Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மலச் சிக்கல் பல சிக்கல்
Page 1 of 1 • Share
மலச் சிக்கல் பல சிக்கல்
டாக்டர் எல். மகாதேவன்
என் உறவினர் ஒருவர் மூலநோயால் கடந்த ஒரு மாதமாக பெரிதும் அவதிப்பட்டு வருகிறார். எவ்வளவோ மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் சரியாகவில்லை. இதைக் குணப்படுத்த ஆயுர்வேதத்தில் என்ன மருந்து உள்ளது?
- இந்திரன், திருப்பாச்சேத்தி
மூலநோயை அர்ஸஸ் என்று ஆயுர்வேதத்தில் கூறுவார்கள். ஆங்கிலத்தில் Hemorrhoids என்று அழைப்பார்கள். ஆசன வாய்ப் பகுதியில் வீங்கி அழற்சியுற்ற ரத்த நாளங்கள் இந்த நோயை உண்டாக்குகின்றன. மிகவும் முக்கிக் கடினமாக மலத்தை வெளியேற்றும்போது அழுத்தம் ஏற்பட்டு இது உருவாகிறது. பேறு காலங்களில் இது அதிகமாகக் காணப்படும். இது உள் மூலம், வெளி மூலம் என்று வகைப்படுத்தப் படுகிறது. ஆசன வாய்க்கு உள்ளே உள்ளது உள் மூலம், ஆசனவாய்க்கு வெளியே தோலைச் சுற்றி உள்ளது வெளி மூலம்.
இதன் அறிகுறிகளாக வலி இல்லாமல் ரத்தக் கசிவு ஏற்படலாம், மலம் போன பிறகு கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்தக் கசிவைக் காணலாம், ஆசன வாயில் அரிப்பு ஏற்படலாம். வலியோ, அசவுகரியமோ ஏற்படலாம். ஆசன வாயைச் சுற்றி வீக்கம் ஏற்படலாம். சிறிய முளை காணப்படலாம். உள் மூலத்தைப் பார்க்க முடியாது. சில நேரங்களில் அழுத்தம் ஏற்பட்டு நோய் முற்றிப்போய் ரத்தக் கசிவை உண்டாக்குகிறது. இவ்வாறு முக்கும் பொழுது உள் மூலமானது வெளியே வருகிறது.
இதை Prolapsed hemorrhoids என்று சொல்லுவோம். இங்கு வலியும் அரிப்பும் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் வெளி மூலத்தில் ரத்தம் சேர்ந்து ரத்தக்கட்டி (Thrombus) உருவாகலாம். இதனால் கடும் வேதனை, வீக்கம், அழற்சி போன்றவை உருவாகலாம். கீழ்ப் பகுதி ஆசன வாயிலில் அழுத்தம் ஏற்படுவதால் இந்நிலை உருவாகிறது. மலச்சிக்கல் ஏற்பட்டு முக்கி மலம் போவது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, நீண்ட வயிற்றுப் போக்கு, உடல் பருமன், பேறு காலம், நார்ச்சத்து இல்லாத உணவு வகைகளைச் சாப்பிடுதல் போன்ற வற்றால், இது ஏற்படுகிறது. வயதாக ஆக, இது வரும் வாய்ப்பு அதிகரிக்கும். சில நேரம் மூலத்தில் ரத்தம் அதிகமாகப் போய் ரத்தசோகை (Anemia) வருவதற்கும் வாய்ப்பு உண்டு. சில நேரங்களில் உள் மூலத்தால் வரும் ரத்தம் நின்று போய், திசுக்களே அழியும் நிலை (Stramulation) ஏற்படும்.
நம்முடைய கழிவறையிலேயே மாட்டும்படியான Sitz bathகள் கிடைக்கின்றன. ஆசன வாயைச் சுற்றிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வென்னீரால் நன்றாகக் கழுவ வேண்டும். சோப்பு போட்டால் சில நேரம் எரிச்சல் அதிகரிக்கும். மிகவும் நார்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளான வெண்டைக்காய், பீன்ஸ், புடலங்காய், கத்திரிக்காய், சேனை, சிறிய வெங்காயம் போன்றவை மிகச் சிறந்த உணவு வகைகள்.
சின்ன வெங்காயமும் மோரும் இதற்கு மிகவும் சிறந்தது என்று புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் மலப் பிரவிருத்தி ஏற்பட்டு அபான வாயு கீழ்முகமாக இயங்கும். முக்குதல் குறையும், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தினசரி 8 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். 30 முதல் 40 கிராம் வரை நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். மலம் போக வேண்டும் என்று தோன்றினால், உடனே போக வேண்டும்.
மருந்துகள்
# 5 கிராம் ஷட்தர்ண சூர்ணத்தை மோரில் கலந்து இருவேளை சாப்பிடலாம்.
# கடுக்காய் லேகியம் 15 கிராம் இரவு கொடுத்தால் காலையில் மலம் நன்றாகப் போகும்.
# சுகுமார கிருதம் 1 ஸ்பூன் கொடுத்தால் மலம் நன்றாகப் போகும்.
# சிறுவில்வாதி கஷாயத்தில் கைசோர குக்குலு சேர்த்துச் சாப்பிட, ரத்த நாளங்களில் உள்ள அழுத்தம் மிகவும் குறையும்.
# ரத்தக்கசிவு இருக்கும்போது முறிவெண்ணெயும், சததௌத கிருதம் என்று சொல்லக்கூடிய ஆல், அரசு, அத்தி, இத்தி போன்றவற்றால் கடைந்து எடுக்கப்பட்ட நெய்யைப் பஞ்சில் முக்கி வைப்பது மிகவும் நல்லது.
# கடுக்காய்ப் பொடி ஒரு சுலபமான மருந்து. அதை மோரில் கலந்து வெல்லமும் சேர்த்துச் சாப்பிட உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
ரத்தப் போக்கு அதிகமாக இருந்தால் தொட்டால்வாடி இலையை அரைத்து 10 மி.லி. மோரில் கலந்து குடிக்க, உடனே பலன் கிடைக்கும்.
மலச் சிக்கல் செய்ய வேண்டியவை
# முதலில் மலச் சிக்கலைத் தவிர்க்க வேண்டும்
# அதிகக் கீரை வகைகளைச் சாப்பிட வேண்டும்.
# ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமரக் கூடாது.
# அரை மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து சிறிது தூரம் நடக்க வேண்டும்.
# தேங்காய் எண்ணெய் (அ) விளக்கெண்ணெயை ஆசன வாயில் தடவ வேண்டும்.
# Sitz bath என்று சொல்வார்கள். ஆசன வாய் வெதுவெதுப்பான வெந்நீரில் 15 நிமிடம் இருக்கும்படியாக ஒரு தொட்டியில் அமர்தல். இதை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று தடவை வரை செய்யலாம்.
உணவில் கவனம்
# அகத்திக் கீரை, துத்திக் கீரை, முடக்கத்தான், சுண்டைக் காய், மாம் பிஞ்சு, பலாப் பிஞ்சு, பப்பாளிக் காய், சிறுகீரை, மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி ஆகியவற்றை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளவும்.
# மாதுளம் பழம், கொய்யாப் பழம், அத்திப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடலாம்.
# கருணைக் கிழங்கு தவிர பிற கிழங்கு வகைகள் கூடாது.
# மீன், கருவாடு, கோழி கூடாது.
# மூலத்தில் அரிப்பு இருந்தால் கத்திரிக்காய், காராமணி, மொச்சைக்கொட்டை ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
பொதுவான தடுப்பு முறைகள்
# அதிகக் காரம் கூடாது. அதிகப்படியாகப் புளிப்பு, இனிப்பு கூடாது.
# இரவில் நீண்ட நேரம் கண் விழிப்பது, நீண்ட தூரப் பயணம் போன்றவற்றைத் தவிர்க்கவும்.
மலச் சிக்கல்: தொடரும் கோளாறுகள்
# மூல நோய்க்கு மட்டுமல்ல வேறு பல பிரச்சினைகளுக்கும் காரணமாக இருப்பது மலச்சிக்கல்.
# வாயு அதிகமாகி வயிறு உப்புசம் ஏற்படும்.
# பசியின்மை ஏற்பட்டு ரத்தக் குறைவு நோய் உண்டாக்கும்.
# நீடித்த மலச்சிக்கல் அல்சர் உண்டாகும்.
# குடல்வால் நோய் ஏற்படும்.
# மாதவிலக்குக் கோளாறுகள் ஏற்படும்.
நன்றி: தி இந்து
என் உறவினர் ஒருவர் மூலநோயால் கடந்த ஒரு மாதமாக பெரிதும் அவதிப்பட்டு வருகிறார். எவ்வளவோ மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் சரியாகவில்லை. இதைக் குணப்படுத்த ஆயுர்வேதத்தில் என்ன மருந்து உள்ளது?
- இந்திரன், திருப்பாச்சேத்தி
மூலநோயை அர்ஸஸ் என்று ஆயுர்வேதத்தில் கூறுவார்கள். ஆங்கிலத்தில் Hemorrhoids என்று அழைப்பார்கள். ஆசன வாய்ப் பகுதியில் வீங்கி அழற்சியுற்ற ரத்த நாளங்கள் இந்த நோயை உண்டாக்குகின்றன. மிகவும் முக்கிக் கடினமாக மலத்தை வெளியேற்றும்போது அழுத்தம் ஏற்பட்டு இது உருவாகிறது. பேறு காலங்களில் இது அதிகமாகக் காணப்படும். இது உள் மூலம், வெளி மூலம் என்று வகைப்படுத்தப் படுகிறது. ஆசன வாய்க்கு உள்ளே உள்ளது உள் மூலம், ஆசனவாய்க்கு வெளியே தோலைச் சுற்றி உள்ளது வெளி மூலம்.
இதன் அறிகுறிகளாக வலி இல்லாமல் ரத்தக் கசிவு ஏற்படலாம், மலம் போன பிறகு கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்தக் கசிவைக் காணலாம், ஆசன வாயில் அரிப்பு ஏற்படலாம். வலியோ, அசவுகரியமோ ஏற்படலாம். ஆசன வாயைச் சுற்றி வீக்கம் ஏற்படலாம். சிறிய முளை காணப்படலாம். உள் மூலத்தைப் பார்க்க முடியாது. சில நேரங்களில் அழுத்தம் ஏற்பட்டு நோய் முற்றிப்போய் ரத்தக் கசிவை உண்டாக்குகிறது. இவ்வாறு முக்கும் பொழுது உள் மூலமானது வெளியே வருகிறது.
இதை Prolapsed hemorrhoids என்று சொல்லுவோம். இங்கு வலியும் அரிப்பும் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் வெளி மூலத்தில் ரத்தம் சேர்ந்து ரத்தக்கட்டி (Thrombus) உருவாகலாம். இதனால் கடும் வேதனை, வீக்கம், அழற்சி போன்றவை உருவாகலாம். கீழ்ப் பகுதி ஆசன வாயிலில் அழுத்தம் ஏற்படுவதால் இந்நிலை உருவாகிறது. மலச்சிக்கல் ஏற்பட்டு முக்கி மலம் போவது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, நீண்ட வயிற்றுப் போக்கு, உடல் பருமன், பேறு காலம், நார்ச்சத்து இல்லாத உணவு வகைகளைச் சாப்பிடுதல் போன்ற வற்றால், இது ஏற்படுகிறது. வயதாக ஆக, இது வரும் வாய்ப்பு அதிகரிக்கும். சில நேரம் மூலத்தில் ரத்தம் அதிகமாகப் போய் ரத்தசோகை (Anemia) வருவதற்கும் வாய்ப்பு உண்டு. சில நேரங்களில் உள் மூலத்தால் வரும் ரத்தம் நின்று போய், திசுக்களே அழியும் நிலை (Stramulation) ஏற்படும்.
நம்முடைய கழிவறையிலேயே மாட்டும்படியான Sitz bathகள் கிடைக்கின்றன. ஆசன வாயைச் சுற்றிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வென்னீரால் நன்றாகக் கழுவ வேண்டும். சோப்பு போட்டால் சில நேரம் எரிச்சல் அதிகரிக்கும். மிகவும் நார்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளான வெண்டைக்காய், பீன்ஸ், புடலங்காய், கத்திரிக்காய், சேனை, சிறிய வெங்காயம் போன்றவை மிகச் சிறந்த உணவு வகைகள்.
சின்ன வெங்காயமும் மோரும் இதற்கு மிகவும் சிறந்தது என்று புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் மலப் பிரவிருத்தி ஏற்பட்டு அபான வாயு கீழ்முகமாக இயங்கும். முக்குதல் குறையும், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தினசரி 8 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். 30 முதல் 40 கிராம் வரை நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். மலம் போக வேண்டும் என்று தோன்றினால், உடனே போக வேண்டும்.
மருந்துகள்
# 5 கிராம் ஷட்தர்ண சூர்ணத்தை மோரில் கலந்து இருவேளை சாப்பிடலாம்.
# கடுக்காய் லேகியம் 15 கிராம் இரவு கொடுத்தால் காலையில் மலம் நன்றாகப் போகும்.
# சுகுமார கிருதம் 1 ஸ்பூன் கொடுத்தால் மலம் நன்றாகப் போகும்.
# சிறுவில்வாதி கஷாயத்தில் கைசோர குக்குலு சேர்த்துச் சாப்பிட, ரத்த நாளங்களில் உள்ள அழுத்தம் மிகவும் குறையும்.
# ரத்தக்கசிவு இருக்கும்போது முறிவெண்ணெயும், சததௌத கிருதம் என்று சொல்லக்கூடிய ஆல், அரசு, அத்தி, இத்தி போன்றவற்றால் கடைந்து எடுக்கப்பட்ட நெய்யைப் பஞ்சில் முக்கி வைப்பது மிகவும் நல்லது.
# கடுக்காய்ப் பொடி ஒரு சுலபமான மருந்து. அதை மோரில் கலந்து வெல்லமும் சேர்த்துச் சாப்பிட உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
ரத்தப் போக்கு அதிகமாக இருந்தால் தொட்டால்வாடி இலையை அரைத்து 10 மி.லி. மோரில் கலந்து குடிக்க, உடனே பலன் கிடைக்கும்.
மலச் சிக்கல் செய்ய வேண்டியவை
# முதலில் மலச் சிக்கலைத் தவிர்க்க வேண்டும்
# அதிகக் கீரை வகைகளைச் சாப்பிட வேண்டும்.
# ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமரக் கூடாது.
# அரை மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து சிறிது தூரம் நடக்க வேண்டும்.
# தேங்காய் எண்ணெய் (அ) விளக்கெண்ணெயை ஆசன வாயில் தடவ வேண்டும்.
# Sitz bath என்று சொல்வார்கள். ஆசன வாய் வெதுவெதுப்பான வெந்நீரில் 15 நிமிடம் இருக்கும்படியாக ஒரு தொட்டியில் அமர்தல். இதை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று தடவை வரை செய்யலாம்.
உணவில் கவனம்
# அகத்திக் கீரை, துத்திக் கீரை, முடக்கத்தான், சுண்டைக் காய், மாம் பிஞ்சு, பலாப் பிஞ்சு, பப்பாளிக் காய், சிறுகீரை, மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி ஆகியவற்றை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளவும்.
# மாதுளம் பழம், கொய்யாப் பழம், அத்திப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடலாம்.
# கருணைக் கிழங்கு தவிர பிற கிழங்கு வகைகள் கூடாது.
# மீன், கருவாடு, கோழி கூடாது.
# மூலத்தில் அரிப்பு இருந்தால் கத்திரிக்காய், காராமணி, மொச்சைக்கொட்டை ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
பொதுவான தடுப்பு முறைகள்
# அதிகக் காரம் கூடாது. அதிகப்படியாகப் புளிப்பு, இனிப்பு கூடாது.
# இரவில் நீண்ட நேரம் கண் விழிப்பது, நீண்ட தூரப் பயணம் போன்றவற்றைத் தவிர்க்கவும்.
மலச் சிக்கல்: தொடரும் கோளாறுகள்
# மூல நோய்க்கு மட்டுமல்ல வேறு பல பிரச்சினைகளுக்கும் காரணமாக இருப்பது மலச்சிக்கல்.
# வாயு அதிகமாகி வயிறு உப்புசம் ஏற்படும்.
# பசியின்மை ஏற்பட்டு ரத்தக் குறைவு நோய் உண்டாக்கும்.
# நீடித்த மலச்சிக்கல் அல்சர் உண்டாகும்.
# குடல்வால் நோய் ஏற்படும்.
# மாதவிலக்குக் கோளாறுகள் ஏற்படும்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» ஆற்றுநீர்ச் சிக்கல் தமிழ்நாட்டின் தேசியச் சிக்கல்
» சிக்கல் - 65
» தீராத சிக்கல் மலச்சிக்கல் தீர
» நிலாவில் குடியேறுவதில் என்ன சிக்கல்
» உறவுகளில் சிக்கல்-எப்படி சமாளிப்பது
» சிக்கல் - 65
» தீராத சிக்கல் மலச்சிக்கல் தீர
» நிலாவில் குடியேறுவதில் என்ன சிக்கல்
» உறவுகளில் சிக்கல்-எப்படி சமாளிப்பது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|