Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விதிகளை அறிந்து வாகனம் ஓட்டுவோம்
Page 1 of 1 • Share
விதிகளை அறிந்து வாகனம் ஓட்டுவோம்
By எஸ். பாலசுந்தரராஜ்
அண்மையில் ஒரு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு இடைத்தரகர் 5 நபர்களுக்கு ஆட்டோ ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக, அவர்களை அழைத்து வந்திருந்தார். போக்குவரத்து ஆய்வாளர், உரிமம் பெற வந்தவர்களிடம், சாலையில் வைக்கப்பட்டுள்ள போக்குவரத்து விதிகளை கூறும் குறியீடுகள் நான்கைந்து கூறுங்கள் எனக் கேட்டார்.
கட்டில் படம் போட்டிருந்தால் அருகில் மருத்துவமனை இருக்கிறது என அர்த்தம், மாணவன் படம் போட்டிருந்தால் பள்ளிப் பகுதி என அர்த்தம் என்ற விவரத்தைக் கூட அவர்களில் ஒருவருக்குக்கூட சொல்லத் தெரியவில்லை. பதில் எதுவும் கூறாமல் நின்று கொண்டிருந்தனர். ஆய்வாளர், இடைத் தரகரை பார்த்தார். அவரோ பார்த்துப் போடுங்கள் சார் என்றார். ஆய்வாளர் பதில் எதுவும் பேசாமல், அறைக்கு அழைத்துச் சென்றார்.
இப்படி அடிப்படை சாலை விதிகள் கூட தெரியாதவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்று விடுகிறார்கள். இதனால்தான் போக்குவரத்து விதிகள் தெரியாமலும், தெரிந்தாலும் மதிக்காமலும் பலர் உள்ளனர். இது போன்றவர்களால்தான் சாலை விபத்துகள் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது.
தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் பெண்கள் இரு சக்கர வாகனம் ஓட்டுவது அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளைக் கொண்டு செல்வதற்கும், மாலை திரும்பி வருவதற்கும் பெண்கள் இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்துகிறார்கள். இவர்களில் 80 சதம் பேர் ஓட்டுநர் உரிமம் பெறாமல் இருக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு ஊரில் ஒரு மகளிர் கல்லூரி வாசலில், போக்குவரத்து காவல் துறையினர் மாணவிகளிடம் ஓட்டுநர் உரிமம் உள்ளதா என சோதனை செய்தனர். சோதனையில் பெரும்பாலானோர் ஓட்டுநர் உரிமம் பெற வில்லை எனத் தெரிய வந்தது.
இதையடுத்து, போக்குவரத்து காவல்துறையினர், கல்லூரி நிர்வாகத்திடம் கூறி, மாணவிகளுக்கு சரியான கட்டணம் பெற்றுக் கொண்டு உரிமம் பெற்றுக் கொடுத்தார்கள். இப்படி எத்தனை ஊர்களில் போக்குவரத்து காவல் துறையினர் செயல்படுகிறார்கள் என்பது கேள்விக்குறியே.
பெரும்பாலான பெண்கள் இரு சக்கர வாகனம் ஓட்டும்போது, திரும்பும்முன் இன்டிகேட்டரை உபயோகிப்பதில்லை. இதனால் விபத்து ஏற்படுகிறது.
தற்போது ஆண்களும் பரவலாக ஓட்டுநர் உரிமம் பெறுவதில்லை. அவர்களும் போக்குவரத்து விதிகளின் படி நடப்பதில்லை. இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலைமை இதுவென்றால், 4 சக்கர வாகன ஓட்டிகள்கூட சிலர் திரும்பும்போது இன்டிக்கேட்டரை பயன்படுத்துவதில்லை.
அத்துமீறுவது என்பது தமிழர்களின் ரத்தத்தில் ஊறி விட்டது போலும். போலீஸார் இல்லை என்றால் ஒரு வழிப் பாதையை பயன்படுத்துவது, அதிக ஒலியுடன் கூடிய ஹாரனை உபயோகிப்பது என வாகன ஓட்டிகளிடமும் நிறைய பொறுப்பின்மை உள்ளது.
அவ்வப்போது போலீஸார் சோதனை நடத்துகிறார்கள். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்துகிறார்கள். எனினும், சாலைப் போக்குவரத்து விதிகள் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை.
ஒவ்வோர் ஆண்டும் ஒரு சடங்காக சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது. நாங்களும் பாதுகாப்பு வாரம் நடத்தினோம் என காவல் துறையினர் பத்திரிகை மூலம் பதிவு செய்து விடுகிறார்கள். இதனால் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைப்பதில்லை.
தற்போது 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவ - மாணவிகள் இரு சக்கர வாகனம் ஓட்டுவது அதிகரித்து வருகிறது. பெற்றோர்களே இதனை ஊக்குவிப்பதால், காவல் துறையினர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள்.
அண்மையில் சிவகாசியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3 பேர் ஒரே மொபெட்டில் சென்றுள்ளனர். அப்போது, பின்னால் வந்த லாரி மோதி ஒரு மாணவர் உயிரிழந்து விட்டார். மற்ற இரு மாணவர்கள் காயமடைந்தனர். இந்த செய்தி மிகவும் வருத்தத்திற்குரியது.
இதற்கு முக்கிய காரணம் பெற்றோர்தான். இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இரு சக்கர வாகனம் வாங்கி கொடுத்து விடுகிறார்கள். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்த பின்னரே முறைப்படி உரிமம் பெற்று இரு சக்கர வாகனம் வாங்கித்தர வேண்டும். அத்துடன் வாகனங்களை ஓட்டவும் அனுமதிக்க வேண்டும்.
அதேபோல், வாகனம் ஓட்டும் பெண்கள் சாலை விதிகளை தெரிந்து கொண்டு வாகனம் ஓட்ட வேண்டும். பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றால், அவர்களை கூப்பிட்டு காவல் துறையினர் கண்டிக்க வேண்டும்.
இனியாவது நாம் சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லா உலகம் படைப்போம்.
நன்றி: தினமணி
அண்மையில் ஒரு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு இடைத்தரகர் 5 நபர்களுக்கு ஆட்டோ ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக, அவர்களை அழைத்து வந்திருந்தார். போக்குவரத்து ஆய்வாளர், உரிமம் பெற வந்தவர்களிடம், சாலையில் வைக்கப்பட்டுள்ள போக்குவரத்து விதிகளை கூறும் குறியீடுகள் நான்கைந்து கூறுங்கள் எனக் கேட்டார்.
கட்டில் படம் போட்டிருந்தால் அருகில் மருத்துவமனை இருக்கிறது என அர்த்தம், மாணவன் படம் போட்டிருந்தால் பள்ளிப் பகுதி என அர்த்தம் என்ற விவரத்தைக் கூட அவர்களில் ஒருவருக்குக்கூட சொல்லத் தெரியவில்லை. பதில் எதுவும் கூறாமல் நின்று கொண்டிருந்தனர். ஆய்வாளர், இடைத் தரகரை பார்த்தார். அவரோ பார்த்துப் போடுங்கள் சார் என்றார். ஆய்வாளர் பதில் எதுவும் பேசாமல், அறைக்கு அழைத்துச் சென்றார்.
இப்படி அடிப்படை சாலை விதிகள் கூட தெரியாதவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்று விடுகிறார்கள். இதனால்தான் போக்குவரத்து விதிகள் தெரியாமலும், தெரிந்தாலும் மதிக்காமலும் பலர் உள்ளனர். இது போன்றவர்களால்தான் சாலை விபத்துகள் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது.
தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் பெண்கள் இரு சக்கர வாகனம் ஓட்டுவது அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளைக் கொண்டு செல்வதற்கும், மாலை திரும்பி வருவதற்கும் பெண்கள் இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்துகிறார்கள். இவர்களில் 80 சதம் பேர் ஓட்டுநர் உரிமம் பெறாமல் இருக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு ஊரில் ஒரு மகளிர் கல்லூரி வாசலில், போக்குவரத்து காவல் துறையினர் மாணவிகளிடம் ஓட்டுநர் உரிமம் உள்ளதா என சோதனை செய்தனர். சோதனையில் பெரும்பாலானோர் ஓட்டுநர் உரிமம் பெற வில்லை எனத் தெரிய வந்தது.
