Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
துப்பாக்கி - சினிமா விமர்சனம்
Page 1 of 1 • Share
துப்பாக்கி - சினிமா விமர்சனம்
இந்த ஆண்டின் இறுதியில் வந்திருக்கும் இன்னுமொரு வெற்றிப் படம். ஏழாம் அறிவில் விட்ட பெயரை இதில் மீண்டும் பெற்றிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ஒரு மூட்டை லாஜிக் மீறல்கள் இருந்தாலும் அதனை யோசிக்க வைக்காமல் கொண்டு சென்ற திரைக்கதையினால் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் தியேட்டர்களில் உச்சத்திற்குச் சென்றுள்ளது..! வெல்டன் துப்பாக்கி டீம்..!
முதல் பாராட்டு விஜய்க்குத்தான்.. எத்தனையோ நல்ல கேரக்டர்களை தனது ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்று சொல்லி நிராகரித்தவர். 'தூள்' படத்தில் இவரே நடித்திருக்கலாம். 'சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே', 'முகமூடி'யிலும் நடித்திருக்கலாம்.. தனக்கான வேடமில்லை என்று தவிர்த்திருக்கிறார். ஆனால் நடித்திருந்தால் விஜய்யின் கேரியருக்கு மிக முக்கியமான படங்களாக இவைகள் இருந்திருக்கலாம். இந்தப் படத்திலும் நடிக்காமல் போயிருந்தால் விஜய்க்குத்தான் நஷ்டமாகியிருக்கும்.. நல்லவேளை.. ஒத்துக் கொண்டு நடித்தமைக்கு முதல் வாழ்த்துகள் அவருக்கே..!
ராணுவத்தில் இருந்து விடுமுறைக்காக மும்பை வரும் ஜெகதீஷ் என்னும் கேப்டனான விஜய், பேருந்தில் குண்டு வைத்த தீவிரவாதியை தப்ப விட்டு அவனது அப்போதைய திட்டத்தை மொத்தமாக அழிக்கிறார். இதனால் வெகுண்டெழும் ஒரிஜினல் சூத்ரதாரி மும்பைக்கே பறந்து வந்து விஜய்யை தீர்த்துக் கட்டப் பார்க்க.. சூப்பர் ஹீரோ விஜய் எப்படி அவரை முறியடித்தார் என்பதுதான் இந்த 2.55 நிமிட படத்தின் கதைச் சுருக்கம்..!
முதல் அரை மணி நேரம் காஜல் அகர்வாலே நம்மைக் கட்டிப் போடுகிறார். அடுத்து விஜய் துப்பாக்கியை கையில் தூக்கிய நொடியில் இருந்து இறுதிவரையிலும் நம்மை அசையாமல் பார்த்துக் கொண்டவர் திரைக்கதை ஆசிரியரான ஏ.ஆர்.முருகதாஸ்தான்..! பாராட்டுக்கள்..!
விஜய்யின் பெர்பார்மென்ஸ் பல இடங்களில் இயக்குநரால் பளீச்சென்று இருக்கிறது..! என்னதான் நடிப்பு இருந்தாலும் வெளிக் கொணருவது இயக்குநர்கள்தானே..!? காஜல் அகர்வாலுடனான காதல் காட்சிகளில் விஜய் பழைய கில்லி காலத்துக்கே போனதுபோல் தோன்றுகிறது..! போட்டு வாங்குவதுபோல் சிகரெட் பழக்கம், குடிப் பழக்கத்தை காஜலிடம் கேட்டு அவர் மூலமாகவே தெரிந்து கொள்வதும்.. காதலை சி்ன்னப்புள்ளத்தனமாக வெளிப்படுத்துவதும் பார்க்கவே க்யூட்டாக இருந்தது..!
கேப்டன் விஜய்யாகவும் பரபரப்பாக பம்பரம் ஆடியிருக்கிறார்.. தீவிரவாதி மருத்துவமனையில் இருந்து தப்பித்து ஓடும்போது கூடவே இவரும் ஓடியபடியே போடும் சண்டைக் காட்சியில் விஜய்யின் ஸ்டைல் ரசிக்க வைக்கிறது..! தங்கைகளை கடத்தியிருக்கும் தளபதி வில்லனிடம் கையை கன்னத்தில் வைத்து சொடக்குப் போட்டுவிட்டு சண்டைக்கு வரும் காட்சியில் பிரிவியூ தியேட்டரே அதிர்ந்தது..! ஐ ஆம் வெயிட்டிங் என்ற காட்சியில் இத்தனை அழுத்தம் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.. இறுதியில் வில்லனிடம் தப்பித்து ஓடும் திட்டத்தோடு அவனை ஏத்திவிடும் விதமாக பேசும் பேச்சில் மாடுலேஷன் விஜய் ரசிகர்களுக்கு செமத்தியான தீனி..! அதுதான் நடக்கப் போகிறது என்று தெரிந்தாலும், அதையும் ரசிக்கும்படியாகவே கொடுத்திருக்கிறார் இயக்குநர்..!
காஜல் வரும் காட்சிகளிலெல்லாம் ஸ்கிரீனே அழகாய் இருக்கிறது.. அண்டார்டிகா, கூகிள் பாடல் காட்சிகளில் அவருடைய நடனம் இளசுகளை ஆட்டம் போடத்தான வைக்கிறது.. அம்மணியின் இந்த தாளம் தப்பாத ஸ்டெப்புகள் தமிழ்ச் சினிமாவி்ல இன்னும் கொஞ்சம் கூடினால் அனுஷ்காவையும் ஓரம்கட்டலாம்..! கோபத்தில் சிந்திச் சிதறும் அந்த திண்டுக்கல் மலைக்கோட்டை போன்ற மூக்கின் மீதான குளோஸப் காட்சிகளெல்லாம் காஜலின் ஸ்பெஷலாட்டி.. “அந்த மேட்டர் பொண்ணே உன்னை வேணாம்னு சொல்லிருச்சே..” என்று சொல்லிக் காட்டி சிரிக்கும்போது காஜலின் சிரிப்பே ஆயிரம் முத்துக்களை சிந்துகிறது..! இறுதியில் நிச்சயத்தார்த்தத்தை நிறுத்திக் கொள்ளும்படி விஜய் சொல்லும் காட்சியில் இந்த ஐஸ்கிரீம் பெண்ணை கண்ணீர் விட வைத்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸுக்கு நமது வன்மையான கண்டனங்கள்..! காஜலைத் தவிர்த்து விஜய்யின் தங்கையாக வருபவரும், ஜெயராம் அழைத்து வரும் மேட்டர் பொண்ணுமே, கேமிராவுக்கு அழகாக இருக்கிறார்கள்..!
ஜெயராம் சம்பந்தப்பட்ட காட்சியின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று ஊகிக்க முடியாமல் கொண்டு போயிருப்பது குட்..! ஆனாலும் இவ்வளவு நீளம் தேவையில்லாதது.. இதனை சற்றுக் குறைத்திருக்கலாம்..! அல்லது முற்றிலுமாகவே நீக்கியிருக்கலாம்..! சத்யன் பரவாயில்லை.. “ஏண்டா உங்க வீட்ல கப்போர்ட்ல வேற எதையும் வைக்க மாட்டீங்களா..?” என்ற அவரது இடித்தலும் நன்று..! ஆனால் இவரது கேரக்டர் ஸ்கெட்ச்சில்தான் ஆயிரமாயிரம் லாஜிக் ஓட்டைகள்.. அதனாலென்ன பரவாயில்லை.. வடிவேலுவையோ, விவேக்கையோ வைத்திருந்தால் கூடுதலாக காட்சிகள் வைக்க வேண்டியிருந்திருக்கும். அவர்களுக்கும் போலீஸ் டிரெஸ் சூட்டாகியிருக்காது.. வேறு வழியில்லை..!
எழுதி இயக்கியிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸுக்கு பின்பு அடுத்து பாராட்டுக்குரியவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்தான்.. பின்னணி இசையில் விளையாடியிருக்கிறார்.. காஜலை பெண் பார்க்க வரும் காட்சியில் அவரது இசையே தனி கேரக்டராகவே இசைக்கிறது.. கேட்கவே ரம்மியமாக இருந்தது.. மருத்துவமனை சண்டை காட்சி.. நாயுடன் ஓடும்போது திடுக்கென்று காட்சி மாற்றத்தில் வரும் இசை.. காஜலுடனான லவ் பிரேக்கிங் காட்சிகள்.. மெயின் வில்லனின் வீட்டில் டிவி பார்க்கும்போது வரும் பின்னணி... குண்டு வெடிப்பின் கோரங்களைக் காட்டும் இசை.. இது போன்ற படங்களில் பின்னணி இசையும் மிக முக்கியம் என்பதை உணர்ந்து செய்திருக்கிறார் இயக்குநர்.. காட்சிகளோடு ஒன்ற வைப்பதில் இந்த இசையும் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறது..! வாழ்த்துகள் ஹாரிஸ் ஸார்..!
ராணுவம், கேப்டன், ராணுவ நுண்ணறிவுப் பிரிவில் ஒரு ஆபீஸர் என்று விஜய்க்கு மகுடங்கள் சூட்டி களத்தில் இறக்கிவிட்டிருந்தாலும், இத்தனை கொலைகள் நடந்தும் மும்பை போலீஸ் அடக்கமாக இருந்திருக்கும் என்று சொல்லியிருப்பது மகா அபத்தம்..! அதிலும் சத்யன் தீவிரவாதிகளை பற்றி விஜய்யிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது பத்து முழம் பூவை காதில் சுற்றுவதற்குச் சமம்..! இப்படி ஒரு சப் இன்ஸ்பெக்டர் இருந்தால் பதவியிறக்கம்தான் கிடைக்குமே ஒழிய, பதவி உயர்வு கிடைக்காது..!
12 தீவிரவாதிகள் கொலை.. ஒரு கூடுதல் கண்காணிப்பாளர் கொலை.. அடுத்தடுத்து ராணுவ வீரர்கள் கொலை.. என்ன செய்யும் மும்பை..? போலீஸோடு இணைந்தே இதனைச் செய்வது போல காட்டியிருந்தாலும் கொஞ்சம் ஒத்துக் கொள்ளலாம்..! விஜய் ரசிகர்கள் தரும் காசு அளவுக்கு மும்பை போலீஸின் வருகை திரைக்கதையில் அழுத்தம் தராது என்று இயக்குநர் நினைத்திருக்கலாம்..! இது ச்சும்மா.. முழுக்க முழுக்க எண்ட்டர்டெயின்மெண்ட் என்று சொல்லியிருந்தால் இதையெல்லாம் கேட்காமலேயே இருந்திருக்கலாம்..!
படத்தின் முடிவில் “அனைத்து ராணுவத்தினருக்கும் இந்தப் படம் சமர்ப்பணம்” என்று டைட்டில் கார்டு போட்டு படத்தை ரொம்பவே சீரியஸாக்கிவிட்டார்கள்..! இதைப் பார்த்து யாராவது ஒரு முன்னாள் ராணுவத்தினர் கேஸ் போடாமல் இருந்தாலே பெரிய விஷயம். நேற்றைக்கு படத்தின் முதல் காட்சி முடிந்தவுடனேயே ஒரு இஸ்லாமிய அமைப்பு படத்தில் இஸ்லாமியர்களையே தீவிரவாதிகளாக உருவகம் செய்திருப்பதாகச் சொல்லி விஜய் வீட்டு முன் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துவிட்டது.. என்ன செய்வது..?
இந்து தீவிரவாதிகளைவிடவும், இஸ்லாமிய தீவிரவாதிகளை பற்றி படமெடுப்பது இந்தியாவில் சுலபம் என்பது சினிமா இயக்குநர்களுக்கு நன்கு தெரியும். அதனால்தான் தைரியமாக எடுக்கிறார்கள்..! இதற்கு இயக்குநரின் பதில், “தொடர் குண்டு வெடிப்புகளில் இஸ்லாமிய தீவிரவாதம்தானே முன்னிலை வகிக்கிறது..” என்பதாகவே இருக்கும் என்பது உறுதி..!
ஆனால், இந்து தீவிரவாதம் பற்றி படமெடுத்து தான் கஷ்டப்பட விரும்பவில்லை என்பதை மறைமுகமாக இயக்குநர் இப்படி ஒத்துக் கொண்டு போவதை நாமும் கனத்த மனதோடு பார்த்துக் கொண்டிருப்போம்..! வேறு வழியில்லை..!
நன்றி உண்மைத்தமிழன் அண்ணன் (www.truetamilans.blogspot.com/)
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: துப்பாக்கி - சினிமா விமர்சனம்
படம் ரொம்ப நல்லாருக்குன்னு எல்லாரும் பேசிகிறாங்க... உறவுகள் யாரேனும் பார்த்தீர்களா?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: துப்பாக்கி - சினிமா விமர்சனம்
துப்பாக்கி விமர்சனம் நன்றி : கேபிள் சங்கர்
முதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா? என்ற கேள்விக்கு இந்த துப்பாக்கி பதில் சொல்லியிருக்கிறது.
மிலிட்டரியில் வேலை பார்க்கும் விஜய் மும்பையில் வசிக்கும் தன் குடும்பத்தினருடன் லீவைக் கழிக்க வருகிறார். வந்த இடத்தில் தீவிரவாதிகள் பாம் வைத்துவிட, அதை வைத்தவனை பிடித்து விசாரிக்கும் போது மும்பையில் தொடர் குண்டு வெடிப்புக்கு ப்ளான் செய்யப்பட்டிருப்பது தெரிந்து அதை விஜய் முறியடிக்கிறார். யார் தன் மிஷனை இப்படி முறியடித்தான் என்று கண்டுபிடிக்க, வில்லன் விஜய்யை தேட, விஜய் வில்லனைத் தேட, முடிவு என்ன ஆனது என்ற சின்ன லைன் தான். அதை பரபர ஆக்ஷனில் பொறி பறக்க விட்டிருக்கிறார்கள்.
விஜய் படம் முழுக்க அண்டர்ப்ளே செய்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். அநாவசிய பஞ்ச் டயலாக் கிடையாது. குத்துப் பாட்டு கிடையாது. ஆனால் படம் முழுவதும் பார்க்க அழகாகவும், ஒரு விதமான குதூகலத்தோடும் இருக்கிறார். தீவிரவாதிகளுடன் மோதும் இடங்களில் ஆக்ஷன் பொறி பறக்கிறது. காஜலுடன் காதல் செய்யும் போது கண்களில் குறும்பு கொப்பளிக்கிறது. ரொம்ப நாள் கழித்து விஜய்யின் நடிப்பை என்ஜாய் செய்து பார்க்க முடிந்தது. ஆனால் ஏனோ தெரியவில்லை கூகுள் பாடல் உட்பட நடனத்தில் பெரிய அளவில் விஜய் ஸ்கோர் செய்யவில்லை என்றே தோன்றுகிறது.
காஜல் அகர்வாலுக்கு தமிழ் சினிமாவின் வழக்கப்படி லூசுப் பெண் கேரக்டர். விஜய்யிடம் முத்தம் கேட்கும் போது லேசாய் கிரங்க வைக்கிறார். மற்றபடி வெறும் டான்ஸிங் டாலாய்த்தான் வருகிறார். சத்யன் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார். வில்லனின் நடிப்பு பெரிதாய் இல்லாவிட்டாலும் திரைக்கதையில் அவருடய கேரக்டருக்கான முக்யத்துவத்தால் பெரிய இம்பாக்ட் கிடைத்துவிடுகிறது.
சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் புதிதாய் ஏதுமில்லாவிட்டாலும் படத்துக்கு தேவையான அளவிற்கு சிறப்பாகவே இருக்கிறது. சண்டைக் காட்சிகளில் ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் நல்ல வேகம். இசை ஹாரிஸ் ஜெயராஜ். இவரிடம் உள்ள இருபது பாடல்களின் டுயூன்களையே இன்னும் எத்தனை படத்திற்குத்தான் போடுவார் என்றே தெரியவில்லை. கூகுள்.. கூகுள் பாடலைத் தவிர சொல்லிக் கொள்கிறார் போல ஏதுமில்லை. குறிப்பாய் பின்னணியிசை வேறு யாரையாவது போட்டு பின்னணியிசை அமைத்திருக்கலாம் முடியலை.
படத்தின் பலமே ஏ.ஆர்.முருகதாஸின் திரைக்கதைதான். ஒரு சின்ன லைனை படு சுவாரஸ்யமாய் சொன்னதுமில்லாமல் வழக்கமான விஜய்யை காட்டாமல் கொஞ்சம் அடக்கி வாசித்துள்ள விஜய்யை காட்டியிருப்பதில் ஜெயித்தும் இருக்கிறார். இடைவேளையில் பன்னிரெண்டு தீவிரவாதிகளை பிடித்துக் கொல்வதிலிருந்து படம் முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல், மேக்கிங்கிலாகட்டும், திரைக்கதையிலாகட்டும் சுறு சுறு விறுவிறு பட்டாசாய் பறக்கிறது. தீவிரவாதிகளை பிடிக்கும் ஐடியா சுவாரஸ்யம். “உயிரை எடுக்கிற அவனுக்கே அவன் உயிரைப் பத்தி கவலப் படாதப்போ.. காப்பாத்துற நான் எதுக்கு ப்யப்படணும்” என்கிற வசனம் ஜிவ்வென இருக்கிறது.
படத்தின் மைனஸ் என்று பார்த்தால் ஆங்காங்கே ஸ்பீட்ப்ரேக்கராய் வரும் பாடல்களும், படத்தின் நீளமும்தான். நீளத்திற்கு காரணம் முதல் பாதியில் வரும் காதல் காட்சியும், ஜெயராமை வைத்து காமெடி என்று நினைத்து வைத்த காட்சிகளும் தான். கிட்டத்தட்ட அந்த காட்சிகளில் தூக்கமே வர ஆரம்பித்துவிட்டது. குறிப்பாய் க்ளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் ஹைஃஸ்பீடில் ஒரு மெலடி தேவையா? அதுவும் ஏற்கனவே கோவில் கேட்ட வெண்பனியே பாடல் ட்யூனில். லாஜிக்கலாய் நிறைய லூப் ஹோல்கள், க்ளைமாக்ஸ் டெம்ப்ளேட் சண்டைக்காட்சி, மோசமான EFX, ஆகியவை இருந்தாலும், வெறும் மசாலாவாய் ஒரு மாஸ் படத்தைக் கொடுக்காமல் வித்யாசமான விஜய்யையும், ஒரு சுவாரஸ்ய ஆக்ஷனையும் தந்திருக்கிற முருகதாஸுக்கு வாழ்த்துகள்.
முதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா? என்ற கேள்விக்கு இந்த துப்பாக்கி பதில் சொல்லியிருக்கிறது.
மிலிட்டரியில் வேலை பார்க்கும் விஜய் மும்பையில் வசிக்கும் தன் குடும்பத்தினருடன் லீவைக் கழிக்க வருகிறார். வந்த இடத்தில் தீவிரவாதிகள் பாம் வைத்துவிட, அதை வைத்தவனை பிடித்து விசாரிக்கும் போது மும்பையில் தொடர் குண்டு வெடிப்புக்கு ப்ளான் செய்யப்பட்டிருப்பது தெரிந்து அதை விஜய் முறியடிக்கிறார். யார் தன் மிஷனை இப்படி முறியடித்தான் என்று கண்டுபிடிக்க, வில்லன் விஜய்யை தேட, விஜய் வில்லனைத் தேட, முடிவு என்ன ஆனது என்ற சின்ன லைன் தான். அதை பரபர ஆக்ஷனில் பொறி பறக்க விட்டிருக்கிறார்கள்.
விஜய் படம் முழுக்க அண்டர்ப்ளே செய்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். அநாவசிய பஞ்ச் டயலாக் கிடையாது. குத்துப் பாட்டு கிடையாது. ஆனால் படம் முழுவதும் பார்க்க அழகாகவும், ஒரு விதமான குதூகலத்தோடும் இருக்கிறார். தீவிரவாதிகளுடன் மோதும் இடங்களில் ஆக்ஷன் பொறி பறக்கிறது. காஜலுடன் காதல் செய்யும் போது கண்களில் குறும்பு கொப்பளிக்கிறது. ரொம்ப நாள் கழித்து விஜய்யின் நடிப்பை என்ஜாய் செய்து பார்க்க முடிந்தது. ஆனால் ஏனோ தெரியவில்லை கூகுள் பாடல் உட்பட நடனத்தில் பெரிய அளவில் விஜய் ஸ்கோர் செய்யவில்லை என்றே தோன்றுகிறது.
காஜல் அகர்வாலுக்கு தமிழ் சினிமாவின் வழக்கப்படி லூசுப் பெண் கேரக்டர். விஜய்யிடம் முத்தம் கேட்கும் போது லேசாய் கிரங்க வைக்கிறார். மற்றபடி வெறும் டான்ஸிங் டாலாய்த்தான் வருகிறார். சத்யன் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார். வில்லனின் நடிப்பு பெரிதாய் இல்லாவிட்டாலும் திரைக்கதையில் அவருடய கேரக்டருக்கான முக்யத்துவத்தால் பெரிய இம்பாக்ட் கிடைத்துவிடுகிறது.
சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் புதிதாய் ஏதுமில்லாவிட்டாலும் படத்துக்கு தேவையான அளவிற்கு சிறப்பாகவே இருக்கிறது. சண்டைக் காட்சிகளில் ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் நல்ல வேகம். இசை ஹாரிஸ் ஜெயராஜ். இவரிடம் உள்ள இருபது பாடல்களின் டுயூன்களையே இன்னும் எத்தனை படத்திற்குத்தான் போடுவார் என்றே தெரியவில்லை. கூகுள்.. கூகுள் பாடலைத் தவிர சொல்லிக் கொள்கிறார் போல ஏதுமில்லை. குறிப்பாய் பின்னணியிசை வேறு யாரையாவது போட்டு பின்னணியிசை அமைத்திருக்கலாம் முடியலை.
படத்தின் பலமே ஏ.ஆர்.முருகதாஸின் திரைக்கதைதான். ஒரு சின்ன லைனை படு சுவாரஸ்யமாய் சொன்னதுமில்லாமல் வழக்கமான விஜய்யை காட்டாமல் கொஞ்சம் அடக்கி வாசித்துள்ள விஜய்யை காட்டியிருப்பதில் ஜெயித்தும் இருக்கிறார். இடைவேளையில் பன்னிரெண்டு தீவிரவாதிகளை பிடித்துக் கொல்வதிலிருந்து படம் முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல், மேக்கிங்கிலாகட்டும், திரைக்கதையிலாகட்டும் சுறு சுறு விறுவிறு பட்டாசாய் பறக்கிறது. தீவிரவாதிகளை பிடிக்கும் ஐடியா சுவாரஸ்யம். “உயிரை எடுக்கிற அவனுக்கே அவன் உயிரைப் பத்தி கவலப் படாதப்போ.. காப்பாத்துற நான் எதுக்கு ப்யப்படணும்” என்கிற வசனம் ஜிவ்வென இருக்கிறது.
படத்தின் மைனஸ் என்று பார்த்தால் ஆங்காங்கே ஸ்பீட்ப்ரேக்கராய் வரும் பாடல்களும், படத்தின் நீளமும்தான். நீளத்திற்கு காரணம் முதல் பாதியில் வரும் காதல் காட்சியும், ஜெயராமை வைத்து காமெடி என்று நினைத்து வைத்த காட்சிகளும் தான். கிட்டத்தட்ட அந்த காட்சிகளில் தூக்கமே வர ஆரம்பித்துவிட்டது. குறிப்பாய் க்ளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் ஹைஃஸ்பீடில் ஒரு மெலடி தேவையா? அதுவும் ஏற்கனவே கோவில் கேட்ட வெண்பனியே பாடல் ட்யூனில். லாஜிக்கலாய் நிறைய லூப் ஹோல்கள், க்ளைமாக்ஸ் டெம்ப்ளேட் சண்டைக்காட்சி, மோசமான EFX, ஆகியவை இருந்தாலும், வெறும் மசாலாவாய் ஒரு மாஸ் படத்தைக் கொடுக்காமல் வித்யாசமான விஜய்யையும், ஒரு சுவாரஸ்ய ஆக்ஷனையும் தந்திருக்கிற முருகதாஸுக்கு வாழ்த்துகள்.
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: துப்பாக்கி - சினிமா விமர்சனம்
முரளிராஜா wrote:உங்க பின்னுட்டத்த நம்பி படம் பார்க்க போகலாமா ஜோர்பா
இந்த பின்னுட்டங்களை நம்பித்தான் நானே படம் பார்க்க முடிவு பண்ணிருக்கேன்
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: துப்பாக்கி - சினிமா விமர்சனம்
இந்த படம் பார்க்க போறேன்னு சொல்லிட்டு போன நம்ம மகா பிரபு இன்னும் வீடு திரும்பலை
Re: துப்பாக்கி - சினிமா விமர்சனம்
தலை தீபாவளி கொண்டாட்டம் இன்னுமா முடியல அவருக்கு :?: :?: :?:முரளிராஜா wrote:இந்த படம் பார்க்க போறேன்னு சொல்லிட்டு போன நம்ம மகா பிரபு இன்னும் வீடு திரும்பலை
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: துப்பாக்கி - சினிமா விமர்சனம்
பொண்ணை ஒழுங்கா கவனிச்சுக்கலைன்னு
மாமியார் வீட்ல அவருக்கு சரி கவனிப்பாம்
இப்ப அவருக்கு கொண்டாட்டமா? திண்டாட்டமா/ நீங்களே சொல்லுங்க
மாமியார் வீட்ல அவருக்கு சரி கவனிப்பாம்
இப்ப அவருக்கு கொண்டாட்டமா? திண்டாட்டமா/ நீங்களே சொல்லுங்க
Re: துப்பாக்கி - சினிமா விமர்சனம்
முரளிராஜா wrote:பொண்ணை ஒழுங்கா கவனிச்சுக்கலைன்னு
மாமியார் வீட்ல அவருக்கு சரி கவனிப்பாம்
இப்ப அவருக்கு கொண்டாட்டமா? திண்டாட்டமா/ நீங்களே சொல்லுங்க
சே...சே.....அவரு ரொம்ப நலவராக இருக்கவேண்டும் ....சந்தோசத்தில் கொண்டாடி ... கொண்டிருப்பார் ..வரும்போது வரட்டும்
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: துப்பாக்கி - சினிமா விமர்சனம்
நீங்க இப்படியெல்லாம் சொன்னா நான் அவர் அழுதுகிட்டே என்கிட்ட சொன்ன விசயத்த சொல்வேன் மட்டும் நினைக்காதிங்க
Re: துப்பாக்கி - சினிமா விமர்சனம்
திருமணம் ஆனா நம்ம எல்லாருக்கும் உள்ள பிரச்னை தானே ...! எனக்கும் தெரியும் .... உங்களுக்கும் புரியும் ..எஸ்முரளிராஜா wrote:நீங்க இப்படியெல்லாம் சொன்னா நான் அவர் அழுதுகிட்டே என்கிட்ட சொன்ன விசயத்த சொல்வேன் மட்டும் நினைக்காதிங்க
யு ஆர் கரெக்ட்
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: துப்பாக்கி - சினிமா விமர்சனம்
பப்ளிக்! பப்ளிக்!ஜோர்பா wrote:திருமணம் ஆனா நம்ம எல்லாருக்கும் உள்ள பிரச்னை தானே ...! எனக்கும் தெரியும் .... உங்களுக்கும் புரியும் ..எஸ்முரளிராஜா wrote:நீங்க இப்படியெல்லாம் சொன்னா நான் அவர் அழுதுகிட்டே என்கிட்ட சொன்ன விசயத்த சொல்வேன் மட்டும் நினைக்காதிங்க
யு ஆர் கரெக்ட்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» சமர் - சினிமா விமர்சனம்
» மன்னாரு - சினிமா விமர்சனம்
» பாகன் – சினிமா விமர்சனம்
» சூது கவ்வும் - சினிமா விமர்சனம்
» எதிர் நீச்சல்-சினிமா விமர்சனம்
» மன்னாரு - சினிமா விமர்சனம்
» பாகன் – சினிமா விமர்சனம்
» சூது கவ்வும் - சினிமா விமர்சனம்
» எதிர் நீச்சல்-சினிமா விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|