Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பறந்து கொண்டே மீன் என்ன? திமிங்கலமும் பிடிக்கலாம்…… !
Page 1 of 1 • Share
பறந்து கொண்டே மீன் என்ன? திமிங்கலமும் பிடிக்கலாம்…… !
ஆடு மேய்ச்சமாதிரியும் ஆச்சு! அண்ணனுக்குப் பொண்ணு பார்த்த மாதிரியும்… ஆச்சு!” இது கிராமத்தில் கேட்கின்ற வழக்கமான வாக்கியம். ஒரு நேரத்தில் ஒரு வேலைதானே செய்யமுடியும். இது எப்படி? என்று நினைக்கத் தோன்றும். இது நேரத்தின் முக்கியத்துவத்தை சொல்லித் தருகின்ற கிராமத்தின் நேர்த்தி.
கோவையிலிருந்து பழனிக்கு ஒரு வேலை நிமித்தம் செல்கின்ற ஒருவருக்கு பொள்ளாச்சியில் வேறு ஒரு வேலை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவர் பழனிக்குப் போகின்ற போதோ அல்லது பழனியிலிருந்து திரும்பும் போதோ அந்த வேலையை முடிக்க வேண்டும். அதற்கான நேரத்தை அவர்தான் சரிசெய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதைவிட்டு விட்டு கோவைக்கு வந்துவிட்டு மீண்டும் பொள்ளாச்சி சென்றால் அது வேண்டாத வேலைதான். பல நேரங்களில் இப்படிச் செய்துவிட்டு, திருவிழாவில் காணாமல் போன குழந்தைமாதிரி =திரு திரு’ என்று விழிக்கின்றவர் பலபேர் நம்மிடையே உண்டு.
வளரும் சிகரங்கள் அமைப்பில் குழந்தைகளுக்கிடையே நடைபெற்ற ஓர் ஓவிய அரங்கில் ஒரு குழந்தை மீன் வரைந்திருந்தது. அருகிலிருந்த மற்றொரு குழந்தை சொன்னது, ”இந்த மீன் நீந்துவது மாதிரி இல்லை. பறக்கிற மாதிரி இருக்கு! அப்படின்னா இது என்ன மீன் தெரியுமா? விண்மீன்!!” ஆற்றுமீனை விண்மீனாக மாற்ற பள்ளிக்குழந்தைக்கு தெரிந்திருக்கிறது என்றால் நமக்கு மீன்பிடிக்க அல்லவா தெரிந்திருக்க வேண்டும்!
நல்ல தொழிலை லாபத்துடன் செய்து கொண்டே அந்த தொழில் சார்ந்த உபரி தொழில்களையும் செய்து தொழில் வல்லுனர் ஆவது புத்திசாலித்தனம். மீன் கொத்திப் பறவைகளையும் கொக்கையும் ஒப்பிட்டுப் பாருங்களேன். =ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரை’ ஒற்றைக்காலில் நின்றுகொண்டு நேரத்தை வீணடிக்கும் கொக்கு. ஆனால் ஓடுகின்ற ஆற்றின்மேல் லாவகமாய் பறந்து கொண்டே ஆற்றில் துள்ளிக் குதிக்கின்ற மீனை டக்கென்று பிடித்துக்கொண்டு மீண்டும் பறக்கின்ற மீன் கொத்திப்பறவை. இதில் எது சரி? பறந்து கொண்டே மீன் பிடிப்பதுதானே!
எதிரில் நிற்பவர் எல்லாம் என் உறவினர். நான் போர் செய்ய மாட்டேன் என்று சும்மா நின்ற அர்ஜுனனுக்கு உபதேசம் செய்து உலகிற்கு கீதையை தரமுடிந்தது கிருஷ்ணனால். எப்படி? போதி மரத்தடியில் அல்ல! ஐந்து குதிரைகளின் கடிவாளம் ஒரு கையில்! நிற்கின்ற இடமோ போர்க்களம்! மனதளவில் பலமுனைத் தாக்குதல். என்ன தான் கடவுள் என்று நாம் சொன்னாலும் (நினைத்தாலும்)கூட போர்க்களத்தில் கீதையைத் தர கிருஷ்ணனுக்கு தேவைப்பட்டது இரண்டு. 1) இன்று இது இப்பொழுது தேவை என்கின்ற மனம். 2) மிகச்சரியான ஒன்றை பதிவு செய்ய வேண்டும் என்கின்ற தெளிவு! இவை இரண்டும் போர்க்களத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக் களத்திற்கும் தேவை.
ஒன்றிலிருந்து கொண்டு மற்றொன்றில் நிலைத்த தன்மை பெறுவதுதான் இன்றைய கால கட்டத்திற்கு தேவையான ஒன்று. மளிகைக்கு ஒரு கடை; காய்களுக்கு ஒரு கடை; பாத்திரங்களுக்கு ஒன்று; செருப்புக்கு ஒன்று; =நாவல்டீஸி’ற்கு ஒரு கடை; அழகு சாதனங்களுக்கு ஒரு கடை என்று அலைகின்றபோது அய்யோடா என்று இருந்த ”ஷாப்பிங்…” அனைத்தும் ஒரு கூரையின்கீழ் டிபார்ட்மெண்ட் ஸ்டோராக வந்தபோது பயனடைந்தது வாடிக்கையாளர், கடை முதலாளி, தொழிலாளி மூவரும்தான்.
முழு நேரமும் எல்.ஐ.சி. முகவராக இருக்கின்ற ஒருவர் கிடைக்கின்ற வேலை நேரத்தில் ரியல் எஸ்டேட் ஒரு கை என்று இருந்தார் என்றால் அவருக்கு லட்சுமி கடாட்சம் அமோகம் தான். ஏனெனில் இரண்டுக்கும் வாய் ஒன்றுதான் முதலீடு. வாய் இருந்தால் வருவாய்க்கு ஏது பஞ்சம். தனித்தனி நேரம் தேவையில்லை, தங்கள் பயனாளிகளைப் பார்க்க! ஒரே நேரத்தில் இரண்டு காரியமும் ஆகும். முதலில் தரம் வாரியாக பஞ்சை மட்டும் பிரிக்கின்ற நிறுவனம் பின்னாளில் பஞ்சிலிருந்து நூல்; நூலிலிருந்து தரம் வாரியான துணிகள். பின் சந்தைப்படுத்துவதற்குத் தயாரான நிலையில் ஆடைகள், அதன்பின் ஆயத்த ஆடைகள். அடுத்த கட்டமாக ஏற்றுமதி, நிறைவாக மக்களிடையே நேரடி சந்தைப்படுத்துதல். சந்தைப் படுத்துதலில் புதுப்புது உத்திகள்! இன்றைய பிரபல அனைத்து டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களும் இப்படித்தான்!
இதுதான் ஒன்றிலிருந்து கொண்டு இன்னொன்று! பறந்து கொண்டே மீன் பிடிக்கத் தேவை காட்சிப் பிரமாணமும் மற்றொன்று அனுமானப்பிரமாணமும். பார்க்கின்ற காட்சியை புரிந்துகொள்ள வேண்டும். எது இருக்கிறது என்று அனுமானிக்கத் தெரிய வேண்டும். புகை இருக்கின்றது என்றால் நெருப்பு இருக்கும் என்று அனுமானிக்கும் அறிவும், புரிதலும் இருந்தால் அந்த நெருப்பு நமக்கு பயன்படவும் செய்யும்.
செயல்திறனை வளர்த்துக் கொண்டால் சுற்றும்பூமி நம் கையில்தான். பறந்து கொண்டே மீன் என்ன? திமிங்கலமும் பிடிக்கலாம்…… !
- மகேஸ்வரி சற்குரு
கோவையிலிருந்து பழனிக்கு ஒரு வேலை நிமித்தம் செல்கின்ற ஒருவருக்கு பொள்ளாச்சியில் வேறு ஒரு வேலை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவர் பழனிக்குப் போகின்ற போதோ அல்லது பழனியிலிருந்து திரும்பும் போதோ அந்த வேலையை முடிக்க வேண்டும். அதற்கான நேரத்தை அவர்தான் சரிசெய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதைவிட்டு விட்டு கோவைக்கு வந்துவிட்டு மீண்டும் பொள்ளாச்சி சென்றால் அது வேண்டாத வேலைதான். பல நேரங்களில் இப்படிச் செய்துவிட்டு, திருவிழாவில் காணாமல் போன குழந்தைமாதிரி =திரு திரு’ என்று விழிக்கின்றவர் பலபேர் நம்மிடையே உண்டு.
வளரும் சிகரங்கள் அமைப்பில் குழந்தைகளுக்கிடையே நடைபெற்ற ஓர் ஓவிய அரங்கில் ஒரு குழந்தை மீன் வரைந்திருந்தது. அருகிலிருந்த மற்றொரு குழந்தை சொன்னது, ”இந்த மீன் நீந்துவது மாதிரி இல்லை. பறக்கிற மாதிரி இருக்கு! அப்படின்னா இது என்ன மீன் தெரியுமா? விண்மீன்!!” ஆற்றுமீனை விண்மீனாக மாற்ற பள்ளிக்குழந்தைக்கு தெரிந்திருக்கிறது என்றால் நமக்கு மீன்பிடிக்க அல்லவா தெரிந்திருக்க வேண்டும்!
நல்ல தொழிலை லாபத்துடன் செய்து கொண்டே அந்த தொழில் சார்ந்த உபரி தொழில்களையும் செய்து தொழில் வல்லுனர் ஆவது புத்திசாலித்தனம். மீன் கொத்திப் பறவைகளையும் கொக்கையும் ஒப்பிட்டுப் பாருங்களேன். =ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரை’ ஒற்றைக்காலில் நின்றுகொண்டு நேரத்தை வீணடிக்கும் கொக்கு. ஆனால் ஓடுகின்ற ஆற்றின்மேல் லாவகமாய் பறந்து கொண்டே ஆற்றில் துள்ளிக் குதிக்கின்ற மீனை டக்கென்று பிடித்துக்கொண்டு மீண்டும் பறக்கின்ற மீன் கொத்திப்பறவை. இதில் எது சரி? பறந்து கொண்டே மீன் பிடிப்பதுதானே!
எதிரில் நிற்பவர் எல்லாம் என் உறவினர். நான் போர் செய்ய மாட்டேன் என்று சும்மா நின்ற அர்ஜுனனுக்கு உபதேசம் செய்து உலகிற்கு கீதையை தரமுடிந்தது கிருஷ்ணனால். எப்படி? போதி மரத்தடியில் அல்ல! ஐந்து குதிரைகளின் கடிவாளம் ஒரு கையில்! நிற்கின்ற இடமோ போர்க்களம்! மனதளவில் பலமுனைத் தாக்குதல். என்ன தான் கடவுள் என்று நாம் சொன்னாலும் (நினைத்தாலும்)கூட போர்க்களத்தில் கீதையைத் தர கிருஷ்ணனுக்கு தேவைப்பட்டது இரண்டு. 1) இன்று இது இப்பொழுது தேவை என்கின்ற மனம். 2) மிகச்சரியான ஒன்றை பதிவு செய்ய வேண்டும் என்கின்ற தெளிவு! இவை இரண்டும் போர்க்களத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக் களத்திற்கும் தேவை.
ஒன்றிலிருந்து கொண்டு மற்றொன்றில் நிலைத்த தன்மை பெறுவதுதான் இன்றைய கால கட்டத்திற்கு தேவையான ஒன்று. மளிகைக்கு ஒரு கடை; காய்களுக்கு ஒரு கடை; பாத்திரங்களுக்கு ஒன்று; செருப்புக்கு ஒன்று; =நாவல்டீஸி’ற்கு ஒரு கடை; அழகு சாதனங்களுக்கு ஒரு கடை என்று அலைகின்றபோது அய்யோடா என்று இருந்த ”ஷாப்பிங்…” அனைத்தும் ஒரு கூரையின்கீழ் டிபார்ட்மெண்ட் ஸ்டோராக வந்தபோது பயனடைந்தது வாடிக்கையாளர், கடை முதலாளி, தொழிலாளி மூவரும்தான்.
முழு நேரமும் எல்.ஐ.சி. முகவராக இருக்கின்ற ஒருவர் கிடைக்கின்ற வேலை நேரத்தில் ரியல் எஸ்டேட் ஒரு கை என்று இருந்தார் என்றால் அவருக்கு லட்சுமி கடாட்சம் அமோகம் தான். ஏனெனில் இரண்டுக்கும் வாய் ஒன்றுதான் முதலீடு. வாய் இருந்தால் வருவாய்க்கு ஏது பஞ்சம். தனித்தனி நேரம் தேவையில்லை, தங்கள் பயனாளிகளைப் பார்க்க! ஒரே நேரத்தில் இரண்டு காரியமும் ஆகும். முதலில் தரம் வாரியாக பஞ்சை மட்டும் பிரிக்கின்ற நிறுவனம் பின்னாளில் பஞ்சிலிருந்து நூல்; நூலிலிருந்து தரம் வாரியான துணிகள். பின் சந்தைப்படுத்துவதற்குத் தயாரான நிலையில் ஆடைகள், அதன்பின் ஆயத்த ஆடைகள். அடுத்த கட்டமாக ஏற்றுமதி, நிறைவாக மக்களிடையே நேரடி சந்தைப்படுத்துதல். சந்தைப் படுத்துதலில் புதுப்புது உத்திகள்! இன்றைய பிரபல அனைத்து டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களும் இப்படித்தான்!
இதுதான் ஒன்றிலிருந்து கொண்டு இன்னொன்று! பறந்து கொண்டே மீன் பிடிக்கத் தேவை காட்சிப் பிரமாணமும் மற்றொன்று அனுமானப்பிரமாணமும். பார்க்கின்ற காட்சியை புரிந்துகொள்ள வேண்டும். எது இருக்கிறது என்று அனுமானிக்கத் தெரிய வேண்டும். புகை இருக்கின்றது என்றால் நெருப்பு இருக்கும் என்று அனுமானிக்கும் அறிவும், புரிதலும் இருந்தால் அந்த நெருப்பு நமக்கு பயன்படவும் செய்யும்.
செயல்திறனை வளர்த்துக் கொண்டால் சுற்றும்பூமி நம் கையில்தான். பறந்து கொண்டே மீன் என்ன? திமிங்கலமும் பிடிக்கலாம்…… !
- மகேஸ்வரி சற்குரு
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பறந்து கொண்டே மீன் என்ன? திமிங்கலமும் பிடிக்கலாம்…… !
ஊக்கம் தந்த கட்டுரை
பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
Re: பறந்து கொண்டே மீன் என்ன? திமிங்கலமும் பிடிக்கலாம்…… !
நேரம் இல்லை என்று சொல்வதை விட நேரம் ஒதுக்க வில்லை என்று சொல்வது சரியாக இருக்கும்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மீன் எண்ணெய் என்றால் என்ன? - எதற்கு சாப்பிட வேண்டும்?
» வாழ்ந்து கொண்டே வளரு!! வளர்ந்து கொண்டே வாழு!!
» மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு
» பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்
» லட்சியத்தை நோக்கி உழைத்தால் சரித்திரத்தில் இடம் பிடிக்கலாம் : Dr A.P.J அப்துல்கலாம்
» வாழ்ந்து கொண்டே வளரு!! வளர்ந்து கொண்டே வாழு!!
» மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு
» பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம்: அசத்திய மும்பை போலீசார்
» லட்சியத்தை நோக்கி உழைத்தால் சரித்திரத்தில் இடம் பிடிக்கலாம் : Dr A.P.J அப்துல்கலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|