இதையடுத்து, போக்குவரத்து காவல்துறையினர், கல்லூரி நிர்வாகத்திடம் கூறி, மாணவிகளுக்கு சரியான கட்டணம் பெற்றுக் கொண்டு உரிமம் பெற்றுக் கொடுத்தார்கள். இப்படி எத்தனை ஊர்களில் போக்குவரத்து காவல் துறையினர் செயல்படுகிறார்கள் என்பது கேள்விக்குறியே.
பெரும்பாலான பெண்கள் இரு சக்கர வாகனம் ஓட்டும்போது, திரும்பும்முன் இன்டிகேட்டரை உபயோகிப்பதில்லை. இதனால் விபத்து ஏற்படுகிறது.
தற்போது ஆண்களும் பரவலாக ஓட்டுநர் உரிமம் பெறுவதில்லை. அவர்களும் போக்குவரத்து விதிகளின் படி நடப்பதில்லை. இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலைமை இதுவென்றால், 4 சக்கர வாகன ஓட்டிகள்கூட சிலர் திரும்பும்போது இன்டிக்கேட்டரை பயன்படுத்துவதில்லை.
அத்துமீறுவது என்பது தமிழர்களின் ரத்தத்தில் ஊறி விட்டது போலும். போலீஸார் இல்லை என்றால் ஒரு வழிப் பாதையை பயன்படுத்துவது, அதிக ஒலியுடன் கூடிய ஹாரனை உபயோகிப்பது என வாகன ஓட்டிகளிடமும் நிறைய பொறுப்பின்மை உள்ளது.
அவ்வப்போது போலீஸார் சோதனை நடத்துகிறார்கள். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்துகிறார்கள். எனினும், சாலைப் போக்குவரத்து விதிகள் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை.
ஒவ்வோர் ஆண்டும் ஒரு சடங்காக சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது. நாங்களும் பாதுகாப்பு வாரம் நடத்தினோம் என காவல் துறையினர் பத்திரிகை மூலம் பதிவு செய்து விடுகிறார்கள். இதனால் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைப்பதில்லை.
தற்போது 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவ - மாணவிகள் இரு சக்கர வாகனம் ஓட்டுவது அதிகரித்து வருகிறது. பெற்றோர்களே இதனை ஊக்குவிப்பதால், காவல் துறையினர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள்.
அண்மையில் சிவகாசியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3 பேர் ஒரே மொபெட்டில் சென்றுள்ளனர். அப்போது, பின்னால் வந்த லாரி மோதி ஒரு மாணவர் உயிரிழந்து விட்டார். மற்ற இரு மாணவர்கள் காயமடைந்தனர். இந்த செய்தி மிகவும் வருத்தத்திற்குரியது.
இதற்கு முக்கிய காரணம் பெற்றோர்தான். இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இரு சக்கர வாகனம் வாங்கி கொடுத்து விடுகிறார்கள். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்த பின்னரே முறைப்படி உரிமம் பெற்று இரு சக்கர வாகனம் வாங்கித்தர வேண்டும். அத்துடன் வாகனங்களை ஓட்டவும் அனுமதிக்க வேண்டும்.
அதேபோல், வாகனம் ஓட்டும் பெண்கள் சாலை விதிகளை தெரிந்து கொண்டு வாகனம் ஓட்ட வேண்டும். பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றால், அவர்களை கூப்பிட்டு காவல் துறையினர் கண்டிக்க வேண்டும்.
இனியாவது நாம் சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லா உலகம் படைப்போம்.
நன்றி: தினமணி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: விதிகளை அறிந்து வாகனம் ஓட்டுவோம்
உண்மைதான் சாலையின் விதிமுறைகள் அறிந்திடாமலே நாம் வாகணங்களை ஒட்டிக்கொண்டிருக்கின்றோம்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?
» சாலை விதிகளை மதித்தல்:
» இந்த ஐந்து விதிகளை கடை பிடித்தால் கல்யாணம்
» எப்டிஐ விதிகளை தளர்த்த மத்திய அரசு ஆலோசனை
» ஏடிம் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த புதிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்
» சாலை விதிகளை மதித்தல்:
» இந்த ஐந்து விதிகளை கடை பிடித்தால் கல்யாணம்
» எப்டிஐ விதிகளை தளர்த்த மத்திய அரசு ஆலோசனை
» ஏடிம் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த புதிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|