தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுகாதாரத் தூதுவர்கள்

View previous topic View next topic Go down

சுகாதாரத் தூதுவர்கள் Empty சுகாதாரத் தூதுவர்கள்

Post by நாஞ்சில் குமார் Mon Oct 27, 2014 10:46 pm

[You must be registered and logged in to see this image.]


நாமக்கல் மாவட்டம் புதுப்பாளையம் பஞ்சாயத்தில் இருக்கும் சாணார் புதூர் கிராமத்தைச் சேர்ந்த அமுதா காலையில் எழுந்ததும் வீட்டு வேலையை அவசர அவசரமாக முடிக்கிறார். பிறகு அந்த ஊரில் உள்ள குழந்தைகள், பெண்களைப் பார்க்கச் செல்கிறார். குழந்தைகளிடம் தன் சுத்தம் பற்றியும் கழிப்பறை பற்றியும் பேசுகிறார். திறந்தவெளியில் மலம் கழிப்பதில் உள்ள கேடுகளை எடுத்துச் சொல்கிறார். வீட்டில் கழிப்பறை இருக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்குகிறார். அமுதா மட்டுமல்ல, அவரைப் போல் பல பெண்கள் இதுபோன்ற சுகாதார சேவையைச் செய்துவருகிறார்கள்.

சுகாதாரம் என்பது பெயரளவுக்கும் இல்லாத கிராமங்களில் கழிப்பறையின் அத்தியாவசியம் குறித்து எடுத்துச் சொல்வது இவர்களுடைய வேலை. இந்தியாவில் 13 கோடி வீடுகளில் கழிப்பறை வசதி கிடையாது. இன்றும் பல கிராமங்களில் புதர்களை நோக்கிச் செல்வது நடந்துகொண்டுதான் இருக்கிறது.

காத்திருக்கும் ஆபத்துகள்

வீட்டில் கழிப்பறை இல்லாததால் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தைத் தேடிச் செல்லும் பெண்களுக்காகக் காத்திருக்கும் ஆபத்துக்கள் குறித்து சொல்லித் தெரியவேண்டியதில்லை. திறந்தவெளி கழிப்பிடங்களால் ஏற்படுகிற சுகாதார சீர்கேடுகளும் அதிகம். கழிப்பறை இல்லாதது எல்லோருக்குமே சுகாதாரக் கேடு என்றாலும் பெண்களுக்கு இதனால் கெடுதலும் தர்மசங்கடங்களும் அதிகம். சிறுநீரக நோய்தொற்றில் ஆரம்பித்து பல நோய்கள் காத்திருக்கும். இதை எல்லாம் கிராம மக்களுக்குப் பிரச்சாரங்கள் மூலம் எடுத்துச் சொல்லும் வேலையைத்தான் இந்தப் பெண்கள் செய்துவருகிறார்கள்.

சுகாதாரத்தை பரப்பும் பணியையும் சுகாதாரப் புரட்சியையும் நடத்தி வரும் இந்தப் பெண்களின் பணி அளப்பரியது. இவர்கள் நாமக்கல் பகுதியைச் சுற்றியுள்ள கிராமப்புரங்களில் சுகாதாரப் பரப்பாளர்களாக செயல்பட்டு வருகிறார்கள். இந்தப் பெண்கள் கிராமங்களில் வீடு வீடாகச் சென்று அங்குள்ளவர்களிடம் கழிப்பறை பற்றியும் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை இருக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் பேசுகிறார்கள்.

“பேசிப் பேசியே நாங்கள் மாற்றத்தை கொண்டுவருகிறோம்” என்கிறார் அமுதா. “ஆரம்பத்தில் இது ரொம்பக் கடினமாக இருந்தது” என்று சொல்கிறார் நாமக்கல் மாவட்டம் திப்ரமஹாதேவி கிராமத்தைச் சேர்ந்த பானு. “என்னதான் குழந்தைகளிடம் பேசினாலும் பெற்றோரை ஒப்புக்கொள்ள வைப்பது கொஞ்சம் கஷ்டமான வேலைதான்” என்கிறார் அவர்.

சாதிக்கும் கூட்டமைப்பு

இந்தக் கிராமங்களில் பெண்கள் சுயஉதவி குழுக்கள் போல ‘பெண்கள் சொசைட்டி’ ஏற்படுத்த இந்தப் பெண்கள் முயற்சி எடுக்கிறார்கள். ‘சானிடேஷன் கூட்டமைப்பு’ என்று இந்தக் குழுவுக்கு பெயர். அதன் மூலம் மாதம்தோறும் பணம் சேமித்து, அந்தப் பணத்தில் கழிப்பறை கட்ட அறிவுறுத்துகிறார்கள். அத்துடன் லீஃப் சொசைட்டி போன்ற அமைப்புகள் கழிப்பறை கட்ட அவர்களுக்குக் கடன் வசதியைப் பெற்றுத் தருகின்றன.

வாட்டர் அண்ட் சானிடேஷன் ப்ரோமொட்டர்கள் என்று இவர்களுக்குப் பெயர். இந்தப் பெண்களின் துணையோடு சாணார் புதூரில் இது வரை 68 கழிப்பறைகள் லீஃப் சொசைட்டி சார்பில் கட்டப்பட்டிருக்கின்றன. திப்ரமஹாதேவி மற்றும் அருகருகே இருக்கும் குக்கிராமங்களில் 200க்கும் அதிகமான கழிப்பறைகள் லீப் சொசைட்டி மூலம் கட்டப்பட்டிருக்கின்றன.

கழிப்பறை மட்டும் கட்டப்பட்டால் போதுமா? அதனை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டுமே. இந்தப் பயிற்சியையும் இந்தப் பெண்கள் அளிக்கிறார்கள்.

லீஃப் சொசைட்டியில் 20 வாட்டர் அண்ட் சானிடேஷன் ப்ரோமொட்டர்கள் இருக்கிறார்கள். “பெண்கள் தாங்கள் சேமிக்கும் பணத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள்தான் வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர கழிப்பறை கட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதில்லை. அதை நாங்கள் மாற்றி வருகிறோம்” என்று சொல்கிறார் லீஃப் சொசைட்டியின் இயக்குநர் எஸ்.எல். சத்திய நேசன்.

பெண்கள் நினைத்தால் எதையும் நடத்திக் காட்டலாம் என்பதை இந்தக் கிராமத்துப் பெண்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

- தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum