Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வழுக்கை தலையா….. ? முடி உதிர்கிறதா? கவலை வேண்டாம்.
Page 1 of 1 • Share
வழுக்கை தலையா….. ? முடி உதிர்கிறதா? கவலை வேண்டாம்.
[You must be registered and logged in to see this image.]“ஸ்டெம்செல்” சிகிச்சை மூலம் வழுக்கைத் தலையில் முடி வளர செய்ய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அழகு சாதன பொருட்களில் கலக்கப்படும் ரசாயன பொருட்கள் கூட பலரது தலையில் முடியை கொட்டச் செய்து வழுக்கையை ஏற்படுத்தி உள்ளன. இதனால் பலர் மனச்சோர்வடைந்து தாழ்வு மனப்பான்மையில் உள்ளனர். அவ்வாறு வழுக்கை தலை உள்ளவர்கள் இனி கவலை கொள்ள வேண்டாம்.
“ஸ்டெம் செல்” சிகிச்சை மற்றும் அதிநவீன தொழில் நுட்பம் மூலம் அவர்களுக்கு மீண்டும் முடிவளர செய்ய முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
“ஸ்டெம்செல்”கள் உடலின் “மாஸ்டர் செல்” ஆக திகழ்கிறது. அவற்றை ஆய்வகத்தில் வைத்து திறமையுடன் கையாண்டு அதை மனித உடலில் ரத்தம், எலும்பு மற்றும் உடல் உறுப்புகளின் எந்த திசுக்களிலும் வளர்க்க முடியும். அதன் அடிப்படையில் ஜெர்மனியில் உள்ள பெர்லின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
விலங்குகளில் இருந்து ஸ்டெம்செல்களை எடுத்து அதன் மூலம் தலை முடி வேர்களை உருவாக்கி முடிவளர செய்துள்ளனர். இதேபோன்று, மனித உடலின் “ஸ்டெம் செல்”களில் இருந்து தலைமுடி வேர்களை உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட தலைமுடி வேரை வழுக்கை தலையில் நடவு செய்து முடிவளர செய்ய முடியும் என விஞ்ஞானி லாவுஸ்டர் தெரிவித்துள்ளார். எனவே, வழுக்கை தலை உள்ளவர்கள் இனி கவலை அடைய தேவையில்லை. முடியை வளர வைக்கும் அதிநவீன தொழில்நுட்பம் தயாராகி வருகிறது.
■வழுக்கையில் மூடி வளர வீட்டில் கூட சிறந்த பராமரிப்பை மேற்கொள்ள முடியும்.
வழுக்கைத் தலை பிரச்சினையில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், ஆண்கள் பெண்களைப் போல், தங்கள் முடிக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை. இத்தகைய முறையான பராமரிப்பின்மையினால், ஆண்கள் இளம் பருவத்திலேயே முடி உதிர்தல் பிரச்சினைக்கு உள்ளாகி, வழுக்கையை பெறுகின்றனர்.
உண்மையில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக முடி உதிர்தல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். ஆனால்பெண்கள் முடி உதிர்தல் பிரச்சினை ஆரம்பித்த உடனேயே, முடியை சரியாக பராமரிக்க ஆரம்பித்து விடுவதால், வழுக்கை தலை ஏற்படாமல்தப்பிக்கின்றனர்.
ஆண்களோ, அதிகப்படியான வேலைப் பளுவினால், முடியை சரியாக பராமரிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் வழுக்கை தலையை அடைகின்றனர். என்ன செய்வது, வழுக்கை தலை வராமல் தடுக்க வேண்டுமெனில் முடியை பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது.
எனவே ஆண்களே! நேரம் கிடைக்கும் போது, வெளியே அதிகம் ஊர் சுற்றாமல், சற்று முடியின் மீது அக்கறைகொண்டு, சில எளிமை யான முடி பராமரிப்புக்களை மேற் கொள்ளுங்கள்.
உங்களுக்காக முடியை பராமரிப்பதற்கான சில எளிமையான வழி களை பட்டியலிட்டுள்ளோம். இத்தகைய வழிகளை பின்பற்றினால், முடி ஆரோக்கியமாக இருப்பதோடு, முடி உதிர்தல் பிரச்சினை யிலிருந்து விடுபட்டு, வழுக்கையிலிருந்து தப்பிக்கலாம்.
■எளிய பராமரிப்பு வழிகள்:-
*எண்ணெய் மசாஜ்: அனைத்து ஆண்களும் முடி உதிர்தலைத் தடுக்க முதலில்செய்ய வேண்டியது, வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு பாதாம், ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய்களைக் கொண்டு நன்கு தலைக்கு மசாஜ் செய்து, ஊற வைத்து குளிப்பது தான். இதனால் முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, முடி நன்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.
*தேங்காய் பால்: தேங்காய் பால், முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, முடியில் ஏற்படும் வறட்சியை தடுக்கும். எனவே தேங்காய்பாலை தலைக்கு தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். குறிப்பாக இந்த முறையால் முடி நன்கு மென்மையாகும்.
*கற்றாழை: முடி வலிமையோடு வளர வேண்டுமெனில், கற்றாழை ஜெல்லைக் கொண்டு தலையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், முடி உதிர் தல் குறைந்து, முடிவேரில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கலாம்.
*வேப்பிலை: வேப்பிலை அரைத்து தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், தலையில் உள்ள அல்கலைன் சீராக இருப்பதோடு,பொடுகு மறைந்து முடி உதிர்தலும் நிறுத்தப்படும். மேலும் இந்த முறையை இன்னும் சிறப்பானதாக மாற்றுவதற்கு, வேப்பிலை பேஸ்டுடன், தேன் மற்றும் ஆலிவ் ஆயிலை கலந்து தேய்க்கலாம்.
*முட்டை: முடி பராமரிப்பில் முடிக்கு புரோட்டீன் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். முடி நன்கு வலுவோடும், அடர்த்தியாகவும் வளர வேண்டு மெனில், இந்த புரோட்டீன் சிகிச்சையை வாரத்திற்கு 3 -4 முறை மேற் கொள்ள வேண்டும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், முட்டை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்து, ஈரப்பத முள்ள முடியில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் முடியை அலச வேண்டும்.
*வெந்தயம்: 2-3 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை நீரில் 8-10 மணி நேரம் ஊற வைத்து, அரைத்து தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், முடி உதிர்வது குறைவது மட்டுமின்றி, முடியின் வளர்ச்சியும் அதிகரித்து, பொடுகுத் தொல்லையும் நீங்கும். *அவகேடா: அவகேடா மற்றும் வாழைப்பழத்தை நன்கு மசித்து, தலையில் தடவி மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அலசினால், முடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
*ஆரஞ்சு: தலையில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் பொடுகு இருந்தால், அப்போது அதனை போக்குவதற்கு, ஆரஞ்சு பழத்தின் தோலை அரைத்து பேஸ்ட் செய்து, தலை மற்றும் முடியில் தடவி ஊற வைத்து, குளிக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.
*மருதாணி இலை: நல்ல கருமையான மற்றும் அடர்த்தியான முடி வேண்டுமெனில், மருதாணி இலை யை அரைத்து, முடியில் தடவி, மூன்று மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
*எலுமிச்சை சாறு: முடி பராமரிப்பில் அதிகம் பயன்படுவது எலுமிச்சை என்பது தெரிந்த விஷயம் தான். அத்தகைய எலுமிச்சையின் பாதியை தேங்காய் எண்ணெயில் பிழிந்து, தலையில் தடவி, 3-4 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். வேண்டுமெனில் இந்த முறையை இரவில் படுக்கும் போது செய்து, தலையில் ஒரு பிளாஸ்டிக் கவரைக் கொண்டு சுற்றிக் கொண்டு தூங்கி, காலையில் குளிக்கலாம்
☆மேலே வழுக்கை வராமல் தடுப்பதைப் பற்றிப் பார்த்தோம்
■சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.
■முடி உதிர்வது மற்றும் இளநரை போக்க:
1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.
4)சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.
5) கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும். பல முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. உங்களுக்கு இலகுவானதைச் செய்து பலன் பெறுக!
நன்றி -லோகினி ரதிமோகன்
“ஸ்டெம் செல்” சிகிச்சை மற்றும் அதிநவீன தொழில் நுட்பம் மூலம் அவர்களுக்கு மீண்டும் முடிவளர செய்ய முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
“ஸ்டெம்செல்”கள் உடலின் “மாஸ்டர் செல்” ஆக திகழ்கிறது. அவற்றை ஆய்வகத்தில் வைத்து திறமையுடன் கையாண்டு அதை மனித உடலில் ரத்தம், எலும்பு மற்றும் உடல் உறுப்புகளின் எந்த திசுக்களிலும் வளர்க்க முடியும். அதன் அடிப்படையில் ஜெர்மனியில் உள்ள பெர்லின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
விலங்குகளில் இருந்து ஸ்டெம்செல்களை எடுத்து அதன் மூலம் தலை முடி வேர்களை உருவாக்கி முடிவளர செய்துள்ளனர். இதேபோன்று, மனித உடலின் “ஸ்டெம் செல்”களில் இருந்து தலைமுடி வேர்களை உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட தலைமுடி வேரை வழுக்கை தலையில் நடவு செய்து முடிவளர செய்ய முடியும் என விஞ்ஞானி லாவுஸ்டர் தெரிவித்துள்ளார். எனவே, வழுக்கை தலை உள்ளவர்கள் இனி கவலை அடைய தேவையில்லை. முடியை வளர வைக்கும் அதிநவீன தொழில்நுட்பம் தயாராகி வருகிறது.
■வழுக்கையில் மூடி வளர வீட்டில் கூட சிறந்த பராமரிப்பை மேற்கொள்ள முடியும்.
வழுக்கைத் தலை பிரச்சினையில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், ஆண்கள் பெண்களைப் போல், தங்கள் முடிக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை. இத்தகைய முறையான பராமரிப்பின்மையினால், ஆண்கள் இளம் பருவத்திலேயே முடி உதிர்தல் பிரச்சினைக்கு உள்ளாகி, வழுக்கையை பெறுகின்றனர்.
உண்மையில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக முடி உதிர்தல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். ஆனால்பெண்கள் முடி உதிர்தல் பிரச்சினை ஆரம்பித்த உடனேயே, முடியை சரியாக பராமரிக்க ஆரம்பித்து விடுவதால், வழுக்கை தலை ஏற்படாமல்தப்பிக்கின்றனர்.
ஆண்களோ, அதிகப்படியான வேலைப் பளுவினால், முடியை சரியாக பராமரிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் வழுக்கை தலையை அடைகின்றனர். என்ன செய்வது, வழுக்கை தலை வராமல் தடுக்க வேண்டுமெனில் முடியை பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது.
எனவே ஆண்களே! நேரம் கிடைக்கும் போது, வெளியே அதிகம் ஊர் சுற்றாமல், சற்று முடியின் மீது அக்கறைகொண்டு, சில எளிமை யான முடி பராமரிப்புக்களை மேற் கொள்ளுங்கள்.
உங்களுக்காக முடியை பராமரிப்பதற்கான சில எளிமையான வழி களை பட்டியலிட்டுள்ளோம். இத்தகைய வழிகளை பின்பற்றினால், முடி ஆரோக்கியமாக இருப்பதோடு, முடி உதிர்தல் பிரச்சினை யிலிருந்து விடுபட்டு, வழுக்கையிலிருந்து தப்பிக்கலாம்.
■எளிய பராமரிப்பு வழிகள்:-
*எண்ணெய் மசாஜ்: அனைத்து ஆண்களும் முடி உதிர்தலைத் தடுக்க முதலில்செய்ய வேண்டியது, வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு பாதாம், ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய்களைக் கொண்டு நன்கு தலைக்கு மசாஜ் செய்து, ஊற வைத்து குளிப்பது தான். இதனால் முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, முடி நன்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.
*தேங்காய் பால்: தேங்காய் பால், முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, முடியில் ஏற்படும் வறட்சியை தடுக்கும். எனவே தேங்காய்பாலை தலைக்கு தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். குறிப்பாக இந்த முறையால் முடி நன்கு மென்மையாகும்.
*கற்றாழை: முடி வலிமையோடு வளர வேண்டுமெனில், கற்றாழை ஜெல்லைக் கொண்டு தலையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், முடி உதிர் தல் குறைந்து, முடிவேரில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கலாம்.
*வேப்பிலை: வேப்பிலை அரைத்து தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், தலையில் உள்ள அல்கலைன் சீராக இருப்பதோடு,பொடுகு மறைந்து முடி உதிர்தலும் நிறுத்தப்படும். மேலும் இந்த முறையை இன்னும் சிறப்பானதாக மாற்றுவதற்கு, வேப்பிலை பேஸ்டுடன், தேன் மற்றும் ஆலிவ் ஆயிலை கலந்து தேய்க்கலாம்.
*முட்டை: முடி பராமரிப்பில் முடிக்கு புரோட்டீன் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். முடி நன்கு வலுவோடும், அடர்த்தியாகவும் வளர வேண்டு மெனில், இந்த புரோட்டீன் சிகிச்சையை வாரத்திற்கு 3 -4 முறை மேற் கொள்ள வேண்டும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், முட்டை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்து, ஈரப்பத முள்ள முடியில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் முடியை அலச வேண்டும்.
*வெந்தயம்: 2-3 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை நீரில் 8-10 மணி நேரம் ஊற வைத்து, அரைத்து தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், முடி உதிர்வது குறைவது மட்டுமின்றி, முடியின் வளர்ச்சியும் அதிகரித்து, பொடுகுத் தொல்லையும் நீங்கும். *அவகேடா: அவகேடா மற்றும் வாழைப்பழத்தை நன்கு மசித்து, தலையில் தடவி மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அலசினால், முடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
*ஆரஞ்சு: தலையில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் பொடுகு இருந்தால், அப்போது அதனை போக்குவதற்கு, ஆரஞ்சு பழத்தின் தோலை அரைத்து பேஸ்ட் செய்து, தலை மற்றும் முடியில் தடவி ஊற வைத்து, குளிக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.
*மருதாணி இலை: நல்ல கருமையான மற்றும் அடர்த்தியான முடி வேண்டுமெனில், மருதாணி இலை யை அரைத்து, முடியில் தடவி, மூன்று மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
*எலுமிச்சை சாறு: முடி பராமரிப்பில் அதிகம் பயன்படுவது எலுமிச்சை என்பது தெரிந்த விஷயம் தான். அத்தகைய எலுமிச்சையின் பாதியை தேங்காய் எண்ணெயில் பிழிந்து, தலையில் தடவி, 3-4 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். வேண்டுமெனில் இந்த முறையை இரவில் படுக்கும் போது செய்து, தலையில் ஒரு பிளாஸ்டிக் கவரைக் கொண்டு சுற்றிக் கொண்டு தூங்கி, காலையில் குளிக்கலாம்
☆மேலே வழுக்கை வராமல் தடுப்பதைப் பற்றிப் பார்த்தோம்
■சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.
■முடி உதிர்வது மற்றும் இளநரை போக்க:
1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.
4)சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.
5) கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும். பல முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. உங்களுக்கு இலகுவானதைச் செய்து பலன் பெறுக!
நன்றி -லோகினி ரதிமோகன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வழுக்கை தலையா….. ? முடி உதிர்கிறதா? கவலை வேண்டாம்.
இந்த பதிவு முள்ளியன்னாவிர்க்காக பதியப்பட்டது.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வழுக்கை தலையா….. ? முடி உதிர்கிறதா? கவலை வேண்டாம்.
செந்தில் wrote:இந்த பதிவு முள்ளியன்னாவிர்க்காக பதியப்பட்டது.
Similar topics
» முடி உதிர்கிறதா? பொடுகு தொல்லையா? இதோ தீர்வு டாஸ்மார்க் கடைகளில்..!
» கருப்பா கவலை வேண்டாம்
» வயிற்று வலியா ? கவலை வேண்டாம்
» முடி உதிர்வதை தடுக்க… வழுக்கையில் முடி வளர… முடி கருப்பாக… வாங்க… வாங்க..!
» வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி
» கருப்பா கவலை வேண்டாம்
» வயிற்று வலியா ? கவலை வேண்டாம்
» முடி உதிர்வதை தடுக்க… வழுக்கையில் முடி வளர… முடி கருப்பாக… வாங்க… வாங்க..!
» வயதாகி விட்டதே என கவலை வேண்டாம் - தமிழினி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|