Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பாடமாக படித்தும் வசப்படாத ஒரு மொழி!
Page 1 of 1 • Share
பாடமாக படித்தும் வசப்படாத ஒரு மொழி!
நாவை அசைத்தால் எழும் சத்தம் மட்டுமே தெரிந்த சிசு, மெதுமெதுவாகச் சேர்த்து நாவை அசைப்பதில் வெளிவரும் சொல், மெல்ல வாக்கியமாகி, அடுத்து தொடர்ச்சியாக பேச ஆரம்பிப்பது எத்தனை அற்புத விஷயம்! ‘மொழியில் என்ன இருக்கிறது? உணர்வுகள்தான் முக்கியம்’ என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், எத்தனை பேரால் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்த முடிகிறது? சரியாக உள்வாங்கிக் கொள்ள தெரிகிறது? நாம் உணர்வதை, ரசிப்பதை, வேண்டுவதை நம்மைச் சுற்றி உள்ளோரிடம் தொடர்புகொள்ள மொழி எத்தனை அவசியம் நமக்கு!
நாம் பேசப் பழகிய மொழியிலேயே சிந்திக்கத் தொடங்குகிறோம். பிழையில்லாமல் பேசவும் எழுதவும் பழகிய பிறகு, கூடுதலாக ஒன்றிரண்டு மொழிகள் தெரிந்து கொண்டால் நல்லது என்பதை, பிறரைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறோம். ஆங்கிலம் ஒரு பாடமாக கல்லூரி வரை தொடர்ந்தாலும், சிலர் ஆங்கில வழியிலேயே கற்று தேர்ந்திருந்தாலும், பேசுவதற்கான பயிற்சி இல்லாததால், எத்தனையோ பட்டதாரிகள் இன்றும் ஆங்கிலத்தில் பேசத் தடுமாறுவதைப் பார்த்திருக்கலாம். ஆங்கிலத்தைப் பொறுத்த வரை அதை சரியாகப் பேச வேண்டும் என்ற ஆர்வமும் விருப்பமும் இல்லாதவர்கள் நம்மில் குறைவு. ஆனாலும், ஆசையைத் தாண்டி, அதெல்லாம் மிகக் கடினம் என்ற அச்சத்தால், ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சி வகுப்புகள் வெற்றிகரமாக நடைபெறுகின்றன.
ஆரம்பப் பள்ளியிலே எளிமையாக சொல்லிக் கொடுத்துவிட்டால், மேல் வகுப்புக்கு செல்லும் பொழுது எளிதாக இருக்கும். பத்தாம் வகுப்பில் ஆங்கில இலக்கணம் புரியாமல் மாணவியர் விழித்தால், ‘இதெல்லாம் ஆறாம் வகுப்பிலேயே படித்திருக்க வேண்டும்’ என்ற தகவலுடன், அவர் நடத்த வேண்டிய பாடத்தை மட்டும் ஆசிரியை எடுப்பார். சொல்லிக் கொடுத்ததை மனனம் செய்து தவறில்லாமல் எழுதி மதிப்பெண்கள் பெறுதலே முக்கிய கடமையாக இருந்ததில், எங்கே ஆங்கிலத்தில் பேசிப் பழகுவது?பி.ஏ. இரண்டாம் வருடம் ஆங்கிலப் பாடம் எடுத்த வனஜா மேடம் சொல்லிக் கொடுத்தப் பிறகுதான் பள்ளிக்கூடத்தில் தெரிந்திருக்க வேண்டிய இலக்கணம் ஓரளவுக்கு கல்லூரியில் தெரிய வந்தது.
தினந்தோறும் வருகின்ற ஒவ்வொரு பாடவேளையிலும், எளிமையான ஆங்கில வாக்கியங்களை உபயோகித்து பாடங்களை சொல்லிக் கொடுப்பார். கல்லூரியில் சலிப்புற வைக்காத ஓரிரு வகுப்புகளில் அவருடையதும் ஒன்று. கொஞ்சமும் கோபப்படத் தெரியாத மனுஷி. ஒருமுறை வகுப்புத் தேர்வில் கட்டுரை எழுத பேப்பர் கொண்டு போகாததால், சரோஜினி அவளது பர்ஸிலிருந்த, எப்போதோ எட்டாக மடிக்கப்பட்ட பேப்பரை தந்தாள். ‘இதாவது கிடைத்ததே’ என்று ஒழுங்காக அதன் முனைகளை நீவி விட்டு தலைப்பை எழுதும் பொழுது, சரியாக அருகில் வந்தவர், ‘இதை இதுக்கு மேல மடிக்க முடியலையா’ என்று கோபமாக ஆங்கிலத்தில் கேட்டார். சற்றுத் தயங்கி, ‘இந்த டெஸ்ட் கூட நீங்க சொல்லித்தானே எழுதப் போறேன்... என்னைக்கு உங்க பேச்சை மீறி இருக்கேன்.
அடுத்த தடவை உங்க மனசு போல பேப்பர் இருக்கும்’ என்றதும் புன்முறுவல் பூத்தபடி, ‘சரி, இதை இங்கிலீஷ்ல சொல்லு’ என்றார். ‘ஐயோ, ரொம்ப நேரம் ஆகும், நான் சீக்கிரம் எழுதி முடிக்கணும் மேடம், பீரியட் வேற முடிஞ்சிரும். பின்னால, மடிச்ச பேப்பர்ல எழுதிட்டு இருக்காங்க... அங்க போய் பாருங்க’ என்று நழுவி உட்கார்ந்து எழுத ஆரம்பித்துவிட்டேன் (வகுப்புப் தேர்வுக்கு எல்லாம் தாள்களை இணைக்க ஸ்டாப்ளர், குண்டூசி, ட்வைன் நூல் எல்லாம் கொண்டு போகும் பழக்கமில்லை. பேப்பர் கொண்டு போவதே பெரிது :- இந்த நேரங்களில், அபூர்வமாக இரண்டு, மூன்று தாள்கள் வந்துவிட்டால், இணைப்பதற்கு அன்று சிக்குகின்ற துப்பட்டா அல்லது தாவணியின் நுனியிலிருந்து நூலை இழுத்து, சேஃப்டி பின் உதவியால் துளையிட்டு, நூலை துவாரத்தில் நுழைத்துக் கட்டி இருக்கிறோம். இதனால்தானோ என்னவோ முக்கியத் தேர்வுகளுக்கு அவர்களே துளையிட்ட தாள்களையும் நூல்களையும் வழங்குகின்றனர் போல!)
கல்லூரியில் 3 வருடங்கள் படித்து முடித்த பிறகும் ஆங்கிலத்தில் பேச பயங்கரத் தயக்கம். பல்கலைக்கழகத்தில் ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ பயிற்சியில் சேர்ந்தேன். தினந்தோறும் 2 மணி நேரங்கள் என 2 மாதங்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற ஆங்கில பேராசிரியர் மூவர் பாடம் எடுத்தனர். அங்கு என்னைத் தவிர அனைவரும் வயதில் பெரியவர்கள்... சிலர் முக்கியப் பணியில் இருந்தவர்கள். முதல் சில நாட்களிலேயே எளிய வாக்கியங்களைத் தொடர்ச்சியாக பேசுவதற்கு கொடுத்தப் பயிற்சி ஓரளவு நம்பிக்கையைக் கொடுத்தது. அடுத்தடுத்து வந்த நாட்களில் குழு விவாதம், கேள்வி-பதில் என்று சமாளிக்கக்கூடிய அளவில் எங்களை தயார்படுத்தியது. அங்கும் அத்தனை அன்பான ஆசிரியர்கள். மனம் போல கேட்கும் அத்தனைக் கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளிப்பர்.
ஒரு முறை பேராசிரியர், ‘‘‘மே ஐ நோ யுவர் நேம் ப்ளீஸ்’ என்றுதான் ஒருவரின் பெயரைக் கேட்க வேண்டும். ‘வாட் இஸ் யுவர் நேம்’ என்றால் அதிகாரமாக கேட்பது போல இருக்கும்’’ என்றார். ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் சரிதான்... உலகத்தையே ஆட்டிப் படைத்தவன் பணிவாக மொழியை உபயோகித்தான் என்பதை ஏற்றுக்கொள்ள அப்போது எரிச்சலாக இருந்தது. செய்வதை எல்லாம் செய்துவிட்டு பெயர் கேட்கும் வினாக்களில் மட்டும், ஏன் இத்தனைப் பணிவை வைத்தார்கள் என நினைத்தேன். தொடர்ச்சியாக இதே போன்று சில கேள்விகளை உதாரணத்துடன் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில், ‘வாட் இஸ் யுவர் நேம்’ என்பதை பணிவான தொனியில் கேட்டும், ‘மே ஐ நோ யுவர் நேம் ப்ளீஸ்’ என்பதை சற்று கடுமையான ஏற்ற இறக்கத்தில் கேட்டவாறே, ‘இப்போ எது சார் பெட்டர்’ என்றேன். சிரித்துக்கொண்டே, ‘இப்படி எல்லாம் பேசக்கூடாது... அது அவங்க லாங்குவேஜ், அவங்க வச்சு இருக்கிற முறைப்படிதானே பேசணும்’ என்றார்.
அந்த காலகட்டத்தில் வீட்டில் மாலைப்பொழுதில் குழந்தைகளுக்கு ட்யூஷன் எடுத்துக் கொண்டிருந்தேன். எனக்குக் கொடுக்கப்பட்ட பாடங்களை வகைப்படுத்தி, அடிப்படையாக தெரிந்தவற்றை என் தோழி லதாவுக்கு சொல்லிக் கொடுத்தேன். ஒரு சில மாதங்களில் இரண்டு பேரும் வீட்டில் சந்திக்கும் நேரங்களில் எல்லாம் ஆங்கிலத்தில் மெதுமெதுவாக உரையாடத் தொடங்கினோம். இலக்கணப்பிழைகள் அவ்வப்பொழுது தலை நீட்டிக் கொண்டுதான் இருந்தன. என் தம்பி, ‘நமக்கு தப்பு கண்டுபிடிக்கத் தெரியாதுனு ரெண்டு பேரும் தைரியமா உட்கார்ந்து மணிக்கணக்கில இங்கிலீஷ்ல பேசறதை பாருங்கம்மா’ என்று கிண்டல் செய்து கொண்டிருப்பான். பதிலுக்கு ‘நான் சைக்கிள் ஓட்டக் கத்துக் கொடுத்தவன் எல்லாம் என்னை கேலி பண்றான்’ என்று ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருப்பேன்.
அடுத்தடுத்த பயிற்சி வகுப்புகள் சென்று, தொடர்ந்து கற்ற பின் கீழைநாடு ஒன்றில் ஆங்கில ஆசிரியையாக சில ஆண்டுகள் பணியாற்றிய லதா, ஐந்து வருடங்கள் முன்பு திருமணம் செய்து கொண்டு இப்போது ஊட்டியில் வசிக்கிறார். அங்கும், ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கிறார். அது சரி... உன் தோழி ஆசிரியையாக பணியாற்றத்தான் ஆங்கிலம் உதவியதா என்றால்... அதற்கும் உதவியது இணையத்துக்கு வந்த புதிதில் ஆங்கிலம் பெரிதும் கை கொடுத்தது. வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா செல்லும் போது, எத்தனையோ முறை அங்குள்ளவற்றை தெரிந்து கொள்ள, அவர்களுடனான தொடர்பு மொழியாக, ஆங்கிலம் பயன்பட்டு இருக்கிறது. கூடுதலாக இன்னொரு மொழியில் நம்மால் பேச முடியும் என்பது நம்மை நாமே பெருமையுடன் பார்க்கச் செய்கிறது. துணிச்சல், தன்னம்பிக்கையின் அளவு அதிகரிக்கிறது. எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் திறனைக் கூட்டுகிறது. நம் பார்வையையும் சற்று விசாலமாக்குகிறது.
- தினகரன்
நாம் பேசப் பழகிய மொழியிலேயே சிந்திக்கத் தொடங்குகிறோம். பிழையில்லாமல் பேசவும் எழுதவும் பழகிய பிறகு, கூடுதலாக ஒன்றிரண்டு மொழிகள் தெரிந்து கொண்டால் நல்லது என்பதை, பிறரைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறோம். ஆங்கிலம் ஒரு பாடமாக கல்லூரி வரை தொடர்ந்தாலும், சிலர் ஆங்கில வழியிலேயே கற்று தேர்ந்திருந்தாலும், பேசுவதற்கான பயிற்சி இல்லாததால், எத்தனையோ பட்டதாரிகள் இன்றும் ஆங்கிலத்தில் பேசத் தடுமாறுவதைப் பார்த்திருக்கலாம். ஆங்கிலத்தைப் பொறுத்த வரை அதை சரியாகப் பேச வேண்டும் என்ற ஆர்வமும் விருப்பமும் இல்லாதவர்கள் நம்மில் குறைவு. ஆனாலும், ஆசையைத் தாண்டி, அதெல்லாம் மிகக் கடினம் என்ற அச்சத்தால், ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சி வகுப்புகள் வெற்றிகரமாக நடைபெறுகின்றன.
ஆரம்பப் பள்ளியிலே எளிமையாக சொல்லிக் கொடுத்துவிட்டால், மேல் வகுப்புக்கு செல்லும் பொழுது எளிதாக இருக்கும். பத்தாம் வகுப்பில் ஆங்கில இலக்கணம் புரியாமல் மாணவியர் விழித்தால், ‘இதெல்லாம் ஆறாம் வகுப்பிலேயே படித்திருக்க வேண்டும்’ என்ற தகவலுடன், அவர் நடத்த வேண்டிய பாடத்தை மட்டும் ஆசிரியை எடுப்பார். சொல்லிக் கொடுத்ததை மனனம் செய்து தவறில்லாமல் எழுதி மதிப்பெண்கள் பெறுதலே முக்கிய கடமையாக இருந்ததில், எங்கே ஆங்கிலத்தில் பேசிப் பழகுவது?பி.ஏ. இரண்டாம் வருடம் ஆங்கிலப் பாடம் எடுத்த வனஜா மேடம் சொல்லிக் கொடுத்தப் பிறகுதான் பள்ளிக்கூடத்தில் தெரிந்திருக்க வேண்டிய இலக்கணம் ஓரளவுக்கு கல்லூரியில் தெரிய வந்தது.
தினந்தோறும் வருகின்ற ஒவ்வொரு பாடவேளையிலும், எளிமையான ஆங்கில வாக்கியங்களை உபயோகித்து பாடங்களை சொல்லிக் கொடுப்பார். கல்லூரியில் சலிப்புற வைக்காத ஓரிரு வகுப்புகளில் அவருடையதும் ஒன்று. கொஞ்சமும் கோபப்படத் தெரியாத மனுஷி. ஒருமுறை வகுப்புத் தேர்வில் கட்டுரை எழுத பேப்பர் கொண்டு போகாததால், சரோஜினி அவளது பர்ஸிலிருந்த, எப்போதோ எட்டாக மடிக்கப்பட்ட பேப்பரை தந்தாள். ‘இதாவது கிடைத்ததே’ என்று ஒழுங்காக அதன் முனைகளை நீவி விட்டு தலைப்பை எழுதும் பொழுது, சரியாக அருகில் வந்தவர், ‘இதை இதுக்கு மேல மடிக்க முடியலையா’ என்று கோபமாக ஆங்கிலத்தில் கேட்டார். சற்றுத் தயங்கி, ‘இந்த டெஸ்ட் கூட நீங்க சொல்லித்தானே எழுதப் போறேன்... என்னைக்கு உங்க பேச்சை மீறி இருக்கேன்.
அடுத்த தடவை உங்க மனசு போல பேப்பர் இருக்கும்’ என்றதும் புன்முறுவல் பூத்தபடி, ‘சரி, இதை இங்கிலீஷ்ல சொல்லு’ என்றார். ‘ஐயோ, ரொம்ப நேரம் ஆகும், நான் சீக்கிரம் எழுதி முடிக்கணும் மேடம், பீரியட் வேற முடிஞ்சிரும். பின்னால, மடிச்ச பேப்பர்ல எழுதிட்டு இருக்காங்க... அங்க போய் பாருங்க’ என்று நழுவி உட்கார்ந்து எழுத ஆரம்பித்துவிட்டேன் (வகுப்புப் தேர்வுக்கு எல்லாம் தாள்களை இணைக்க ஸ்டாப்ளர், குண்டூசி, ட்வைன் நூல் எல்லாம் கொண்டு போகும் பழக்கமில்லை. பேப்பர் கொண்டு போவதே பெரிது :- இந்த நேரங்களில், அபூர்வமாக இரண்டு, மூன்று தாள்கள் வந்துவிட்டால், இணைப்பதற்கு அன்று சிக்குகின்ற துப்பட்டா அல்லது தாவணியின் நுனியிலிருந்து நூலை இழுத்து, சேஃப்டி பின் உதவியால் துளையிட்டு, நூலை துவாரத்தில் நுழைத்துக் கட்டி இருக்கிறோம். இதனால்தானோ என்னவோ முக்கியத் தேர்வுகளுக்கு அவர்களே துளையிட்ட தாள்களையும் நூல்களையும் வழங்குகின்றனர் போல!)
கல்லூரியில் 3 வருடங்கள் படித்து முடித்த பிறகும் ஆங்கிலத்தில் பேச பயங்கரத் தயக்கம். பல்கலைக்கழகத்தில் ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ பயிற்சியில் சேர்ந்தேன். தினந்தோறும் 2 மணி நேரங்கள் என 2 மாதங்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற ஆங்கில பேராசிரியர் மூவர் பாடம் எடுத்தனர். அங்கு என்னைத் தவிர அனைவரும் வயதில் பெரியவர்கள்... சிலர் முக்கியப் பணியில் இருந்தவர்கள். முதல் சில நாட்களிலேயே எளிய வாக்கியங்களைத் தொடர்ச்சியாக பேசுவதற்கு கொடுத்தப் பயிற்சி ஓரளவு நம்பிக்கையைக் கொடுத்தது. அடுத்தடுத்து வந்த நாட்களில் குழு விவாதம், கேள்வி-பதில் என்று சமாளிக்கக்கூடிய அளவில் எங்களை தயார்படுத்தியது. அங்கும் அத்தனை அன்பான ஆசிரியர்கள். மனம் போல கேட்கும் அத்தனைக் கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளிப்பர்.
ஒரு முறை பேராசிரியர், ‘‘‘மே ஐ நோ யுவர் நேம் ப்ளீஸ்’ என்றுதான் ஒருவரின் பெயரைக் கேட்க வேண்டும். ‘வாட் இஸ் யுவர் நேம்’ என்றால் அதிகாரமாக கேட்பது போல இருக்கும்’’ என்றார். ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் சரிதான்... உலகத்தையே ஆட்டிப் படைத்தவன் பணிவாக மொழியை உபயோகித்தான் என்பதை ஏற்றுக்கொள்ள அப்போது எரிச்சலாக இருந்தது. செய்வதை எல்லாம் செய்துவிட்டு பெயர் கேட்கும் வினாக்களில் மட்டும், ஏன் இத்தனைப் பணிவை வைத்தார்கள் என நினைத்தேன். தொடர்ச்சியாக இதே போன்று சில கேள்விகளை உதாரணத்துடன் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில், ‘வாட் இஸ் யுவர் நேம்’ என்பதை பணிவான தொனியில் கேட்டும், ‘மே ஐ நோ யுவர் நேம் ப்ளீஸ்’ என்பதை சற்று கடுமையான ஏற்ற இறக்கத்தில் கேட்டவாறே, ‘இப்போ எது சார் பெட்டர்’ என்றேன். சிரித்துக்கொண்டே, ‘இப்படி எல்லாம் பேசக்கூடாது... அது அவங்க லாங்குவேஜ், அவங்க வச்சு இருக்கிற முறைப்படிதானே பேசணும்’ என்றார்.
அந்த காலகட்டத்தில் வீட்டில் மாலைப்பொழுதில் குழந்தைகளுக்கு ட்யூஷன் எடுத்துக் கொண்டிருந்தேன். எனக்குக் கொடுக்கப்பட்ட பாடங்களை வகைப்படுத்தி, அடிப்படையாக தெரிந்தவற்றை என் தோழி லதாவுக்கு சொல்லிக் கொடுத்தேன். ஒரு சில மாதங்களில் இரண்டு பேரும் வீட்டில் சந்திக்கும் நேரங்களில் எல்லாம் ஆங்கிலத்தில் மெதுமெதுவாக உரையாடத் தொடங்கினோம். இலக்கணப்பிழைகள் அவ்வப்பொழுது தலை நீட்டிக் கொண்டுதான் இருந்தன. என் தம்பி, ‘நமக்கு தப்பு கண்டுபிடிக்கத் தெரியாதுனு ரெண்டு பேரும் தைரியமா உட்கார்ந்து மணிக்கணக்கில இங்கிலீஷ்ல பேசறதை பாருங்கம்மா’ என்று கிண்டல் செய்து கொண்டிருப்பான். பதிலுக்கு ‘நான் சைக்கிள் ஓட்டக் கத்துக் கொடுத்தவன் எல்லாம் என்னை கேலி பண்றான்’ என்று ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருப்பேன்.
அடுத்தடுத்த பயிற்சி வகுப்புகள் சென்று, தொடர்ந்து கற்ற பின் கீழைநாடு ஒன்றில் ஆங்கில ஆசிரியையாக சில ஆண்டுகள் பணியாற்றிய லதா, ஐந்து வருடங்கள் முன்பு திருமணம் செய்து கொண்டு இப்போது ஊட்டியில் வசிக்கிறார். அங்கும், ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கிறார். அது சரி... உன் தோழி ஆசிரியையாக பணியாற்றத்தான் ஆங்கிலம் உதவியதா என்றால்... அதற்கும் உதவியது இணையத்துக்கு வந்த புதிதில் ஆங்கிலம் பெரிதும் கை கொடுத்தது. வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா செல்லும் போது, எத்தனையோ முறை அங்குள்ளவற்றை தெரிந்து கொள்ள, அவர்களுடனான தொடர்பு மொழியாக, ஆங்கிலம் பயன்பட்டு இருக்கிறது. கூடுதலாக இன்னொரு மொழியில் நம்மால் பேச முடியும் என்பது நம்மை நாமே பெருமையுடன் பார்க்கச் செய்கிறது. துணிச்சல், தன்னம்பிக்கையின் அளவு அதிகரிக்கிறது. எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் திறனைக் கூட்டுகிறது. நம் பார்வையையும் சற்று விசாலமாக்குகிறது.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|