Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு மரம்.
Page 1 of 1 • Share
ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு மரம்.
மந்தியக் காடுகள் கணக்கெடுப்பு 2013 அறிக்கையின்படி, 2011-13 ஆகிய இரண்டு ஆண்டுகளில் 5,871 சதுர கிலோமீட்டர் வனப்பரப்பு கூடியுள்ளது. இதில் மகிழ்ச்சி தரும் தகவல் என்னவெனில், வனப்பகுதியில் கூடியுள்ள பசுமைப் பரப்பு 2 விழுக்காடு மட்டுமே. வனப்பகுதிக்கு வெளியேதான் 5,739 சதுர கிலோமீட்டர் வனப்பரப்பு கூடியுள்ளது. இந்த மாற்றத்தில் நகரங்களின் மரம் வளர்ப்புக்குக் கணிசமான இடம் இருக்கிறது.
நகர மேம்பாடு, நகர விரிவாக்கம், சுற்றுச் சாலைகள், புதிய குடியிருப்புகள் போன்ற தேவைக்காக மரங்கள் அடியோடு வெட்டப்படுகின்றன. எந்தவிதமான முன்யோசனை, திட்டம் எதுவுமில்லாமல், இந்தியாவில் மரங்கள் வெட்டித் தள்ளுவதுபோல வேறு எங்காகிலும் நடந்திருக்குமா என்பது சந்தேகமே.
இருப்பினும், தொடர்ந்து மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வும், மரங்களால் ஏற்படும் நன்மைகளை எடுத்துச்சொல்லியும், தொடர்ச்சியாக நகர மக்களின் மனதில் ஏற்படுத்தப்பட்ட சலனங்களின் விளைவுதான், இவ்வாறான நகர்ப்புற மரங்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், நகர்ப்புற பசுமைப் பரப்பின் விரிவும் என்பது நிதர்சனம்.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 7,935 சிறிய, நடுத்தர, பெரு நகரங்கள் உள்ளன. 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இருந்ததைவிடக் கூடுதலாக 2,774 நகரங்கள் உருவாகிவிட்டன. இந்தியாவில் நகரங்கள் ஆக்கிரமித்துள்ள பரப்பு, மொத்த நிலப்பரப்பில் 16.5 விழுக்காடு. இங்குதான் இந்திய மக்கள் தொகையின் 35 விழுக்காட்டினர் வாழ்கின்றனர்.
நகர்வாழ் மக்களை அதிகம் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் இருக்கிறது. முதலாவது மகாராஷ்டிரம் 5.9 கோடி. இரண்டாவது உத்தரப் பிரதேசம் 4.5 கோடி. மூன்றாவதாக தமிழ்நாடு 3.5 கோடிக்கும் அதிகம்.
இருப்பினும், தமிழக நகரங்கள் ஆக்கிரமித்துள்ள பரப்பு 12,492 சதுர கிலோ மீட்டர் என்றால், இதில் நகர்ப்புற மரங்களின் பசுமைப் பரப்பு 1,509 சதுர கிலோ மீட்டராக இருக்கிறது. இந்தக் கணக்கெடுப்பில், கிளைகளுடன் உள்ள அடிமரத்தின் அகலம் குறைந்தபட்சம் 10 செ.மீட்டருக்குக் குறைவான மரங்கள் சேர்க்கப்படவில்லை. வளரும் மரக்கன்றுகள் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தின் பசுமைப் பரப்பு மேலும் கூடும் என எதிர்பார்க்கலாம்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சாலையின் இரு பக்கமும் ஆலமரங்கள் வளர்க்கப்பட்டன. 1939-இல் ராஜாஜி சென்னை ராஜதானியின் பிரதமரானபோது, புளியமரமும், மாமரமும் புதிதாக அமைக்கப்படும் சாலையின் இருபுறங்களிலும் நடுவதற்கு உத்தரவிட்டார்.
புளியங்காயிலும், மாங்காயிலும் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் "சி' இருப்பதால், அது சிறார்களின் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று ராஜாஜி தந்த விளக்கத்தை இங்கே நினைவுகூர விரும்புகிறோம்.
விளைநிலங்களை அழித்து உருவாக்கப்பட்ட தங்க நாற்கரச் சாலைகளின் இரு புறங்களிலும் பயன்தரும் மரங்களை நடுவது பற்றி ஆட்சியாளர்கள் ஏன் யோசிக்கவில்லை என்பது புரியவில்லை.
ஊரகப் பகுதிகளைக் காட்டிலும் நகரங்களுக்குத்தான் மரங்கள் மிகவும் இன்றியமையாதவையாக இருக்கின்றன. மரங்களால் நகரச் சூழலில் கரியமில வாயு குறையும். ஒலி மாசு குறையும். துகள் மாசு வீட்டுக்குள், அலுவலகத்துள் நுழைவது தடைப்படும். வாகனங்களுக்கும் நடைபாதை மனிதருக்கும் நிழல் சேர்க்கும். பறவைகளுக்கு ஓய்விடம் தரும். மரங்களால் நாம் பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி மாளாது.
நகர விரிவாக்கம் என்ற பெயரில் மரங்களை ஏன் வெட்ட வேண்டும்? மரங்களை அப்படியே வேருடன் பெயர்த்து, நகர வளர்ச்சிக்கு இடையூறில்லாத பகுதியில் நட்டு வளர்க்கலாமே. பல கோடி ரூபாய் செலவில் சுற்றுச் சாலை, நிலத்தை சமன்படுத்தல் போன்ற பல பணிகள் நடக்கும்போது, மரங்களை வெட்டாமல் அவற்றைப் பெயர்த்து நடுவதற்கு எவ்வளவு கூடுதல் செலவு ஏற்பட்டுவிடும்? மேலை நாடுகளில் இதைத்தானே செய்கிறார்கள்..
நகர்ப்புறங்களின் பசுமைப் பரப்பு தற்போது கூடியுள்ளதற்கு தமிழக அரசும், வனத்துறையும் பல்வேறு தனியார் அமைப்புகளும் மரக்கன்றுகளை விநியோகித்து வந்ததும், பள்ளி மாணவர்களை ஊக்குவித்ததுமே காரணம். இருப்பினும்கூட, வீட்டுக்கொரு மரம் என்பது இதுவரை நடைமுறையில் இல்லை.
ஒவ்வொரு வீட்டிலும் மழை நீர் சேமிப்பு கட்டாயமாக்கப்பட்டதைப்போல, ஒவ்வொரு வீட்டு வாசலில் அல்லது தோட்டத்தில் ஒரு மரம் கட்டாயமாக்கப்பட்டால், தமிழக நகர்ப்புற பசுமைப் பரப்பு கணிசமாக விரியும்.
ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு மரம்.
நன்றி: தினமணி
நகர மேம்பாடு, நகர விரிவாக்கம், சுற்றுச் சாலைகள், புதிய குடியிருப்புகள் போன்ற தேவைக்காக மரங்கள் அடியோடு வெட்டப்படுகின்றன. எந்தவிதமான முன்யோசனை, திட்டம் எதுவுமில்லாமல், இந்தியாவில் மரங்கள் வெட்டித் தள்ளுவதுபோல வேறு எங்காகிலும் நடந்திருக்குமா என்பது சந்தேகமே.
இருப்பினும், தொடர்ந்து மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வும், மரங்களால் ஏற்படும் நன்மைகளை எடுத்துச்சொல்லியும், தொடர்ச்சியாக நகர மக்களின் மனதில் ஏற்படுத்தப்பட்ட சலனங்களின் விளைவுதான், இவ்வாறான நகர்ப்புற மரங்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், நகர்ப்புற பசுமைப் பரப்பின் விரிவும் என்பது நிதர்சனம்.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 7,935 சிறிய, நடுத்தர, பெரு நகரங்கள் உள்ளன. 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இருந்ததைவிடக் கூடுதலாக 2,774 நகரங்கள் உருவாகிவிட்டன. இந்தியாவில் நகரங்கள் ஆக்கிரமித்துள்ள பரப்பு, மொத்த நிலப்பரப்பில் 16.5 விழுக்காடு. இங்குதான் இந்திய மக்கள் தொகையின் 35 விழுக்காட்டினர் வாழ்கின்றனர்.
நகர்வாழ் மக்களை அதிகம் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் இருக்கிறது. முதலாவது மகாராஷ்டிரம் 5.9 கோடி. இரண்டாவது உத்தரப் பிரதேசம் 4.5 கோடி. மூன்றாவதாக தமிழ்நாடு 3.5 கோடிக்கும் அதிகம்.
இருப்பினும், தமிழக நகரங்கள் ஆக்கிரமித்துள்ள பரப்பு 12,492 சதுர கிலோ மீட்டர் என்றால், இதில் நகர்ப்புற மரங்களின் பசுமைப் பரப்பு 1,509 சதுர கிலோ மீட்டராக இருக்கிறது. இந்தக் கணக்கெடுப்பில், கிளைகளுடன் உள்ள அடிமரத்தின் அகலம் குறைந்தபட்சம் 10 செ.மீட்டருக்குக் குறைவான மரங்கள் சேர்க்கப்படவில்லை. வளரும் மரக்கன்றுகள் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தின் பசுமைப் பரப்பு மேலும் கூடும் என எதிர்பார்க்கலாம்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சாலையின் இரு பக்கமும் ஆலமரங்கள் வளர்க்கப்பட்டன. 1939-இல் ராஜாஜி சென்னை ராஜதானியின் பிரதமரானபோது, புளியமரமும், மாமரமும் புதிதாக அமைக்கப்படும் சாலையின் இருபுறங்களிலும் நடுவதற்கு உத்தரவிட்டார்.
புளியங்காயிலும், மாங்காயிலும் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் "சி' இருப்பதால், அது சிறார்களின் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று ராஜாஜி தந்த விளக்கத்தை இங்கே நினைவுகூர விரும்புகிறோம்.
விளைநிலங்களை அழித்து உருவாக்கப்பட்ட தங்க நாற்கரச் சாலைகளின் இரு புறங்களிலும் பயன்தரும் மரங்களை நடுவது பற்றி ஆட்சியாளர்கள் ஏன் யோசிக்கவில்லை என்பது புரியவில்லை.
ஊரகப் பகுதிகளைக் காட்டிலும் நகரங்களுக்குத்தான் மரங்கள் மிகவும் இன்றியமையாதவையாக இருக்கின்றன. மரங்களால் நகரச் சூழலில் கரியமில வாயு குறையும். ஒலி மாசு குறையும். துகள் மாசு வீட்டுக்குள், அலுவலகத்துள் நுழைவது தடைப்படும். வாகனங்களுக்கும் நடைபாதை மனிதருக்கும் நிழல் சேர்க்கும். பறவைகளுக்கு ஓய்விடம் தரும். மரங்களால் நாம் பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி மாளாது.
நகர விரிவாக்கம் என்ற பெயரில் மரங்களை ஏன் வெட்ட வேண்டும்? மரங்களை அப்படியே வேருடன் பெயர்த்து, நகர வளர்ச்சிக்கு இடையூறில்லாத பகுதியில் நட்டு வளர்க்கலாமே. பல கோடி ரூபாய் செலவில் சுற்றுச் சாலை, நிலத்தை சமன்படுத்தல் போன்ற பல பணிகள் நடக்கும்போது, மரங்களை வெட்டாமல் அவற்றைப் பெயர்த்து நடுவதற்கு எவ்வளவு கூடுதல் செலவு ஏற்பட்டுவிடும்? மேலை நாடுகளில் இதைத்தானே செய்கிறார்கள்..
நகர்ப்புறங்களின் பசுமைப் பரப்பு தற்போது கூடியுள்ளதற்கு தமிழக அரசும், வனத்துறையும் பல்வேறு தனியார் அமைப்புகளும் மரக்கன்றுகளை விநியோகித்து வந்ததும், பள்ளி மாணவர்களை ஊக்குவித்ததுமே காரணம். இருப்பினும்கூட, வீட்டுக்கொரு மரம் என்பது இதுவரை நடைமுறையில் இல்லை.
ஒவ்வொரு வீட்டிலும் மழை நீர் சேமிப்பு கட்டாயமாக்கப்பட்டதைப்போல, ஒவ்வொரு வீட்டு வாசலில் அல்லது தோட்டத்தில் ஒரு மரம் கட்டாயமாக்கப்பட்டால், தமிழக நகர்ப்புற பசுமைப் பரப்பு கணிசமாக விரியும்.
ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு மரம்.
நன்றி: தினமணி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு மரம்.
நல்ல யோசனை.ஒவ்வொரு வீட்டிலும் மழை நீர் சேமிப்பு கட்டாயமாக்கப்பட்டதைப்போல, ஒவ்வொரு வீட்டு வாசலில் அல்லது தோட்டத்தில் ஒரு மரம் கட்டாயமாக்கப்பட்டால், தமிழக நகர்ப்புற பசுமைப் பரப்பு கணிசமாக விரியும்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு மரம்.
அருமையான யோசனை
எங்க வீட்ல தோட்டம் இல்லை.
எங்க வீட்ல தோட்டம் இல்லை.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» மரம் வளர்ப்போம் மற்றவர்களையும் மரம் வளர்க்க தூண்டுதலாக இருப்போம் !!
» இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்
» உங்கள் வீடு உங்கள் அனுபவம்: பழைய வீடு, புதிய அனுபவம்
» கவி மரம்
» மரம்...
» இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்
» உங்கள் வீடு உங்கள் அனுபவம்: பழைய வீடு, புதிய அனுபவம்
» கவி மரம்
» மரம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|