தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மனிதன் தினமும் எழுச்சி பெற்று வருகிறான். ஆனால் மனிதம்..?

View previous topic View next topic Go down

மனிதன் தினமும் எழுச்சி பெற்று வருகிறான். ஆனால் மனிதம்..? Empty மனிதன் தினமும் எழுச்சி பெற்று வருகிறான். ஆனால் மனிதம்..?

Post by முழுமுதலோன் Thu Jul 17, 2014 10:41 am



ஒவ்வொரு நொடியும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த  வருத்தமே ‘மனிதர்களின்’  வரவு செலவுக் கணக்கில் விஞ்சி நிற்கிறது. இரக்கம் ஏன் தேய்ந்து போகிறது? இதயம் ஏன் தொய்ந்து போகிறது? என்ற கவலை சமூக அக்கறையுள்ள அனைவரிடமும் மேலோங்கி நிற்கிறது. இந்த வருத்தமும் அக்கறையும் இப்போதுதான் இருக்கிறதா? அல்லது முன்பும் இருந்ததா?

‘இன்றைய இளைஞர்கள் அகந்தை​யுடன் இருக்கிறார்கள்; அவர்கள் பெரியவர்கள் பேச்சை மதிப்பதில்லை; ஆசிரியர்கள் வரும்போது எழுந்து நின்று மரியாதை செய்வதில்லை’  என்று அங்கலாய்த்துக்​கொண்டார் ஒருவர். இவர் நம்முடைய சமகாலத்தவர் அல்லர்.

சுமார் 25 நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏதென்ஸ் நகரில் வாழ்ந்த சாக்ரடீஸுக்கு இப்படி ஒரு வருத்தம் இருந்தது. எனவே, ‘காலம் கெட்டுப்போன புலம்பல்’ காலந்தோறும் உண்டு. ஆனால், இது வெறும் புலம்பல் மட்டும்தானா? உண்மை அதற்குள் ஒளிந்துகொண்டு இருக்கத்தானே செய்கிறது. நாம் ஏன் இப்படி மாறிப்போனோம்?

நம் உடலில் லேசாகக் கீறினால் நம்முடைய குரங்குத்தனம் வெளிவந்துவிடும். ஏனென்றால், நம் நாகரிகம் என்பது மேம்போக்கான ஏற்பாடு; அழியும் முகப்பூச்சு. அதனால்தான், ‘குரங்குகளிடம் இருக்கும் குரங்குத்தனத்தைக் காட்டிலும், மனிதனிடம் இருக்கும் குரங்குத்தனம் அதிகம்’  என்றார் நீட்ஸே.

குரங்குகளின் குரங்குத்தனம் ஓர் எல்லைக்குட்​பட்டது. ஆனால், மனிதனின் குரங்குத்தனம் எல்லையற்றது!

ஒரு வீட்டில் மேசையில் இருந்த கத்தியை ஒரு குரங்கு எடுத்துக்கொண்டு ஓடியது. வீட்டில் இருந்த அனைவரும் பயந்தனர். குரங்கைத் துரத்தி ஓடினர். பிடிக்க முடியாமல் பதற்றப்பட்டனர். அங்கிருந்த பெரியவர் ஒருவர், ‘பயப்படாதீர்கள்! குரங்கு எடுத்தால் கவலைப்பட வேண்டியது இல்லை. மனிதன் எடுத்திருந்தால் மட்டுமே கவலைப்பட வேண்டும்’ என்றார். கொஞ்சநேரத்தில் எடுத்த இடத்தில் கத்தியை வைத்துவிட்டு குரங்கு சென்றுவிட்டது. ஆனால், மனிதன் எடுத்துச் சென்றிருந்தால் என்ன ஆகியிருக்கும். யாராவது கற்பனை செய்ய முடியுமா? ஏனென்றால், குரங்குகள் அணுகுண்டுகளைத் தயாரிப்பது இல்லை; தன்னுடைய இனத்தையே அழித்துப் பழி தீர்ப்பது இல்லை.

மனிதனின் வன்மமும் சுயநலமும் பரிணாம வளர்ச்சியோடு தொடர்புடையவை. ‘சிறந்தவை நீடிப்பது இல்லை; தகுந்தவையே தம்மைத் தக்கவைத்துக்கொள்கின்றன’ என்ற பரிணாம வளர்ச்சியின் தத்துவத்தை டார்வின், மால்தூஸிடம் இருந்து பெற்றார். நம்மை ‘மூன்றாவது சிம்பன்ஸி’ என்று ஜேரட் டைமண்ட் அழைப்பார். நம்முடைய மரபணுக்களில் இன்னும் நம்முடைய பழைய நினைவுகள் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. நம்முடைய உணவு, செயல்பாடு என்று அனைத்திலும் நம்முடைய உடலமைப்பு பெரிதும் பங்களிக்கிறது. உடலே மனத்தைப் பாதிக்கிறது. மனம் பாதிப்பது சூழலால். உடலை பாதிப்பது மரபுவழிச் சரடு. மனிதன் மாறிவிட்டான் என்று சொல்வதற்குக் காரணம் உடலமைப்பு, மனம் ஆகியவற்றின் மாற்றங்களால்தான்!




பனிப்புலம் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மனிதன் தினமும் எழுச்சி பெற்று வருகிறான். ஆனால் மனிதம்..? Empty Re: மனிதன் தினமும் எழுச்சி பெற்று வருகிறான். ஆனால் மனிதம்..?

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jul 17, 2014 11:12 am

நாளும் ஒழுக்கத்தால் சிறந்து விளங்குபவன்தான் மனிதன் என்கிறது தொல்காப்பியம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

மனிதன் தினமும் எழுச்சி பெற்று வருகிறான். ஆனால் மனிதம்..? Empty Re: மனிதன் தினமும் எழுச்சி பெற்று வருகிறான். ஆனால் மனிதம்..?

Post by sawmya Thu Jul 17, 2014 12:53 pm

ம்...ம்...ம்... புன்முறுவல் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

மனிதன் தினமும் எழுச்சி பெற்று வருகிறான். ஆனால் மனிதம்..? Empty Re: மனிதன் தினமும் எழுச்சி பெற்று வருகிறான். ஆனால் மனிதம்..?

Post by செந்தில் Thu Jul 17, 2014 6:10 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மனிதன் தினமும் எழுச்சி பெற்று வருகிறான். ஆனால் மனிதம்..? Empty Re: மனிதன் தினமும் எழுச்சி பெற்று வருகிறான். ஆனால் மனிதம்..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum