Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பெண் நோயாளிகள் கவனத்துக்கு...
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
பெண் நோயாளிகள் கவனத்துக்கு...
[You must be registered and logged in to see this image.]
சமீபத்தில் சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட பலரும் அதிர்ச்சியடைந்திருப்பார்கள். ‘பரிசோதனைக்காகச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற லேப் டெக்னீஷியன் கைது’ என்ற அந்தச் செய்தி பலருக்கும் பல சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. மருத்துவர்கள் தொடுவதையோ உடலைப் பார்ப்பதையோ தவறாக நினைக்கத் தோன்றாதவர்களுக்குக் கூட இது அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.
பெண் நோயாளிகளைக் கையாள மருத்துவர்களுக்கும், லேப் டெக்னீஷியன்களுக்கும் என்னென்ன விதிமுறைகள் இருக்கின்றன? என்னென்ன வழிகளில் பெண் நோயாளிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? ராயப்பேட்டை அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரியான ஆனந்த் பிரதாப்பிடம் கேட்டோம்.
‘‘பெண் நோயாளிகளை இப்படித்தான் கையாள வேண்டும் என்று விதிமுறைகள் எதுவும் இல்லை. ஆனால், மருத்துவர்களாகவே கடைப்பிடிக்க வேண்டிய பல நெறிமுறைகள் இருக்கின்றன. இதுபோன்ற துரதிர்ஷ்டமான சம்பவங்கள் மருத்துவத் துறையில் நடப்பதில்லை. மருத்துவம் படிக்கும்போதே உடலியல் பற்றிய தெளிவான ஒரு புரிதல் மருத்துவர்களுக்கு ஏற்பட்டுவிடும்.
இதனால், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பார்ப்பதனாலோ, தொடுவதனாலோ எந்த உணர்வும் மருத்துவருக்கு ஏற்பட்டுவிடாது. நோயாளியைக் குணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் இருக்கும். பரிசோதனை செய்கிற ஆய்வாளர்களுக்கும் இது பொருந்தும்.
அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு என்ன பரிசோதனை செய்கிறார்கள் என்பதை வெளியில் இருந்து பார்க்கும் வகையில் கண்ணாடி அறைக்குள்தான் பரிசோதனை நடக்கும். நோயாளியுடன் வந்திருப்பவர்களும் மருத்துவரும் கண்காணிக்கும் வகையிலேயே இந்த அறை அமைந்திருக்கும்.
தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் பெண் நோயாளிகள், இந்த விதிமுறைகள் அங்கு பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கவனிக்க வேண்டும். பரிசோதனைக்காகச் செல்லும்போது, தங்களுடன் ஒருவரை நிச்சயம் அழைத்துச் செல்ல வேண்டும். அவர் பெண்ணாகவோ, கணவராகவோ இருப்பது நல்லது. பரிசோதனை செய்யும் இடத்தில் பெண் நர்ஸ், பெண் லேப் டெக்னீஷியன் இருக்கிறார்களா என்பதையும், பரிசோதனைக்காக மருத்துவமனையில் அதற்கென பிரத்யேகமான உடை (கவுன்) கொடுக்கிறார்களா என்பதையும் பார்க்க வேண்டும்.
பரிசோதனைக்கு வருபவர்கள் நகைகள், ஆபரணங்கள் அணியாமல் வர வேண்டும். நகை,சங்கிலி போன்ற ஆபரணங்களை பரிசோதனைக்கு முன்பு உடன் அழைத்து வந்தவரிடம் மட்டுமே கொடுக்க வேண்டும். மருத்துவமனை ஊழியர்களிடமோ, மற்றவர்களிடமோ கொடுக்கக் கூடாது’’ என்று எச்சரிக்கிறார்.
பரிசோதனை எப்படி செய்யப் படுகிறது என்று ரேடியாலஜிஸ்ட் விமல்ராஜிடம் கேட்டோம். ‘‘பரிசோதனைக்கு முன்பு அதற்கென இருக்கும் பிரத்யேக உடைக்கு மாற வேண்டும். உடை மாற்றிய பிறகு, பரிசோதனை அறைக்கு அழைத்துச் செல்வார்கள். நோயாளியை ஸ்கேனரில் சரியான முறையில் லேப் டெக்னீஷியன், நர்ஸ் ஆகியோர் படுக்க வைப்பார்கள். இந்த நேரத் தில், நோயாளியுடன் வருபவர் இருக்கலாம். சரியான முறையில் அமர்த்திய பிறகு, லேப் டெக்னீஷியன், நர்ஸ், உடன் வந்தவர் என எல்லோரும் அறையை விட்டு வெளியே வந்துவிடுவார்கள்.
வெளியிலிருந்து கணிப்பொறியின் உதவி மூலம் பரிசோதனை நடக்கும். பரிசோதனைக்கு வந்தவர் எப்படி இருக்கிறார் என்பதை அறிய ஸ்கேனருக்குள் ஒரு கேமரா இருக்கும். நோயாளி எதுவும் சொல்ல விரும்பினால் அந்த கேமரா மூலம் தகவல் சொல்ல லாம். உள்ளுக்குள் ஏதேனும் அசவுகரியம் என்றால், உடனடியாக சோதனை செய்பவர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்கான வசதி இது. இதைத் தவிர வேறு ஏதேனும் சந்தேகப்படும் வகையில் இருந்தால், உடனே நீங்கள் சுதாரித்துக் கொள்ளலாம்.
தனியார் மையங்களில் பரிசோதனைக்குச் சென்றிருந்தால் உடை மாற்றும் அறையில் கேமரா இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக, நாமே ஒரு மையத்தைத் தேடிச் சென்று பரிசோதனை செய்துகொள்வதை விட மருத்துவர் பரிந்துரைக்கும் மையத் தில் பரிசோதனை செய்து கொள்வது இன்னும் பாதுகாப்பானது. போலி மருத்துவர்கள் கைது என்று அவ்வப்போது கேள்விப்படுகிறோம்.
அதுபோல், தவறான ஆட்கள் இந்தத் துறையில் இருந்தால், இதுபோன்ற சூழ்நிலைகளைத் தங்கள் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உண்டு. அதனால், சரியான மருத்துவரைத் தேர்ந்தெடுத்துத்தான் சிகிச்சைக்கு செல்ல வேண்டும். பரிசோதனைக்கு என்று மட்டும் இல்லாமல் ஆலோசனைக்குச் செல்லும்போது கூட துணைக்கு யாரையாவது அழைத்துச் செல்வது நல்லது’’ என்கிறார். தொழில்நுட்பங்களும் தவறுகளும் மலிந்துவிட்ட காலத்தில் எச்சரிக்கையாக இருப்பது ஒன்றே நம்மைக் காப்பாற்றும் என்பதால் நம்முடைய பாதுகாப்பு நம் கையில்தான்! பரிசோதனைக்கு வருபவர்கள் நகைகள், ஆபரணங்கள் அணியாமல் வரவேண்டும்.
நன்றி: தினகரன்
சமீபத்தில் சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட பலரும் அதிர்ச்சியடைந்திருப்பார்கள். ‘பரிசோதனைக்காகச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற லேப் டெக்னீஷியன் கைது’ என்ற அந்தச் செய்தி பலருக்கும் பல சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. மருத்துவர்கள் தொடுவதையோ உடலைப் பார்ப்பதையோ தவறாக நினைக்கத் தோன்றாதவர்களுக்குக் கூட இது அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.
பெண் நோயாளிகளைக் கையாள மருத்துவர்களுக்கும், லேப் டெக்னீஷியன்களுக்கும் என்னென்ன விதிமுறைகள் இருக்கின்றன? என்னென்ன வழிகளில் பெண் நோயாளிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? ராயப்பேட்டை அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரியான ஆனந்த் பிரதாப்பிடம் கேட்டோம்.
‘‘பெண் நோயாளிகளை இப்படித்தான் கையாள வேண்டும் என்று விதிமுறைகள் எதுவும் இல்லை. ஆனால், மருத்துவர்களாகவே கடைப்பிடிக்க வேண்டிய பல நெறிமுறைகள் இருக்கின்றன. இதுபோன்ற துரதிர்ஷ்டமான சம்பவங்கள் மருத்துவத் துறையில் நடப்பதில்லை. மருத்துவம் படிக்கும்போதே உடலியல் பற்றிய தெளிவான ஒரு புரிதல் மருத்துவர்களுக்கு ஏற்பட்டுவிடும்.
இதனால், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பார்ப்பதனாலோ, தொடுவதனாலோ எந்த உணர்வும் மருத்துவருக்கு ஏற்பட்டுவிடாது. நோயாளியைக் குணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் இருக்கும். பரிசோதனை செய்கிற ஆய்வாளர்களுக்கும் இது பொருந்தும்.
அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு என்ன பரிசோதனை செய்கிறார்கள் என்பதை வெளியில் இருந்து பார்க்கும் வகையில் கண்ணாடி அறைக்குள்தான் பரிசோதனை நடக்கும். நோயாளியுடன் வந்திருப்பவர்களும் மருத்துவரும் கண்காணிக்கும் வகையிலேயே இந்த அறை அமைந்திருக்கும்.
தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் பெண் நோயாளிகள், இந்த விதிமுறைகள் அங்கு பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கவனிக்க வேண்டும். பரிசோதனைக்காகச் செல்லும்போது, தங்களுடன் ஒருவரை நிச்சயம் அழைத்துச் செல்ல வேண்டும். அவர் பெண்ணாகவோ, கணவராகவோ இருப்பது நல்லது. பரிசோதனை செய்யும் இடத்தில் பெண் நர்ஸ், பெண் லேப் டெக்னீஷியன் இருக்கிறார்களா என்பதையும், பரிசோதனைக்காக மருத்துவமனையில் அதற்கென பிரத்யேகமான உடை (கவுன்) கொடுக்கிறார்களா என்பதையும் பார்க்க வேண்டும்.
பரிசோதனைக்கு வருபவர்கள் நகைகள், ஆபரணங்கள் அணியாமல் வர வேண்டும். நகை,சங்கிலி போன்ற ஆபரணங்களை பரிசோதனைக்கு முன்பு உடன் அழைத்து வந்தவரிடம் மட்டுமே கொடுக்க வேண்டும். மருத்துவமனை ஊழியர்களிடமோ, மற்றவர்களிடமோ கொடுக்கக் கூடாது’’ என்று எச்சரிக்கிறார்.
பரிசோதனை எப்படி செய்யப் படுகிறது என்று ரேடியாலஜிஸ்ட் விமல்ராஜிடம் கேட்டோம். ‘‘பரிசோதனைக்கு முன்பு அதற்கென இருக்கும் பிரத்யேக உடைக்கு மாற வேண்டும். உடை மாற்றிய பிறகு, பரிசோதனை அறைக்கு அழைத்துச் செல்வார்கள். நோயாளியை ஸ்கேனரில் சரியான முறையில் லேப் டெக்னீஷியன், நர்ஸ் ஆகியோர் படுக்க வைப்பார்கள். இந்த நேரத் தில், நோயாளியுடன் வருபவர் இருக்கலாம். சரியான முறையில் அமர்த்திய பிறகு, லேப் டெக்னீஷியன், நர்ஸ், உடன் வந்தவர் என எல்லோரும் அறையை விட்டு வெளியே வந்துவிடுவார்கள்.
வெளியிலிருந்து கணிப்பொறியின் உதவி மூலம் பரிசோதனை நடக்கும். பரிசோதனைக்கு வந்தவர் எப்படி இருக்கிறார் என்பதை அறிய ஸ்கேனருக்குள் ஒரு கேமரா இருக்கும். நோயாளி எதுவும் சொல்ல விரும்பினால் அந்த கேமரா மூலம் தகவல் சொல்ல லாம். உள்ளுக்குள் ஏதேனும் அசவுகரியம் என்றால், உடனடியாக சோதனை செய்பவர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்கான வசதி இது. இதைத் தவிர வேறு ஏதேனும் சந்தேகப்படும் வகையில் இருந்தால், உடனே நீங்கள் சுதாரித்துக் கொள்ளலாம்.
தனியார் மையங்களில் பரிசோதனைக்குச் சென்றிருந்தால் உடை மாற்றும் அறையில் கேமரா இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக, நாமே ஒரு மையத்தைத் தேடிச் சென்று பரிசோதனை செய்துகொள்வதை விட மருத்துவர் பரிந்துரைக்கும் மையத் தில் பரிசோதனை செய்து கொள்வது இன்னும் பாதுகாப்பானது. போலி மருத்துவர்கள் கைது என்று அவ்வப்போது கேள்விப்படுகிறோம்.
அதுபோல், தவறான ஆட்கள் இந்தத் துறையில் இருந்தால், இதுபோன்ற சூழ்நிலைகளைத் தங்கள் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உண்டு. அதனால், சரியான மருத்துவரைத் தேர்ந்தெடுத்துத்தான் சிகிச்சைக்கு செல்ல வேண்டும். பரிசோதனைக்கு என்று மட்டும் இல்லாமல் ஆலோசனைக்குச் செல்லும்போது கூட துணைக்கு யாரையாவது அழைத்துச் செல்வது நல்லது’’ என்கிறார். தொழில்நுட்பங்களும் தவறுகளும் மலிந்துவிட்ட காலத்தில் எச்சரிக்கையாக இருப்பது ஒன்றே நம்மைக் காப்பாற்றும் என்பதால் நம்முடைய பாதுகாப்பு நம் கையில்தான்! பரிசோதனைக்கு வருபவர்கள் நகைகள், ஆபரணங்கள் அணியாமல் வரவேண்டும்.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» எக்ஸ்-ரே அறைகளில் கேள்விக்குறியாகும் பெண் நோயாளிகள் பாதுகாப்பு
» ஓய்வூதியதாரர் கவனத்துக்கு
» டி.வி. பிரியர்கள் கவனத்துக்கு...
» ஆண்கள் கவனத்துக்கு
» கர்ப்பிணிகளின் கவனத்துக்கு...
» ஓய்வூதியதாரர் கவனத்துக்கு
» டி.வி. பிரியர்கள் கவனத்துக்கு...
» ஆண்கள் கவனத்துக்கு
» கர்ப்பிணிகளின் கவனத்துக்கு...
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|