Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நாஸ்ட்ரடாமஸ் ( Nostradamus )
Page 1 of 1 • Share
நாஸ்ட்ரடாமஸ் ( Nostradamus )
[You must be registered and logged in to see this image.]
Nostradamus உலகின் தலை சிறந்த தீர்க்க தரிசியாக புகழ் பெற்றவர். இவர் தனது ஆரூடங்களை செய்யுள்களாக தனது தி சென்டுரிஸ் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார் அதில் உலகத்தின் முடிவுவரை கூறி உள்ளார். . இவர் தனது நூலில் ஹிட்லர் ,முசோலினி ,முதலாம் எலிசபெத் ,கென்னடி சகோதரர்களின் படுகொலை, ட்வின் tower அளித்தால் போன்ற பல தீர்க்க தரிசனங்களை முன்கூட்டியே தெரிவித்தவர்.
[You must be registered and logged in to see this image.]
Nostradamus's house at Salon-de-Provence, as reconstructed after the 1909 Lambesc earthquake
இவரது இயற் பெயர் Michel de நோச்ற்றேடமே. பிரெஞ்சு நாட்டை சேர்ந்தவர். இவர் ஒரு யூதர் ஜாக்ஸ் ,ரெயினி என்பவர்களுக்கு 1503 dec 14 இல் பிறந்தார், ஜீன் என்பவரிடம் தனது ஆரம்பக்கல்வியை கற்றார். அவரது மதினுட்பத்தில் மயங்கிய ஜீன் அவருக்கு கணிதம் கிரேக்கம் ஹிப்ரு இவற்றுடன் ஜோதிடத்தையும் கற்றுக்கொடுத்தார் . 1519 இல் தனது 15 வதுவயத்தில் Avignon பல்கலைகழகம் சென்றார். அங்கு இவர் grammar,logic, rhetoric,geometry,arithmetic,astronomy போன்றவற்றை கற்றார்.
பின்பு அங்கிருந்து வெளியேறி 8 வருடங்கள் கிராமம் கிராமமாக சென்று மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்,. இவரது ஜோதிடக்கலை மீதான ஆர்வத்தால் கவலை அடைந்த பெற்றோர் மருத்துவக்கல்விக்காக இவரைப்பணித்தனர். இதனால் இவர் university of montpellier இல் சேர்ந்தார். அங்குள்ள நூலகத்திலே தனது பலமணி நேரங்களை செலவிட்டார். அங்கு அவர் வாசித்த புத்தகங்கள்தான் அவரை ஜோதிடம் நோக்கி வெகுவாக திருப்பியது. இவர் முதலில் அங்கு படித்தநூல் "FAELMOS-DE MYSTERIES AEGYPTORIUM" இதன் மூலம்தான் வரும் பொருள் உரைத்தல் முறையை உருவாக்கிக்கொண்டார். பின் அங்கிருந்து மருத்துவராக வெளியேறி பின் யூத ரசவதிகளிடம் ஜோதிடம் கற்றார் . மருத்துவராக வெளியேறி சிகிச்சை அளித்தார். தனது சொந்த போர்முலாக்கள் மூலமே சிகிச்சை அளித்தார் டாக்டர்ரேட் பட்டம் பெற்றார் .
[You must be registered and logged in to see this image.]
அவரது விருப்பப்படி திருமணம் செய்துகொண்டார். 2 குழந்தைகளுக்கு தந்தையானார். இந்த மகிழ்ச்சியெல்லாம் வெறும் 3 வருடங்களே நீடித்தது. ப்ளேக் நோயினால் அவரது மனைவி குழந்தைகளை இழந்தார். ஒரு பிரபல வைத்தியராக இருந்துகொண்டு தனது சொந்த குடும்பத்தையே காப்பாற்ற முடியாமல் போனது அவருக்கு மிகுந்த வேதனையை அளித்தது . இதன் பின்னர் யாரும் இவரிடம் வைத்தியத்திற்கு செல்லவில்லை. வாழ்க்கை வெறுமையாகி நாடோடி வாழ்கை வாழ்ந்தார். இத்தாலி பிரான்ஸ் நாடுகளினூடாக 6 ஆண்டுகள் பயணம் செய்தார். அவரது மனைவியின் உறவினர்கள் வரதட்சணையாக வாங்கிய பணத்தை திருப்பித்தரும் படி அவர் மீது வழக்கு தொடுத்தனர்.
[You must be registered and logged in to see this image.]
1544 இல் மக்ஸ்வெல் நகருக்கு சென்றார். அங்கு ப்ளேக் நோயின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இவரது சொந்த தயாரிப்பான ரோஸ் மாத்திரை மூலம் நோயாளிகளைக் குணப்படுத்தினார். இவரது புகழ் மீண்டும் பரவத்தொடங்கியது. ராணி கத்திரின் இவரை தனது மருத்துவ ஆலோசகராக நியமித்தார். பின்பு இவர் ஆன் என்ற இளம் விதவைப்பெண்ணை திருமணம் செய்துகொண்டார். பின்பு சிறிது காலம் பிரமுகர்களுக்கு அழகு சாதனப்பொருட்கள் தயாரித்து வழங்கினார். இவர் கிறீஸ்தவராக இருந்தாலும் பிறப்பில் ஒரு யூதர் என்று சிலர் இவரை புறக்கணிக்க தொடங்கினார்கள்.
இக்காலத்தில் இவர் ஜோதிட நூல்களை அதிகமாக கற்க தொடங்கினர். 1555 இல் தனது முதல் நூலான "The prophecies" என்னும் ஆரூடத்தை வெளியிட்டார். இந்த நூல் வெளியிடலின் பின்னர்தான் இவரது பெயரை nostredame என்பதில் இருந்து nostradamus என்று அழைத்தார்கள். இதற்கு போதிய அளவு வரவேற்பு கிடைத்ததால் மேலதிகமாக நூல்களை எழுதினார். இதில் குறிகியகால நீண்ட கால எதிர்வு கூறல்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட விடயங்கள் என பலவற்றை குறிப்பிட்டிருந்தார். இவரது பெயரை வைத்து பல நிறுவனங்கள் போலி ஆரூடங்களை வெளி இட்டன. தி சென்டுரீஸ் என்ற நூல் இவரது மறைவுக்கு பின்தான் வெளியிடப்பட்டது. இவரது ஆரூடங்கள் அதிக வரவேற்பை பெற்றாலும் எதிரிப்பையும் சம்பாதித்து தந்தது. நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக வழக்கு தொடரும் அளவிற்கு சிலரை இவரது ஆரூடங்கள் கொண்டு சென்றன. அரச குடும்பத்தவர்களுக்கு ஜோதிடம் கணித்துக்கொடுத்தர். ஒவ்வொன்றாக நடைபெற தொடங்கியது.
[You must be registered and logged in to see this image.]
.இதனால் பல முக்கிய மனிதர்கள் அவரை காண வந்தார்கள் இவருடைய ஆரூடங்களுக்கு ராணி கத்தரினிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. கத்தரின் இவற்றை படிக்கும் போது மிகுந்த ஆவலுடனும் படித்தபின்பு அவருக்கு கோபமும் வந்தது. ஆனால் ராணி காத்தரினுக்கு இறுதிவரை nostradamus மீது நம்பிக்கை இருந்தது. பிற்காலத்தில் சிறந்த மருத்துவர் என்ற விருதை nostradamus இற்கு அரசி வழங்கினார். அவருக்கு ஓய்வூதியம் அளித்து 300 தங்கக்காசுகள் கொண்ட பொன் முடிப்புடன் தீர்க்கதரிசி என்ற சிறப்பு பட்டமும் கொடுத்து கௌரவித்தார். 1565 இல் nostradamus இற்கு மூட்டு உபாதைகள் ஏற்பட்டன. வீட்டை விட்டு நகர முடியாத நிலை ஏற்பட்டது. தன்னுடைய மரணம் எப்போது நிகழும் என்பதை முன்கூட்டியே அவர் அறிந்திருந்தார். அடுத்தநாள் காலை தான் இறந்துகிடப்பதை பார்க்கமுடியும் என்று ஷவிக்னியிடம் கூறியிருந்தார். அவர்கூறிய படியேதான் நடந்தது. (ஷவிக்னி -சட்டம் படித்த 30 வயது இளைஞர் இவர் நகரின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருக்கு நல்ல எதிர்காலம் இருந்தது nostradamus பற்றி அறிந்ததும் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு அவரின் மாணவனாகிவிட்டார். nostradamus இன் வாழ்கையின் இறுதிவரை கூடவே இருந்தவர் ) இறந்தபின் தன்னை எவ்வாறு அடக்கம் செய்ய வேண்டும் என்பதை முன்பே கூறி இருந்தார். அவரின் ஆசைப்படியே அவரது உடலை செங்குத்தாக புதைத்தார்கள் 1566 ஜூலை 2 இல் மரணமடைந்தார்.
[You must be registered and logged in to see this image.]
அவரது கல்லறையில் "இங்கே புகழ் பெற்ற nostradamus உறங்குகின்றார் ஒரு பேனாவால் உலகத்தலையெழுத்தை விவரித்தவர் "என்று பொறித்து வைத்தார்கள். அவரது கல்லறையில் இழிவான யாரும் என் மீது நடந்து செல்லக்கூடாது என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் பிரெஞ்சு புரட்சியின்போது சிப்பாய்கள் அவரது கல்லறையை உடைத்தார்கள். அவரது மண்டைஓட்டை எடுத்து மதுவை ஊற்றி ஒரு சிப்பாய் குடிக்கும் பொழுது ஒரு bullet அவனது தலையை துளைத்தது. இதைப் பற்றியும் தனது சென்டுரிஸ்இல் குறிப்பிட்டுள்ளார்.
[You must be registered and logged in to see this image.]
The man who opens the tomb when it is பௌந்து
And who does not close it immediately,
Evil will come to him
That no one will be able to prove.
பின்னர் nostradamus இன் எலும்புகளை சேர்த்து வேறு இடத்தில் புதைத்தார்கள். அவர் வாழ்ந்த காலத்தில் nostradanus இன் பெயர் அவரது எதிர்வுகூறல்களால் எவ்வாறு எல்லோரது வாயிலும் உச்சரிக்கப்பட்டதோ அதே போல் இப்பொழுதும் உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
வெங்காயம்
Nostradamus உலகின் தலை சிறந்த தீர்க்க தரிசியாக புகழ் பெற்றவர். இவர் தனது ஆரூடங்களை செய்யுள்களாக தனது தி சென்டுரிஸ் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார் அதில் உலகத்தின் முடிவுவரை கூறி உள்ளார். . இவர் தனது நூலில் ஹிட்லர் ,முசோலினி ,முதலாம் எலிசபெத் ,கென்னடி சகோதரர்களின் படுகொலை, ட்வின் tower அளித்தால் போன்ற பல தீர்க்க தரிசனங்களை முன்கூட்டியே தெரிவித்தவர்.
[You must be registered and logged in to see this image.]
Nostradamus's house at Salon-de-Provence, as reconstructed after the 1909 Lambesc earthquake
இவரது இயற் பெயர் Michel de நோச்ற்றேடமே. பிரெஞ்சு நாட்டை சேர்ந்தவர். இவர் ஒரு யூதர் ஜாக்ஸ் ,ரெயினி என்பவர்களுக்கு 1503 dec 14 இல் பிறந்தார், ஜீன் என்பவரிடம் தனது ஆரம்பக்கல்வியை கற்றார். அவரது மதினுட்பத்தில் மயங்கிய ஜீன் அவருக்கு கணிதம் கிரேக்கம் ஹிப்ரு இவற்றுடன் ஜோதிடத்தையும் கற்றுக்கொடுத்தார் . 1519 இல் தனது 15 வதுவயத்தில் Avignon பல்கலைகழகம் சென்றார். அங்கு இவர் grammar,logic, rhetoric,geometry,arithmetic,astronomy போன்றவற்றை கற்றார்.
பின்பு அங்கிருந்து வெளியேறி 8 வருடங்கள் கிராமம் கிராமமாக சென்று மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்,. இவரது ஜோதிடக்கலை மீதான ஆர்வத்தால் கவலை அடைந்த பெற்றோர் மருத்துவக்கல்விக்காக இவரைப்பணித்தனர். இதனால் இவர் university of montpellier இல் சேர்ந்தார். அங்குள்ள நூலகத்திலே தனது பலமணி நேரங்களை செலவிட்டார். அங்கு அவர் வாசித்த புத்தகங்கள்தான் அவரை ஜோதிடம் நோக்கி வெகுவாக திருப்பியது. இவர் முதலில் அங்கு படித்தநூல் "FAELMOS-DE MYSTERIES AEGYPTORIUM" இதன் மூலம்தான் வரும் பொருள் உரைத்தல் முறையை உருவாக்கிக்கொண்டார். பின் அங்கிருந்து மருத்துவராக வெளியேறி பின் யூத ரசவதிகளிடம் ஜோதிடம் கற்றார் . மருத்துவராக வெளியேறி சிகிச்சை அளித்தார். தனது சொந்த போர்முலாக்கள் மூலமே சிகிச்சை அளித்தார் டாக்டர்ரேட் பட்டம் பெற்றார் .
[You must be registered and logged in to see this image.]
அவரது விருப்பப்படி திருமணம் செய்துகொண்டார். 2 குழந்தைகளுக்கு தந்தையானார். இந்த மகிழ்ச்சியெல்லாம் வெறும் 3 வருடங்களே நீடித்தது. ப்ளேக் நோயினால் அவரது மனைவி குழந்தைகளை இழந்தார். ஒரு பிரபல வைத்தியராக இருந்துகொண்டு தனது சொந்த குடும்பத்தையே காப்பாற்ற முடியாமல் போனது அவருக்கு மிகுந்த வேதனையை அளித்தது . இதன் பின்னர் யாரும் இவரிடம் வைத்தியத்திற்கு செல்லவில்லை. வாழ்க்கை வெறுமையாகி நாடோடி வாழ்கை வாழ்ந்தார். இத்தாலி பிரான்ஸ் நாடுகளினூடாக 6 ஆண்டுகள் பயணம் செய்தார். அவரது மனைவியின் உறவினர்கள் வரதட்சணையாக வாங்கிய பணத்தை திருப்பித்தரும் படி அவர் மீது வழக்கு தொடுத்தனர்.
[You must be registered and logged in to see this image.]
1544 இல் மக்ஸ்வெல் நகருக்கு சென்றார். அங்கு ப்ளேக் நோயின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இவரது சொந்த தயாரிப்பான ரோஸ் மாத்திரை மூலம் நோயாளிகளைக் குணப்படுத்தினார். இவரது புகழ் மீண்டும் பரவத்தொடங்கியது. ராணி கத்திரின் இவரை தனது மருத்துவ ஆலோசகராக நியமித்தார். பின்பு இவர் ஆன் என்ற இளம் விதவைப்பெண்ணை திருமணம் செய்துகொண்டார். பின்பு சிறிது காலம் பிரமுகர்களுக்கு அழகு சாதனப்பொருட்கள் தயாரித்து வழங்கினார். இவர் கிறீஸ்தவராக இருந்தாலும் பிறப்பில் ஒரு யூதர் என்று சிலர் இவரை புறக்கணிக்க தொடங்கினார்கள்.
இக்காலத்தில் இவர் ஜோதிட நூல்களை அதிகமாக கற்க தொடங்கினர். 1555 இல் தனது முதல் நூலான "The prophecies" என்னும் ஆரூடத்தை வெளியிட்டார். இந்த நூல் வெளியிடலின் பின்னர்தான் இவரது பெயரை nostredame என்பதில் இருந்து nostradamus என்று அழைத்தார்கள். இதற்கு போதிய அளவு வரவேற்பு கிடைத்ததால் மேலதிகமாக நூல்களை எழுதினார். இதில் குறிகியகால நீண்ட கால எதிர்வு கூறல்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட விடயங்கள் என பலவற்றை குறிப்பிட்டிருந்தார். இவரது பெயரை வைத்து பல நிறுவனங்கள் போலி ஆரூடங்களை வெளி இட்டன. தி சென்டுரீஸ் என்ற நூல் இவரது மறைவுக்கு பின்தான் வெளியிடப்பட்டது. இவரது ஆரூடங்கள் அதிக வரவேற்பை பெற்றாலும் எதிரிப்பையும் சம்பாதித்து தந்தது. நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக வழக்கு தொடரும் அளவிற்கு சிலரை இவரது ஆரூடங்கள் கொண்டு சென்றன. அரச குடும்பத்தவர்களுக்கு ஜோதிடம் கணித்துக்கொடுத்தர். ஒவ்வொன்றாக நடைபெற தொடங்கியது.
[You must be registered and logged in to see this image.]
.இதனால் பல முக்கிய மனிதர்கள் அவரை காண வந்தார்கள் இவருடைய ஆரூடங்களுக்கு ராணி கத்தரினிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. கத்தரின் இவற்றை படிக்கும் போது மிகுந்த ஆவலுடனும் படித்தபின்பு அவருக்கு கோபமும் வந்தது. ஆனால் ராணி காத்தரினுக்கு இறுதிவரை nostradamus மீது நம்பிக்கை இருந்தது. பிற்காலத்தில் சிறந்த மருத்துவர் என்ற விருதை nostradamus இற்கு அரசி வழங்கினார். அவருக்கு ஓய்வூதியம் அளித்து 300 தங்கக்காசுகள் கொண்ட பொன் முடிப்புடன் தீர்க்கதரிசி என்ற சிறப்பு பட்டமும் கொடுத்து கௌரவித்தார். 1565 இல் nostradamus இற்கு மூட்டு உபாதைகள் ஏற்பட்டன. வீட்டை விட்டு நகர முடியாத நிலை ஏற்பட்டது. தன்னுடைய மரணம் எப்போது நிகழும் என்பதை முன்கூட்டியே அவர் அறிந்திருந்தார். அடுத்தநாள் காலை தான் இறந்துகிடப்பதை பார்க்கமுடியும் என்று ஷவிக்னியிடம் கூறியிருந்தார். அவர்கூறிய படியேதான் நடந்தது. (ஷவிக்னி -சட்டம் படித்த 30 வயது இளைஞர் இவர் நகரின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருக்கு நல்ல எதிர்காலம் இருந்தது nostradamus பற்றி அறிந்ததும் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு அவரின் மாணவனாகிவிட்டார். nostradamus இன் வாழ்கையின் இறுதிவரை கூடவே இருந்தவர் ) இறந்தபின் தன்னை எவ்வாறு அடக்கம் செய்ய வேண்டும் என்பதை முன்பே கூறி இருந்தார். அவரின் ஆசைப்படியே அவரது உடலை செங்குத்தாக புதைத்தார்கள் 1566 ஜூலை 2 இல் மரணமடைந்தார்.
[You must be registered and logged in to see this image.]
அவரது கல்லறையில் "இங்கே புகழ் பெற்ற nostradamus உறங்குகின்றார் ஒரு பேனாவால் உலகத்தலையெழுத்தை விவரித்தவர் "என்று பொறித்து வைத்தார்கள். அவரது கல்லறையில் இழிவான யாரும் என் மீது நடந்து செல்லக்கூடாது என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் பிரெஞ்சு புரட்சியின்போது சிப்பாய்கள் அவரது கல்லறையை உடைத்தார்கள். அவரது மண்டைஓட்டை எடுத்து மதுவை ஊற்றி ஒரு சிப்பாய் குடிக்கும் பொழுது ஒரு bullet அவனது தலையை துளைத்தது. இதைப் பற்றியும் தனது சென்டுரிஸ்இல் குறிப்பிட்டுள்ளார்.
[You must be registered and logged in to see this image.]
The man who opens the tomb when it is பௌந்து
And who does not close it immediately,
Evil will come to him
That no one will be able to prove.
பின்னர் nostradamus இன் எலும்புகளை சேர்த்து வேறு இடத்தில் புதைத்தார்கள். அவர் வாழ்ந்த காலத்தில் nostradanus இன் பெயர் அவரது எதிர்வுகூறல்களால் எவ்வாறு எல்லோரது வாயிலும் உச்சரிக்கப்பட்டதோ அதே போல் இப்பொழுதும் உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
வெங்காயம்
Re: நாஸ்ட்ரடாமஸ் ( Nostradamus )
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி பிரபு,இவரை பற்றி நான் பல நூல்களை படித்திருக்கிறேன், மிகவும் சுவாரஸ்யமான சம்பவங்கள் நிறைந்திருக்கும்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நாஸ்ட்ரடாமஸ் ( Nostradamus )
ஆம் நிச்சயம் வரக்கூடிய ஆவல்தான்மகா பிரபு wrote:ஆம் அண்ணா. இவரை ப்பற்றி இன்னும் அறிய ஆவலாக உள்ளது.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நாஸ்ட்ரடாமஸ் ( Nostradamus )
பகிர்வுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|