தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இதுதான் குடும்ப மகிழ்ச்சி!

View previous topic View next topic Go down

இதுதான் குடும்ப மகிழ்ச்சி! Empty இதுதான் குடும்ப மகிழ்ச்சி!

Post by நாஞ்சில் குமார் Mon Jun 23, 2014 11:45 pm

[You must be registered and logged in to see this image.]


குடும்ப மகிழ்ச்சியென்பது நாம் உண்ணும் உணவில்தான் உள்ளது. குறிப்பாக இயற்கை இடுபொருட்கள் மூலம் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள் சுவை தருவதோடு, நல்ல ஆரோக்கியத்தையும் தருகின்றன. இதில் மிகையேதும் இல்லை. 1960 மற்றும் 70களில் எல்லா ஊடகங்களிலும் சிறுகுடும்பம், குடும்பக் கட்டுப்பாடுகள் பற்றி அதிக அளவில் விளம்பரங்கள், சாதனங்கள் பற்றிய அறிமுகங்கள் இருந்தன. சிறு குடும்ப தபால் தலைகள் 1970-90களில் வெளிவந்தன. இரண்டாயிரத்திலோ நிலைமை மாறி சிறுநகரங்களில் கூட கருத்தரிப்பு நிலையங்கள் தோன்ற ஆரம்பித்தன.2010களிலோ தத்தெடுத்தல் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். பிறக்கின்ற குழந்தைகளில் குறிப்பிட்ட சதவிகிதம் ஆட்டிசம், கற்றல் குறைபாடு, மனவளர்ச்சி குன்றுதல் போன்ற பிரச்னைகள் இருப்பது வருந்தத்தக்கது.

60களில் அறிமுகப்படுத்தப்பட்ட ரசாயன விவசாயமே இந்த நிலைக்குக் காரணம் என்பதையே, விவரம் அறிந்த மக்கள் ஒப்புக்கொண்டு, விலை சற்று அதிகமிருந்தாலும் இயற்கை அங்காடிகளுக்கு (சிறு நகரங்களுக்குக் கூட) ஆதரவு தருகின்றனர். இது முக்கிய குடும்ப மகிழ்ச்சி (குழந்தைப்பேறு) மற்றும் பெரியவர்களுக்கு ஆரோக்கியம் தேவையென்பதைக் காட்டுகிறது. நமக்கான தோட்டத்தை உருவாக்கி, புத்தம் புதிய காய்கறிகளை வளர்த்து, குடும்பம் மகிழ்ச்சியடைய ஆரம்ப நிலையிலுள்ளவர்களுக்குப் பயன்படும் தகவல்களை அளிக்கிறார் தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட்.

சூரிய ஒளி

பொதுவாக நமது காய்கறிகள் அதிக சூரிய ஒளியை விரும்பும் தாவரங்களாகும். அதனால், இடத்தைத் தேர்வு செய்யும்போது சூரிய ஒளி நன்கு கிடைக்கும் இடமாகவும், காற்றோட்டமுள்ள இடமாகவும் தேர்வு செய்தல் அவசியம்.

தண்ணீர்

பொதுவாக வீட்டுக்குப் பின்புறமே இட வசதியும் அதிக தண்ணீர் பயன்பாடும் இருக்கும். அப்பகுதியையோ, இடமில்லாதவர்கள் தண்ணீர் தொட்டி அமைந்துள்ள மொட்டை மாடியையும் தேர்வு செய்யலாம். தண்ணீர் வசதியுள்ளவர்கள் எல்லாவித காய்கறிகளையும் வளர்க்கலாம். நீர் வசதி குறைவாக உள்ளவர்கள் வறட்சியை தாங்கி வளரும் காய்கறிகளை அதிகம் வளர்க்க வேண்டும். பொதுவான விதி ஒன்று உண்டு... செடிகளை நீரைக் கொண்டு இருவிதமாக அழிக்கலாம். ஒன்று நீர் விடாமல் அழிப்பது... மற்றொன்று அதிக நீர் விட்டு அழிப்பது. அதனால் அளவான நீர் அதிகம் பலன் தரும்!

பயிர்த் தேர்வு மற்றும் பட்டம்

அ‘ஆடிப்பட்டம் தேடிவிதை’, ‘பருவத்தே பயிர் செய்’ என்று முன்னோர் கூறியதை நினைவில் கொள்ள வேண்டும். இருப்பினும் விஞ்ஞான முன்னேற்றம், நிழல் வலை, பசுமைக்குடில் என பட்டத்தை சற்று தளர்த்திக் கொள்ள வகை செய்கிறது. பெரும்பாலும் காய்கறிச் செடிகளை நாம் விதை மூலமே உற்பத்தி செய்கிறோம். அவற்றை நேரடி விதைப்பு மூலமாகவும் (உ.தா: கீரை வகைகள், அவரை, பீன்ஸ், தட்டைப்பயிர், வெண்டைக்காய், மல்லி), சிலவற்றை நாற்றங்காலில் உற்பத்தி செய்து பிடுங்கியும் (உ.தா: கத்தரி, தக்காளி, மிளகாய், முட்டைகோஸ், பீட்ரூட்) நடவேண்டும். சிலவற்றை தண்டுகள் மூலம் (உ.தா: புதினா, தவசிக் கீரை), சிலவற்றை கிழங்கு மூலமாக (உ.தா: இஞ்சி, மஞ்சள், உருளைக்கிழங்கு) பயிர் செய்யலாம். பந்தல் அமைப்பு இருந்தால் நேரடி விதைப்பு மூலம் பாகல், பீர்க்கன், புடலை, சுரைக்காய், சௌசௌ போன்றவற்றை வளர்க்கலாம். ஆங்கில காய்கறிகளை குளிர் காலத்தில் பயிர் செய்தால் மகசூல் நன்றாக இருக்கும். நமது காய்கறிகளை கோடை முடிந்து ஜூன் முதல் செப்டம்பர் வரை அந்தந்த பகுதிகளின் மழைக்காலத்தை கருத்தில் கொண்டு வளர்க்கலாம். சில வகைகளை எப்போது வேண்டுமானாலும் வளர்க்கலாம் (உ.தா: முள்ளங்கி, மல்லி). பொதுவாக கீரை வகைகள் 20-30 நாட்களிலும், வகையைப் பொறுத்து காய்கறிகள் 40-90 நாட்களில் பலன் தர ஆரம்பிக்கும்.

நீண்ட காலம் பலன் தரும் அகத்தி, முருங்கை, கறிவேப்பிலை, தவசிக்கீரை, எலுமிச்சை போன்றவற்றை நடும்போது மற்ற செடிகளுக்கு நிழல் அடிக்காமல் ஓரத்தில் நடப்பட வேண்டும்.

பழங்களைப் பொறுத்த வரையில் இடம் இருந்தால் குற்றுமரங்களாக இருக்கும் அத்தி, சீதா, நெல்லி, பப்பாளி, கொய்யா, சப்போட்டா, ஒட்டு மா, மாதுளை, ஒட்டு பலா, வாழை நடலாம்.

(விதை போடுவோம்)

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

இதுதான் குடும்ப மகிழ்ச்சி! Empty Re: இதுதான் குடும்ப மகிழ்ச்சி!

Post by செந்தில் Tue Jun 24, 2014 10:09 am

பயன்மிக்க பகிர்வுக்கு நன்றி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இதுதான் குடும்ப மகிழ்ச்சி! Empty Re: இதுதான் குடும்ப மகிழ்ச்சி!

Post by ஸ்ரீராம் Tue Jun 24, 2014 10:22 am

பயனுள்ள தகவலுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இதுதான் குடும்ப மகிழ்ச்சி! Empty Re: இதுதான் குடும்ப மகிழ்ச்சி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum