தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மதுப்பிரியரா நீங்கள்? மறதி உங்களை அடிமையாக்கும்

View previous topic View next topic Go down

மதுப்பிரியரா நீங்கள்? மறதி உங்களை அடிமையாக்கும் Empty மதுப்பிரியரா நீங்கள்? மறதி உங்களை அடிமையாக்கும்

Post by நாஞ்சில் குமார் Mon Jul 14, 2014 11:03 pm

மதுப்பிரியரா நீங்கள்? மறதி உங்களை அடிமையாக்கும் 2hgut74

மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடானது, மது நாட்டுக்கும் வீட்டிற்கும் கேடு என்பது போன்ற மேற்கொள்களுடன் மதுபானம் விற்பனை செய்யப்பட்டாலும் கண்ணை மூடிக்கொண்டு பாட்டிலை கவிழ்க்கின்ற மது பிரியர்கள்தான் அதிகம் உள்ளனர். மதுபானம் உடல் நலத்தை மட்டுமல்ல உள்ளத்தையும் கேடாக்குவதுடன், மனித சமூகத்தில் இருந்து ஒருவனை தனியே பிரித்து விடுகிறது. மதுபானம் உடலில் உள்ள எல்லா அவையங்களையும் பாதிக்கிறது.

இதனால் உருவாகின்ற நோய்களின் தீவிரமும் அதிகமாக இருக்கும். மது அருந்துகின்றவர்களில் மூன்றில் ஒருபங்கு பேருக்கு மறதி நோய் காணப்படுகிறது. மறதி வருகின்ற வேளையில் நடைபெறுகின்ற சம்பவங்கள் அனைத்தையும் அவர்கள் மறந்து போகின்றனர். இந்த மறதி முதலில் தற்காலிகம்தான், மறுநாள் அவர்களுக்கு ஞாபக சக்தி திரும்ப கிடைக்கலாம். ஆனால் இதுபோன்ற நிகழ்வு அடிக்கடி நடைபெறுவது அவரின் தன்னம்பிக்கையை சீர்குலைத்து விடும், ஒரு குடும்ப தலைவனாக இருந்து அவர் ஆற்ற வேண்டிய பணிகளை அவர் தனது குடும்பத்திற்காக செய்ய முடியாமல் போய்விடும். இதனால் இந்த சமூகம் அவரை தனித்து விடும் சூழல் உருவாகும்.

மது பெரும்பாலும் தூக்கத்தை கெடுக்கிறது. தூக்கத்தில் பயப்படும் வகையிலான கனவுகள் வந்து போகும். சிலருக்கு அதிகப்படியான குறட்டை சத்தம் உருவாதலும், அதனால் சுவாசித்தலில் தடைகளும் ஏற்படும். மது போதையில் இருக்கின்றவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் சரியான முடிவு எடுக்க முடியாத நிலையும், உள்ளது என்பது ஆய்வு ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால்தான் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதிகப்படியாக மது அருந்துபவர்களுக்கு ஞாபகத்திறன் இழப்பு அதிகப்படலாம். இது திரும்ப கிடைக்க ஒரு வாரம் வரை ஆகலாம். சில நேரங்களில் ஒரு சில நிமிடங்களுக்கு முன் உள்ள விஷயங்கள் முதல் அன்று காலை நடந்ததை கூட மாலையில் மறந்து விடும் நிலை ஏற்படலாம். இதனால் மதுபானம் அருந்துகின்றவர்கள் அதிகப்படியான பொய் சொல்கின்ற நிலை ஏற்படும். மதுபோதையில் இருக்கின்றவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய பாதையையும், இடத்தையும், வீட்டையும் மறந்து நடக்கின்ற சம்பவங்கள் உண்டு.

மது பிரியர்கள் தொடர்ந்து மது அருந்துவதால் உடலில் வைட்டமின் குறைவு ஏற்படும் அதனால் இதுபோன்ற நிலை ஏற்படுகிறது. உரிய நேரத்தில் இதனை கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் அது மூளையை கணிசமாக பாதிக்கும். இந்த வைட்டமின் ஊசி மருந்து செலுத்துவதன் வாயிலாக சரி செய்யும் சிகிச்சைகள் உள்ளன. மது அருந்தி நடக்கின்றவர்களில் நிலையிலும் வித்தியாசத்தை காணலாம்.இரு வசத்திலும் தள்ளாடியபடி கீழே விழப்போகின்ற ரீதியில் நடந்து செல்வர். ரத்தத்தில் ஆல்கஹால் அளவு குறைய குறைய இந்த நடை சீராகும். ஆனால் தொடர்ச்சியாக மதுவிற்கு அடிமையானவர்கள் இதுபோன்று நடப்பது வழக்கமாக மாறிவிடுகிறது.

மது அருந்துவதால் மூளையில் உள்ள செரிபெல்லம் சுருங்கி போவது இதற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். தொடர்ச்சியாக மது அருந்துபவர்களுக்கு நரம்பு தளர்ச்சி ஏற்படுவதுடன் கை, கால்கள் மரத்துப் போகின்ற நிலைகளும் ஏற்படும். மதுவிற்கு அடிமையானவர் களுக்கு சந்தேகம் ஒரு நோயாக மாறிவிடும். மதுபானம் தொடர்ச்சியாக அருந்துவோர் அதனை திடீரென்று நிறுத்தினாலும் பயம், நடுக்கம், தூக்கமின்மை போன்றவை வரலாம். சரியான முறையில் மருத்துவ சிகிச்சை வாயிலாக இதற்கு தீர்வு காண முடியும். மறுவாழ்வு மையங்களில் சேர்க்க வேண்டும். மதுபானம் மூலம் உருவாகின்ற நோய்களுக்கு ஒரே தீர்வு முற்றிலும் மது அருந்துவதை நிறுத்துவதுதான். சில நோய்களுக்கு அவசர சிகிச்சைகள் தேவைப்படும்.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

மதுப்பிரியரா நீங்கள்? மறதி உங்களை அடிமையாக்கும் Empty Re: மதுப்பிரியரா நீங்கள்? மறதி உங்களை அடிமையாக்கும்

Post by mohaideen Tue Jul 15, 2014 12:59 pm

சொன்னா கேட்கவா போறாங்க?
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum