தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சார் போஸ்ட் - அஞ்சல் தினம்

View previous topic View next topic Go down

சார் போஸ்ட் - அஞ்சல் தினம் Empty சார் போஸ்ட் - அஞ்சல் தினம்

Post by நாஞ்சில் குமார் Tue Oct 07, 2014 10:34 pm

சார் போஸ்ட் - அஞ்சல் தினம் Ams4le


கடிதம் எழுதியதும் அதற்காகக் காத்திருந்ததும் இனிமையான பழைய நினைவுகளாகிவிட்டன. இப்போதைய தலைமுறை மின்னஞ்சல், வாட்ஸ் அப் யுகத்தில் வாழ்கிறது. நினைத்தவுடன் பகிர வேண்டிய செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறது.

எனவே அது அஞ்சல் துறையின் அவசியத்தையோ தபால்காரருக்கும் மக்களுக்குமிருந்த அன்னியோன்யத்தையோ உணர்ந்திருக்க வழியில்லை. ஆனால் அஞ்சல் துறை கடிதம் அனுப்புவதை மட்டும் வேலையாக வைத்திருக்கவில்லை. அதன் பல பணிகளில் கடிதங்களை அனுப்புவதும் ஒன்று, அவ்வளவுதான்.

அஞ்சல் வரலாறு

ஒரு செய்தியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கடத்த மனிதன் என்று விரும்பினானோ அன்றுதான் அஞ்சல் துறையின் அவசியம் உணரப்பட்டது. தொடக்கக் காலத்தில் நடந்து சென்றும், குதிரையில் சென்றும் தெரிவிக்க வேண்டிய தகவல்களை, செய்திகளைத் தூதர்கள் சொல்லிவந்தார்கள்.

1600, 1700களில் பெரும்பாலான நாடுகளில் அஞ்சலகச் சேவை தொடங்கப்பட்டது. ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குச் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள ஒப்பந்தங்களைப் போட்டுக்கொண்டார்கள். 1800களில் அஞ்சல்கள் தொடர்பான நடைமுறைச் சிக்கல்களை அதிகமாக உணர்ந்தார்கள். எனவே அனைத்து நாடுகளின் அஞ்சல் துறையினரையும் அழைத்துப் பேசி இதற்கொரு முடிவெடுக்க விரும்பினார்கள்.

இதனால் 15க்கும் மேற்பட்ட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கலந்துகொண்ட கருத்தரங்கு ஒன்றை 1863-ல் அமெரிக்கப் போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் மாண்ட்கோமெரி ப்ளைர் என்பவர் நடத்தினார். அஞ்சல்கள் பற்றிய அனைத்துப் பிரச்சினைகளும் இதில் விவாதிக்கப்பட்டன.

இதனடிப்படையில் சில முடிவுகளை எட்டினார்கள், சர்வதேச அஞ்சல் பரிமாற்றம் தொடர்பான முக்கிய விதிமுறைகளைக் கட்டமைத்தார்கள், பரஸ்பரப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டுக்கொண்டார்கள். ஆனால் சர்வதேச அஞ்சல் ஒப்பந்தம் போடுவதை மட்டும் ஏனோ விட்டுவிட்டார்கள்.

அஞ்சல் தினம்

இந்நிலையில் வடக்கு ஜெர்மனி கூட்டமைப்பைச் சேர்ந்த மூத்த அஞ்சல் துறை அதிகாரி ஹென்ரிச் வோன் ஸ்டீபன் என்பவர் 1874-ம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று சுவிட்ஸர்லாந்தின் பெர்னே நகரில் ஒரு கருத்தரங்கை ஒருங்கிணைத்தார்.

வடக்கு ஜெர்மனி கூட்டமைப்பு என்பது இப்போதைய ஜெர்மனி, போலந்து, ரஷ்யா ஆகிய நாடுகளின் பகுதிகளைக் கொண்டிருந்தது. அதில் சுமார் 22 நாடுகள் கலந்துகொண்டன. அதன் தொடர்ச்சியாக 1874 அக்டோபர் ஒன்பது அன்று ஜெனரல் போஸ்டல் யூனியன் என அழைக்கப்பட்ட சர்வதேச அஞ்சல் கூட்டமைப்பை உருவாக்கினார்கள்.

உலகத்தின் தகவல் தொடர்புக்கு இந்த அமைப்பு வலிவூட்டியது. அஞ்சல் துறையில் இந்த அமைப்பின் தொடக்கம் முக்கியமான திருப்புமுனை. ஆகவே அந்த நாளை உலக அஞ்சல் தினமாகக் கொண்டாடுவது வழக்கமானது.

இந்தக் காலகட்டத்தில் இந்தியா பிரிட்டிஷாரின் ஆளுகைக்குட்பட்டிருந்தது. பிரிட்டிஷ் இந்தியா 1876-ல் ஜெனரல் போஸ்டல் யூனியனில் உறுப்பினரானது. இந்தியா முழுவதும் அமைந்திருந்த மாகாணங்களில் அஞ்சல் துறையின் சார்பில் வங்கிகள் தொடங்கப்பட்டன. சென்னை மாகாணத்தில் இந்தச் சேவை குறிப்பிட்ட சில இடங்களில் ஆரம்பிக்கப்பட்டன.

ஆனால் வங்காள மாகாணத்திலோ பம்பாய் மாகாணத்திலோ இந்தச் சேவை தொடங்கப்படவில்லை. 1884 பிப்ரவரியில் ஆயுள் காப்பீடு திட்டங்களும் அஞ்சல் துறையில் தொடங்கப்பட்டன. படிப்படியாக அஞ்சல் துறையின் சேவை தனது எல்லையை விரித்துக்கொண்டேபோனது. ஒட்டுமொத்தத்தில் இந்திய அரசுக்கும் மக்களுக்கும் அது பாலமாகச் செயல்படத் தொடங்கியது.

நாம் இப்போது இமெயில் காலத்தில் வாழ்கிறோம். பணப்பரிமாற்றங்களை மிக எளிதாக இணையம் மூலம் நிறைவேற்றுகிறோம். ஆனால் முன்பெல்லாம் கடிதங்கள், பணம், முக்கிய அரசாங்க ஆவணங்கள் ஆகியவற்றைப் பரிமாறிக்கொள்ள அஞ்சல் துறையின் உதவி அத்தியாவசியமானது.

இப்போதும் நகரங்களிலிருந்து உள்ளொடுங்கிய கிராமங்கள் பல அஞ்சல் துறையின் சேவையை எதிர்பார்த்தே காலத்தை ஓட்டுகின்றன. ராணுவத் துறையினருக்கு அஞ்சல் துறை அநேக வகையில் உதவியாக இருந்துவருகிறது. ஆகவே அஞ்சல் துறையின் அவசியத்தைப் போற்றும் வகையில் உலக அஞ்சல் நாளை ஒட்டி அதற்கு அடுத்த நாள் இந்தியாவில் அஞ்சல் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

தேசிய அஞ்சல் நாளை முன்னிட்டுக் கருத்தரங்கங்கள் நடத்துவார்கள். புதிய சேவைகளைத் தொடங்குவார்கள். தபால் தலைகள் அறிமுகமாகும். நாடு முழுவதும் அஞ்சல் துறைக்கு இந்த நாளில் புதிய உத்வேகம் அளிக்கும் வகையில் பலவகைக் கொண்டாட்டங்கள் இடம்பெறும். இதை ஒருவகையில் அஞ்சல் துறை தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் ஒரு நாள் என்றே சொல்லலாம்.

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

சார் போஸ்ட் - அஞ்சல் தினம் Empty Re: சார் போஸ்ட் - அஞ்சல் தினம்

Post by mohaideen Wed Oct 08, 2014 12:58 pm

தகவல்களுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சார் போஸ்ட் - அஞ்சல் தினம் Empty Re: சார் போஸ்ட் - அஞ்சல் தினம்

Post by ரானுஜா Wed Oct 08, 2014 1:35 pm

பகிர்வுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

சார் போஸ்ட் - அஞ்சல் தினம் Empty Re: சார் போஸ்ட் - அஞ்சல் தினம்

Post by முரளிராஜா Thu Oct 09, 2014 4:05 pm

நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சார் போஸ்ட் - அஞ்சல் தினம் Empty Re: சார் போஸ்ட் - அஞ்சல் தினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum