Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அறிந்துக்கொள்க: இந்திய மனித உரிமைகள் ஆணையம்
Page 1 of 1 • Share
அறிந்துக்கொள்க: இந்திய மனித உரிமைகள் ஆணையம்
மத்திய மனித உரிமைகள் ஆனையம்
இந்திய மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 1993(2006 திருத்தப்பட்ட்து) அதன் கீழ் மத்திய மனித உரிமைகள் ஆணையம் பாராளுமன்றத்தால் 1993ல் ஏற்படுத்தப்பட்ட்து.இது ஒரு அரசியல் அமைப்பினால் உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல..பாராளுமன்றத்தினால் சட்டம் இயற்றி அதன் மூலம் எற்ப்படுத்தப்பட்ட அமைப்பு. இந்திய நாட்டின் குடிமக்களின் மனித உரிமைகளினை பாதுகாப்பது மற்றும் மனித உரிமைகள் மீறப்படுவத்தினை தடுப்பது கண்கானிப்பது.மனித உரிமைகள் என்பது(வாழ்வாதார உரிமைகள், சுதந்திர உரிமைகள்(பேச்சு சுதந்திரம்.எழுத்துச் சுதந்திரம்,கருத்துச்சுதந்திரம்)சமத்தர்ம உரிமை(இந்திய நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் அன்னத்து உரிமைக்ளும் உண்டு சட்ட்த்தின் கீழ் ஆனைவரும் சமம்.)அகில உலக மனித உரிமைகள் ஆணையம், இந்திய அரசியல் அமைப்பு மற்றும் நீதிமன்றங்கள் வகுதுள்ள தனி மனித உரிமைக்ள். முக்கிய நோக்கங்க்கள் 1.மனித உரிமைகள் மீறப்படும் வழிமுறைகளினை கண்டறிந்து கண்கானிப்பது அதனைத்தடுப்பது.அதற்க்கான திட்டங்க்களினை வகுத்து மனித உரிமைகள் ஆணையத்தினை பலப்படுத்துவது 2..அரசு மனித உர்மைகளினை பாதுகாகிறத,மக்களுக்கு சுதந்திரம் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளதா. என கண்கானிப்பது 3.மனித உரிமைகளினை பாதுகாக்க மற்றும் அதற்க்கான நடவடிக்கைகளினை அரசியல் அமைப்பிற்க்கு உட்பட்டு எடுப்பது. அமைப்பு இது ஒரு பல உறுப்பினர்களினைக்கொண்ட ஒரு அமைப்பு.இதில் ஒரு தலைமை ஆணையர் மற்றும் மற்ற 4 உறுப்பினர்களினையும் கொண்டது. தகுதிகள்)(முழு நேர உறுப்பினர்கள்) 1.தலைவர் கண்டிப்பாக உச்ச நீதிமன்ற ஒய்வு பெற்ற தலைமை நீதிபதியாக இருக்க வேண்டும். 2.மற்ற இரு உறுப்பினர்க்ள் கண்டிப்பாக பணியில் இருக்கும் அல்லது ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி(1), பணியில் இருக்கும் அல்லது ஒய்வு பெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி(2) 3.மற்ற இருவர் மனித உரிமைகளினை பற்றிய ஆழ்ந்த அறிவு பெற்றிருக்க வேண்டும்(3,4) தகுதிகள்(4 செயல் அலுவலர்கள்) 1. சிறுபான்மையினர்க்கான தேசிய குழுவின் தலைவர், 2.sc மக்களுக்கான தேசிய குழுவின் தலைவர், 3.st மக்களுக்கான தேசிய குழுவின் தலைவர்,4.பெண்களுக்கான தேசியக் குழுவின் தலைவர் நியமனம் ஒரு தலைமை ஆணையர் மற்றும் மற்ற 4 உறுப்பினர்கள் இவர்கள் பாராளுமன்றக்குழுவின்(பிரதமர்,மக்களவையின் தலைவர், ராஜ்ஜியசபையின் துணைத் தலைவர் இரு அவையின் எதிக்கட்சித்தலைவர்கள் மற்றும் மத்திய உள்த்துறை அமைச்சர் )பரிந்துறையின் பேரில் குடியரசுத்தலைவரால் நியமனம் பெறுகின்றனர்.பதவியில் இருக்கும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பதவியில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதியினை உறுப்பினர்களாக நியமிக்கும் முன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கலந்து அலோசனை பெற வேண்டும் இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை.(இதில் எது முன்னால் வருகிறதொ அது வரை.) மத்திய அரசு மானில அரசில் இவர்க்ள் மிண்டும் நியமனம் பெறமுடியாது . பதவி நீக்கம்(தலைவர் அல்ல்து உறுப்பினர்கள்) குடியரசுத்தலைவர் பின் வரும் வழிமுறைகளினைப்பயன் படுத்தி இவர்களினை பதவி நீக்கம் செய்யலாம். 1.இவர் ஏதெனும் வழக்கில்குற்றம் சாட்டப்பட்டால் அல்லது.எதெனும் ஒழுக்கம் தவறிய வழ்க்கில் குற்றவாளி என முடிவு செய்யப்பட்டல்(குடியரசுத்தலைவரின் முடிவு) 2 வேறு எதேனும் நிறுவனத்தில் ஏதேனும் பதவியினை வகித்தால். 3. பதவி வகிக்கும் பொழுது உடல் நலக்குறைவு அல்லது மன நலம் பதிப்பு,தனது பணியினை சரிவர செய்ய இயலாமை(குடியரசுத்தலைவரின் முடிவு)பணம் அல்லது . இவர் மனனிலை பாதிப்படைந்தவர் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்க்கியிருந்தால் 4. பதவி வகிக்கும் பொழுது உடல் நலக்குறைவு அல்லது மன நலம் பதிப்பு,தனது பணியினை சரிவர செய்ய இயலாமை பொன்றக் காரணங்களுக்கா உச்ச நீதிமன்றம் விசாரனை நடத்தி (குற்றவாளியென) அறிக்கை குடியரசுத்தலைவரிடம் அனுப்பபட்டால் அவ்ர் பதவி நீக்கம் செய்யலாம் தலைமை ஆனையர் மற்றும் உறுப்பினர்க்ளின் சம்பளம் மற்றும் மற்ற சலுகைகள்மதிய அரசால் நிர்னயம் செய்யப்படும் ஆனால் இவர்களின் தகுதிக்கு ஏற்றால் போல் வேறுபடது மேற்குரிய வழிமுறைக்ள் இவ்வமைப்பின் சுதந்திரத்தன்மை பாகுபாடற்ற நிலை கட்டுப்பாடற்ற தண்மையினை பாதுகாக்க ஏற்ப்படுத்தப்பட்டது ஆணையத்தின் பணிகள் 1.தானே முன் வந்தோ அல்லது நீதிமண்ற உத்தரவுப்படியோ அல்லது புகாரின் அடிப்படையில் எதனும் ஒரு பகுதியில் நடந்தச் மனித உரிமை மீறல்கள் பற்றியொ அல்லது அரசு ஊழியர்கள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டாலோ. விசாரனை செய்து நடவடிக்கைக்கு பரிந்துறை செய்வது. 2.சிறைச்சாலை/மனநல மருத்துவமனை பொன்ற இடங்களினை ஆய்வு செய்து அதன் குறைகளினை கண்டறிந்து அதனை சரி செய்யப் பரிந்துறைப்பது 3.சட்ட பாதுகாப்பு அமைப்புகளுடன் இனைந்து மனித உரிமை மீறல் பற்றி விவாதிது அதனை தடுப்பதற்க்கு ஆலோசனை சட்டமியற்றும் பொழுது தேவைப்படும் வழிக்காட்டுதலினை வழங்க்குதல்..திவிரவாதத்திற்க்கு எதிரான நடவடிக்கைகளில் மனித உரிமைக்ள் மீறப்படாமல் நடக்க வழிக்காட்டுவது 4.