தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சாதனைமனிதர் - ஜாதவ் பயேங்

View previous topic View next topic Go down

சாதனைமனிதர் - ஜாதவ் பயேங் Empty சாதனைமனிதர் - ஜாதவ் பயேங்

Post by mohaideen Wed Oct 31, 2012 5:55 pm

சாதனைமனிதர் - ஜாதவ் பயேங் Jadav-Payeng-forest-pictures

மரம் நாடு விழா என்ற பெயரில் 10 மரக்கன்றுகளை நட்டு விட்டு போட்டோவுக்கு மட்டும் “போஸ்” கொடுத்துவிட்டு பிறகு அதைப்பற்றியே கவலைப்படாமல், பராமரிக்காமல் விட்டுவிடும் மனிதர்களுக்கு மத்தியில் “ஜாதவ் பேயங்” செய்த சாதனை உண்மையிலேயே மிகப்பெரியது தான். அது சரி அது யார் “ஜாதவ் பயேங்” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உலக சரித்திர வரலாற்றில் யாரும் செய்ய முடியாத சரித்திர சாதனையை படைத்த ஒரு இந்தியர் தான் “ஜாதவ் பயேங்”. தனி மனிதராக இருந்து 1,360 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு காட்டையே உருவாக்கியது தான் இவர் செய்த சாதனை.

ஜாதவ் பயேங் அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்துவந்தார். இவரின் செல்லப்பெயர் “முலாய்”. பிரம்மபுத்திரா நதிக்கு அருகில் தான் இவரது கிராமம் இருந்தது. இவருக்கு 16 வயது இருக்கும்போது 1979 ஆம் ஆண்டு பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் வந்தது. அதில் பல உயிரினங்கள் அடித்துவரப்பட்டன. வெள்ளம் வடிந்த பிறகு அந்த மணல் திட்டுகளின் வெப்பம் தாங்காமல் அனைத்து உயிரினங்களும் மடிந்தன.

சாதனைமனிதர் - ஜாதவ் பயேங் Jadav-payeng-great

உயிரினங்கள் மடிந்ததற்கு காரணம் அங்கே மரங்கள் இல்லாதலால் நிலவும் வெப்பமான சூழலே என்பதை அறிந்து கொண்டார். இதனால் மரங்கள் வளர்க்க வனத்துறையை அணுகினார். ஆனால் அந்த மணல் படுகையில் மூங்கிலைத் தவற வேற மரங்களை வளர்க்க முடியாது என்று கூறிவிட்டனர். பிறகு 1980 ஆம் ஆண்டு அங்கே உள்ள “கோகிலமுக்” என்ற இடத்தில சுமார் 200 ஹெக்டேர் மணல் படுகையில் “சமூககாடுகள் வளர்ப்பு” திட்டத்தின் கீழ் வனத்துறையினர், கிராம மக்கள் மூங்கில் கன்றுகளை நட்டு வைத்தனர். அவ்வளவுதான் பிறகு யாரும் அதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஜாதவ் மட்டும் அங்கேயே தங்கி மரங்களைப் பராமரிக்க தொடங்கினார்.



200 ஹெக்டேர் முழுவதும் மூங்கில்கள் தான் வளர்ந்தன. மணல் திட்டுக்களில் வேற மரங்களை வளர்க்க முடியாது. அதனால் ஜாதவ் ஒரு யுக்க்தியைக் கையாண்டார். ஒரு வகையான சிவப்பு நிற எறும்புகளை சேகரித்து வந்து அந்த மணல்களில் விட்டுள்ளார். அந்த எறும்புகள் அந்த மணலை எல்லா மரமும் வளரும் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியுள்ளன. பிறகு அனைத்து வகையான மரங்களையும் வளர்த்து பராமரிக்க ஆரம்பித்துள்ளார். இப்படியே 30 வருடங்கள் ஓடின. அந்த பகுதி அடர்ந்த மரங்கள் நிறைந்த காடாக மாறியது. 2008 ஆம் வருடம் வரை இந்த காடு யாருக்கும் வெளியுலகிற்கு தெரியாமல் இருந்தது. அதிலும் குறிப்பாக அந்த பகுதியிலிருந்த வனத்துரையினருக்கே தெரியாமல் இருந்தது.



2008 ஆம் ஆண்டு ஒரு யானைக்கூட்டம் இந்த காட்டிற்குள் புகுந்தது. யானைகளைத் துரத்தி வந்த வனத்துறையினர் இப்படி ஒரு

சாதனைமனிதர் - ஜாதவ் பயேங் Jadav-payeng-wallpapers-300x200

காடு இருப்பதைக் கண்டு வியந்துபோயினர். “இந்த இடத்தில் இவ்வளவு பெரிய காடா” என்று ஆச்சர்யம் அடைந்த அவர்கள் “ஜாதவ்” பற்றி கேள்விப்பட்டு பிறகு முழு விபரங்களையும் அறிந்தனர்.

மரங்களைப் பராமரிக்க வேண்டும் என்பதற்காக இந்த காட்டிற்குள்ளே ஒரு சிறிய வீட்டைக் கட்டி தனது மனைவி, மகள், இரு மகன்களுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்கு சில கறவை மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். தற்போது இந்த காட்டில் தேக்கு, அகில், சந்தானம், கருங்காலி போன்ற மரங்களும் 300 ஹெக்டேர் பரப்பளவுக்கு மூங்கில் காடுகளும் வளர்ந்துள்ளன. அங்கே நூற்றுக்கும் மேற்ப்பட்ட யானைகளும், மேலும் சில மிருகங்களும், பல பறவை இனங்களும் வாழ்கின்றன. தற்போது இந்த காட்டை “முலாய்க் காடுகள்” என்று அழைக்கின்றனர்.

இந்த காட்டைப்பற்றி ஜாதவ் பயேங்’கிடம் கேட்டபோது “இது என் மண்ணுக்கு நான் செய்யவேண்டிய கடமை” என்று ஒரே வரியில் பதிலளித்தார். ஒரு சிறு சாதனை செய்தாலே தம்பட்டம் அடிக்கும் மனிதர்களுக்கு மத்தியில் யாரும் செய்ய முடியாத ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்திவிட்டு சர்வ சாதாரணமாக வாழ்ந்து வரும் ஜாதவ் பயேங் உண்மையில் வரலாற்று சிறப்புமிக்க மனிதர்தான் என்பதில் ஐயமில்லை.

http://atozforfun.com/2012/09/interesting-information-part-15.html
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சாதனைமனிதர் - ஜாதவ் பயேங் Empty Re: சாதனைமனிதர் - ஜாதவ் பயேங்

Post by மகா பிரபு Wed Oct 31, 2012 6:07 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சாதனைமனிதர் - ஜாதவ் பயேங் Empty Re: சாதனைமனிதர் - ஜாதவ் பயேங்

Post by ஸ்ரீராம் Thu Nov 01, 2012 12:31 pm

அருமையான பகிர்வு... மிக்க நன்றி நண்பரே
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சாதனைமனிதர் - ஜாதவ் பயேங் Empty Re: சாதனைமனிதர் - ஜாதவ் பயேங்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum