Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கையாள்வதிலும் நேர்த்தி இருந்தால் கெடாது பட்டு
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
கையாள்வதிலும் நேர்த்தி இருந்தால் கெடாது பட்டு
[You must be registered and logged in to see this image.]
ஆடை நேர்த்தி என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்று. ஆள்பாதி, ஆடை பாதி என்பது பழமொழியாக இருந்தாலும், இந்த காலத்துக்கும் உகந்த ஒரு மொழி. இந்திய பெண்களுக்கான பாரம்பரிய உடை என்றால் புடவைதான். ஆனால், இன்றைய நவீன நாகரீகத்தில் உலா வரும் பெண்களுக்கு புடவை என்றால் பிடிப்பதில்லை. இருந்தாலும், முழுதாக புடவையை ஒதுக்கி தள்ளாமல் முக்கிய நாட்களில் புடவை விரும்பி கட்டும் பெண்களும் உண்டு. புடவையில் பல ரகங்கள் அணிவகுத்தாலும், அனைத்து வயது பெண்களையும் கவர்வது பட்டுபுடவைதான். வேலைபாடுகள், துணியின் தரம், ஜரிகை என அனைத்தையும் அடிப்படையாக கொண்டே பட்டுபுடவைக்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் இரண்டாயிரம் ரூபாயில் இருந்து அவரவர் வசதிக்கேற்ப இதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. புடவை வாங்கி அணிவதைவிட அதை கவனமாக கையாள்வது என்பதுதான் காத்திருக்கும் பெரிய தலைவலி. கையாள்வதில் கவனம் செலுத்தாமல் விட்டால், விலை கொடுத்து வாங்கிய சேலையின் தரம் கெட்டுவிடும். அதிக விலை கொடுத்து வாங்கப்படும் சேலையானாலும் சரி, குறைந்த விலைக்கு வாங்கும் சேலையானாலும் சரி கவனமாக கையாள்வதில் அக்கறை செலுத்தினால், பல ஆண்டுகளுக்கு பத்திரமாக பாதுகாக்க முடியும்.
அதற்கான சில வழிமுறைகள் இதோ:
தற்போது பல நகரங்களில் உள்ள கடைகளிலும், பட்டு புடவையை பத்திரமாக பாதுகாப்பதற்கென, காட்டன் கவர்கள் கிடைக்கின்றன. அதில், பத்திரமாக சேலையை வைத்து பாதுகாக்கலாம். பட்டுபுடவைக்கு அவ்வபோது சுத்தமான காற்று கிடைப்பது அவசியம். இதை கவனித்தில் வைத்து அதற்கேற்ப பத்திரப்படுத்த வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, புடவையை காற்றோட்டமான இடத்தில் உலர்த்த வேண்டும். அதில், சூரிய வெளிச்சம் படாதபடி பார்த்து கொள்ள வேண்டும். சூரிய வெளிச்சம் பட்டால் துணி அதன் நிறத்தை இழந்துவிடும்.
புடவையை ஏற்கனவே மடித்து வைத்த அதேமுறையில் தொடர்ந்து மடித்து வைக்கக்கூடாது. அவ்வபோது, அதன் மடிப்பை மாற்றி மடிக்க வேண்டும். இல்லாவிடில், பழைய மடிப்பில் உள்ள நூலின் இழைகள் நெகிழ்ந்து விடும். பட்டு புடவைகளை இரும்பு ஹேங்கரில் தொங்கவிட்டால் அதில் உள்ள கறைகள் புடவையில் ஒட்டி கொள்ளும். எனவே, இதில் கவனமாக இருக்க வேண்டும்.
புடவையை பெட்டிக்குள் வைக்காமல், காட்டன் கவர் அல்லது துணியில் சுற்றி நேரடியாக பீரோவில் வைக்க வேண்டும். முதலில் புடவையில் உள்ள கறையை சுத்தமான காட்டன் துணியிலோ, பேப்பர் டவலிலோ துடைத்து எடுக்க வேண்டும். உடனடியாக தண்ணீர் கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
கடின கறைகள் ஏற்பட்டிருக்கும் போது, வீட்டில் சுத்தம் செய்வதானால் கவனமாக கையாள வேண்டும். இல்லாவிடில், உலர் சலவையில் புடவையை சுத்தம் செய்வது உகந்தது.
குறைந்த கறைகளுக்கு அதற்கேற்ப கறை அகற்றியை பயன்படுத்தாமல், முதலில் சிறிதளவு பயன்படுத்த வேண்டும். புடவையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றால், மற்ற பகுதிக்கும் பயன்படுத்தலாம். வியர்வை கறை, ரத்தம், எண்ணெய் கறை ஆகியவற்றை கடின தன்மை குறைந்த சோப்பு பவுடரை கொண்டே துவைக்கலாம்.
பட்டு புடவைகளை துவைக்கும் முறை:
பட்டு புடவைகளை அடிக்கடி துவைக்கக்கூடாது. உலர் சலவைக்கு அவற்றை கொடுக்கலாம். ஆனால், அடிக்கடி இம்முறையை மேற்கொள்ளக்கூடாது.
புடவையை துவைக்க அடர் தன்மை குறைந்த சோப்பையோ, பவுடரையோ பயன்படுத்தலாம். புடவையை அலச சுடுநீரை பயன்படுத்தாமல் குளிர்ந்த நீரை பயன்படுத்துவது உகந்தது.
புடவையை சோப்பு நீரில் நனைத்து வைத்து துவைக்காமல், பவுடரை லேசாக கையில் எடுத்து துணி மீது தடவி உடனே துவைக்க வேண்டும் புடவையை அழுத்தியோ, முறுக்கியோ பிழியும் முறையை மேற்கொள்ளாமல் மென்மையாக கையாள வேண்டும்.
புடவை மீது பிரஷ்ஷினால் தேய்த்து துவைத்தால், புடவையின் நூல்கள் நெகிழ்ந்துவிடும். புடவையை எப்போதும் மிதமான சூட்டிலேயே அயர்ன் செய்ய வேண்டும். அப்போது, பழைய முறையிலேயே மடித்து வைப்பதை தவிர்க்க வேண்டும்
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கையாள்வதிலும் நேர்த்தி இருந்தால் கெடாது பட்டு
பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» ஒளி விளக்கில் அழகிய தனிபண்புடைய கையெழுத்து நேர்த்தி
» பட்டு போன்ற மேனி பெற?
» அருள்மிகு சிவசுப்பிரமணியசாமி திருக்கோயில், வில்லுடையான் பட்டு ,கடலூர்
» இருந்தால்... இருந்தால்...
» இது இருந்தால் அது இல்லை அது இருந்தால் இது இல்லை
» பட்டு போன்ற மேனி பெற?
» அருள்மிகு சிவசுப்பிரமணியசாமி திருக்கோயில், வில்லுடையான் பட்டு ,கடலூர்
» இருந்தால்... இருந்தால்...
» இது இருந்தால் அது இல்லை அது இருந்தால் இது இல்லை
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|