தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காவல் துறையும் பெண்களும்

View previous topic View next topic Go down

காவல் துறையும் பெண்களும் Empty காவல் துறையும் பெண்களும்

Post by நாஞ்சில் குமார் Wed Sep 03, 2014 10:23 pm

காவல் துறையும் பெண்களும் Ejy9uc

சட்டம் உன் கையில்: வழக்கறிஞரும் குடும்பநலஆலோசகருமான ஆதிலட்சுமி லோகமூர்த்தி

சமுதாயத்தில் இன்று பெண்களுக்கு எதிரான பல குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  பெண்களை பாதுகாக்க பல சட்டங்கள் இயற்றப்பட்டு  நடைமுறையில் உள்ளன.  பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் காவல் துறையினருக்கு பெரும் பங்கு இருப்பது மறுக்க முடியாத உண்மை.  ஆனால், பல நேரங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் துறையின் உதவி உரிய நேரத்தில் கிடைக்கப் பெறாமல் இருக்கிறது என்பதையும்  மறுப்பதற்கில்லை. அதற்குக் காரணம் காவல் துறையினரின் அலட்சியமா? பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுடைய சட்ட உரிமையை சரியாக புரிந்து  கொள்ளாத நிலையா?

இது விவாதத்துக்குரிய வினாவே. சில நேரங்களில், விசாரணை என்ற போர்வையிலோ, உண்மையான விசாரணைக்காகவோ காவல் துறையினரால்  பெண்கள் ஆஜர்படுத்தப்படும் நேரங்களில் பெண்களின் உரிமைகள் என்ன? காவல் துறையினரின் கடமைகள் என்ன? இதுவும் பெரும்பாலான  பெண்களுக்கு பரிச்சயமில்லாத ஒரு தளமாகவே இன்றளவும் இருந்து வருகிறது. கல்வியறிவு பெற்ற பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

பொதுவாக நடைமுறையில் சட்டங்களை இருவகைப்படுத்தக் கூடிய நிலை உள்ளது. தனிநபர் சம்பந்தப்பட்ட திருமணம், சொத்துரிமை போன்ற  விஷயங்கள் ‘உரிமையியல் சட்ட’த்தின் கீழும், சமுதாயத்துக்கு எதிராக நடைபெறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல்  வன்புணர்ச்சி, வரதட்சணை கொடுமை போன்ற குற்றங்களை ‘குற்றவியல் சட்ட’த்தின் கீழும் வகைப்படுத்தி பார்க்கிறோம்.  குற்றங்களிலிருந்து பொது  மக்களை காப்பாற்றவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்றங்கள் நடைபெற்ற நிலையில் அதில் தகுந்த விசாரணை மேற்கொள்ளவும்,  சந்தேகப்படும் நபரை விசாரிக்கவும், குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் என காவல் துறையினரின் பங்கு பெருமளவில்  தேவைப்படுகிறது.

காவல் துறையினர் பொதுமக்களின் நண்பன் என்று உரக்கக் கூறினாலும், காவல் துறையின் மீது பொது மக்களுக்கு ஒரு விதமான அச்சம்  இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக பெண்கள் காவல் துறையை நாடவோ, உதவி கேட்கவோ தயங்கும் நிலை பரவலாக உள்ளது. பொதுமக்களின்  நம்பிக்கையையும் நன்மதிப்பையும் காவல் துறையினர் பெறும்போது, மக்கள் அவர்களின் உதவியை நாடுவதில் தயக்கம் இல்லாமலிருக்கும்.  பொதுவாக, ஒரு குற்றம் நடைபெறும்போது பாதிக்கப்பட்ட நபரோ, அவரைச் சார்ந்த நபரோ குற்றம் நடைபெற்ற எல்லைக்குட்பட்ட காவல்  நிலையத்திலோ, காவல் துறை உயர் அதிகாரியிடமோ, நேரடியாகவோ, தபால் மூலமோ புகார் மனுவை தகுந்த நேரத்துக்குள் அளிப்பது அவசியம்.

இவ்வாறான புகார் மனு தாக்கல் செய்யும் போது, அந்த புகார் மனுவை மிகுந்த கவனத்துடன் தயார் செய்வது புகார்தாரரின் அடிப்படைக்  கடமையாகும். பெரும்பாலான நேரங்களில் புகார் மனுவை உரிய முறையில், சரியான நேரத்தில் சரியான நபரிடம் கொடுக்கத் தவறுவதே பல  குற்றவாளிகள் தப்பிக்க ஏதுவாகிறது. இந்த புகார் மனுவின் அடிப்படையிலேயே குற்றங்கள் விசாரிக்கப்பட்டு, விசாரிக்கப்படும் நபர் தவறு  செய்திருக்கும் பட்சத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்படும்.  ஒருவர் புகார் மனு கொடுத்த பிறகு அவருக்கு காவல் நிலையத்தி லிருந்து CSR   (Community Service Register)  எனப்படும் புகார் ஏற்பு சான்றிதழ் கொடுக்கப்படும்.  

புகார் மனுவின் அடிப்படையில்  விசாரணை மேற்கொண்டு அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் அந்த குற்றத்துக்கான முதல் தகவல் அறிக்கை (FIR   First Information Report) தயாரிக்கப்படுகிறது. இந்த இடத்தில் குற்றங்கள் என்று கூறும்போது, ஜாமீன்  கொடுக்கக்கூடிய குற்றங்கள்  (ஙிணீவீறீணீதீறீமீ), ஜாமீன் கொடுக்க இயலாத குற்றங்கள் (NonBailable) என்று இரு வகைப்படுத்தப்படும்.   இதில் ஜாமீன் கொடுக்க இயலாத  குற்றங்களுக்கு நீதிமன்றத்தை அணுகியே குற்றவாளிகள் ஜாமீன் பெற இயலும். முதல் தகவல் அறிக்கை தயார்  செய்தவுடன் காவல் துறையினரால்  வழக்கு அதன் எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பப்படும்.  சில நேரங்களில் புகார் மனு பதிவு செய்யப்படாமலோ,  பதிவு செய்யப்பட்ட  மனுவின் மீது விசாரணை மேற்கொள்ளாமலோ, காவல் துறையினர் மெத்தனப் போக்குடன் செயல்படும் பட்சத்தில், தகுந்த நீதிமன்றத்தை நாடி  ஆணை பெற்று உரிய நிவாரணம் பெற சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.

சில நேரங்களில் பாதிக்கப்படும் நபர் கொடுக்கும் புகார் மனு சரிவர பதிவு செய்யப்படவில்லை எனில், அதாவது, என்ன குற்றம், அது நடந்த இடம்,  குற்றம் சாட்டப்படும் நபர் அல்லது சந்தேகப்படும் நபர், அந்தக் குற்றத்தால் ஏற்படும் உயிர் மற்றும் பொருள் இழப்பு போன்றவை சரிவர  குறிப்பிடவில்லையென்றால், சரியான முதல் தகவல் அறிக்கை தயாரிக்க முடியாது. அதனால் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனு அனைத்து  விஷயங்களையும் உள்ளடக்கியதாக, தெளிவானதாக இருப்பதை உறுதி செய்வது மிகவும் அவசியம். பெண்களை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு  அழைக்கும் போது அல்லது அவர் மீது விசாரணை நடைபெறும் போது, ஒரு பெண் காவலர் உடனிருப்பது சட்டப்படி அவசியம்.

பாலியல் முறைக்கு ஆட்படுத்தப்பட்ட பெண் குழந்தையை விசாரிக்கும் பட்சத்தில், அக்குழந்தையின் பெற்றோர் முன்னிலையிலோ, காப்பாளர்  முன்னிலையிலோ, காவல் உடை தவிர்த்து,  சிவில் உடையில்  பெண் காவல் அதிகாரி அந்தப் பெண் குழந்தையை விசாரிப்பது அவசியம். மேலும்,  சூரிய உதயத்துக்கு முன்னரும், சூரிய மறைவுக்குப் பின்னரும் பெண்களை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை மேற்கொள்வது சட்டத்துக்கு  ஏற்புடைய தல்ல. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பெண்கள் காவல் நிலைய விசாரணைக்கு அழைக்கப்படுவதே ஏற்புடையது.  காவல் நிலையத்திலோ, காவல் துறையினராலோ விசாரணை என்ற பெயரில் பெண்களிடம் அத்துமீறி நடப்பது, தேவையில்லாமல் அவர் உடுப்புகளை  களைந்து சோதனை இடுவது சட்ட மீறல் மட்டுமன்றி ஒரு மனித உரிமை மீறலும் கூட.

இந்திய அரசியல் சாசனத்தின் ஷரத்து 21 தனி மனிதனின் உயிரையும் சுதந்திரத்தையும் பேணி பாதுகாக்க வலியுறுத்துகிறது.  சட்ட விதிமுறைகளை  மீறி எந்த ஒரு தனிநபரின் சுதந்திரத்தையும் விசாரணை என்ற பெயரால் காவல் துறையினர் அத்துமீறல் செய்ய உரிமையில்லை. சில நேரங்களில்  பெண்கள் குற்றவாளிகளாக சட்டத்தின் முன் நிறுத்தப்படும்போதும், அவர்களுக்கென சில உரிமைகள் உள்ளன.

சட்டத்தின் பிடியில் சிறையிலிருக்கும் பெண்ணின் உடல்நிலைக்கோ, ஆரோக்கியத்துக்கோ பங்கம் ஏற்படும் போது நீதிமன்றத்தில் முறையிட்டு,  சிறைச்சாலை மருத்துவமனையிலோ, அரசு மருத்துவமனையிலோ தேவைப்படும் மருத்துவ உதவியை பெற்றுக்கொள்ள உரிமையுண்டு.

குற்றம் சாட்டப்பட்ட கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு  சிறைச்சாலை மருத்துவமனையிலோ, அரசு மருத்துவமனையிலோ தகுந்த மருத்துவ  பரிசோதனைக்கு ஏற்பாடு செய்துகொள்ளவும் ஆரோக்கியமான உணவும் தேவைப்படும் மருந்துகளும் பெறவும் உரிமை உண்டு.

சிறைச்சாலையில் இருக்கும் நாட்களில் பெண் கைதி கருவுறும் பட்சத்தில் சிறைச்சாலை அலுவலர் மூலம் தவறு செய்தவரை கண்டு பிடித்து அவர்களுக்கு சட்டப்படி தகுந்த தண்டனை பெற்றுத் தருவது அவசியம்.

சிறைத் தண்டனையை அனுபவிக்கும் கருவுற்ற பெண் தண்டனை காலத்தில் பிரசவிக்கும் போது, அவருக்கு பிறக்கும் குழந்தையின் பெயர் சிறைப்  பதிவேட்டில் சேர்க்கப்படாது. சிறைத் தண்டனை அனுபவிக்கும் பெண்ணை பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தும் நபருக்கு தகுந்த தண்டனை பெற்றுக்  கொடுப்பது அவசியம்.

இன்றைய இயந்திரமயமான உலகில் பெண்கள் பல இன்னல்களையும் இடர்பாடுகளையும் எதிர்கொள்ள நேர்கிறது.  சிலவற்றை தன்னிச்சையாகவே  நிவர்த்தி செய்யக்கூடிய ஒரு தன்னம்பிக்கையை பெண்கள் தங்களுக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.  இன்று கல்வி நிலையில் பல  பெண்கள் உயர்ந்திருக்கிறார்கள்...பொருளாதார சுதந்திரத்தையும் சில பெண்கள் பெற்றிருக்கிறார்கள். எனினும், எல்லா  நிலைகளிலும் தன்னம்பிக்கை  கொண்டவர்களாக செயலாற்ற முடியாமல் தவிக்கிறார்கள்.  ஒரு பெண் தன் மீது நம்பிக்கை கொண்டால் மட்டுமே இந்த  சமுதாயம் அவள் செய்யும்  செயலின் மீது நம்பிக்கை கொள்ளும். இந்த நாட்டு பெண்கள் இன்னல்களிலிருந்து தங்களை தாங்களாகவோ, சட்டத்தின் மூலமாகவோ, காவல்  துறையின் உதவியுடனோ பாதுகாத்துக் கொள்ள தன் மீது மிகுந்த நம்பிக்கையுடையவர்களாக விளங்குவது அவசியம்.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

காவல் துறையும் பெண்களும் Empty Re: காவல் துறையும் பெண்களும்

Post by ஸ்ரீராம் Thu Sep 04, 2014 9:51 am

நல்ல கட்டுரை
தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum