தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இயற்கைக்கு நெருக்கமான கட்டிடக் கலை

View previous topic View next topic Go down

இயற்கைக்கு நெருக்கமான கட்டிடக் கலை Empty இயற்கைக்கு நெருக்கமான கட்டிடக் கலை

Post by நாஞ்சில் குமார் Sat Nov 01, 2014 10:55 pm

இயற்கைக்கு நெருக்கமான கட்டிடக் கலை 2w6zafo

உலகில் அழிக்கப்படும் இயற்கை வளங்களில் 45 சதவீதம் கட்டுமானப் பணிகளுக்காகவே சுரண்டப் படுகின்றன. கட்டுமானத் துறை அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான வழி, இயற்கைக்கு நெருக்கமான பசுமைக் கட்டிடக் கலையைப் பின்பற்றுவதுதான்.

பசுமைக் கட்டிடம் என்பது நமது பாரம்பரியக் கட்டிடக் கலையால் உருவாக்கப்படுவதுதான்; உள்ளூர்த் தொழில்நுட்பத்துடன் உள்ளூர்ப் பொருட்களைப் பயன்படுத்திக் கட்டுவது. நவீனக் கட்டிடக் கலை என்ற பெயரில் இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்கு எதிரானதாக இந்தக் கட்டிடக் கலையை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம்.

இம்மாதிரியான பசுமைக் கட்டிடக் கலையைப் பயன்படுத்தி, அந்தோணி ராஜ் என்பவர் கட்டிடங்களை உருவாக்கி வருகிறார். பசுமைக் கட்டிடக் கலையின் முன்னோடியான லாரி பேக்கரின் மாணவர்கள் உட்பட இத்துறையில் ஆர்வம் மிக்கவர்களுடன் இணைந்து, பாரம்பரியக் கட்டிடக் கலையை மீட்டெடுத்து வருகிறார் இவர்.

பசுமைக் கட்டிடம் குறித்துப் பேசும்போது, “இந்தியாவில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு கட்டிடக் கலைப் பாரம்பரியம் இருக்கும். கேரளாவிலும், குஜராத்திலும் மரப் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் இருக்கும்.

அங்கு மரவேலை செய்யும் தச்சர்தான் பிரதான பங்களிப்பைச் செய்வார்.

ஊட்டி போன்ற மலைப்பகுதிகளுக்கு வேறு மாதிரியான கட்டிடக் கலை தேவைப்படும். மலைப் பகுதி, சமவெளி என வாழ்க்கை முறைக்கு ஏற்ற மாதிரியான கட்டிடக்கலைதான் நமக்கு அவசியம். ஆனால் நாம் இன்று எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான கட்டிடக் கலையைப் பயன்படுத்தி வருகிறோம்” என்றார்.

சிமெண்ட் எனும் அரக்கன்

1930-ம் ஆண்டுகளுக்குப் பிறகு நமது நாட்டில் சிமெண்ட் பரவலான பயன்பாட்டுக்கு வந்தது. சிமெண்டின் பயன்பாடு நமது பாரம்பரியக் கட்டிடக் கலையை அழிக்கத் தொடங்கியது. சிமெண்ட் எந்தப் பொருளுடன் சேர்ந்தாலும் அதை அழித்து விடும். சிமெண்ட் பயன்படுத்திய ஒரு கட்டிடத்தை இடித்தால், அதிலிருந்து எந்தப் பொருட்களையும் மறுசுழற்சி செய்ய முடியாது. நமக்கு அருகில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தி கட்டிடத்தை உருவாக்குவது மலிவானது; இயற்கை வளங்களைப் பாதுகாக்கக்கூடியது. உதாரணமாக சிமெண்டிற்குப் பதிலாகக் களிமண்ணைப் பயன்படுத்திக் கட்டலாம்.

“நாங்கள் களிமண்ணைக் குழைத்துக் கட்டிடம் கட்டிவருகிறோம். ஆனால், சிமெண்டை மிகக் குறைந்த அளவாக 5 சதவீதமே பயன்படுத்துகிறோம். இதனால், கட்டுமானச் செலவும் குறைகிறது. கூரைகளில், மண் ஓடுகளைக் கவிழ்த்து அதன்மீது கலவைகளைக் கொட்டிப் பலப்படுத்துகிறோம். இதனால், மேற்கூரையில் சிமெண்டுக்கான பயன்பாடு கணிசமாகக் குறைகிறது. மேலும் கான்கிரீட் தூண் அமைப்பதில்லை. ஆனால் பாருங்கள்... துருதிருஷ்டவசமாக, கான்கிரீட் தூண் அமைத்தால்தான் தமிழகத்தில் கட்டிட அனுமதியே கிடைக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் மூன்று மாடிவரை கான்கிரீட் தூண் அமைக்கக் கூடாது என்ற சட்டமே உள்ளது” என்கிறார் அந்தோணி.

நவீனக் கட்டிடங்களைக் காட்டிலும் பாரம்பரிய முறையில் கட்டப்பட்ட கட்டிடங்கள் நூற்றாண்டுகளைக் கடந்து கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன. களிமண்ணைக் குழைத்துக் கட்டும்போது, அதற்கு வெளிப்பூச்சு தேவைப்படாது. இதனால் சிமெண்ட் பயன்பாட்டை முழுதாகத் தவிர்க்க முடியும். சிமெண்ட் பயன்பாட்டைக் குறைப்பதால் மணலுக்கான தேவையும் இல்லாமல் போகும். இதனால், இயற்கை வளம் பாதுகாக்கப்படுகிறது; கட்டுமானச் செலவும் குறைகிறது.

களிமண் கிடைக்காத இடத்தில் அங்கு அதிகமாகக் கிடைக்கக்கூடிய பொருளைப் பயன்படுத்துகிறார்கள். அதாவது செடி, கொடி தாவரங்களை மட்க வைத்தும்கூட பயன்படுத்தலாம். இம்மாதிரி அந்த நிலப் பகுதியில் கிடைக்கக்கூடிய இயற்கையான பொருள்களை வைத்துக் கட்டப்படுவதால் மண் சார்ந்த கட்டிடக்கலை என இதைச் சொல்கிறார்கள்.

மேலும் பசுமைக் கட்டிடக் கலை போதிய வெளிச்சமும், காற்றும் வரும் வகையில் கட்டப்படும். இதனால் மின்சாரத் தேவையும் குறையும்.

அடுக்குமாடிகளும் கட்டலாம்

“மண் சார்ந்த கட்டிடக்கலையில், மிக உயரமான அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் கட்ட முடியும்” என்கிறார் அந்தோணி. தற்போது தாம்பரம் அருகே உருவாக்கிவரும் வேத சாலையை அடுக்குமாடிக் குடியிருப்பாகவே அமைத்து வருகிறார். மின் இணைப்புகளைக் கட்டிடத்திற்குள் புதைத்த நிலையில் இவர் அமைப்பதில்லை. கட்டிடத்தில் மேற்பரப்பில் அமைத்திருக்கிறார். இம்மாதிரி அமைப்பதால் எதிர்காலத்தில் தேவையான மாற்றங்களை எளிதில் செய்ய இயலும்.

மேலும் சுவர்களின் உட்புறத்தில் மேல்பூச்சும் பூசவில்லை. இது கட்டிடத்திற்குப் புதுவகையான அழகைக் கொடுக்கிறது. பனைமரங்களைக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்துவது அரிதாகி விட்ட சூழலில் அந்தோணி பழைய பனைமரங்களை வாங்கி, அதைச் செம்மைப்படுத்திப் பயன்படுத்துகிறார்.

“என்னைப் பொறுத்தவரை கட்டிடத்தின் 90 சதவீதம் பயன்பாட்டுக்கானது. 10 சதவீதம் மட்டுமே அலங்கார உபயோகத்துக்கானது” என்கிறார் அவர். அதுபோல தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரிப் பதற்கான அமைப்பையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல், சமையலறை, குளியலறை போன்றவற்றில் பயன்படுத்திய நீரையும் மறுசுழற்சி முறையில் சுத்திகரித்துப் பயன்படுத்துகிறார்கள்.

மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் தோட்டத்திற்கும் இதர பயன் பாட்டுக்கும் திருப்பப்படுகிறது. ஆக, இங்கு தண்ணீர் ஜீரோ வேஸ்டேஜ் முறையில் மறுசுழற்சி செய்யப்படுவதால், வடிகால் வசதிகூட தேவையில்லை.

இந்தக் கட்டிடம் கட்டு வதற்காக கட்டுமானப் பகுதியில் இருந்த மரங்களை வெட்டாமல் மரங்களின் ஊடேயே கட்டிடத்தை உருவாக்கியிருக்கிறார். உண்மையான பசுமைக் கட்டிடம் என்பது இதுதான்.

- தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

இயற்கைக்கு நெருக்கமான கட்டிடக் கலை Empty Re: இயற்கைக்கு நெருக்கமான கட்டிடக் கலை

Post by முரளிராஜா Sun Nov 02, 2014 2:17 pm

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum