தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பண்புள்ள மனிதர்களாக வாழுங்கள்!!!

View previous topic View next topic Go down

பண்புள்ள மனிதர்களாக வாழுங்கள்!!!  Empty பண்புள்ள மனிதர்களாக வாழுங்கள்!!!

Post by முழுமுதலோன் Tue Oct 07, 2014 3:24 pm

வெறுக்கத்தக்க சில மனிதர்கள் உள்ளார்கள், மற்றவர்கள் பார்த்து அஞ்சத்தக்க மனிதர்கள் உள்ளனர், அவர்கள் யார் என்பதை நாம் அறியவேண்டும், அத்தகைய மனிதர்களிடம் நாம் எப்போதும் கொஞ்சம் பாதுகாப்புடனேயே நடந்து கொள்ள வேண்டும். அம மனிதர்கள் யார் என்று பட்டினத்தார் சொல்கிறார், அனைவருக்கும் புரியும் விதமாக மிகத்தெளிவாக அம்மனிதர்கள் பற்றி சொல்கிறார்.

வீண் வாதத்துக்கும் வீண் சண்டைக்கும் போவார்கள், வாதுக்கு வரமாட்டோம் என்றாலும், சண்டைக்கு வரமாட்டோம், என்றாலும், விடமாட்டார்கள் , வலிய இழுப்பார்கள்.

நன்மைக்கு உதவி செய்யார், தீமை என்றால் அதற்கு உதவ தயங்கமாட்டார். தினந்தோறும், துன்பப்பட்டு வஞ்சகம் செய்து பணம் சேர்ப்பார், அந்தப் பணத்தை தான் விரும்பும் ஒரு பெண்ணுக்கு கொடுத்து அவள் ஆசையிலே மயங்கிக் கிடப்பர். அதாவது தான் சாகும் வரை இப்படியே நாளைப் போக்குவர். இப்படிப் பட்ட மனிதர்கள் இவ்வுலகில் ஏன் பிறந்தார்கள், இறைவனே என்று பாடுகிறார்.

"வாதுக்குச் சண்டைக்குப் போவார்;
. . வருவார் வழக்குரைப்பர்;
தீதுக் குதவியுஞ் செய்திடுவார்,
. . தினந் தேடி ஒன்றும்
மாதுக் களித்து மயங்கிடுவார்
. . விதி மாளுமட்டும்
ஏதுக்கிவர் பிறந்தார்? இறைவா!
. . கச்சி ஏகம்பனே!"

சிலமனிதர்கள் உண்மை என்பதையே பேசி அறிய மாட்டார்கள், நல்லவர்களை ஒருநாளும் போற்ற மாட்டார்கள். நல்லோரை நிந்திப்பதையே கொள்கையை இருப்பார்கள். வசை பாடுவதற்கு இன்னார் என்று பாராமல் தன்னைப் பெற்று வளர்த்த தாயையே திட்டுவார்கள், வணங்க வேண்டிய தாயையே பழித்துப் பேசும் இவர்கள் பயங்கரமானவர்களே. நல்ல செயல்களைப் பற்றி சிந்திக்கவே மாட்டார்கள். மற்றவர்களை எந்த வம்பில் மாட்டி விடலாம் என்று சதா சித்தி திட்டம் போடுவார்கள். இவர்கள் இருப்பதால் எவருக்கும் லாபமில்லை, இவர்கள் இறந்தாலும் நட்டமில்லை என்கிறார் பட்டினத்தார்.

ஓயாமல் பொய் சொல்வர், நல்லோரை
. . நிந்திப்பர்; உற்றுப்பெற்ற
தாயாரை வைவர்; சதி ஆயிரம்
. . செய்வர்; சாத்திரங்கள்
ஆயார்; பிறர்க்கு உபகாரம் செய்யார்;
. . தமைஅண் டினார்க்கு ஒன்று
ஈயார், இருந்தென்ன? போய் என்ன?
. . காண்! கச்சி ஏகம்பனே!

ஆகவே , இவ்வாறான மனிதர்களிடமிருந்து விலகி, மனித சமுதாயத்திற்கு உதவும் உத்தமர்களா வாழுங்கள், பண்புள்ள மனிதர்களாக வாழுங்கள்! என்கிறார் பட்டினத்தார்.

முகநூல்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பண்புள்ள மனிதர்களாக வாழுங்கள்!!!  Empty Re: பண்புள்ள மனிதர்களாக வாழுங்கள்!!!

Post by செந்தில் Tue Oct 07, 2014 4:47 pm

அறிவுரைக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum