Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உளவியல் சோதனைக்காக மன்னிப்புக் கோரிய ஃபேஸ்புக்
Page 1 of 1 • Share
உளவியல் சோதனைக்காக மன்னிப்புக் கோரிய ஃபேஸ்புக்
அனுமதி இல்லாமல் மேற்கொண்ட உளவியல் பரிசோதனைக்காக ஃபேஸ்புக் மன்னிப்பு கேட்டுள்ளது. ஃபேஸ்புக் முதன்மை செயல் அதிகாரி ஷெரில் சாண்ட்பர்க் இதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.
சமூக வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக்கில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை தொடர்பாக சமீபத்தில் வெளியான செய்தி இணைய உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் பெரும் சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் பயனாளிகள் மனநிலையில் ஏற்படும் தாக்கத்தை அறிவதற்காக, இந்த பரிசோதனை ரகசியமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின்போது தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபேஸ்புக் பயனாளிகளின் பக்கத்தில் வெளியாகும் செய்தி ஓடையில் (நியூஸ் ஃபீட்) திட்டமிட்டு மாற்றம் செய்யப்பட்டது. அதாவது, செய்திகளின் வரிசையில் இடம் பெற்ற முதல் செய்தி, நல்ல செய்தியாகவோ அல்லது தீங்கான செய்தியாகவோ இருக்கும் வகையில் அமைக்கப்பட்டது.
நியூஸ் ஃபீடில் பார்க்கும் செய்தி பயனாளிகள் வெளியிடும் கருத்தை பாதிக்கிறதா என அறிய இவ்வாறு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட ஏழு லட்சம் பயனாளிகளின் ஃபேஸ்புக் பக்கத்தில் இத்தகைய மாற்றத்தை செய்து ஒரு வார காலத்திற்கு அதன் விளைவுகள் கண்காணிக்கப்பட்டது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனை ரகசியமாகவே அரங்கேறியது. அதாவது பயனாளிகளுக்கு இது பற்றி எந்த தகவலும் தெரியாது. அமெரிக்க ஆய்விதழில் இது தொடர்பான கட்டுரை வெளியான பிறகே இந்த பரிசோதனை பற்றி உலகிற்கு தெரிய வந்தது.
பயனாளிகள் தங்கள் நியூஸ் ஃபீடில் படிக்கும் செய்தியின் தன்மை, அவர்கள் மனநிலையை பாதிக்கிறது என்பதே இந்த ஆய்வின் முடிவாக அமைந்தது.
இதன் பொருள், பயனாளிகள் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் நல்லவிதமான செய்தியை படித்தால், அதன் பிறகு அவர்கள் வெளியிடும் பதிவும் நல்லவிதமாகவே இருக்கிறது என்பதாகும். அதேபோல எதிர்மறையான செய்தியை படித்தால், அதன் தாக்கம் காரணமாக பயனாளிகள் பதிவும் எதிர்மறையாகவே இருக்கிறது.
செய்திகள் பயனாளிகள் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று உணர்த்திய இந்த ஆய்வு முடிவை விட, இந்த ஆய்வு பயனாளிகள் அனுமதி இல்லாமல் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
ஏற்கெனவே ஃபேஸ்புக் செயல்பாடு பலவிதமான அந்தரங்க உரிமை மீறல்களுக்கு வித்திட்டுள்ள நிலையில், பயனாளிகளுக்கு தெரியாமலேயே ஃபேஸ்புக் அவர்களை சோதனைக்கு உள்ளாக்கியது கடும் எதிப்புக்கு இலக்கானது.
இந்நிலையில், ஃபேஸ்புக் முதன்மை செயல் அதிகாரி ஷெரில் சாண்ட்பர்க் இது தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொழில்முனைவோர்களை சந்தித்து பேசும் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, அவர் இந்த சர்ச்சைக்காக மன்னிப்பு கேட்பதாக கூறினார்.
ஆனால், சாண்ட்பர்க் உண்மையில் இந்த ரகசிய சோதனைக்காக மன்னிப்பு கோரவில்லை. இந்தச் சோதனை நிறுவனங்கள் நடத்தும் வழக்கமான சோதனை என்று கூறிய அவர், இது தொடர்பாக தகவல் தெரிவித்த விதம்தான் மோசமாக அமைந்து விட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்தார்.
அதாவது, பயனாளிகளின் அனுமதி இல்லாமல் அவர்களை சோதனைக்கு உட்படுத்தியது பற்றி அவர் எதுவும் கூறவில்லை.
ஏற்கெனவே, இந்தச் சோதனையை முன்னின்று நடத்திய ஃபேஸ்புக் டேட்டா விஞ்ஞானி ஆடம் கிராமரும் இதற்காக மன்னிப்பு கோரியிருந்தார். இந்தச் சோதனையின் நோக்கம் பயனாளிகளுக்கு மேலும் சிறப்பான சேவையை வழங்குவது தான், யாரையும் வருத்த்திற்கு உள்ளாக்குவதில்லை என்று அவர் ஃபேஸ்புக் பதிவில் கூறியிருந்தார்.
எது எப்படியோ இந்த பரிசோதனை சமூக ஊடங்களின் தாக்கம் பற்றி மட்டும் அல்ல; அவற்றின் செயல்படும் விதம் பற்றியும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
சைபர்சிம்மனின் வலைப்பதிவுத் தளம் http://cybersimman.wordpress.com/
நன்றி: தி இந்து
சமூக வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக்கில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை தொடர்பாக சமீபத்தில் வெளியான செய்தி இணைய உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் பெரும் சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் பயனாளிகள் மனநிலையில் ஏற்படும் தாக்கத்தை அறிவதற்காக, இந்த பரிசோதனை ரகசியமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின்போது தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபேஸ்புக் பயனாளிகளின் பக்கத்தில் வெளியாகும் செய்தி ஓடையில் (நியூஸ் ஃபீட்) திட்டமிட்டு மாற்றம் செய்யப்பட்டது. அதாவது, செய்திகளின் வரிசையில் இடம் பெற்ற முதல் செய்தி, நல்ல செய்தியாகவோ அல்லது தீங்கான செய்தியாகவோ இருக்கும் வகையில் அமைக்கப்பட்டது.
நியூஸ் ஃபீடில் பார்க்கும் செய்தி பயனாளிகள் வெளியிடும் கருத்தை பாதிக்கிறதா என அறிய இவ்வாறு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட ஏழு லட்சம் பயனாளிகளின் ஃபேஸ்புக் பக்கத்தில் இத்தகைய மாற்றத்தை செய்து ஒரு வார காலத்திற்கு அதன் விளைவுகள் கண்காணிக்கப்பட்டது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனை ரகசியமாகவே அரங்கேறியது. அதாவது பயனாளிகளுக்கு இது பற்றி எந்த தகவலும் தெரியாது. அமெரிக்க ஆய்விதழில் இது தொடர்பான கட்டுரை வெளியான பிறகே இந்த பரிசோதனை பற்றி உலகிற்கு தெரிய வந்தது.
பயனாளிகள் தங்கள் நியூஸ் ஃபீடில் படிக்கும் செய்தியின் தன்மை, அவர்கள் மனநிலையை பாதிக்கிறது என்பதே இந்த ஆய்வின் முடிவாக அமைந்தது.
இதன் பொருள், பயனாளிகள் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் நல்லவிதமான செய்தியை படித்தால், அதன் பிறகு அவர்கள் வெளியிடும் பதிவும் நல்லவிதமாகவே இருக்கிறது என்பதாகும். அதேபோல எதிர்மறையான செய்தியை படித்தால், அதன் தாக்கம் காரணமாக பயனாளிகள் பதிவும் எதிர்மறையாகவே இருக்கிறது.
செய்திகள் பயனாளிகள் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று உணர்த்திய இந்த ஆய்வு முடிவை விட, இந்த ஆய்வு பயனாளிகள் அனுமதி இல்லாமல் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
ஏற்கெனவே ஃபேஸ்புக் செயல்பாடு பலவிதமான அந்தரங்க உரிமை மீறல்களுக்கு வித்திட்டுள்ள நிலையில், பயனாளிகளுக்கு தெரியாமலேயே ஃபேஸ்புக் அவர்களை சோதனைக்கு உள்ளாக்கியது கடும் எதிப்புக்கு இலக்கானது.
இந்நிலையில், ஃபேஸ்புக் முதன்மை செயல் அதிகாரி ஷெரில் சாண்ட்பர்க் இது தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொழில்முனைவோர்களை சந்தித்து பேசும் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, அவர் இந்த சர்ச்சைக்காக மன்னிப்பு கேட்பதாக கூறினார்.
ஆனால், சாண்ட்பர்க் உண்மையில் இந்த ரகசிய சோதனைக்காக மன்னிப்பு கோரவில்லை. இந்தச் சோதனை நிறுவனங்கள் நடத்தும் வழக்கமான சோதனை என்று கூறிய அவர், இது தொடர்பாக தகவல் தெரிவித்த விதம்தான் மோசமாக அமைந்து விட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்தார்.
அதாவது, பயனாளிகளின் அனுமதி இல்லாமல் அவர்களை சோதனைக்கு உட்படுத்தியது பற்றி அவர் எதுவும் கூறவில்லை.
ஏற்கெனவே, இந்தச் சோதனையை முன்னின்று நடத்திய ஃபேஸ்புக் டேட்டா விஞ்ஞானி ஆடம் கிராமரும் இதற்காக மன்னிப்பு கோரியிருந்தார். இந்தச் சோதனையின் நோக்கம் பயனாளிகளுக்கு மேலும் சிறப்பான சேவையை வழங்குவது தான், யாரையும் வருத்த்திற்கு உள்ளாக்குவதில்லை என்று அவர் ஃபேஸ்புக் பதிவில் கூறியிருந்தார்.
எது எப்படியோ இந்த பரிசோதனை சமூக ஊடங்களின் தாக்கம் பற்றி மட்டும் அல்ல; அவற்றின் செயல்படும் விதம் பற்றியும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
சைபர்சிம்மனின் வலைப்பதிவுத் தளம் http://cybersimman.wordpress.com/
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: உளவியல் சோதனைக்காக மன்னிப்புக் கோரிய ஃபேஸ்புக்
பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மன்னிப்புக் கேளுங்கள். மகிழ்ச்சி பெருகும்
» மன்னிப்புக் கேட்டார் பரூக் அப்துல்லா!
» உளவியல்
» தம்பதியரே மன்னியுங்கள், மன்னிப்புக் கேளுங்கள். மகிழ்ச்சி பெருகும்.
» உளவியல் சொல்லும் உண்மைகள்
» மன்னிப்புக் கேட்டார் பரூக் அப்துல்லா!
» உளவியல்
» தம்பதியரே மன்னியுங்கள், மன்னிப்புக் கேளுங்கள். மகிழ்ச்சி பெருகும்.
» உளவியல் சொல்லும் உண்மைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|