Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஞானத்தைப் பரப்பிய புத்தர்
Page 1 of 1 • Share
ஞானத்தைப் பரப்பிய புத்தர்
![ஞானத்தைப் பரப்பிய புத்தர் F4gp3n](https://2img.net/h/oi60.tinypic.com/f4gp3n.jpg)
போதி மரத்தடியில் ஞானம் பெற்ற பிறகு, தான் பெற்ற ஞானத்தை உலகுக்கு உணர்த்த புத்தர் விரும்பினார். உலகம் அறியாமையிலும் தீமையிலும் உழன்று கிடந்ததை அவர் அறிந்திருந்தார். தன் பணி கடினமானது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. ஆனால், மனித குலத்தின் மீது அவருக்கு இருந்த பரிவு அளவில்லாதது.
தனது கொள்கைகளை மக்களிடையே பரப்ப அவருக்குத் தொண்டர்கள் தேவைப்பட்டார்கள். காசிக்கு அருகேயிருந்த சாரநாத்தில் தவ முயற்சிகளைச் செய்த தனது ஐந்து பழைய சீடர்களைப் பற்றி அப்போது அவர் நினைத்தார். உடனே அந்த ஊரை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்.
அந்தச் சீடர்கள் அருகே அவர் சென்றதும் அவரிடம் ஒரு ஒளிச் சுடர் தெரிந்ததை அவர்கள் கண்டுகொண்டார்கள். தங்கள் முன் ஒரு மகான் நிற்பதை உணர்ந்தனர். புத்தரின் முதல் போதனை, அந்த ஐந்து பேரிடம் தொடங்கியது.
நடுநிலைப் பாதை
தீவிர நிலைகள் எதுவாயினும், அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் புத்தர் போதனைகளைத் தொடங்கினார். போகம் நிறைந்த வாழ்க்கையைப் போலவே, கடும் தவமும் தியாகமும் நிறைந்த வாழ்க்கையும் நல்லதல்ல என்றார் புத்தர். நடுநிலைப் பாதையே சிறந்த வழி. அதன் மூலமாகத்தான் ஒருவர் வாழ்வைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும், உண்மையை உணர முடியும் என்றார் புத்தர்.
இந்த உலகம் துன்பங்கள் நிறைந்தது. நமது ஐம்புலன்களின் மூலம் இன்பங்களை அனுபவிக்கும் ஆசையே இந்தத் துன்பங்களுக்கு அடிப்படை காரணம். புனித எட்டு வழிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், இந்தத் துன்பங்களில் இருந்து விடுதலை பெறலாம். நிர்வாணம் எனப்படும் முக்தி நிலையையும் அடையலாம்.
வாழ்க்கையின் இறுதி லட்சியம் நிர்வாணம். அது பிறப்பு - இறப்பு - மீண்டும் பிறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுபட வைக்கும். தவறான நடவடிக்கைகளைத் தவிர்த்து, புத்தர் காட்டிய எட்டு வழிகளைப் பின்பற்றுவதே நிர்வாணத்தை அடைவதற்கான வழி.
எட்டு வழிகள்
நல்ல கொள்கை, நல்ல ஆர்வம், நல்ல மொழி, நல்ல நடத்தை, நல்ல வாழ்வு, நல்ல முயற்சி, நல்ல எண்ணம், நல்ல சிந்தனை ஆகியவையே புத்தர் போதித்த எட்டு வழிகள். இதுவே பௌத்தத் தம்மம் என்றழைக்கப்பட்ட ஒழுக்கச் சட்டம்.
இவற்றைக் கடைபிடித்து நமது துன்பங்களில் இருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளலாம் என்று புத்தர் அறிவுறுத்தினார்.
சாரநாத்தில் அவர் செய்த போதனைகள் ஒரு தொடக்கம் மட்டுமே. தன் வாழ்நாளின் எஞ்சிய பகுதி முழுவதையும் அனைத்து மக்களிடமும் பௌத்த வழியைப் பரப்பும் பயணங்களை மேற்கொண்டார். சாமானியர்களும் தனது கொள்கைகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, மக்கள் பேசிய பாலி மொழியிலேயே புத்தர் உரை நிகழ்த்தினார். அத்துடன் புத்தரின் போதனைகள் எளிமையானவை. புரிந்துகொள்ளக்கூடியவை.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: ஞானத்தைப் பரப்பிய புத்தர்
மிகவும் பயனுள்ள கட்டுரை. மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
![-](https://2img.net/i/empty.gif)
» போதி மரம்... இன்னொரு புத்தர்!
» ஒவ்வொருவரிலும் புத்தர்...
» புத்தர் வாழ்வில்: ஒப்பற்ற ஞானம் பெற்றது எப்படி?
» வரலாற்று நிகழ்வுகள் -13: புத்தர்
» புத்தர் காட்டும் ஆனந்தம்
» ஒவ்வொருவரிலும் புத்தர்...
» புத்தர் வாழ்வில்: ஒப்பற்ற ஞானம் பெற்றது எப்படி?
» வரலாற்று நிகழ்வுகள் -13: புத்தர்
» புத்தர் காட்டும் ஆனந்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|