Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காலாவதியான மேம்பாலங்கள் சென்னைக்கு தேவையா?
Page 1 of 1 • Share
காலாவதியான மேம்பாலங்கள் சென்னைக்கு தேவையா?
உலக அளவில், காலாவதியாகிவிட்ட மேம்பாலங்கள் அமைப்பதில், சென்னை மாநகராட்சி அதிக ஆர்வம் காட்டுவது ஏன் என, நகரமைப்பு வல்லுனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால், சென்னையில் ஈகா தியேட்டர் -- வள்ளுவர் கோட்டம் உட்பட, 12 மேம்பால திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் பல்வேறு பிரதான சாலைகள், 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையிலேயே இப்போதும் இருக்கின்றன. ஆனால், இந்த சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அப்போது இருந்ததை காட்டிலும் பல மடங்காக அதிகரித்து உள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு சாலைகளும், போக்குவரத்து நிர்வாகமும் மேம்படுத்தப்படாமல் போனதே இப்போதைய பிரச்னைக்கு முக்கிய காரணமாக உள்ளது.
தீர்வாகுமா?
சென்னை மேயராக சைதை துரைசாமி பொறுப்பேற்றபின் கடந்த மூன்று ஆண்டுகளில், 12 மேம்பாலங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதில், ஒரு சில பாலங்களுக்கான பணிகள் மண் பரிசோதனை நிலையிலும், சில பாலங்களுக்கான பணிகள் கருத்து கேட்பு நிலையிலும் உள்ளன. இந்த பின்னணியில், 1,100 கோடி ரூபாய் செலவில், ஈகா தியேட்டர் முதல் வள்ளுவர் கோட்டம் வரை, 2.6 கி.மீ., தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கப்படும் என, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், சென்னையில் காந்தி மண்டபம், அடையாறு, பீட்டர்ஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் மாநகராட்சியால் கட்டப்பட்டன. ஆனால், இப்போது, இப்பகுதிகளில் மேம்பாலம் கட்டப்படாத மற்ற இடங்களை காட்டிலும், அங்கு தான் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், எந்த அடிப்படை யில், போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு மேம்பாலங்களை தீர்வாக முன்வைத்து பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் வரி பணத்தை, சென்னை மாநகராட்சி செலவு செய்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐ.டி.டி.பி., கருத்து:
இது குறித்து போக்குவரத்து மேம்பாட்டுக்கான கொள்கை ஆய்வு நிறுவனத்தின் (ஐ.டி. டி.பி.,) இந்தியாவுக்கான மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில், மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தன. இதனால் ஏற்பட்ட நெரிசல் பிரச்னைக்கு தீர்வுக்காணும் வகையில், பல்வேறு நகரங்களில், மேம்பாலங்கள் கட்டப்பட்டன. ஆனால், 50 - 60 ஆண்டுகள் கடந்த நிலையில், வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துவிட்ட சூழலில், இந்த மேம்பாலங்கள், மக்களின் போக்குவரத்துக்கு மிகப்பெரிய இடையூறாக மாறிவிட்டன. இதை உணர்ந்த அந்த நகர நிர்வாகங்கள் மேம்பாலங்களை இடித்து விட்டு, சாலைகளை மக்களின் தேவைக்கு ஏற்ப, சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளன. பொது போக்குவரத்து பயன்பாட்டை ஊக்குவிப்பது மட்டுமே தீர்வு என்பதை சர்வதேச நகரங்களின் நிர்வாகங்கள் இப்போது ஏற்றுகொண்டுவிட்டன.
காலாவதியான திட்டம்:
உலக அளவில் நகரங்களுக்குள் மேம்பாலம் அமைப்பது காலாவதியாகிவிட்ட நிலையில், சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களில் அதிக எண்ணிக்கையில் மேம்பாலங்கள் அமைப்பதில் ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டுவது துரதிர்ஷ்டவசமானது. இப்போதைய நிலையில், 30 நிமிடங்களில் செல்லும் இடத்துக்கு மேம்பாலம் அமைப்பதால், 5 நிமிடத்தில் செல்லலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இப்படி பயண நேரம் குறைந்தால், இப்போது பொது போக்குவரத்தில் செல்பவர்களும் ஆளுக்கொரு வாகனத்தை பயன்படுத்த துவங்கி விடுவர். இதனால், அடுத்த சில ஆண்டுகளில் வாகனங்களின் நெரிசல் மேலும் அதிகரிக்குமே தவிர எவ்வித தீர்வும் ஏற்படாது. சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடந்து வருவதால், அதற்கு செல்லும் மற்ற சாலைகளில் நெரிசல் அதிகமாக உள்ளது. மெட்ரோ பணிகள் முடிந்தபின் தான், இதன் உண்மை நிலவரம் தெரியவரும். அதுவரை காத்திருக்காமல் சென்னை மாநகராட்சி இப்போதே, 1,100 கோடி ரூபாய் அளவுக்கு மக்கள் வரி பணத்தை இதற்கு செலவழிப்பது ஏன் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மாநகராட்சியில், தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் மாறி மாறி பொறுப்புக்கு வரும் போதெல்லாம் புதிய மேம்பாலங்களுக்கான அறிவிப்புகளை வெளியிடுவது தொடர்கதையாகியுள்ளது. இந்த மேம்பாலங்களால், கட்டுமான ஒப்பந்ததாரர்கள், அவர்களுக்கு ஒப்பந்தம் வழங்குவதற்காக கமிஷன் வாங்குபவர்களை தவிர்த்து வேறு யாருக்கு எந்த பயனும் இருப்பதாக தெரியவில்லை என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள். இதன் பிறகாவது சென்னையின் போக்குவரத்து பிரச்னைக்கு உரிய தீர்வை காண, மாநகராட்சி நிர்வாகம் முன்வருமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
துறைமுகம் - மதுரவாயல் சாலைக்கு பாதிப்பு?
சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை, 19 கிலோ மீட்டர் தொலைவுக்கு உயர் மட்ட மேம்பால சாலை திட்டம், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம், 1,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் இத்திட்டம், கூவத்தின் கரையோரத்திலேயே செல்கிறது. இத்திட்டத்துக்காக அமைக்கப்படும் தூண்களால், கூவத்தின் நீரோட்டம் பாதிக்கப்படும் என தமிழக அரசு எழுப்பிய பிரச்னையால் கடந்த, இரண்டு ஆண்டுகளாக முடங்கியுள்ளது. இந்நிலையில், இத்திட்ட பாதையின் குறுக்காக, ஈகா தியேட்டர் முதல் வள்ளுவர் கோட்டம் மேம்பால சாலை திட்டம் வருகிறது. ஹாரிங்டன் சாலை - ஸ்டெர்லிங் சாலை சந்திப்பு இடையே, கூவத்தில், இத்திட்டத்துக்கான பெரிய தூண்கள் அமைக்க வேண்டும். ஏற்கனவே, உயர்மட்ட சாலை திட்டத்துக்காக தூண்கள் அமைக்கப்படும் நிலையில், தற்போது மாநகராட்சின் திட்டம் குறுக்கிட்டால் பெரிய அளவில் சிக்கல் ஏற்படும். ஒருவேளை துறைமுகம் - மதுரவாயல் திட்டத்தை குறிவைத்து, ஈகா தியேட்டர் - வள்ளுவர் கோட்டம் சாலை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இடிக்கப்பட்ட மேம்பாலங்கள்
அமெரிக்கா, பாஸ்டன் நகரில், 1950ல் கட்டப்பட்ட, 'மைக் கார்தி' மேம்பாலம் நடைபாதையாக மாற்றப்பட்டுள்ளது
நியூயார்க் நகர், ஆக்லேண்ட் பகுதியில், 1961ல் கட்டப்பட்ட மேம்பாலம், 'ஹைவே பார்க்' என பூங்காவாகியுள்ளது
ஆஸ்திரேலியாவில், மெல்போன் நகரில், 1961ல் கட்டப்பட்ட மேம்பாலம், 2002ல் இடிக்கப்பட்டுவிட்டது
அமெரிக்காவில், சான் பிரான்சிஸ்கோ நகரில், 1960ல் துறைமுகம் அருகில் கட்டப்பட்ட மேம்பாலம், 2012ல் இடிக்கப்பட்டுவிட்டது.
சந்தை மதிப்பில் பணம் கிடைக்குமா?
ஈகா தியேட்டர் முதல் வள்ளுவர் கோட்டம் வரை, 2.6 கி.மீ., தூரத்துக்கு மேம்பால சாலை திட்டத்துக்கு, 38 அயிரம் சதுர மீட்டர் நிலம் தேவைப்படுகிறது. இதில், 11,400 சதுர மீட்டர் நிலம் ஏற்கனவே, அரசின் கட்டுப்பாட்டில், வெவ்வேறு துறைகள் வசம் உள்ளன. ஆனால், டி.டி.ஆர்., எனப்படும் வளர்ச்சி உரிமை மாற்றம் திட்டத்தில், இழப்பீடு கொடுக்காமல் தனியார் நிலங்களை பெற மாநகராட்சி உத்தேசித்துள்ளது. 'இன்றைய சந்தை விலை அடிப்படையில் பணமாக இழப்பீடு கொடுக்காமல், நிலம் எடுக்கக்கூடாது' என, இப்பகுதி மக்கள் கருத்து கேட்பு கூட்டத்திலேயே தெளிவாக கூறிவிட்டனர். இதனால், நிலம் எடுப்பு சிக்கல் காரணமாக, ஆரம்ப நிலையிலேயே இத்திட்டம் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.
நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» காலாவதியான சிலிண்டர்களை பயன்படுத்துவதால் தொடரும் விபத்துகள்
» காலாவதியான அழகு சாதன பொருட்களை பயன்படுத்தாதீங்க
» நோயை இரட்டிப்பாக்கும் காலாவதியான மருந்துகள் - கவனம் தேவை!
» இன்று சென்னைக்கு 378 வது பிறந்தநாள்
» காலாவதியான உணவு பண்டங்களை சாப்பிட்டால் குழந்தைகளை புற்றுநோய் தாக்கும்
» காலாவதியான அழகு சாதன பொருட்களை பயன்படுத்தாதீங்க
» நோயை இரட்டிப்பாக்கும் காலாவதியான மருந்துகள் - கவனம் தேவை!
» இன்று சென்னைக்கு 378 வது பிறந்தநாள்
» காலாவதியான உணவு பண்டங்களை சாப்பிட்டால் குழந்தைகளை புற்றுநோய் தாக்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|