Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள்: மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி
Page 1 of 1 • Share
அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள்: மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி
பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியர்களுக்கு என்எல்சி கல்வித்துறை சார்பில் கட்டாய தற்காப்புக் கலை கடந்த 6 மாதமாக பயிற்றுவிக்கப்படுகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் நெய்வேலிப் பள்ளிகளில் கடந்த 6 மாதமாக 6 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு கட்டாய தற்காப்புக் கலை பயிற்சி வழங்கப்படுகிறது. புதுடெல்லியில் மருத்துவ மாணவி பலாத்காரத்திற்கு ஆளாகி உயிரிழக்க நேரிட்டச் சம்பவத்தை உணர்ந்த என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகன், நெய்வேலியில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சியை கட்டாயம் அளிக்கவேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து என்எல்சி கல்வித் துறை சார்பில் நெய்வேலியில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு கட்டாய தற்காப்புக் கலை பயிற்சி அளிக்கப்படவேண்டும் எனவும் அதற்கான பயிற்சியாளர்களை என்எல்சி கல்வித் துறை நியமனம் செய்து அனுப்பிவைக்கும் எனவும், சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து தற்காப்புக் கலையில் நிபுணத்துவம் பெற்ற என்எல்சி ஊழியர்கள் வாசுதேவன், விஜயசங்கர், சையத்அப்துல்லா மற்றும் பெரியசாமி என 4 பேரை தேர்வு செய்து அவர்கள் மூலம் பயிற்சி அளித்துவருகிறது.
இது தொடர்பாக பயிற்சியாளர் களில் ஒருவரான வாசுதேவன் கூறுகையில், புதுடெல்லி மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட துயரத்திற்குப் பின் என்எல்சி நிர்வாகம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிப்பது குறித்து ஆலோசித்து அதை சேவையாக செய்யவேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. இதையடுத்து நெய்வேலியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தனித் தனி நேரம் ஒதுக்கி மாதம் ஒருமுறை பயிற்சி அளிக்கிறோம்.
இப்பயிற்சியில் பல மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் என்ன தான் சட்டங்கள் இயற்றி குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆண்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டாலும் குற்றம் குறைந்தபாடில்லை.
எனவே தற்போதுள்ள சூழலில் தனிமையில் இருக்கும் ஒரு பெண், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களிடம் சிக்கிக் கொண்டால் அதிலிருந்து விடுபடுவது இயலாத காரியம். எனவே பெண்கள் முதற்கட்டமாக ஆண் பிடியிலிருந்து வெளியேற வேண்டுமானால் தற்காப்புக் கலைகள் ஓரளவுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் ஆபத்திலிருந்து விடுபட முடியும். அந்த நோக்கில் தான் தற்காப்பு கலை பயிற்சியை வழங்கி வருகிறோம். நெய்வேலி மட்டுமல்ல நெய்வேலியைச் சுற்றியுள்ள பெண்கள் பயிலும் பள்ளிகளிலும் தற்காப்புக் கலை பயிற்சி வழங்கத் தயாராக இருக்கிறோம் என்றார்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள்: மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி
நல்ல முயற்சிதான்
இருந்தாலும் தண்டனைகள் கடுமையாகாதவரை குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்பில்லை.
இருந்தாலும் தண்டனைகள் கடுமையாகாதவரை குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்பில்லை.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» செவிலியராக படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியரால் பாலியல் தொல்லை
» மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கு டியூசன் சென்டரில் ரகசிய படுக்கை அறை: வயாக்ரா மாத்திரைகள் சிக்கியத
» தற்காப்புக் கலை
» பாலியல் குற்றம்
» பாலியல் தேடலில் இலங்கையர்களுக்கு முதலிடம்
» மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கு டியூசன் சென்டரில் ரகசிய படுக்கை அறை: வயாக்ரா மாத்திரைகள் சிக்கியத
» தற்காப்புக் கலை
» பாலியல் குற்றம்
» பாலியல் தேடலில் இலங்கையர்களுக்கு முதலிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|