தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நீங்கள் குழந்தைகளாக மாறுங்கள்

View previous topic View next topic Go down

நீங்கள் குழந்தைகளாக மாறுங்கள் Empty நீங்கள் குழந்தைகளாக மாறுங்கள்

Post by நாஞ்சில் குமார் Thu Sep 11, 2014 9:47 pm



சைதன்யா



பகவத் கீதை உரைக்கு முன்னுரை எழுதிய பாரதியார் முதல் பக்கத்திலேயே பைபிளிலிருந்து ஒரு வாசகத்தை மேற்கோள் காட்டுகிறார்.

“நீங்கள் குழந்தைகளைப் போலானாலன்றி, மோக்ஷ ராஜ்யத்தை எய்த மாட்டீர்கள்” என்னும் இயேசு பிரானின் வார்த்தைதான் அது.

இதே வார்த்தையைப் பல ஆன்மிக ஞானிகளும் தத்துவ வாதிகளும் சொல்வதைக் கேட்டிருப் போம். கவிஞர்கள்கூட இதையே சொல்கிறார்கள்.

குழந்தைகளைப் போல் ஆவது என்றால் என்ன? நமது அறிவு, அனுபவங்கள், சிந்திக்கும் ஆற்றல், திறமைகள், லட்சியங்கள், உணர்ச்சிகள், கடமைகள் எல்லாவற்றையும் துறந்து விட்டுக் குழந்தைகளைப் போல இருப்பதா? அப்படி இருப்பது சாத்தியமா என்பது இருக்கட்டும்.

அது தேவையா? குழந்தை வளர்ந்து பெரியவர் ஆவதுதானே இயல்பு? இயற்கையின் இந்தச் செயல் முறையை மாற்ற முடியுமா? மாற்றுவது அவசியமா?

செடி மரமாகும். அந்த மரம் மீண்டும் செடியாகாது. ஆனால் அந்த மரத்திலிருந்து கிடைக்கும் விதை இன்னொரு செடியை உருவாக்கும். இதுதானே மனிதர்கள் வாழ்வும்? எனில் மனிதர்கள் மட்டும் ஏன் மீண்டும் குழந்தைகளாக வேண்டும்?

அம்மாவின் நினைப்பு எப்போது வரும்

ஞானிகளும் கவிஞர்களும் சொல்லவருவது வேறு. இதை ராமகிருஷ்ண பரமஹம்சர் அழகாக விளக்குகிறார். வழக்கம்போல ஒரு குட்டிக் கதை மூலம்.

குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. அதற்கு அம்மாவின் நினைப்பே வருவதில்லை. விளையாடும்போது கீழே விழுந்து அடிபட்டுவிடுகிறது. உடனே அம்மா என்று கத்துகிறது. அம்மா ஓடி வந்து கவனிக்கிறார். மருந்து போட்டு சமாதானப்படுத்துகிறார்.

குழந்தை மீண்டும் விளையாட ஆரம்பிக்கிறது. அதற்கு திடீரென்று பசிக்கிறது. சொல்லத் தெரியவில்லை. உடனே வீல் என்று கத்துகிறது. கையிலிருக்கும் விளையாட்டுப் பொருள்களை வீசி எறிகிறது. அம்மா ஓடி வருகிறார். விஷயம் புரிகிறது. உணவை ஊட்டுகிறார். குழந்தை நன்றாகச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கிவிடுகிறது.

எழுந்ததும் ம்மா என்று ஒரு சத்தம். அம்மாவின் வருகை. பிறகு அமைதி. கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் ம்மா… வேறு ஏதோ பிரச்சினை. மீண்டும் அம்மாவின் உதவி.

இந்தக் குழந்தைபோல நீங்கள் ஏன் கடவுளிடம் நடந்துகொள்ளக் கூடாது என்று ராமகிருஷ்ணர் கேட்கிறார். தன்னால் முடிந்தவரை எதையோ செய்துகொண்டிருக்கிறது. தன்னுடைய சக்தியின் எல்லையை உணர்ந்ததும் உடனே அம்மாவை அழைக்கிறது. முழு நம்பிக்கையுடன் அழைக்கிறது.

அம்மா வருவார் என்பதிலோ தனக்கு வேண்டியதைச் செய்வார் என்பதிலோ குழந்தைக்குத் துளியும் சந்தேகமில்லை. ஒரு குழந்தை தாயை நம்புவதுபோல நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா? அப்படி நம்பி அழைக்கிறீர்களா? அப்படியானால் குழந்தைக்கு உதவத் தாய் வருவதுபோல பக்தனுக்கு உதவ இறைவன் வருவான் என்கிறார் ராமகிருஷ்ணர்.

குழந்தைகளைப் போல நடந்துகொள்வதில் இது ஒரு விதம். உள்ளத்தைக் குழந்தைகளைப் போல மாசற்றதாக, தன் முனைப்பு அற்றதாக வைத்துக்கொள்ளுங்கள் என்று ஞானிகள் கூறுகிறார்கள். பாரதியார் சொல்வதைக் கேளுங்கள்:

“‘குழந்தைகளைப் போலாகிவிடுங்கள்’ என்றால், உங்களுடைய லௌகிக அனுபவங் களையெல்லாம் மறந்துவிடுங்கள்; நீங்கள் படித்த படிப்பையெல்லாம் இழந்துவிடுங்கள்; மறுபடி சிசுக்களைப் போலவே தாய்ப்பால் குடிக்கவும், மழலைச் சொற்கள் பேசவுந் தொடங்குங்கள் என்பது கொள்கையன்று. ‘ஹிருதயத்தைக் குழந்தைகளின் ஹிருதயம்போல நிஷ்களங்கமாகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்ளுங்கள்’ என்பது கருத்து.”

தூய மனமே குழந்தைநிலை

தூய மனத்துடன், முழுமையான நம்பிக்கையுடன் இறைவனை அணுகுவதே குழந்தையின் மனதோடு இருத்தல். இத்தகைய ‘குழந்தை’களை மணிவாசகர் சொன்னதுபோல, “தாயினும் சாலப் பரிந்து” காப்பவர் இறைவன் என்பதே ஞானிகள் வாக்கு.

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நீங்கள் குழந்தைகளாக மாறுங்கள் Empty Re: நீங்கள் குழந்தைகளாக மாறுங்கள்

Post by முரளிராஜா Fri Sep 12, 2014 8:03 am

சிறப்பான ஆன்மீக பகிர்வுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நீங்கள் குழந்தைகளாக மாறுங்கள் Empty Re: நீங்கள் குழந்தைகளாக மாறுங்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 12, 2014 8:29 am

தகவல் பகிர்வுக்கு நன்றி
பயனுள்ள தகவல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

நீங்கள் குழந்தைகளாக மாறுங்கள் Empty Re: நீங்கள் குழந்தைகளாக மாறுங்கள்

Post by செந்தில் Fri Sep 12, 2014 11:03 am

சிறந்த சிந்தையை தூண்டும் பகிர்வு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நீங்கள் குழந்தைகளாக மாறுங்கள் Empty Re: நீங்கள் குழந்தைகளாக மாறுங்கள்

Post by ஸ்ரீராம் Fri Sep 12, 2014 12:17 pm

பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நீங்கள் குழந்தைகளாக மாறுங்கள் Empty Re: நீங்கள் குழந்தைகளாக மாறுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum