மன நிம்மதிக்கு இந்த 'சி' முக்கியம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|