Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உலகின் முதல் முழுமையான உடல் உறுப்பு வளர்த்து சாதனை
Page 1 of 1 • Share
உலகின் முதல் முழுமையான உடல் உறுப்பு வளர்த்து சாதனை
முழுமையான, செயற்படக்கூடியதொரு உடல் உறுப்பை ஒரு விலங்கின் உடலுக்குள்ளேயே வளர்த்து செயற்பட வைப்பதில் ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இத்தகைய முயற்சி வெற்றி பெறுவது உலக அளவில் இதுவே முதல்முறையாக கருதப்படுகிறது.
[You must be registered and logged in to see this image.]
மருத்துவர்கள் உருவாக்கிய கழுத்துக்கணையம்
ஆங்கிலத்தில் தைமஸ் என்று அழைக்கப்படும் கழுத்துக்கணையம் என்பது உடலின் முக்கிய உறுப்பு. மனிதர்களுக்கு இது இதயத்துக்கு மேலே கழுத்துப்பகுதிக்கு கீழே அமைந்திருக்கும். இரண்டு பிரிவாக இருக்கும் இந்த கழுத்துக்கணையம் மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமானது. காரணம் இந்த கழுத்துக்கணையத்தில் தான் மனிதர்களின் நோய் எதிர்ப்புத்தன்மைக்கு மிக மிக அவசியமான டி செல்கள் முதிர்ச்சியடைந்து ஒட்டுமொத்த உடலுக்கும் பரவுகின்றன. இந்த டி செல்கள் தான் மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கான அடிப்படை கவசமாக செயற்பட்டு, மனித உடலுக்குள் புகமுயலும் எல்லாவிதமான நோய்க்கிருமிகளையும் தடுத்து தாக்கி அழிக்கின்றன.
இப்படிப்பட்ட கழுத்துக்கணையத்தைத்தான் தற்போது ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு விலங்கின் உடலுக்குள் செயற்கையாக உருவாக்கியிருக்கிறார்கள். முதல்கட்டமாக எலியின் கருப்பையில் இருக்கும் சிசுவின் உயிர்க்கலன்களை பிரித்தெடுத்த விஞ்ஞானிகள், அவற்றை தைமஸ் எனப்படும் கழுத்துக்கணையத்தில் இருக்கும் உயிர்க்கலன்களைப்போல மாற்றி அமைத்தார்கள். இந்த உயிர்க்கலன்களுடன் கழுத்துக்கணையத்தில் இருக்கும் மற்ற துணை உயிர்க்கலன்களுடன் இணைத்து, இந்த எல்லா உயிர்க்கலன்களையும் மீண்டும் எலியின் உள்ளே கொண்டுபோய் பதிய வைத்தனர்.
இப்படி பதியப்பட்ட தனித்தனி செல்கள் ஒன்றாக சேர்ந்து புத்தம்புது கழுத்துக்கணையமாக உருவெடுத்தன. இப்படி உருவான கழுத்துக்கணையம் இயற்கையான கழுத்துக்கணையத்தைப்போல டி செல்களை உற்பத்தி செய்து இயங்கவும் துவங்கியது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
கடந்த ஆண்டு விஞ்ஞான கூடத்தில் மனித மூளையை வளர்க்க செய்யப்பட்ட முயற்சிகளின்போது கருவுற்ற ஒன்பது வார சிசுவின் மூளையை உருவாக்கி விஞ்ஞானிகள் செய்த அதே மாதிரியான சாதனை மற்றும் உடல் உறுப்புக்களின் செயற்பாட்டை இந்த கழுத்துக்கணையத்தின் உருவாக்கத்திலும் விஞ்ஞானிகள் எட்டியிருக்கிறார்கள். இந்த இரண்டு பரிசோதனைகளின் வெற்றிகளும் மனித உயிர்க்கலன்களைக்கொண்டு மனித உறுப்புக்களை தனித்தனியாக மீளுறுவாக்கம் செய்யமுடியும் என்கிற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியிருப்பதாக சொல்கிறார் இந்த ஆய்வில் பங்கேற்ற பேராசிரியை கிளேர் பிளாக்பர்ன்.
குறிப்பாக கழுத்துக்கணையக் குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகள் மற்றும் எலும்பு மஜ்ஜைக்கான மாற்று ஏற்பாடுகள் தேவைப்படும் குழந்தைகளுக்கு இந்த ஆய்வின் முடிவுகள் மிகவும் நம்பிக்கையளிப்பதாக அவர் தெரிவித்தார்.
ஆனாலும் அவர் கூறும் பலாபலன்கள் மனிதர்களுக்கு எட்டவேண்டுமானால் இந்த ஆய்வு மேலும் பல படிநிலைகளை கடந்து வரவேண்டி இருக்கும். முதலாவது எலியின் சிசுவுக்குள் சாத்தியமான இந்த மருத்துவ சாதனை மனிதர்களிலும் சாத்தியமாகுமா என்பதில் துவங்கி, இப்படி உருவாக்கப்படும் மனித உறுப்புக்களின் வளர்ச்சி கட்டுக்கடங்காமல் போய் அது புற்றுநோயாக உருவெடுக்குமா என்பது தொடர்பான சந்தேகங்களையெல்லாம் இந்த ஆய்வுகள் கடக்கவேண்டி இருக்கும்.
இப்படி பல தடைகளை கடக்கவேண்டியிருந்தாலும், பழுதடைந்த இயந்திரங்களின் உதிரி பாகங்களை கழற்றிவிட்டு புதிய பாகங்களை மாட்டி இயந்திரத்தை மீண்டும் இயக்குவதைப்போல பழுதடைந்த உடல் உறுப்புக்களுக்கு மாற்றாக, அதே உடலின் ஒரு சில உயிர்க்கலன்களை ஒன்றிணைத்து நினைத்த மாத்திரத்தில் தேவைப்படும் உடல் உறுப்புக்களை உருவாக்கி பொறுத்திக்கொள்ள முடியும் என்கிற சாத்தியப்பாடு நினைத்துப் பார்க்க முடியாத விஞ்ஞான அதிசயமாக கருதப்படுகிறது.
- வெப் துனியா
[You must be registered and logged in to see this image.]
மருத்துவர்கள் உருவாக்கிய கழுத்துக்கணையம்
ஆங்கிலத்தில் தைமஸ் என்று அழைக்கப்படும் கழுத்துக்கணையம் என்பது உடலின் முக்கிய உறுப்பு. மனிதர்களுக்கு இது இதயத்துக்கு மேலே கழுத்துப்பகுதிக்கு கீழே அமைந்திருக்கும். இரண்டு பிரிவாக இருக்கும் இந்த கழுத்துக்கணையம் மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமானது. காரணம் இந்த கழுத்துக்கணையத்தில் தான் மனிதர்களின் நோய் எதிர்ப்புத்தன்மைக்கு மிக மிக அவசியமான டி செல்கள் முதிர்ச்சியடைந்து ஒட்டுமொத்த உடலுக்கும் பரவுகின்றன. இந்த டி செல்கள் தான் மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கான அடிப்படை கவசமாக செயற்பட்டு, மனித உடலுக்குள் புகமுயலும் எல்லாவிதமான நோய்க்கிருமிகளையும் தடுத்து தாக்கி அழிக்கின்றன.
இப்படிப்பட்ட கழுத்துக்கணையத்தைத்தான் தற்போது ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு விலங்கின் உடலுக்குள் செயற்கையாக உருவாக்கியிருக்கிறார்கள். முதல்கட்டமாக எலியின் கருப்பையில் இருக்கும் சிசுவின் உயிர்க்கலன்களை பிரித்தெடுத்த விஞ்ஞானிகள், அவற்றை தைமஸ் எனப்படும் கழுத்துக்கணையத்தில் இருக்கும் உயிர்க்கலன்களைப்போல மாற்றி அமைத்தார்கள். இந்த உயிர்க்கலன்களுடன் கழுத்துக்கணையத்தில் இருக்கும் மற்ற துணை உயிர்க்கலன்களுடன் இணைத்து, இந்த எல்லா உயிர்க்கலன்களையும் மீண்டும் எலியின் உள்ளே கொண்டுபோய் பதிய வைத்தனர்.
இப்படி பதியப்பட்ட தனித்தனி செல்கள் ஒன்றாக சேர்ந்து புத்தம்புது கழுத்துக்கணையமாக உருவெடுத்தன. இப்படி உருவான கழுத்துக்கணையம் இயற்கையான கழுத்துக்கணையத்தைப்போல டி செல்களை உற்பத்தி செய்து இயங்கவும் துவங்கியது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
கடந்த ஆண்டு விஞ்ஞான கூடத்தில் மனித மூளையை வளர்க்க செய்யப்பட்ட முயற்சிகளின்போது கருவுற்ற ஒன்பது வார சிசுவின் மூளையை உருவாக்கி விஞ்ஞானிகள் செய்த அதே மாதிரியான சாதனை மற்றும் உடல் உறுப்புக்களின் செயற்பாட்டை இந்த கழுத்துக்கணையத்தின் உருவாக்கத்திலும் விஞ்ஞானிகள் எட்டியிருக்கிறார்கள். இந்த இரண்டு பரிசோதனைகளின் வெற்றிகளும் மனித உயிர்க்கலன்களைக்கொண்டு மனித உறுப்புக்களை தனித்தனியாக மீளுறுவாக்கம் செய்யமுடியும் என்கிற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியிருப்பதாக சொல்கிறார் இந்த ஆய்வில் பங்கேற்ற பேராசிரியை கிளேர் பிளாக்பர்ன்.
குறிப்பாக கழுத்துக்கணையக் குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகள் மற்றும் எலும்பு மஜ்ஜைக்கான மாற்று ஏற்பாடுகள் தேவைப்படும் குழந்தைகளுக்கு இந்த ஆய்வின் முடிவுகள் மிகவும் நம்பிக்கையளிப்பதாக அவர் தெரிவித்தார்.
ஆனாலும் அவர் கூறும் பலாபலன்கள் மனிதர்களுக்கு எட்டவேண்டுமானால் இந்த ஆய்வு மேலும் பல படிநிலைகளை கடந்து வரவேண்டி இருக்கும். முதலாவது எலியின் சிசுவுக்குள் சாத்தியமான இந்த மருத்துவ சாதனை மனிதர்களிலும் சாத்தியமாகுமா என்பதில் துவங்கி, இப்படி உருவாக்கப்படும் மனித உறுப்புக்களின் வளர்ச்சி கட்டுக்கடங்காமல் போய் அது புற்றுநோயாக உருவெடுக்குமா என்பது தொடர்பான சந்தேகங்களையெல்லாம் இந்த ஆய்வுகள் கடக்கவேண்டி இருக்கும்.
இப்படி பல தடைகளை கடக்கவேண்டியிருந்தாலும், பழுதடைந்த இயந்திரங்களின் உதிரி பாகங்களை கழற்றிவிட்டு புதிய பாகங்களை மாட்டி இயந்திரத்தை மீண்டும் இயக்குவதைப்போல பழுதடைந்த உடல் உறுப்புக்களுக்கு மாற்றாக, அதே உடலின் ஒரு சில உயிர்க்கலன்களை ஒன்றிணைத்து நினைத்த மாத்திரத்தில் தேவைப்படும் உடல் உறுப்புக்களை உருவாக்கி பொறுத்திக்கொள்ள முடியும் என்கிற சாத்தியப்பாடு நினைத்துப் பார்க்க முடியாத விஞ்ஞான அதிசயமாக கருதப்படுகிறது.
- வெப் துனியா
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» உடல் உறுப்பு தானம்:
» 'உடல் உறுப்பு தானம்'
» உடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்!
» உடல் உறுப்பு தானம் செய்யும்,பெறும் வழிமுறைகள்...!
» உடல் உறுப்பு தானம் செய்யும்,பெறும் வழிமுறைகள்...!
» 'உடல் உறுப்பு தானம்'
» உடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்!
» உடல் உறுப்பு தானம் செய்யும்,பெறும் வழிமுறைகள்...!
» உடல் உறுப்பு தானம் செய்யும்,பெறும் வழிமுறைகள்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|