தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விலங்கு காட்சிசாலைக்கு போகும்போது...யார் குற்றவாளி

View previous topic View next topic Go down

விலங்கு காட்சிசாலைக்கு போகும்போது...யார் குற்றவாளி  Empty விலங்கு காட்சிசாலைக்கு போகும்போது...யார் குற்றவாளி

Post by நாஞ்சில் குமார் Wed Oct 01, 2014 1:59 pm





புரிந்துகொள்ள வேண்டியவை

# விலங்கு காட்சிசாலையில் உள்ள பல விலங்குகள் அபூர்வமானவை. காடுகளில் அழிந்துகொண்டிருக்கும் உயிரினங்களும், இந்தியாவில் இயற்கையாக வாழாத வெளிநாட்டு விலங்குகளும் அங்கே இருக்கும். இதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

# விலங்கு காட்சி சாலைகளில் உள்ள உயிரினங்களின் அடைப்பிடங்கள் வெறுமனே கூண்டுகளாக அல்லாமல், தாவரங்கள், பாறைகள் சேர்க்கப்பட்டு இயற்கையாக இருப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ளன.

# எல்லா விலங்குகளுமே பெரிதாக இருக்காது. சிறிய உயிரினங்களும்கூடச் சுவாரசியமானவைதான். உயிரினங்களைப் பார்ப்பது மட்டுமல்லாமல் கருத்துக் கூடத்தில் காட்டப்படும் விளக்க நிகழ்ச்சிகள், ஆவணப் படங்கள், செய்முறை விளக்கங்களையும் பார்க்க முயற்சிக்கலாம். பராமரிப்பாளர்களுடன் பேசினால் நிறைய தெரிந்துகொள்ளலாம்.

செய்யக் கூடாதவை

# விலங்கு காட்சிசாலைகளில் உள்ள வழிகாட்டிப் பலகைகளில் உள்ள வழிகாட்டுதல்களின்படி நடந்துகொள்வோம்.

# எந்த உணவுப் பொருட்களையும் கொடுக்காமல் இருப்போம். ஒவ்வொரு உயிரினத்துக்கும் வித்தியாசமான உணவு தேவை. அது காட்டில் கிடைப்பது போலவே தரப்படும். அதற்குப் பதிலாக நாம் சாப்பிடும் உணவையோ-இலைகளையோ தருவதால் உடல்கோளாறு, நோய்த்தொற்று ஏற்பட்டு இறக்கவும் நேரிடலாம். அதற்குப் பதிலாகப் பராமரிப்பாளர் உணவு கொடுக்கும்போது நடக்கும் சுவாரசியமான விஷயங்களைக் கவனிக்கலாம்.

# எக்காரணம் கொண்டும் உயிரினங்களுக்குத் தொல்லை தராமல் இருப்போம். கத்துவது, இரைச்சல் இடுவது, கைதட்டி - சொடக்கு போட்டுக் கூப்பிடுவது, பழிப்பு காட்டுவது, கல்-பொருட்களை தூக்கி எறிவது, குச்சிகளை வைத்துக் குத்துவது போன்ற நடவடிக்கைகள் உயிரினங்களைத் தொந்தரவு செய்து, எரிச்சல்படுத்தும். அமைதியான சுற்றுச்சூழலையே உயிரினங்கள் விரும்பும். காடுகள் அமைதியாகவே இருக்கும் என்பதை கவனிக்க வேண்டும்.

# உயிரினங்கள் கூச்சச் சுபாவம் கொண்டவை, உணர்ச்சிகரமானவை. ஒவ்வொன்றின் வாழ்க்கை நடைமுறையும் வித்தியாசமானது. ஓர் உயிரினம் பகலில் தூங்கி, இரவில் நடமாடுவதாக இருக்கலாம். சில அடைப்பிடத்துக்குள் அடைந்துகொண்டும் இருக்கலாம். அவற்றைத் தொந்தரவு செய்ய வேண்டாம்.

# பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தாமல் இருப்போம். பிளாஸ்டிக் பைகளை விழுங்கும் உயிரினம் இறக்கக்கூடும். அதேபோலப் புகைபிடிப்பதும், எச்சில் துப்புவதும்கூடத் தடை செய்யப்பட்டுள்ளன.

# மேலே குறிப்பிட்ட செயல்கள் அனைத்தும் விலங்கு காட்சிசாலை உயிரினங்களைப் பாதிக்கக்கூடும். அவற்றைச் செய்யாமல் இருப்பதுதானே நமக்கு அழகு!

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

விலங்கு காட்சிசாலைக்கு போகும்போது...யார் குற்றவாளி  Empty Re: விலங்கு காட்சிசாலைக்கு போகும்போது...யார் குற்றவாளி

Post by நாஞ்சில் குமார் Wed Oct 01, 2014 2:07 pm

டெல்லி விலங்கு காட்சிசாலையில் வெள்ளைப் புலி இருந்த பகுதிக்குள் விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும், அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த இளைஞரின் பரிதாப மரணத்துக்கு அவரது அலட்சிய மனப்போக்கே காரணம் என்று ஒரு தரப்பினரும்; விலங்கு காட்சிசாலை நிர்வாகமே காரணம் என மற்றொரு தரப்பினரும் மாறிமாறி பழிசுமத்திக் கொண்டிருக்கிறார்கள். இளைஞரைக் கடித்த புலியைக் கொல்ல வேண்டும் என்று வேறு சிலர் குரல் கொடுக்கிறார்கள். இந்த விவகாரத்தில் தவறு செய்தது யார்?

இந்த விவகாரத்தில் விலங்கு காட்சிசாலையில் உள்ள தடுப்பின் உயரம் மிகக் குறைவாக இருக்கிறது, புலி இருந்த தடுப்பு மீது அந்த இளைஞர் ஏறியபோது அங்கிருந்த ஊழியர்கள் ஏன் தடுக்கவில்லை, புலியிடம் சிக்கிய அந்த இளைஞர் உயிருக்காக அதனிடம்

கெஞ்சிக் கொண்டிருந்த போது அங்கிருந்த ஊழியர்கள் என்ன செய்தார்கள், அவரை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுக்கிறார்கள்.

கொஞ்சம் யோசிப்போம்

இவை எல்லாமே உணர்ச்சிவசப்பட்டு வெளிவரும் வார்த்தைகள்தான். இந்த இடத்தில் ஒன்றை வசதியாக மறந்துவிடுகிறோம். முதலில், எதற்காக விலங்கு காட்சிசாலைக்குச் செல்கிறோம்?

எல்லோராலும் காடுகளுக்குச் செல்ல முடியாது. அப்படியே காட்டுக்குப் போனாலும், அங்கே எவ்வளவு சுற்றி அலைந்தாலும் கண்களுக்கு அகப்படாத விலங்குகளை எளிதாகப் பார்த்து மகிழ்வதற்காகத்தானே போகிறோம். ஏற்கெனவே, சுதந்திரமான இயல்பு வாழ்க்கை தடுக்கப்பட்டுதான், அவை கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றன.

என்ன செய்கிறோம்?

அந்த விலங்குகளைத் தள்ளி நின்று பார்த்து ரசித்துவிட்டுச் செல்வதுதானே முறை. குழந்தைகள் மட்டும்தான் விலங்குகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டு ரசிக்கிறார்கள். ஆனால், வளர்ந்தவர்கள், குறிப்பாக இளவட்டங்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? இந்த வயதினருக்கு எந்த இடமானாலும் பிக்னிக் ஸ்பாட்தான். அதனால், அரிய விலங்குகளைப் பார்த்து ரசிப்பதை விட்டுவிட்டு, இருக்கும் இடத்தை மறந்து ஆறாவது அறிவை அடகு வைக்கும் நிலைக்குச் சென்றுவிடுகிறோம், இல்லையா?

விலங்கு காட்சி சாலைகள் சில விதிமுறைகளின்படியே அமைக்கப்படுகின்றன. அதைக் கடைப்பிடிக்க வசதியாக, பார்வையாளர்களுக்குப் பல்வேறு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருக்கும்.

விதிமுறைகள்

எடுத்துக்காட்டாக, விலங்குகளுக்கு உணவு வகைகளைத் தராதீர்கள் என்றிருக்கும். ஆனால், உணவை மட்டுமல்ல, கையில் என்ன வைத்திருக்கிறோமே, எல்லாவற்றையும் வீசுகிறோம். காட்சிப் பொருளாகக் கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் விலங்குகளைப் பார்த்துக் கர்ணக் கொடூரக் குரலில் ஓலமிட்டுப் பயமுறுத்துகிறோம்.

அவற்றின் உணவுப் பாதை-சுவாசப் பாதையைப் பாதிக்கக்கூடிய, பிளாஸ்டிக் பாட்டில்களைக் கூண்டுக்குள் வீசுகிறோம். குரங்குகள் உள்ளிட்ட சில விலங்குகளின் மீது கல்லெறிந்து உசுப்பி விடுகிறோம்.

ஏற்கெனவே இயல்பான வாழ்க்கை குலைந்துபோயுள்ள உயிரினத்தை, எரிச்சல் படுத்தும் வகையில் பல்வேறு செயல்பாடுகளைச் செய்கிறோம். எல்லாமே, அவை நம்மை நோக்கிப் பார்க்க வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்துக்காக.

நடப்பது என்ன?

இங்குள்ள சில ஒளிப்படங்களைப் பாருங்கள். டெல்லியில் இளைஞர் புலியிடம் பலியான ஆபத்தான இடத்தில் சிறிய தடுப்பின் மீது தன் மகனை நிற்க வைத்து, ஃபோட்டோவுக்கு ஃபிரேம் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஓர் அப்பா. இதில் யார் மீது தவறு இருக்கிறது? புலி மீதா, விலங்கு காட்சிசாலை நிர்வாகம் மீதா? இல்லை சுற்றிப் பார்க்கச் செல்லும் மனிதர்களான நம் மீதா?

நாட்டின் பல்வேறு விலங்கு காட்சிசாலைகளில் எடுக்கப்பட்ட வேறு சில படங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன. மைசூர் விலங்கு காட்சிசாலையில், சிங்கத்தை நல்ல போஸில் படம் எடுப்பதற்காக ஒரு இளைஞர் எவ்வளவு பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிறார், பாருங்கள். அடுத்த படத்தில் கூண்டுக்குள் உள்ள சிறுத்தையைச் சீண்டுகிறார் மற்றொரு இளைஞர். ஏன் இத்தனை ஆர்வக் கோளாறு அல்லது அலட்சியம்?

ஏன் இப்படி?

இந்த நிலையில் நம்முடைய பாதுகாப்பை, மற்றொருவர் எப்படி உறுதி செய்ய முடியும்? நாம் அத்துமீறிச் செய்யும் சேட்டைகளை அரசோ அல்லது சம்பந்தப்பட்ட நிர்வாகமோ தனி ஊழியரை நியமித்துத் தடுத்துக் கொண்டிருக்க முடியுமா?

விலங்கு காட்சிசாலை போன்ற இடங்களில் பின்பற்ற வேண்டிய அடிப்படை விதிமுறைகளைக்கூட கடைப்பிடிக்க மறுக்கிறோம். இப்படி ஆறாவது அறிவு செயல்பட மறுத்து நின்றுவிடும்போது, ஐந்தறிவு கொண்ட உயிரினம் என்ன செய்யும் என்பதைத்தான் டெல்லி சம்பவம் உணர்த்துகிறது. விலங்கு காட்சிசாலைக்குச் செல்வோர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்குப் பாடம் கற்றுத் தந்திருக்கிறது டெல்லி வெள்ளைப் புலி. கற்றுக்கொள்ள வேண்டியது நாம்தான்.

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum