தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கண் இமை அழற்சியும் கண் சிவத்தலும்

View previous topic View next topic Go down

கண் இமை அழற்சியும் கண் சிவத்தலும் Empty கண் இமை அழற்சியும் கண் சிவத்தலும்

Post by முழுமுதலோன் Mon Jul 07, 2014 11:08 am


   
கண் வெண்பகுதியை மூடும் இமை உள்பகுதி சிவத்தலும், அதில் வீக்கமும் ஏற்படுதல் அழற்சி என்று அழைக்கப்படுகிறது. இது திடீரென தோன்றி மறையும் தன்மை கொண்டது. இது தானே மறைந்தாலும் மருத்துவரின் சிகிச்சையும் சில சமயங்களில் தேவைப்படும்.

நோய்க்குறிகள் :

1. பொதுவாக 2 கண்களும் பாதிக்கப்படும், ஒவ்வொரு கண்ணாக பாதிப்பு தொடங்கும்.

2. கண்ணின் வெண்மைப் பகுதியில் ரத்தக் குழாய்கள் நன்றாகத் தெரியும் அல்லது கண் சிவந்திருக்கும்.

3. கண் இமைகளும் லேசாக சிகப்பு நிறத்திலோ, இளஞ்சிவப்பு நிறத்திலோ ஆகிவிடும்.

4. கண் பிசு பிசு வென்று ஒட்டிக் கொள்ளும், தூங்கி விழிக்கும்போது இது மோசமாக இருக்கும். கண்களில் இருந்து நீர் சுரந்து கொண்டே இருக்கும்.

5. கண் எரிச்சலோ, வலியோ ஏற்படும்.

6. சில சமயங்களில் ஒளியால் கண்கள் கூசும்.

சிகிச்சை :

நோயின் காரணத்திற்கு தகுந்தவாறு சிகிச்சை மாறுபடும்.

களிம்புகள், சொட்டு மருந்துகள் கொடுத்து கண் கிருமியை அகற்றலாம், மருந்து மாத்திரைகள் மூலம் ஒவ்வாமையால் ஏற்படும் நோய்க்குறிகளை தீர்க்கலாம்.

கடைபிடிக்க வேண்டிய சில மாற்று வழிகள் :


* நோய்க்கிருமி தொற்றிய கண்களில் சுத்தமான துணியை குளிர்ந்த நீரில் வைத்து கண்கள் மேல் 1 நாளைக்கு 4 முறை 10 அல்லது 15 என்ற எண்ணிக்கையில் ஒற்றி எடுக்கலாம். இதனால் கண் வீக்கம் மற்றும் சிவத்தல் குறையும்.

* கைகளை அடிக்கடி கழுவவும், கண்களின் அருகில் கைகளைக் கொண்டு செல்வதைத் தவிர்க்கவும்.

* கண்களைத் தேய்க்கும் பழக்கத்தை அறவே கைவிடுவது நல்லது.

* கண் கூசினால் கூலிங்கிளாஸ் அணிந்து கொள்ளலாம்.

* கண் எரிச்சல் மற்றும் உறுத்தல் ஏற்படுத்தும் விவகாரங்களை கண்களுக்கு அருகில் கொண்டு செல்ல வேண்டாம்.

* தலையணை உறையை தினமும் மாற்றிவிடுவது உசிதம்.

* மருத்துவர்கள் கூறும் வரை கான்டாக்ட் லென்சை தவிர்க்கவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கண் இமை அழற்சியும் கண் சிவத்தலும் Empty Re: கண் இமை அழற்சியும் கண் சிவத்தலும்

Post by முழுமுதலோன் Mon Jul 07, 2014 11:09 am

கீழ்வரும் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக கண் மருத்துவர் உதவியை நாடவும் :

* பார்வையில் மாற்றங்கள்
* கடுமையான கண் வலி
* விழிகளை உருட்டும்போது வலி
* காய்ச்சல்
* சிகிச்சைக்கு 48-72 மணி நேரத்திற்குப் பிறகும் பலனில்லாமல் இருந்தால்.
* சூரிய ஒளிக்கு கண்கள் கடுமையாக கூசும்போது.

களிம்புகள் மற்றும் சொட்டு மருந்துகளை பயன்படுத்தும் விதம் :

* மருந்துகளையும், கண்களையும் தொடும்முன் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
* கீழ் இமையை மெதுவாக கீழே தாழ்த்திக் கொள்ளுங்கள்
* பிறகு மேலே பார்க்க வேண்டும்.
* சொட்டு மருந்தை கீழ் இமைப்பகுதியில் விட வேண்டும். விழிப்பாவையில் மருந்துகளை விடும் பழக்கம் பலரிடம் இருக்கிறது, இது தவறு. கண்களை மெதுவாக மூட வேண்டும், பிறகு சிமிட்டினால் மருந்துகள் கண்ணில் சமமாக பரவும்.
* களிம்புகளை கண்ணில் அப்ளை செய்கையில் மூக்கிற்கு அருகில் இருக்கும் கண் மூலைப்பகுதியில் கீழ் இமைப்பகுதியில் களிம்பை அப்ளை செய்ய வேண்டும். கண்களை மெதுவாக மூடியபிறகு கண்களை லேசாக உருட்டினால் களிம்பு எல்லா இடங்களுக்கும் பரவும்.


கண் சிவத்தல் :

கண்கள் சிவந்தாலே அது கண் இமை அழற்சி என்று கருத வேண்டிய அவசியமில்லை.

கண்ணின் உள்ளே திடீரென அழுத்தம் அதிகரிப்பது Acute Angle Closure Glaucoma எனப்படும். இதனாலும் கூட கண்கள் விரைவில் சிகப்பு நிறமாக மாறும். ஆரம்ப நிலையிலேயே அழுத்தம் குறைக்கப்பட்டால் பார்வை விரைவில் பூரண குணமடையும், தாமதம் ஏற்பட்டால் கண் பார்வையில் நிரந்தர சேதம் ஏற்படும். எனவே உடனடியாக சிகிச்சை அவசியம்.

அறிகுறிகள் :

* பார்வை திடீரென மந்தமடைதல்
* கடுமையான கண்வலி
* தலைவலி
* குமட்டல் மற்றும் வாந்தி
* கண்கள் கூசுதல், வெளிச்சத்தில் பார்க்க முடியாமை

சிகிச்சை :


கண்ணின் உள்ளே உள்ள திரவத்தின் அழுத்தத்தைக் குறைத்தல்.


-webdunia
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கண் இமை அழற்சியும் கண் சிவத்தலும் Empty Re: கண் இமை அழற்சியும் கண் சிவத்தலும்

Post by mohaideen Mon Jul 07, 2014 4:11 pm

அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கண் இமை அழற்சியும் கண் சிவத்தலும் Empty Re: கண் இமை அழற்சியும் கண் சிவத்தலும்

Post by செந்தில் Mon Jul 07, 2014 5:38 pm

தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கண் இமை அழற்சியும் கண் சிவத்தலும் Empty Re: கண் இமை அழற்சியும் கண் சிவத்தலும்

Post by ந.கணேசன் Mon Jul 07, 2014 6:15 pm

அவசியமான பகிர்வு சார்..
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

கண் இமை அழற்சியும் கண் சிவத்தலும் Empty Re: கண் இமை அழற்சியும் கண் சிவத்தலும்

Post by முரளிராஜா Tue Jul 08, 2014 10:21 am

அறியத்தந்தமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கண் இமை அழற்சியும் கண் சிவத்தலும் Empty Re: கண் இமை அழற்சியும் கண் சிவத்தலும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum