தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இனி கிட்னி திருட்டு நடக்காது! அசத்தும் அரசு மருத்துவமனைகள்

View previous topic View next topic Go down

இனி கிட்னி திருட்டு நடக்காது! அசத்தும் அரசு மருத்துவமனைகள் Empty இனி கிட்னி திருட்டு நடக்காது! அசத்தும் அரசு மருத்துவமனைகள்

Post by நாஞ்சில் குமார் Mon Jun 16, 2014 7:30 pm

இனி கிட்னி திருட்டு நடக்காது! அசத்தும் அரசு மருத்துவமனைகள் 2ihqq93
 

‘‘இதுவரை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது வேறு மாதிரி. கிட்னியை தானமாகத் தருபவரும், பெறுபவரும் ரத்த உறவாக இருக்க வேண்டும். அவர்களின் ரத்தப் பிரிவு மட்டுமல்ல...  திசுக்களின் அமைப்பு கூட பொருந்திப் போக வேண்டும் என்றெல்லாம் விதி இருந்தது. ஆனால், இப்போது அது எதுவுமே தேவையில்லை. வேறு ரத்தப் பிரிவைச் சேர்ந்த கிட்னியையே வெற்றிகரமாக ஒருவருக்குப் பொருத்தி விட்டோம். உலக அளவில் ஹை ரிஸ்க் ஆபரேஷன் இது. அரசு மருத்துவமனையில் நடந்திருக்கிறது’’ என்கிறார் டாக்டர் பலராமன். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனையின் சிறுநீரகத்துறை தலைமை மருத்துவர் இவர்.

‘‘நம்ம மக்கள் எப்பவுமே தனியார் மருத் துவமனைகள்தான் பாதுகாப்பானதுன்னு நினைக் கிறாங்க. ஆனா, அவங்களே செய்ய பயப்படுற சிகிச்சை இது. அப்படியே செய்தாலும் இதற்கு சுமார் 8  லட்ச ரூபாய் வரை கட்டணம் வாங்குவதாகக் கேள்வி. ஆனால் அரசு மருத்துவமனைகள் இந்த விதத்தில் எப்போதுமே ஒரு படி மேலே. இங்கே அனுபவம் இல்லாத டாக்டர்களே கிடையாது.  தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகளைப் பார்ப்பவர்கள்தான் எல்லோரும். எத்தனை ஆபத்தான ஆபரேஷன் என்றாலும் அதில் உள்ள குட்டிக் குட்டி நுணுக்கங்கள் எங்களுக்கு அத்துப்படி.  செய்துடலாம் என்ற நம்பிக்கையும் தைரியமும் எங்களிடம் இருக்கும். இதெல்லாம் தவிர எங்கள் நோயாளிகள் எங்களுக்குத் தரும் நம்பிக்கையும் தனி.

சிறுநீரக செயலிழப்பு பிரச்னை உள்ளவர்கள் வாரா வாரம் டயாலிசிஸ் செய்துகொள்ளவும், மருந்து மாத்திரைகள் வாங்கவும் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். அதோடு தனி கவனிப்பும்  தேவை. அன்றாடம் உழைக்கும் ஏழை மக்கள் இதற்குத் தயாராக இல்லை. பொருளாதார எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல், மனிதர்களையும் அவர்கள் நம் மீது வைத்த நம்பிக்கையையும்  அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் இது போன்ற முயற்சிகள் வெற்றி பெறுவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

வருங்காலத்தில் இந்த முறையிலான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பரவலாகிவிட்டால், யாரும் யாருக்கும் கிட்னி தானம் செய்யலாம் என்ற நிலை வந்துவிடும். இன்று ஏழை பாழைகளிடம் நட க்கும் கிட்னி திருட்டை அது தடுக்கும்’’ என்கிறார் அவர் நம்பிக்கையோடு.இதே மாதிரி, ‘அரசு மருத்துவமனை சாதனை’ என்ற தலைப்புச் செய்திகளை அடிக்கடி பார்க்க முடிகிறது. ஆனாலும் ம க்களிடம் ஏன் அரசு மருத்துவமனைகள் மீது முழு நம்பிக்கை இல்லை? டீன் ராமகிருஷ்ணனிடம் கேட்டோம்...

‘‘இந்த மருத்துவமனையின் இணைப்பு மருத்துவமனையான ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்தான் முதன்முதலில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. தமிழகத்தில்  மருத்துவத்துறையில் ஏற்படும் முக்கியமான சாதனைகள் பலவும் முதன்முதலில் அரசு மருத்துவமனைகளில்தான் நிகழ்கின்றன. உதாரணமாக, சென்னை எம்.எம்.சியில்தான் ‘போன் பேங்க்’ எனச்  சொல்லப்படும் எலும்பு வங்கி சிறப்பாகச் செயல்படுகிறது. அதேபோல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இம்யூனாலஜி எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தித் துறை சாதனை படைக்கிறது.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையைப் பொறுத்த அளவில் தீக்காய சிகிச்சை வார்டில் மட்டுமே ஐம்பது பெட்டுகளை ஏற்படுத்தி சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் என்ற அவார்டை வாங்கியிருக்கிறோம். அதே  போல மூட்டு சிகிச்சை, சர்க்கரை நோயாளிகள் பராமரிப்பு, ரேடியாலஜி என பல துறைகளில் முன்னேற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இலவச மருத்துவமனைகளாக இருப்பதாலும், எப்போதும் கூட்டம் அதிகம் இருப்பதாலும், தனியார் மருத்துவமனை மாதிரி அலங்காரம் ஏதும் செய்துகொள்ளாமல் இருப்பதாலும் பொதுமக்களுக்கு ஒரு  சலிப்பு இருக்கலாம். ஆனால் அரசு மருத்துவமனைக்கும் இங்கு பணிபுரியும் டாக்டர்களுக்கும் லாப நோக்கம் இல்லை என்பதை மறந்துவிடக்கூடாது. ‘ஆடம்பரமும் அலங்காரமும் வேண்டாம்... சிகி ச்சை மட்டுமே முக்கியம்’ என்கிறவர்கள் எப்போதுமே இங்கு வரலாம்!’’ என்கிறார் அவர் பெருமிதத்தோடு! தமிழகத்தில் மருத்துவத்துறையில் ஏற்படும் முக்கியமான சாதனைகள் பலவும்  முதன்முதலில் அரசு மருத்துவமனைகளில்தான் நிகழ்கின்றன.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

இனி கிட்னி திருட்டு நடக்காது! அசத்தும் அரசு மருத்துவமனைகள் Empty Re: இனி கிட்னி திருட்டு நடக்காது! அசத்தும் அரசு மருத்துவமனைகள்

Post by முரளிராஜா Tue Jun 17, 2014 10:12 am

நன்றி நாஞ்சில்குமார்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இனி கிட்னி திருட்டு நடக்காது! அசத்தும் அரசு மருத்துவமனைகள் Empty Re: இனி கிட்னி திருட்டு நடக்காது! அசத்தும் அரசு மருத்துவமனைகள்

Post by mohaideen Tue Jun 17, 2014 12:47 pm

பதிவிற்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இனி கிட்னி திருட்டு நடக்காது! அசத்தும் அரசு மருத்துவமனைகள் Empty Re: இனி கிட்னி திருட்டு நடக்காது! அசத்தும் அரசு மருத்துவமனைகள்

Post by செந்தில் Tue Jun 17, 2014 4:32 pm

பகிர்வுக்கு நன்றி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இனி கிட்னி திருட்டு நடக்காது! அசத்தும் அரசு மருத்துவமனைகள் Empty Re: இனி கிட்னி திருட்டு நடக்காது! அசத்தும் அரசு மருத்துவமனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum