Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நகச்சுற்று
Page 1 of 1 • Share
நகச்சுற்று
நகச்சுற்றுக்கு அறிமுகம் தேவையில்லை... நம்மில் எல்லோரும் அந்தப் பிரச்னையை கடந்துதான் வந்திருப்போம். சூலாயுதத்தில் குத்தப்பட்டிருப்பது போல நகச்சுற்று ஏற்பட்டுள்ள விரல்களிலும் எலுமிச்சைப்பழத்தைக் குத்திக் கொள்வதே நாம் அறிந்த தீர்வு. விரல்களில் மருதாணி வைத்துக் கொள்ளுதல் கூட நகச்சுற்றைப் போக்கும் என்கிறது நாட்டு மருத்துவம். நகச்சுற்று ஏன் வருகிறது? இதற்கு முறையான தீர்வு என்ன? எலுமிச்சைப்பழம் குத்துவது எதற்காக? இந்தக் கேள்விகளுக்கான தெளிவும் நம்மில் பலரிடம் இல்லை. அதை விளக்கும் முயற்சியாக தொற்றுநோய் மருத்துவர் ராமசுப்ரமணியத்தை அணுகினோம்...
‘‘நகத்தைச் சுற்றி ஏற்படும் பூஞ்சை மற்றும் கிருமித்தொற்றே நகச்சுற்று. இது ஏற்படும்போது நகத்தைச் சுற்றிலும் சீழ் கோர்த்து வலி ஏற்படுத்தும். நகம் வெட்டும் போது நகத்துக்கும் சதைக்கும் இடையில் இருக்கும் இணைப்புச் சதையில் ஏற்படும் சிதைவு நாள்பட நாள்பட நகச்சுற்றாக மாறிவிடும். நகத்துக்கு வெளியே இருக்கும் பாக்டீரியா போன்ற கிருமிகள் உள்ளுக்குள் நுழைந்து விடுவதன் மூலம் கிருமித் தொற்றுக்கு ஆளாகும். அது நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக சீழ் கோர்க்க ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் நகச்சுற்றாக மாறிவிடுகிறது.
நகச்சுற்று என்பது யாருக்கு வேண்டுமானாலும் எக்காலத்திலும் ஏற்படும் பொதுவான பிரச்னைதான். இதனால் பயப்படும் அளவுக்கு பெரிய பாதிப்புகள் இல்லையென்றாலும், விரல் வீக்கத்தினால் ஏற்படும் வலி நம் அன்றாட இயல்பு வாழ்க்கையை பாதிக்கும். அதனால், இப்பிரச்னை குறித்து அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சைப்பழம் குத்திக் கொள்கிற பழக்கம் பரவலாக இருக்கிறது. அப்படிக் குத்திக் கொள்வதன் மூலம் விரல்களில் வலி ஏற்படாமல் இருக்குமே தவிர, நிரந்தரத் தீர்வாக அமையாது. நகச்சுற்று ஏற்பட்டவுடன் சீழ் கோர்த்திருப்பதால் விரலில் வீக்கம் இருக்கும்.
நாம் அதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால், குறிப்பிட்ட காலத்தில் வீக்கம் வெடித்து சீழ் வெளியாகி விடும். அந்த நிலைக்குச் செல்வதை விட மருத்துவத் தீர்வை நாடுவதே சிறந்தது. விரலில் இருக்கும் சீழை ஒட்டுமொத்தமாக வெளியேற்றி விடுதலே இதற்கான தீர்வு. சிலர் ஆன்டிபயாடிக் பயன்படுத்துவர். ஆனால், சீழை வெளியேற்றி விட்டாலே பிரச்னை முடிந்து விடும். அதைத் தாண்டிய சிகிச்சை எதுவும் தேவையில்லை. நகங்கள் வளரும்போது இடுக்குகளில் அழுக்குகள் தேங்க வாய்ப்பிருக்கிறது. அவ்வப்போது இணைப்புச் சதைக்கு பாதிப்பில்லாத வகையில் நகங்களை வெட்டிக் கொள்ள வேண்டும். பாக்டீரியா, பூஞ்சைகள் தேங்காத வண்ணம் அடிக்கடி கை கழுவி சுத்தமாக இருக்க வேண்டியது மிக அவசியம்...’’
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3333
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|