Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வேகமாகப் பர்வும் மர்மக் காய்ச்சல் - மக்கள் அச்சம்
Page 1 of 1 • Share
வேகமாகப் பர்வும் மர்மக் காய்ச்சல் - மக்கள் அச்சம்
'டெங்கு' காய்ச்சலையும் மிஞ்சும் வகையில், இனம்புரியாத மர்மக் காய்ச்சல், தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருவதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். புதிய அறிகுறிகளும் தென்படுவதால், எளிதில் குணப் படுத்த முடியாமல் டாக்டர்கள் திணறுகின்றனர்.
தமிழகத்தில், ஜூனில் இருந்தே, ஆங்காங்கே, 'டெங்கு' காய்ச்சல் பாதிப்பு தொடங்கி விட்டது. பகலில் கடிக்கும், 'ஏடிஸ்' வகை கொசுக்கள் தான் இதற்கு காரணம். அவற்றைக் கட்டுப்படுத்த, அரசு சிறப்பு கவனம் செலுத்தாவிட்டால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்பது குறித்து, சமூக ஆர்வலர்களும் எச்சரித்து வருகின்றனர்.ஆனால், அரசு பெரிதாக கண்டு கொள்ளாததால், 'டெங்கு' பாதிப்பு தற்போது அதிகரித்து உள்ளது. எல்லா மாவட்டங்களிலும், காய்ச்சல் பாதிப்பால், மக்கள், அரசு, தனியார் மருத்துவமனைக்கு அலைந்து திரிகின்றனர்.
மூன்று பேர் பலி:
*விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி பகுதியில், இம்மாத தொடக்கத்தில், 'டெங்கு' பாதிப்பால் குணசுந்தரி, 50, என்பவர் இறந்தார்.
*ஒரு வாரத்திற்கு முன், சென்னை, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, ஸ்ரீவத்சன், 11, என்ற 6ம் வகுப்பு மாணவன் இறந்தான்.
*இரண்டு நாட்களுக்கு முன், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள, அல்லிகுளம்
பகுதியில், 10ம் வகுப்பு படித்த மாணவி பாண்டீஸ்வரி, 15, இறந்தார்.
கிராமப் புறங்களில், 'டெங்கு' என, தெரியாமல் இறந்தது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.'இரண்டு ஆண்டுகளாக டெங்கு இறப்பே இல்லை' என, தமிழக அரசு கூறி வந்த நிலையில், தற்போது உயிரிழப்புக்கள் தொடங்கியுள்ளதும், இனம்புரியாத புதுப்புது அறிகுறிகளுடன் காய்ச்சல் பரவி வருவதும், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, டாக்டர்கள் கூறுகையில், 'டெங்கு என்றால், காய்ச்சல் இருக்கும்; தலைவலி வரும்; ரத்த தட்டணுக்கள் படிப்படியாக குறையும். ஆனால், தற்போது, காய்ச்சலால் அனுமதிக்கப்படுவோருக்கு, திடீரென வாந்தி, பேதி வருகிறது. ரத்த தட்டணுக்கள் எதிர்பார்க்காதஅளவில் குறைகிறது. இதனால், எல்லாவற்றுக்கும் சிகிச்சை அளித்து, குணப்படுத்த திணற வேண்டி உள்ளது'என்றனர்.
இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:ஓரிரு இடங்களில் இறப்புகளுக்கு, 'டெங்கு' காய்ச்சலே காரணம். காய்ச்சல் வரும்போது,அவர்கள் உட்கொள்ளும் ஒவ்வாத உணவு காரணமாக வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்படுவதுண்டு.தட்டணுக்கள் வேகமாக குறைவதற்கு, ரத்த இழப்பு தான்காரணம். இனம்புரியாத காய்ச்சல் ஏதும் இல்லை. 'டெங்கு' பாதிப்புள்ள பகுதிகளில், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் அச்சப்பட தேவையில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினார்.
66 பேர் இறந்தனர்:கடந்த, 2012ல், இதே காலத்தில் தான் (ஆகஸ்ட் - அக்டோபர்), தமிழகம் முழுவதும், 'டெங்கு' காய்ச்சல் அதிகமாகி, 66 பேர் இறந்தனர். திணறிய தமிழக அரசு, நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு கொடுத்து, நிலைமையை சமாளித்தது. தற்போது, உயிரிழப்புகள் தொடங்கிவிட்ட நிலையில், போர்க்கால தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட வேண்டும் என்பதே, மக்களின் எதிர்பார்ப்பு.
பகல் நேரத்தில் கவனமாஇருங்க!
*'ஏடிஸ்' எனும், பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் டெங்கு பாதிப்பு வருவதால், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
*மனிதனின் உடலில் சுரக்கும் வியர்வை வாடை, கொசுக்களை ஈர்க்கும் என்பதால், தினமும், இரண்டு முறை குளித்தல், வாசனை திரவியங்கள் தடவிக் கொள்வது நல்லது.
*வீட்டின் உள்ளேயும், சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தொட்டிகள், பாத்திரங்களை வாரம் ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.
*வீட்டைச் சுற்றி தேவையின்றி கிடக்கும் பிளாஸ்டிக் கப், டயர், தேங்காய் மட்டைகளை அகற்ற வேண்டும்.
*காய்ச்சல் வந்தால், ஆரம்ப நிலையிலேயே மருத்துவமனைக்குச் செல்வது நல்லது. டாக்டர் ஆலோசனையின்படி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு கஷாயம் பருகலாம்.
நன்றி: தினமலர்
தமிழகத்தில், ஜூனில் இருந்தே, ஆங்காங்கே, 'டெங்கு' காய்ச்சல் பாதிப்பு தொடங்கி விட்டது. பகலில் கடிக்கும், 'ஏடிஸ்' வகை கொசுக்கள் தான் இதற்கு காரணம். அவற்றைக் கட்டுப்படுத்த, அரசு சிறப்பு கவனம் செலுத்தாவிட்டால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்பது குறித்து, சமூக ஆர்வலர்களும் எச்சரித்து வருகின்றனர்.ஆனால், அரசு பெரிதாக கண்டு கொள்ளாததால், 'டெங்கு' பாதிப்பு தற்போது அதிகரித்து உள்ளது. எல்லா மாவட்டங்களிலும், காய்ச்சல் பாதிப்பால், மக்கள், அரசு, தனியார் மருத்துவமனைக்கு அலைந்து திரிகின்றனர்.
மூன்று பேர் பலி:
*விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி பகுதியில், இம்மாத தொடக்கத்தில், 'டெங்கு' பாதிப்பால் குணசுந்தரி, 50, என்பவர் இறந்தார்.
*ஒரு வாரத்திற்கு முன், சென்னை, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, ஸ்ரீவத்சன், 11, என்ற 6ம் வகுப்பு மாணவன் இறந்தான்.
*இரண்டு நாட்களுக்கு முன், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள, அல்லிகுளம்
பகுதியில், 10ம் வகுப்பு படித்த மாணவி பாண்டீஸ்வரி, 15, இறந்தார்.
கிராமப் புறங்களில், 'டெங்கு' என, தெரியாமல் இறந்தது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.'இரண்டு ஆண்டுகளாக டெங்கு இறப்பே இல்லை' என, தமிழக அரசு கூறி வந்த நிலையில், தற்போது உயிரிழப்புக்கள் தொடங்கியுள்ளதும், இனம்புரியாத புதுப்புது அறிகுறிகளுடன் காய்ச்சல் பரவி வருவதும், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, டாக்டர்கள் கூறுகையில், 'டெங்கு என்றால், காய்ச்சல் இருக்கும்; தலைவலி வரும்; ரத்த தட்டணுக்கள் படிப்படியாக குறையும். ஆனால், தற்போது, காய்ச்சலால் அனுமதிக்கப்படுவோருக்கு, திடீரென வாந்தி, பேதி வருகிறது. ரத்த தட்டணுக்கள் எதிர்பார்க்காதஅளவில் குறைகிறது. இதனால், எல்லாவற்றுக்கும் சிகிச்சை அளித்து, குணப்படுத்த திணற வேண்டி உள்ளது'என்றனர்.
இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:ஓரிரு இடங்களில் இறப்புகளுக்கு, 'டெங்கு' காய்ச்சலே காரணம். காய்ச்சல் வரும்போது,அவர்கள் உட்கொள்ளும் ஒவ்வாத உணவு காரணமாக வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்படுவதுண்டு.தட்டணுக்கள் வேகமாக குறைவதற்கு, ரத்த இழப்பு தான்காரணம். இனம்புரியாத காய்ச்சல் ஏதும் இல்லை. 'டெங்கு' பாதிப்புள்ள பகுதிகளில், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் அச்சப்பட தேவையில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினார்.
66 பேர் இறந்தனர்:கடந்த, 2012ல், இதே காலத்தில் தான் (ஆகஸ்ட் - அக்டோபர்), தமிழகம் முழுவதும், 'டெங்கு' காய்ச்சல் அதிகமாகி, 66 பேர் இறந்தனர். திணறிய தமிழக அரசு, நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு கொடுத்து, நிலைமையை சமாளித்தது. தற்போது, உயிரிழப்புகள் தொடங்கிவிட்ட நிலையில், போர்க்கால தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட வேண்டும் என்பதே, மக்களின் எதிர்பார்ப்பு.
பகல் நேரத்தில் கவனமாஇருங்க!
*'ஏடிஸ்' எனும், பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் டெங்கு பாதிப்பு வருவதால், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
*மனிதனின் உடலில் சுரக்கும் வியர்வை வாடை, கொசுக்களை ஈர்க்கும் என்பதால், தினமும், இரண்டு முறை குளித்தல், வாசனை திரவியங்கள் தடவிக் கொள்வது நல்லது.
*வீட்டின் உள்ளேயும், சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தொட்டிகள், பாத்திரங்களை வாரம் ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.
*வீட்டைச் சுற்றி தேவையின்றி கிடக்கும் பிளாஸ்டிக் கப், டயர், தேங்காய் மட்டைகளை அகற்ற வேண்டும்.
*காய்ச்சல் வந்தால், ஆரம்ப நிலையிலேயே மருத்துவமனைக்குச் செல்வது நல்லது. டாக்டர் ஆலோசனையின்படி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு கஷாயம் பருகலாம்.
நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: வேகமாகப் பர்வும் மர்மக் காய்ச்சல் - மக்கள் அச்சம்
விழிப்புணர்வு தகவலுக்கு நன்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: வேகமாகப் பர்வும் மர்மக் காய்ச்சல் - மக்கள் அச்சம்
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» அதென்ன மர்மக் காய்ச்சல்
» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
» குதிகால் வாதம் தீர, கட்டிகள் உடைய,இருமல் குணமாக,மார்புக்கோழை தீர,காய்ச்சல் குணமாக,காய்ச்சல் குணமாக
» "அச்சம்"
» டைபாய்டு காய்ச்சல்..
» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
» குதிகால் வாதம் தீர, கட்டிகள் உடைய,இருமல் குணமாக,மார்புக்கோழை தீர,காய்ச்சல் குணமாக,காய்ச்சல் குணமாக
» "அச்சம்"
» டைபாய்டு காய்ச்சல்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|