தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நல்லவனாக இரு; நல்லதை செய்!

View previous topic View next topic Go down

நல்லவனாக இரு; நல்லதை செய்! Empty நல்லவனாக இரு; நல்லதை செய்!

Post by நாஞ்சில் குமார் Mon Jul 14, 2014 10:49 pm

நல்லவனாக இரு; நல்லதை செய்! 121pvnm


ஜூலை 14 - சிவானந்தர் முக்தி தினம்

ஒரு குழந்தை சிறுவயதில் பெற்றோரால் எப்படி வளர்க்கப்படுகிறதோ, அதைப் பொறுத்தே அதன் எதிர்கால வாழ்க்கை அமையும் என்பர். அவ்வாறு சிறுவயதிலேயே பழக்கப்படுத்தப்பட்ட நற்குணங்களால், வளர்ந்து வாலிபனான பின், கருணை உள்ளத்துடன், அன்பு, தொண்டு, தானம் செய்தல் என, தன்னை ஆன்மிக பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டவர், சுவாமி சிவானந்தர்.

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில், செப்., 8, 1887ல், சிவானந்தர் அவதரித்தார். தந்தை வெங்கு ஐயர்; தாய் பார்வதி அம்மையார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் குப்புசுவாமி. எட்டயபுரத்திலுள்ள ராஜா உயர் நிலைப்பள்ளியில் படித்த போது, பாரதியாரும், அவரும் நண்பர்கள் ஆயினர். குப்புசுவாமி சிறுவனாக இருந்த காலத்திலேயே மிகுந்த இரக்க குணத்துடன் விளங்கினார். அதுவே பிற்காலத்தில், அவரை ஜாதி, மத பேதமற்று, அனைத்து உயிர்களையும் நேசிக்கத் தூண்டியது.
குப்புசுவாமிக்கு நீச்சல் என்றால், மிகவும் பிரியம். சிறந்த வீரரும் கூட. அதிலும் கிணற்றுக்கு மேலிருந்து கிணற்றுக்குள் குதித்து, தண்ணீரில் நீண்ட நேரம் மூழ்கி எழுவார். மற்றவர்களை திகைக்க வைக்கும் சாகசங்களைச் செய்வார். ஆன்மிகத்திற்கு அடிப்படை தேவையே இத்தகைய தைரியமும், வைராக்கியமும் கலந்த உணர்வு தான்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் படித்த குப்புசுவாமி, பணிக்காக மலேசியா சென்றார். ஏராளமாக சம்பாதித்தாலும், அவர் மனம், துறவறத்தையே விரும்பியது. அதனால், அவர் இமயமலைக்கு சென்று தவமிருந்தார். அங்கிருந்த சுவாமி விஸ்வானந்தர், குப்புசுவாமி என்ற பெயரை, 'சிவானந்தர்' என்று மாற்றி, தீட்சை அளித்தார்.

'மத அமைப்புகளின் பெயர் தான் மாறுபடுகிறதே தவிர, அவற்றின் நோக்கம் ஒன்றுதான். அது, மனித வாழ்வை தெய்வீக மயமாக்குவது...' என்பார் சிவானந்தர். தன் கொள்கைக்கேற்ப, தன் ஸ்தாபனத்திற்கு, 'தெய்வீக வாழ்க்கை சங்கம்' என்று, பெயரிட்டார்.
'மனிதன் கடவுளிடமிருந்து எல்லாவற்றையும் பெறுகிறான். ஆனால், அவரை மறந்து விடுகிறான். கடவுள் எல்லாவற்றையும் கொடுக்கிறார்; ஆனால், தன்னை மறந்தவர்களையும் மன்னித்து விடுகிறார்...' என்று, கடவுளின் இயல்பைக் கூறும், சிவானந்தர், கட்டுப்பாடுடன், கூடிய மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்.

தியானத்தை கடைபிடிக்கும் போது கூட, உணவில், உப்பு, சர்க்கரை, மிளகாய், புளி போன்றவற்றை கைவிட்டதாக, அவரது டைரி குறிப்பு கூறுகிறது. மேலும், காய்ந்த ரொட்டியை கங்கை நீரில் கரைத்துக் குடித்துள்ளார். பல சமயங்களில் இது மட்டுமே இவரது உணவாக அமைந்துள்ளது.

சிவானந்தர், 300 புத்தகங்கள் எழுதியுள்ளார். இவை எல்லாவற்றிலுமே, நல்லவனாக இரு; நல்லதையே செய்; என்பதே முக்கிய கருத்து. பல்வேறு பணிகளுக்கும் மத்தியில், இவ்வாறு ஏராளமான நூல்களை எழுதியது எப்படி சாத்தியமானது என்று கேட்போருக்கு, 'ஒரு வேலைக்கு ஒரு மணி நேரம் என, ஒதுக்கிக் கொள்ள வேண்டும். இச்சமயத்தில் இன்ன வேலை என்று வகுத்து, அதைச் சரியாகச் செய்து விட்டால் போதும். ஆறே மாதத்தில் உங்கள் வேலைகள் அத்தனையும் எந்தளவு முன்னேறியுள்ளது என்பதை நீங்களே உணர்வீர்கள். முதலில் உங்கள் மனதில் சரியான திட்டமிடல் உருவாக வேண்டும்...' என்பார்.

இவர், 1963, ஜூலை 14ல் முக்தியடைந்தார். சுவாமி சிவானந்தரின் மனஉறுதி, நமக்கும் ஏற்பட அவரது ஆசியை வேண்டுவோம்.

தி.செல்லப்பா

நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நல்லவனாக இரு; நல்லதை செய்! Empty Re: நல்லவனாக இரு; நல்லதை செய்!

Post by முரளிராஜா Sat Sep 13, 2014 10:46 am

நல்லதொரு வழியினை காட்டும் பகிர்வு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நல்லவனாக இரு; நல்லதை செய்! Empty Re: நல்லவனாக இரு; நல்லதை செய்!

Post by செந்தில் Sat Sep 13, 2014 1:34 pm

மகான் சிவானந்தர் அவர்களை பற்றிய தகவல்களை அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நல்லவனாக இரு; நல்லதை செய்! Empty Re: நல்லவனாக இரு; நல்லதை செய்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum