Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஒரு நிமிடக் கதை: அழகு
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
ஒரு நிமிடக் கதை: அழகு
தரகர் கொண்டு வந்து கொடுத்த படத்தில் இருந்ததை விட நேரில் இன்னும் சுமாராகத் தான் இருந்தாள் மேனகா. மாதவன், திருப்தி இல்லாதவனாய் நிமிர்ந்து தன் அம்மா அப்பாவைப் பார்த்தான். அவர்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷமும் பெண் வீட் டாரிடம் மேற்கொண்டு செய்தி களைப் பேசுவதுமாக இருந்ததை யும் பார்க்கும் பொழுது, இந்த இடம் அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்பதைப் பறைசற்றியது.
என்ன செய்யலாம் என்ற யோசனையுடன் தாயைத் தனி யாக வெளியில் அழைத்து வந்தான்.
“அம்மா... தரகர் இன்னொரு பெண்ணோட படத்தைக் காட்டி னார் இல்லையா? அந்தப் பெண் ணையும் பார்த்துடலாம்” என்றான் மாதவன்.
அம்மாவிற்குக் கொஞ்சம் ஏமாற்றம். இருந்தாலும் சமாளித் துக்கொண்டு, “சரிப்பா, பார்த்தி டலாம்... ஆனால் இந்தப் பெண்ணே நல்ல குடும்பப் பாங்கா இருக்கிறா. குடும்பமும் நல்ல குடும்பமா தெரியுது. உனக்கும் ஏத்த ஜோடியாவும் தெரியுது. மீதி எல்லாமே பொருந்தி வருது...” என்று பேச்சை இழுத்தாள்.
“நான் அந்தப் பெண்ணையும் பார்க்கணும். அவ படத்துலே இவளை விட அழகா இருந்தாள். எனக்கு அவளைக் காட்டுங்கள்” என்று பிடிவாதமாகச் சொன்னான் மாதவன்.
வேறு வழியில்லை. அனை வரும் அந்தப்பெண்ணைப் போய்ப் பார்த்தார்கள். உண்மை யில் மேனகாவை விட இந்தப் பெண் மதுமிதா அதிக அழகாக இருந்தாள். மாதவனுக்குப் அவளைப் பார்த்ததும் பிடித்து விட்டது. பெண் வீட்டாரும் கல கலப்பாக பழகினார்கள். கிளம்பும் போது “வீட்டிற்கு போய் பேசி விட்டு தரகரிடம் பதில் சொல்லி அனுப்புகிறோம்” என்று சொல்லிவிட்டு வந்தார்கள்.
வீட்டிற்கு வந்ததும் “அப்பா... எனக்கு இந்த மதுமிதாவையே பேசி முடியுங்கள்” என்றான் மாத வன்.
“சரிப்பா... ஆனால் அந்த பெண் மேனகாவிற்கு என்ன காரணத்தைச் சொல்வது?” யோசனையுடன் கேட்டார் அப்பா.
“பிடிக்கவில்லை என்ற பிறகு என்ன காரணம் சொன்னால் என்ன? ஜாதகம் சரியில்லை என்று சொல்லிவிடுங்கள்” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்றான்.
உடனே தரகரை வரவழைத்தார் அப்பா. அவரிடம், “மதுமிதா வீட் டிற்குப் போய் எங்களுக்குச் சம்மதம்னு சொல்லிடுங்க” என்றார்.
அவர் கொஞ்சம் தயங்கி நிற்கவும்... “என்ன தயக்கம்?” என்று கேட்டார்.
“அது வந்துங்க.... அந்த மதுமிதா வீட்டு சம்மந்தம் வேண் டாங்க. தம்பிக்கு வேற இடம் காட்டுறேங்க” என்றார் தரகர்.
“இல்லப்பா... தம்பிக்கு இந்த இடம் பிடிச்சிருக்காம். இதையே முடிக்கலாம்” என்றார் அப்பா.
“அது முடியாதுங்க.”
“ஏன்...?”
“ஏதோ பொருத்தம் பத்த லைன்னு சொன்னாங்க.”
இதைச் சற்றும் எதிர்பார்க் காத அப்பா யோசித்தபடி, “இது உண்மையான காரணமா இருக்க முடியாது. ஏற்கனவே ராசி நட்சத்திரம் எல்லாம் பொருந்தி வந்த ஜாதகம்ன்னு சொல்லித் தானே பொண்ணோட படத்தைக் காட்டினீங்க.பிறகென்னவாம்” என்று சற்று காரமாக கேட்டார்.
“அது வந்துங்க, உங்க பிள்ளை... அந்த பொண்ணுக் கேத்த அழகு இல்லை யாம். அதனால பொண்ணுக் குப் பிடிக்கலையாம்" என்று கிசு கிசுப்பாகச் சொன்னார் தரகர்.
அப்பா பெருமூச்சுடன் அமர்ந் தார். தன் அறைக்குள்ளிருந்து இதை ஒட்டுக் கேட்டுக் கொண்டி ருந்த மாதவன் நிலைகண்ணாடி யைப் பார்த்தான்.
அடுத்தவர் வந்து சொல்லும் வரையில் ஒவ்வொருவரும் அவர வருக்கு அழகுதான்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: ஒரு நிமிடக் கதை: அழகு
அடுத்தவர் வந்து சொல்லும் வரையில் ஒவ்வொருவரும் அவர வருக்கு அழகுதான்.
உண்மைதான்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்----அழகு குறிப்புகள்
» காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
» மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை
» தமிழும் அழகு தமிழரின் செயலும் அழகு..!
» ஒரு நிமிடக் கதை: இழப்பு
» காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
» மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை
» தமிழும் அழகு தமிழரின் செயலும் அழகு..!
» ஒரு நிமிடக் கதை: இழப்பு
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|