தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அழகுக் குட்டிச் செல்லங்களுக்கு அழகு செய்வோம்!

View previous topic View next topic Go down

அழகுக் குட்டிச் செல்லங்களுக்கு அழகு செய்வோம்! Empty அழகுக் குட்டிச் செல்லங்களுக்கு அழகு செய்வோம்!

Post by mohaideen Tue Aug 26, 2014 12:34 pm

அழகுக் குட்டிச் செல்லங்களுக்கு அழகு செய்வோம்! Ld2627
பியூட்டி

திருமண வயதில் இருப்பவர்களும் திருமணமானவர்களும் மட்டுமே படையெடுத்துக் கொண்டிருந்த பியூட்டி பார்லர்களில், இன்று டீன் ஏஜை எட்டாத குழந்தைகளைக் கூட சர்வ சாதாரணமாகப் பார்க்க முடிகிறது. 18 வயது வரை சருமம் மற்றும் கூந்தலுக்கான பார்லர் சிகிச்சைகளைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது. அந்த வயதிலேயே அவர்களது சருமத்தையும் கூந்தலையும் ஊடுருவும் ரசாயனங்கள், அழகைக் குலைக்குமே தவிர, அதிகரிக்காது. பதின்மப் பருவம் முடிகிற வரை பெண் குழந்தைகளின் சருமம் மற்றும் கூந்தல் தொடர்பான பிரச்னைகளுக்கு இயற்கையான முறையில் தீர்வு காண, வழிகள் சொல்கிறார் அழகுக்கலை ஆலோசகர் ராஜம் முரளி.

• சில பெண் குழந்தைகளுக்கு, அதாவது, 3 - 4 வயதில் உடம்பெல்லாம் முடி வளர்ச்சி இருக்கும். குறிப்பாக முதுகில் அதிகமாக இருக்கும். 3 டீஸ்பூன் சம்பா கோதுமையை 6 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். அது அதன் பாலுடன் சேர்ந்து நன்கு விழுதாக அரைபட்டதும் அதை அப்படியே எடுத்துக் குழந்தையின் முதுகுப் பகுதியில் மெலிதாக பேக் மாதிரித் தடவி 1 மணி நேரம் காய விடவும். 1 மணி நேரம் கழித்து, அதை அப்படியே உரித்து எடுத்து விடலாம். கால்களிலும் இதே போல செய்யலாம். முடி வளர்ச்சி கட்டுப்படுவதுடன் கருகருவென அடர்த்தியாவதும் தடுக்கப்படும். குழந்தைக்கு வலி ஏற்படுத்தாத எளிமையான சிகிச்சை இது.

• சில குழந்தைகள் உதடுகள் வறண்டு போவதால் அடிக்கடி உதடுகளைக் கடித்தும் நாக்கால் தடவி ஈரப்படுத்திக் கொண்டும் இருப்பார்கள். தினம் தலைக்கு எண்ணெய் தடவும் போது, அதே தேங்காய் எண்ணெயில் சிறிது எடுத்து, உதட்டின் மேல் அதே வடிவத்தில் தடவிவிட்டு, குளிக்கச் சொல்லலாம்.

• புருவங்களையும் மூக்கையும்கூட வெறுமனே அடிக்கடி நீவி விட வேண்டும். 10 வயதுக்குள் இப்படி நீவி விட்டுக் கொண்டே வந்தால், குழந்தையின் புருவங்களும் மூக்கும் நல்ல வடிவம் பெறும்.

• குழந்தைப் பருவத்திலிருந்தே வாரம் 2 முறைகள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுகிற பழக்கத்தை உருவாக்க வேண்டும். ஒரு முறை வெறும் நல்லெண்ணெயை நிறைய எடுத்து, சொதசொதவெனத் தடவி, ஊற விட்டு சீயக்காய் தூளோ, குளியல் பொடியோ உபயோகித்து அலசி விடலாம். இன்னொரு முறை நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் மூன்றும் சம அளவு கலந்து தலை முதல் பாதம் வரை தடவிக் குளிக்கச் செய்யலாம். இக்கலவை சருமத்துக்குப் பளபளப்பையும் கூந்தலுக்கு கருமை, அடர்த்தியை கொடுக்கும்.

• சில குழந்தைகளுக்கு சீயக்காய் அலர்ஜி ஏற்படலாம். அவர்களுக்கு இந்தக் குளியல் பொடியை உபயோகிக்கலாம். வெந்தயம் - 200 கிராம், பச்சைப் பயறு - 100 கிராம், கடலைப் பருப்பு - 200 கிராம், கிச்சிலிக் கிழங்கு  - 100 கிராம், பூந்திக் கொட்டை - 100 கிராம், ரோஜா மொட்டு - 100 கிராம் என எல்லாவற்றையும் உலர வைத்து, அரைத்து சலித்துக் கொள்ளவும். தேவையான அளவு எடுத்து வெந்நீரில் கரைத்து, எண்ணெய் குளியலுக்கு சீயக்காய்க்குப் பதில் உபயோகிக்கலாம். 

• 10 வயதிலிருந்தே பெண் குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் பூப்பெய்தலாம். அதை நெருங்கும் வயதில் அவர்களுக்கு அக்குள் பகுதியிலும் தொடை மற்றும் அந்தரங்கப் பகுதிகளிலும் கருமை உருவாகும். நாற்றமும் சேர்ந்து கொள்ளும். கஸ்தூரி மஞ்சள் - 50 கிராம், ரோஜா - 50 கிராம், தவனம் - 50 கிராம், மரிக்கொழுந்து - 50 கிராம் - எல்லாவற்றையும் உலர வைத்து அரைத்துக் கொள்ளவும். குளித்து முடித்ததும் அக்குள் உள்ளிட்ட அந்தரங்கப் பகுதிகளுக்கு இந்தப் பொடியைத் தேய்த்துக் கழுவிவரச் சொல்லவும். கருமை நீங்குவதோடு, இயற்கையான நறுமணம் கமழும்.

• கூந்தல் ஆரோக்கியம் 10 வயதுக்குள் முறைப்படுத்தப்பட வேண்டும். தினம் 2 வேளைகள் கூந்தலை வாருவதை வழக்கமாக்க வேண்டும். ரோஜா, செம்பருத்தி, தாமரை, மரிக்கொழுந்து ஆகிய அனைத்தும் அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்றை 200 மி.லி. தேங்காய் எண்ணெயில் மூழ்கும் அளவுக்குப் போட்டுக் காய்ச்சி ஆற வைத்து, தலைக்குத் தேய்த்து வரலாம். ஹேர் கட் செய்ததும் வெட்டியதற்கு எதிர் திசையில் தலையை வாரி, இந்த எண்ணெயைத் தேய்த்து வந்தால், பொடுகு வராமல் தடுக்கப்படும். அடர்த்தியும் 
அதிகரிக்கும் . தலைக்குக் குளித்த உடன், காய வைக்க டிரையரோ, வெயிலில் நிற்பதோ வேண்டாம். ஈரம் போகத் துவட்டி விட்டாலே போதும். 

• பருவ வயதை நெருங்கும் போது, பெண் குழந்தைகளுக்கு ஈஸ்ட்ரோஜென் வேலை செய்ய ஆரம்பிக்கும். அதன் விளைவாக அவர்களுக்கு முகத்தில் எண்ணெய் வழியும். தலைமுடியில் பிசுபிசுப்பு தெரியும். அதனால் அவர்கள் தலையில் எண்ணெய் வைப்பதையும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதையும் தவிர்ப்பார்கள். இவர்கள் ஏற்கனவே சொன்ன முறையில் குளியல் பொடியை மட்டும் உபயோகித்து (சோப்பை தவிர்த்து) குளித்தாலே எண்ணெய் பசையும் பிசுபிசுப்பும் மறையும்.

• சருமத்தை தினமும் பல முறை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் பெண் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். ஒவ்வொரு முறை வெளியே சென்று விட்டுத் திரும்பியதும் முகத்தைக் கழுவ வேண்டும். வெளிப்புற மாசு சருமத்தில் படிந்து, முதலில் ஒயிட் ஹெட்ஸாக கிளம்பும். அதை அலட்சியப்படுத்தினால், பிளாக் ஹெட்ஸ் எனப்படும் கரும்புள்ளிகளாக மாறும். அதை அழுத்தியோ, பிதுக்கியோ எடுக்க முயன்றால், பருக்களில் கொண்டு போய் விடும். சருமத் துவாரங்களில் படிகிற அழுக்கு கலந்த எண்ணெயை முறையாகக் கழுவி சுத்தப்படுத்துவதன் மூலம் டீன் ஏஜில் பருக்கள் வருவதையும் தவிர்க்கலாம். இந்த வயதுப் பெண் குழந்தைகள் கூடிய வரையில் சோப்பை தவிர்த்து, குளியல் பொடியை மட்டுமே உபயோகிப்பது சருமத்தைக் காக்கும். 
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

அழகுக் குட்டிச் செல்லங்களுக்கு அழகு செய்வோம்! Empty Re: அழகுக் குட்டிச் செல்லங்களுக்கு அழகு செய்வோம்!

Post by நாஞ்சில் குமார் Sat Aug 30, 2014 10:44 pm

பயனுள்ள பகிர்வு.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

அழகுக் குட்டிச் செல்லங்களுக்கு அழகு செய்வோம்! Empty Re: அழகுக் குட்டிச் செல்லங்களுக்கு அழகு செய்வோம்!

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Aug 31, 2014 7:55 am

பேரழகு... எல்லாம் அழகே
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அழகுக் குட்டிச் செல்லங்களுக்கு அழகு செய்வோம்! Empty Re: அழகுக் குட்டிச் செல்லங்களுக்கு அழகு செய்வோம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum