Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆரோக்கியத்தில் 5 வகை!
Page 1 of 1 • Share
ஆரோக்கியத்தில் 5 வகை!
ஃபிட்னஸ்: மு.ஸ்டாலின் நாகராஜன்
உடற்பயிற்சி நம்மை ஆரோக்கியமாக வைப்பதோடு மட்டுமல்ல... எப்போதும் கலகலப்பாக மகிழ்ச்சியோடு இருக்க பேருதவி செய்கிறது. நம்மைப் பற்றி அதிக அக்கறை கொள்ளவும், நம் உடல், உயிர், ஆன்மாவின் மீது அதிக பாசம் வைக்கவும் உடற் பயிற்சி உதவுகிறது. மிக முக்கியமாக - ஆரோக்கியமான உடலானது மாபெரும் தன்னம்பிக்கையை நமக்கு அன்பளிப்பாக அளிக்கிறது.
உடற்பயிற்சியினால் என்ன நன்மை?
உடற்பயிற்சி செய்தால் 100 வயது வரை நல்ல உடல்நலத்தோடு வாழ முடியும் என்று யாரும் உறுதியாகக் கூற இயலாது. ஆனால், தொடர்ச்சியாக, தினமும் உடற்பயிற்சிக்காக சிறிது நேரம் ஒதுக்கும் புத்திசாலிகள் நல்ல உடல்நலத்தோடு நீண்ட காலம் வாழ்ந்தார்கள்... வாழ்கிறார்கள்... மேலும் வாழ்வார்கள்... இதை உறுதிபட கூற முடியும். இதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள். பண்டைய காலத்தில் நமது முன்னோரின் சராசரி வாழ்நாள் 100 வயதாக இருந்தது. இப்போது 90, 80, 70 என இறப்பின் சராசரி விகிதம் குறைந்து கொண்டே போகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் உழைப்புஅதிகம் இல்லாத சோம்பேறித்தனமான தினசரி வாழ்க்கை முறையே.
அறிவியல் கண்டு பிடிப்புகளை மனிதன் தன் சோம்பல் சுகத்துக்குப் பயன்படுத்தி தன் உடலை கெடுத்துக் கொள்வது... பரம்பரை பரம்பரையாக நல்ல அரிசி, கோதுமை, சிறுதானிய வகைகள், கீரை வகைகள், பல்வேறு பச்சைக் காய்கறிகள், பலவகை அறுசுவை கனிகள் என அனைத்தையும் விட்டு விட்டு, பீட்சா, பர்கர் என திடீர் உணவுகளை உண்ணத் தொடங்கியது... சுவாசிக்க நல்ல காற்று இல்லை... குடிக்க சுத்தமான நீர் கிடைப்பதில்லை... மரங்கள், செடி, கொடிகளின் சலசலப்பும், பறவைகளின் இனிய கானங்கள், கடல் அலைகளின் ஆலாபனை, நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள், மழைச்சாரலின் மங்களகரமான இசை, வண்டுகளின் ரீங்காரம், கன்றுக்குட்டி தன் தாய் பசுவை ‘ம்மா...’ என்றழைக்கும் அந்த பாசக்குரல் என இவையெல்லாம் நம் செவிக்குக் கிடைக்காமலேயே போய்விட்டதை சற்று எண்ணிப் பாருங்கள்.
இப்போது நமது தினசரி வாழ்வில் காதுகளின் உள்ளே உள்ள ஜவ்வுகளை கிழிப்பது போன்ற அசுர சத்தங்களைத்தான் கேட்க வேண்டி உள்ளது. இது போதாது என்று 24 மணி நேரமும் செல்போன்நமது காதுகளில் கர்ணனின் கவச குண்டலங்களைப்போல ஒட்டிக்கொண்டே உள்ளது. நம்மை சோம்பலின் உச்சிக்கே கொண்டு செல்லும் வாகன வசதிகள்... ஒரு சிறிய உதாரணம் - 10 மீட்டர் தொலைவில் உள்ள டீ கடைக்கு கூட மோட்டார் பைக் எடுத்துக்கொண்டு போகும் காலம் இது. வீட்டில் காரில், ஆபீஸில் என அனைத்து இடங்களிலும் ‘ஏ.சி.’ உள்ள காரணத்தால், உடல் கழிவுகளை வெளியேற்றும் முக்கிய பங்காகிய வியர்வை வருவதை முற்றிலுமாக நிறுத்தி விடுகிறான் இக்கால மனிதன்.
இப்படி நம் உடல்நலத்துக்கு, ஆரோக்கியமாக வாழக்கூடிய தினசரி வாழ்க்கைமுறைக்கு எதிரியாக, எமனாக உள்ள இந்த சமுதாய மாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா? நமது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆரோக்கியம் அளித்து, திடமாகவும் உறுதியாகவும் நம்பிக்கையாகவும் நீண்ட காலம் வாழ உடற்பயிற்சி மிகவும் அவசியம்.உடலில் உண்டாகும் கொழுப்புச்சத்தை பெருமளவில் குறைக்க தினசரி உடற்பயிற்சி உதவுகிறது. இதன் காரணமாக, இதய நோய்கள், நீரிழிவு, புற்றுநோய் ஆகியவற்றின் அதிபயங்கர வீரியம் பல மடங்காகக் குறைகிறது என ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளார்கள்.
நன்றாக உடற்பயிற்சி செய்யும் பெண்களுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை அவசியம் இல்லாமல், இயற்கையான சுகப்பிரசவம் வாய்க்கிறது. பம்பரம் போல அன்றாடம் ஓடித் திரியும் பரபரப்பான உலகம் அளிக்கும் மனக்கவலை, மன உளைச்சல், மனத்தளர்வு, நம்பிக்கையின்மை போன்ற பிரச்னைகளைக் குறைக்கவும் முழுவதுமாக களைந்து எறியவும் ஒரே வழி தினசரி உடற்பயிற்சியே!
மனிதர்களாகிய நமக்கு 5 விதமான ஆரோக்கியம் தேவை. அவை...
1. உடல் ஆரோக்கியம்
உடல் உழைப்பு, நடைப்பயிற்சி, உடற்பயிற்சிகள், உற்சாகம் தரும் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுவது என நமது உடல் உறுப்புகளின் அதிகச் செயல்பாடு காரணமாக நமக்கு அதிக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. உடற்பயிற்சி காரணமாக அதிக ஆக்ஸிஜன் கிடைத்து, அது அதிக சக்தியை நமக்கு அளிக்கிறது. இந்த ஆக்ஸிஜன் உடலுக்குள் ஊடுருவி நுரையீரல், இதயம் மற்றும் ரத்த நாளங்களுக்குள் புகுந்து, உற்சாகம் அளித்து, நாள் முழுவதும் சோர்வு இல்லாமல் உழைக்கத் தேவையான சக்தியை அளிக்கிறது.
2. சமுதாய ஆரோக்கியம்
நல்ல உடற்பயிற்சி செய்து, நல் ஆரோக்கியத்தின் காரணமாக சமுதாயத்தில் தன்னம்பிக்கையோடு பேச, பணி புரிய, பலவித சமுதாய சிக்கல்களை எதிர்கொள்ள நல்ல தோழனாக செயல்படுகிறது உடற்பயிற்சி.
3. மன ஆரோக்கியம்
உடற்பயிற்சி அனைத்து உடல் உறுப்புகளையும் சுறுசுறுப்பாக நாள் முழுவதும் வைத்திருப்பதால், மனமும் ஆரோக்கியம் அடைகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் குழந்தைகள், சுறுசுறுப்பாக இயங்கும் மூளையின் காரணமாக, நல்ல நினைவாற்றலுடன் செயல்பட உடற்பயிற்சி உதவுகிறது. தொழிலை / வேலையை திறம்படவும் களைப்பின்றிச் செய்யவும் உடற்பயிற்சி உதவுகிறது.
4. மானசீக ஆரோக்கியம்
உடல், மனம் உறுதிப்பட்டு உள்ளத்தின் ஐயப்பாடுகள் நீங்கி நல்லது எது, கெட்டது எது என அறியவும், எதை அறவே அகற்ற வேண்டும், ‘ஏன் தேவையில்லாமல் கவலைப்பட வேண்டும்? என்ன பிரச்னை வந்தாலும் அதை என்னால் சமாளிக்க முடியும்!’ என சந்தோஷம், துயரம், அதிர்ச்சி, கவலை அனைத்தையும் ஒரே போல எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவத்தையும் தருகிறது உடற்பயிற்சி.
5. தெய்வீக ஆரோக்கியம்
நல்ல உடலில்தான், ஆரோக்கியமான உயிரில்தான் நல்ல மனமுடைய உன்னதமான ஆன்மா வாழும் என்பது நம்பிக்கை. அந்த பரிசுத்தமான ஆன்மா நம்மை என்றும் நல்வழியில் நடத்திச் செல்லும். எப்போதும் அறவழியில் நன்றே செய்து வருவதால் மனத்துணிவும் தன்னம்பிக்கையும் அதிகமாகும். இயற்கையின் மீதும் உலகில் வாழும் அனைத்து உயிரினங்களின் மீதும் ஈர்ப்பும் அன்பும் உண்டாகி, அனைவருக்கும் ஆதரவளிக்க நல்ல உடல் ஆரோக்கியம் உதவி செய்வது 100 சதவிகிதம் உண்மை.
நன்றி : தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|