ஆய்வுகாளில் மனித உரிமைக்ள் மீறப்படாமல் கண்கானித்து பாதுக்கப்பது.மனித உரிமைக்ள் மீதான ஆராய்ச்சிகளினை ஊக்குவிப்பது. 5.மனித உரிமைகள் தொடர்ப்பான விழிப்புணர்வினை மக்களிடையே வளர்ப்பது அதில் இருந்து தங்களினை காப்பற்றி எப்படி பாதுகாப்பது என சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளினை நடத்துவது 6..மனித உரிமைப்பாதுகாப்பில் ஈடுபடும் தனியார் அமைப்புகளில்(NGO’S) செயல்களினை கட்டுப்படுத்தி ஊக்குவிப்பது.8.மனித உரிமையினை மீறும் நடவடிக்கைகளினை மேற்க்கோள்வது. 7.நீதிமன்றத்தில் னிலுவையில் இருக்கும் மனித உரிமை தொடர்பான வழக்குகளினைச் விசாரனை செய்வது ஆணையம் வேலைசெய்யும் விதம் மத்திய மனித உரிமைக்ள் ஆனையம் டில்லியினை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது.இது தனது.கிளையினை இந்தியாவின் எந்த்வொரு இடத்திலும் நிறுவிக்கொள்ளளாம். இது தனக்கு என்று வரையறை செய்யப்பட்ட அல்லது வகுக்கப்பட்ட முறையினை பின்பற்றியே. விசாரணை நடத்தும் சிவில் நீதிமன்றங்களுக்கான அனைத்து அதிகாரங்க்களும் இதற்க்கு பொருந்தும்.இது ஒரு நீதிமன்றம் போல் செயல்படும்.இது மத்திய அல்லது மானில அரசுச் அல்லது அதற்க்கு கீழ் இயங்கும் ஏதேனும் ஒரு அமைப்பிடமிருந்து சட்டதிட்டங்க்களுக்கு உட்ப்பட்டு ஏதேனும் ஒரு தகவலினை கேட்டுப்பேறலாம். இது தனக்கென தனி விசாரனை அதிகாரிகளினையும் விதிகளினையும் கொண்டுள்ளது அதற்க்கு உட்பட்டு மனித உரிமை மீறல் தொடர்பான புகார்களினை விசாரிக்கும்.இது மத்திய அல்லது மானில அரசின் எதேனும் துறையினை தேவை ஏற்படின் பயன்படுத்திக்கொள்ளளாம் செயல்படும். மனித உரிமைகளுக்காக முதலில் குரல் எழுப்பும் அமைப்புகளுடன் இனைந்து செயல்படும். ஒரு வருடத்திற்க்கு முன் நடந்த மனித உரிமை மீறல்கல் மற்றும் இந்திய மனித உரிமை சட்டத்தினை மீறி செய்யப்பட்ட செயல்கள் பற்றி இவ்வமைப்பு விசாரிக்கச் முடியாது. இந்திய மனித உரிமை சட்டத்தினை மீறி செய்யப்பட்ட செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடந்த தேதியில் இருந்து ஒரு வருடத்திற்க்குள் புகார் அளிக்க வேண்டும்.இல்லையேல் நடவடிக்கை எடுக்க முடியாது. இந்த ஆணையம் கீழ்க்கண்ட நடவடிக்கைகளினை மட்டும் புகார்கள் மீது எடுக்கின்றது. 1.பாதிக்கப்பட்டவருக்கு பாதிபினை ஏற்ப்படுத்திய அமைப்பு(அரசு அல்லது நிறுவனம்) நஷ்டஈடு வழங்க வேண்டும். எனப் பரிந்துறைப்பது. 2.மனித உரிமை மீறலில் ஈடுபட்ட அரசு ஊழியர் மீது துறைரரீதியான நடவடிக்கையினை மேற்க்கொள்ள பரிந்துறைப்பது. 3.பாதிக்கப்பட்டவருக்கு உடனடிச் தீர்வும் நிவாரணம் கிடைக்க குறிப்பிட்ட அரசுக்கு பரிந்துறைப்பது. 4.உச்ச நீதிமன்றத்தினையும் உயர் நீதிமன்றங்களினையும் பதிக்கப்பட்டவருக்காக அனுகி நீதி(ஆனைகள்,உத்தரவு) பெற்றுத்தருவது. இந்த ஆணையம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகிடைக்க ஒரு பரிந்துரை செய்யும் அமைப்பு.இது குற்றம் சாட்டப்பட்ட நபரையோ அல்லது அமைப்பினியோ தண்டிக்க இவ்வமைப்பிற்க்கு அதிகாரம் இல்லை.இவர்கள்ச் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரனம் பேற்று தருபவர்கள். நிவாரணம் வழங்ச்குபவர்கள் அல்ல.அரசு அல்லது நிறுவனங்கலோ இவர்களின் பரிந்துறையினை ஏற்றுசெயல்படாமல்கூட இருக்கலாம்.ஆனால் பரிந்துறை பெற்றுக்கொண்ட 1 மாத காலக்கேடுவிற்க்குள் பரிந்துறையின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பற்றிய அறிக்கையினை இவ்வாணையத்திற்க்கு அரசு அல்லது நிறுவனம் வழங்கவேண்டும். இராணுவம் சார்ந்த மனித உரிமை மீறல்கள் சம்பந்தப்பட்ட புகார்களின் அடிப்படையில் இவ்வமைப்பு குறிப்ப்ட்எல்கை வரை மற்றுமே செயல்படும்.இவ்வமைப்பு தனது பரிந்துறைமீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையினை மத்திய அரசிடம் கோரும் பொழுது அரசு 3 மாதக் காலக்கெடுவிற்க்குள் தனது அறிக்கையினை இவ்வமைப்பிற்க்கு அனுப்ப வேண்டும். அதேப்போல் மானில அரசுகளும் அரிக்கைகளை 1 மாதத்திற்க்குள் தர வேண்டும் ,பாரிந்துறையினை ஏற்க்கவில்லை அதன் பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தகுந்த காரணம் தரவேண்டும். மாநில மனித உரிமைகள் ஆணையம் இந்திய மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 1993(2006 திருத்தப்பட்ட்து மாநில மனித உரிமைகள் ஆணையம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 5ல் இருந்து 3ஆக குறைக்கப்பட்டது ) அதன் கீழ் மாநில மனித உரிமைகள் ஆணையம் பாராளுமன்றத்தால் 1993ல் ஏற்படுத்தப்பட்ட்து.இது ஒரு அரசியல் அமைப்பினால் உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல..பாராளுமன்றத்தினால் சட்டம் இயற்றி அதன் மூலம் எற்ப்படுத்தப்பட்ட அமைப்பு. மாநில மனித உரிமைகள் ஆணையம் மாநிலத்தில் நட்க்கும் மனித உர்மை மீறல் பற்றிய புகார்களினை விசாரிக்கும் அதிகாரம் பேற்றது (மாநில லிஸ்ட்டில்(11 & 111) உள்ள குறிப்பிட்ட சில விவகாரங்க்கள் மத்திய மனித உரிமைகள் ஆணையம் அல்லது அதுபோல் சம அதிகாரம் உடையாஆணையங்க்கள் விசாரனை செய்த புகார்களின் மீது மானில மனித உரிமைக்ள் ஆனையம் நடவடிக்கை எடுக்க முடியாது. . முக்கிய நோக்கங்க்கள் 1. மாநிலத்தில் மனித உரிமைகள் மீறப்படும் வழிமுறைகளினை கண்டறிந்து கண்கானிப்பது அதனைத்தடுப்பது.அதற்க்கான திட்டங்க்களினை வகுத்து மனித உரிமைகள் ஆணையத்தினை பலப்படுத்துவது 2.. மாநில அரசு மனித உர்மைகளினை பாதுகாகிறத,மக்களுக்கு சுதந்திரம் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளதா. என கண்கானிப்பது 3. மாநிலத்தில் மனித உரிமைகளினை பாதுகாக்க மற்றும் அதற்க்கான நடவடிக்கைகளினை அரசியல் அமைப்பிற்க்கு உட்பட்டு எடுப்பது. அமைப்பு இது ஒரு பல உறுப்பினர்களினைக்கொண்ட ஒரு அமைப்பு.இதில் ஒரு தலைமை ஆணையர் மற்றும் மற்ற 2 உறுப்பினர்களினையும் கொண்டது. தகுதிகள்)(முழு நேர உறுப்பினர்கள்) 1.தலைவர் கண்டிப்பாக உயர் நீதிமன்ற ஒய்வு பெற்ற தலைமை நீதிபதியாக இருக்க வேண்டும். 2.மற்ற இரு உறுப்பினர்க்ள் கண்டிப்பாக பணியில் இருக்கும் அல்லது ஒய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி(1), பணியில் இருக்கும் அல்லது ஒய்வு பெற்ற மாவட்ட நீதிமன்ற நீதிபதி(2) இருவரும் குறந்த பட்ச்சம் 7 ஆண்டுகள் அணுபவம் பேறிருக்க வேண்டும் மனித உரிமைகளினை பற்றிய ஆழ்ந்த அறிவு பெற்றிருக்க வேண்டும் தகுதிகள்(4 செயல் அலுவலர்கள்) நியமனம் ஒரு தலைமை ஆணையர் மற்றும் மற்ற 4 உறுப்பினர்கள் இவர்கள் சட்டமன்றக்குழுவின்(முதல்வர்,சட்டசபையின்சபானயகர், அவையின் எதிக்கட்சித்தலைவர்கள் மற்றும் மாநில உள்த்துறை அமைச்சர் )பரிந்துறையின் பேரில் ஆளுனரால் நியமனம் பெறுகின்றனர்.பதவியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் பதவியில் இருக்கும் மாவட்ட நீதிமன்ற நீதிபதியினை உறுப்பினர்களாக நியமிக்கும் முன் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கலந்து அலோசனை பெற வேண்டும் இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை.(இதில் எது முன்னால் வருகிறதொ அது வரை.) மத்திய அரசு மானில அரசில் இவர்க்ள் மிண்டும் நியமனம் பெறமுடியாது . பதவி நீக்கம்(தலைவர் அல்ல்து உறுப்பினர்கள்) குடியரசுத்தலைவர் பின் வரும் வழிமுறைகளினைப்பயன் படுத்தி இவர்களினை பதவி நீக்கம் செய்யலாம். 1.இவர் ஏதெனும் வழக்கில்குற்றம் சாட்டப்பட்டால் அல்லது.எதெனும் ஒழுக்கம் தவறிய வழ்க்கில் குற்றவாளி என முடிவு செய்யப்பட்டல்(குடியரசுத்தலைவரின் முடிவு) 2 வேறு எதேனும் நிறுவனத்தில் ஏதேனும் பதவியினை வகித்தால். 3. பதவி வகிக்கும் பொழுது உடல் நலக்குறைவு அல்லது மன நலம் பதிப்பு,தனது பணியினை சரிவர செய்ய இயலாமை(குடியரசுத்தலைவரின் முடிவு)பணம் அல்லது . இவர் மனனிலை பாதிப்படைந்தவர் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்க்கியிருந்தால் 4. பதவி வகிக்கும் பொழுது உடல் நலக்குறைவு அல்லது மன நலம் பதிப்பு,தனது பணியினை சரிவர செய்ய இயலாமை பொன்றக் காரணங்களுக்கா உச்ச நீதிமன்றம் விசாரனை நடத்தி (குற்றவாளியென) அறிக்கை குடியரசுத்தலைவரிடம் அனுப்பபட்டால் அவ்ர் பதவி நீக்கம் செய்யலாம் தலைமை ஆனையர் மற்றும் உறுப்பினர்க்ளின் சம்பளம் மற்றும் மற்ற சலுகைகள் மாநில அரசால் நிர்னயம் செய்யப்படும் ஆனால் இவர்களின் தகுதிக்கு ஏற்றால் போல் வேறுபடது மேற்குரிய வழிமுறைக்ள் இவ்வமைப்பின் சுதந்திரத்தன்மை பாகுபாடற்ற நிலை கட்டுப்பாடற்ற தண்மையினை பாதுகாக்க ஏற்ப்படுத்தப்பட்டது ஆணையத்தின் பணிகள் 1.தானே முன் வந்தோ அல்லது நீதிமண்ற உத்தரவுப்படியோ அல்லது புகாரின் அடிப்படையில் எதனும் ஒரு பகுதியில் நடந்தச் மனித உரிமை மீறல்கள் பற்றியொ அல்லது அரசு ஊழியர்கள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டாலோ. விசாரனை செய்து நடவடிக்கைக்கு பரிந்துறை செய்வது. 2.சிறைச்சாலை/மனநல மருத்துவமனை பொன்ற இடங்களினை ஆய்வு செய்து அதன் குறைகளினை கண்டறிந்து அதனை சரி செய்யப் பரிந்துறைப்பது 3.சட்ட பாதுகாப்பு அமைப்புகளுடன் இனைந்து மனித உரிமை மீறல் பற்றி விவாதிது அதனை தடுப்பதற்க்கு ஆலோசனை சட்டமியற்றும் பொழுது தேவைப்படும் வழிக்காட்டுதலினை வழங்க்குதல்..திவிரவாதத்திற்க்கு எதிரான நடவடிக்கைகளில் மனித உரிமைக்ள் மீறப்படாமல் நடக்க வழிக்காட்டுவது 4.ஆய்வுகாளில் மனித உரிமைக்ள் மீறப்படாமல் கண்கானித்து பாதுக்கப்பது.மனித உரிமைக்ள் மீதான ஆராய்ச்சிகளினை ஊக்குவிப்பது. 5.மனித உரிமைகள் தொடர்ப்பான விழிப்புணர்வினை மக்களிடையே வளர்ப்பது அதில் இருந்து தங்களினை காப்பற்றி எப்படி பாதுகாப்பது என சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளினை நடத்துவது 6..மனித உரிமைப்பாதுகாப்பில் ஈடுபடும் தனியார் அமைப்புகளில்(NGO’S) செயல்களினை கட்டுப்படுத்தி ஊக்குவிப்பது.8.மனித உரிமையினை மீறும் நடவடிக்கைகளினை மேற்க்கோள்வது. 7.நீதிமன்றத்தில் னிலுவையில் இருக்கும் மனித உரிமை தொடர்பான வழக்குகளினைச் விசாரனை செய்வது ஆணையம் வேலைசெய்யும் விதம் இது தனக்கு என்று வரையறை செய்யப்பட்ட அல்லது வகுக்கப்பட்ட முறையினை பின்பற்றியே. விசாரணை நடத்தும் சிவில் நீதிமன்றங்களுக்கான அனைத்து அதிகாரங்க்களும் இதற்க்கு பொருந்தும்.இது ஒரு நீதிமன்றம் போல் செயல்படும்.இது மத்திய அல்லது மானில அரசுச் அல்லது அதற்க்கு கீழ் இயங்கும் ஏதேனும் ஒரு அமைப்பிடமிருந்து சட்டதிட்டங்க்களுக்கு உட்ப்பட்டு ஏதேனும் ஒரு தகவலினை கேட்டுப்பேறலாம். இது தனக்கென தனி விசாரனை அதிகாரிகளினையும் விதிகளினையும் கொண்டுள்ளது அதற்க்கு உட்பட்டு மனித உரிமை மீறல் தொடர்பான புகார்களினை விசாரிக்கும். மனித உரிமைகளுக்காக முதலில் குரல் எழுப்பும் அமைப்புகளுடன் இனைந்து செயல்படும். ஒரு வருடத்திற்க்கு முன் நடந்த மனித உரிமை மீறல்கல் மற்றும் இந்திய மனித உரிமை சட்டத்தினை மீறி செய்யப்பட்ட செயல்கள் பற்றி இவ்வமைப்பு விசாரிக்கச் முடியாது. இந்திய மனித உரிமை சட்டத்தினை மீறி செய்யப்பட்ட செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடந்த தேதியில் இருந்து ஒரு வருடத்திற்க்குள் புகார் அளிக்க வேண்டும்.இல்லையேல் நடவடிக்கை எடுக்க முடியாது. இந்த ஆணையம் கீழ்க்கண்ட நடவடிக்கைகளினை மட்டும் புகார்கள் மீது எடுக்கின்றது. 1.பாதிக்கப்பட்டவருக்கு பாதிபினை ஏற்ப்படுத்திய அமைப்பு(அரசு அல்லது நிறுவனம்) நஷ்டஈடு வழங்க வேண்டும். எனப் பரிந்துறைப்பது. 2.மனித உரிமை மீறலில் ஈடுபட்ட அரசு ஊழியர் மீது துறைரரீதியான நடவடிக்கையினை மேற்க்கொள்ள பரிந்துறைப்பது. 3.பாதிக்கப்பட்டவருக்கு உடனடிச் தீர்வும் நிவாரணம் கிடைக்க குறிப்பிட்ட அரசுக்கு பரிந்துறைப்பது. 4.உச்ச நீதிமன்றத்தினையும் உயர் நீதிமன்றங்களினையும் பதிக்கப்பட்டவருக்காக அனுகி நீதி(ஆனைகள்,உத்தரவு) பெற்றுத்தருவது. இந்த ஆணையம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகிடைக்க ஒரு பரிந்துரை செய்யும் அமைப்பு.இது குற்றம் சாட்டப்பட்ட நபரையோ அல்லது அமைப்பினியோ தண்டிக்க இவ்வமைப்பிற்க்கு அதிகாரம் இல்லை.இவர்கள்ச் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரனம் பேற்று தருபவர்கள். நிவாரணம் வழங்ச்குபவர்கள் அல்ல.அரசு அல்லது நிறுவனங்கலோ இவர்களின் பரிந்துறையினை ஏற்றுசெயல்படாமல்கூட இருக்கலாம்.ஆனால் பரிந்துறை பெற்றுக்கொண்ட 1 மாத காலக்கேடுவிற்க்குள் பரிந்துறையின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பற்றிய அறிக்கையினை இவ்வாணையத்திற்க்கு அரசு அல்லது நிறுவனம் வழங்கவேண்டும். மாநில அரசுகளும் அரிக்கைகளை 1 மாதத்திற்க்குள் தர வேண்டும் ,பாரிந்துறையினை ஏற்க்கவில்லை அதன் பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தகுந்த காரணம் தரவேண்டும். மனித உரிமையியல் நீதிமன்றம் மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 1993ன் படி மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மனித உரிமையியல் நீதிமன்றம் மனித உறிமை மீறலினை தடுக்க அமைக்கப்பட்டது. உயர் நீதிமன்றங்களின் பரிந்துறையின் படி மாநில அரசின் உத்தரவின் பேரில் அமைக்கப்படும். ஒவ்வொரு நீதிமன்றத்திற்க்கும் குறைந்த பட்ச்சம் 7 ஆண்டுகள் அனுபவம் உள்ள அரசு வழக்கரிஞர் சிறப்பு அரசு வழக்கரிஞராக நியமிக்கப்படுவர்.
நன்றி: முகநூல்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அறிந்துக்கொள்க: இந்திய மனித உரிமைகள் ஆணையம்
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி ஜி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» ரிசானாவின் மரணத்துக்கு இலங்கை ஜனாதிபதியே பொறுப்பு!- ஆசிய மனித உரிமைகள் ஆணையம்
» மனித உரிமைகள்
» மனித உரிமைகள்
» பெண்களுக்கான பத்து சட்ட உரிமைகள்.
» ஜெயலலிதா குணம் அடைவதற்காக மாணவர்களுக்கு அலகு குத்தியது ஏன்? தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ
» மனித உரிமைகள்
» மனித உரிமைகள்
» பெண்களுக்கான பத்து சட்ட உரிமைகள்.
» ஜெயலலிதா குணம் அடைவதற்காக மாணவர்களுக்கு அலகு குத்தியது ஏன்? தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|