தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிங்கிள் ஃபீட்டல் டிமைஸ்’ (single fetal demise)

View previous topic View next topic Go down

சிங்கிள் ஃபீட்டல் டிமைஸ்’ (single fetal demise)   Empty சிங்கிள் ஃபீட்டல் டிமைஸ்’ (single fetal demise)

Post by நாஞ்சில் குமார் Sat Nov 15, 2014 10:55 pm

சிங்கிள் ஃபீட்டல் டிமைஸ்’ (single fetal demise)   2daxhfs

ஒருநாள் கருவாக இருந்தாலும் அதை இழக்கும் வலி அந்தத் தாய்க்கு மட்டுமே தெரியும். தெரிந்தோ, தெரியாமலோ கரு கலைந்திருந்தாலும், முகம்  தெரியாத அந்த உயிரைப் பறிகொடுத்த சோகம், காலத்துக்கும் மறக்காது அவளுக்கு. அதிலும் ஒன்றுக்கு இரண்டாக உயிரெடுத்து, ஊரெல்லாம்  பொறாமைப்பட வைத்து, உயிர்களை உள்ளங் கைகளில் ஏந்தப் போகிற நாளுக்காக காத்திருக்கும் போது, இருவரில் ஒருவர் இல்லா நிலை  ஏற்பட்டால்?

இரட்டைக் குழந்தைகளை சுமக்கும் பெண்கள் விஷயத்தில் சகஜமான இந்த இழப்புக்கு ‘சிங்கிள் ஃபீட்டல் டிமைஸ்’ (single fetal demise)  எனப் பெயர் வைத்திருக்கிறது மருத்துவத்துறை.‘சிங்கிள் ஃபீட்டல் டிமைஸ்’ ஏற்படக் காரணம், அறிகுறிகள், எச்சரிக்கை நடவடிக்கைகள் என  எல்லாவற்றையும் விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.

‘‘கர்ப்பிணிகளின் 2வது ட்ரைமெஸ்டரில் ஏற்படுகிற நிகழ்வு இது. ‘டைகோரியோனிக் ட்வின்ஸ்’ எனப்படுகிற இரண்டும் ஒன்றைப் போல அல்லாத  இரட்டையரைச் சுமக்கும் பெண்ணுக்கு இந்தப் பிரச்னை ஏற்பட்டால், ஒரு குழந்தை இறந்தாலும், இன்னொன்று பிழைத்துக் கொள்ளும். ஆனால்,  ‘மேனோகோரியோனிக் ட்வின்ஸ்’ எனப்படுகிற ஒத்த இரட்டையரில் இது சாத்தியமில்லை. ஒரு குழந்தை இறந்தால்,  அடுத்தடுத்த நாட்களில்  இன்னொரு குழந்தையும் இறந்து போகும். ஒரு குழந்தையைக் காப்பாற்ற முடியும் என்கிற நிலையில், அவ்வப்போது முறையான ரத்தப் பரிசோதனை  மேற்கொள்ள வேண்டியது அவசியம். ப்ளீடிங் டைம், கிளாட்டிங் டைம் மற்றும் ப்ரோத்ராம்பின் டைம் ஆகியவை சரிபார்க்கப்பட வேண்டும். இதன்  மூலம் ரத்தம் உறைவதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் தெரிய வரும்.

இரண்டு கருக்களின் நஞ்சுக் கொடியும் சரியாக உருவாகியிருக்கின்றனவா என்பதும், ரத்த ஓட்டம் சரியாக இருக்கிறதா என்பதும் சரிபார்க்கப்பட  வேண்டும். இதில் பிரச்னைகள் ஏற்படுவதுதான் இரண்டில் ஒன்று இறந்து போகக் காரணம். ஒரு குழந்தையை சுமக்கும் பெண்ணைவிட, இரட்டையரை  சுமக்கும் பெண் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். எந்தப் பரிசோதனையையும் அலட்சியப்படுத்தக் கூடாது. கருவிலுள்ள குழந்தைகளின்  அசைவில் ஏற்படும் மாற்றங்களை வைத்துதான் தாயானவள், இந்தப் பிரச்னையை சந்தேகிக்க முடியும்.

தவிர, முறையான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் டாப்ளர் ஸ்கேன் மூலம் இரண்டு குழந்தைகளின் இதயத் துடிப்பும் சீராக இருக்கிறதா எனக்  கண்காணிக்க வேண்டும். அதில் குழந்தைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தையும் பார்க்க முடியும். சுருக்கமாகச் சொன்னால் இரட்டையர்களைச் சுமக்கும்  கர்ப்பிணிப் பெண்கள் எப்போதும் விழிப்புடன் இருப்பதன் மூலம், சின்ன பிரச்னையைக் கூட சீரியஸாக மாற்றாமல் தவிர்க்கலாம்...’’

உலகமே அத்தனை அழகா மாறிடும்!

இரட்டைக் குழந்தைகளைச் சுமப்பதும் பெற்றெடுப்பதும் வளர்ப்பதும் ஒவ்வொரு பெண்ணுக்குமே தனிப்பட்ட அனுபவம். மாயோன், ஷிவன் என இரண்டு  செல்லங்களின் அம்மாவான சன் டி.வி. செய்தி வாசிப்பாளர் கல்யாணிக்கும் அப்படியொரு அலாதி அனுபவம் இருக்கிறது. ‘‘குழந்தை பெத்துக்கற  ஐடியாவே இல்லாம இருந்த நேரம் திடீர்னு கன்சீவ் ஆனேன். 40வது நாள் ஸ்கேன்ல ரெண்டு புள்ளி தெரிஞ்சது.  ‘கங்கிராஜுலேஷன்ஸ்... உங்களுக்கு  ட்வின்ஸ்’னு டாக்டர் சொன்னதும் செம ஷாக். ரெண்டு குழந்தைங்களும் தனித்தனியா இருக்காங்களானு மட்டும் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன்.  அன்னிலேருந்து, டெலிவரி வரைக்கும் வாந்தி, மயக்கம்னு எனக்கு எந்த அசவுகரியமும் இல்லை.

என்னோட கைனகாலஜிஸ்ட் தான் அடிக்கடி போன் பண்ணி, நான் எப்படி இருக்கேன்னு விசாரிச்சுக்கிட்டே இருப்பாங்களே தவிர, எனக்கு எந்த பயமும்  இல்லை. கடைசி மாசம் வரைக்கும் டூ வீலர் ஓட்டியிருக்கேன். தம் கட்டி நியூஸ் படிச்சிருக்கேன். 36 வாரமாச்சு. சிசேரியன்தான் பண்ணணும்னு  சொல்லிட்டாங்க. டான்ஸ் ஆடிக்கிட்டு, மத்தவங்க டென்ஷன் இல்லாம இருக்க ஜோக் அடிச்சுக்கிட்டுத்தான் ஆபரேஷன் தியேட்டருக்குள்ள போனேன்.  லேபர் ரூம்லயும் எனக்கு டென்ஷனே தெரியலை. டாக்டர்கிட்ட பேசிக்கிட்டே இருந்தேன். குழந்தையை வெளியில எடுத்த போது, ஒரு பெரிய  பையோட ஸிப்பை திறந்து, உள்ளேருந்து பொருளை எடுக்கிற மாதிரிதான் இருந்தது.

2.5, 2.8 கிலோவுல ரெண்டு ஆண் குழந்தைங்கள் பிறந்தாங்க. ரெண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பாங்க. ஒருத்தனுக்கு மட்டும்  கன்னத்துல லேசா குழி விழும். பிரசவம் வரைக்கும் எவ்வளவு குஷியா இருந்தேனோ, குழந்தைங்க பிறந்ததும் அத்தனையும் மாறிப் போச்சு.  ஆபரேஷன் பண்ணின வலியில, 5 நாள் வரைக்கும் படுக்கையை விட்டு நான் எழுந்திருக்கவே இல்லை. அப்புறமும் குழந்தைங்களைப் பார்த்துக்க ஆள்  இருந்தாலுமே என்னால சமாளிக்க முடியலை. தூக்கத்துல என்னை மிஞ்சவே முடியாது. அப்படிப்பட்ட நான் விடிய விடிய முழிச்சிட்டிருந்து,  குழந்தைங்களைப் பார்த்துக்க வேண்டிய நிலைமை... ஒரு வருஷம் வரைக்கும் சரியான தூக்கம் இல்லை.

அந்தக் கஷ்டத்தை எல்லாம் ரெண்டு பேரும் ஒரு சின்ன சிரிப்புல ஈடுகட்டிடுவாங்க. அந்தக் கணம் உலகமே அத்தனை அழகா மாறிடும்...’’ - அனுபவம்  பகிர்கிற கல்யாணியை, மாயோனும் ஷிவனும் ஆச்சரியங்களில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் தினமும்.‘‘குழந்தைங்களுக்கு இப்பதான் ஒண்ணேகால்  வயசாகுது. ஆனா, அதுக்குள்ள அவங்க ரெண்டு பேருக்குள்ளயும் நான் பார்க்கிற கெமிஸ்ட்ரி பிரமிக்க வைக்குது. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர்  அட்டாக் பண்ணிக்க மாட்டாங்க. வீட்டுக்கு யாராவது குழந்தையைத் தூக்கிட்டு வந்தா, ரெண்டு பேரும் அந்த புது பாப்பாவை பார்த்து சிரிச்சு,  அன்பாகிடுவாங்க. அவங்க ரெண்டு பேரும் என் வயித்துக்குள்ள இருந்தப்ப, நான் நியூஸ் படிச்சிருக்கேன்.

வயித்துக்குள்ளருந்து அவங்களும் கேட்கட்டும்னு நினைப்பேன். பிறந்ததும், திடீர் திடீர்னு அழும்போது கர்நாடிக் மியூசிக் போட்டு விட்ருவேன். உடனே  அமைதியாயிடுவாங்க. ரெண்டு பேரையும் பார்த்துப் பார்த்து வளர்க்கறேன். வெளிச் சாப்பாடு கொடுக்கிறதில்லை. நானே வீட்ல தயாரிக்கிற சத்து  மாவுக் கஞ்சிதான் கொடுக்கறேன். முதல்ல எல்லாம் அவங்க ராத்திரி முழுக்க தூங்காம முழிச்சிட்டிருக்கிறது கஷ்டமா இருக்கும். இப்ப அவங்க  தூங்கறபோது நானும் தூங்கி, அவங்க முழிச்சிட்டிருக்கும்போது நானும் முழிச்சிட்டிருக்கக் கத்துக்கிட்டேன். சுருக்கமா சொல்லணும்னா அவங்க  உலகத்துல ஒருத்தியா இருக்க என்னைப் பழக்கிக்கிட்டேன்.

ட்வின்ஸோட அம்மாவா என் மேல பதியற பார்வை எவ்வளவு பெருமையானதுனு வார்த்தைகள்ல சொல்ல முடியாது. எங்கேயாவது வெளியில  போகும்போது நான் ஒரு குழந்தையைத் தூக்கிட்டுப் போவேன். பின்னாடியே என் ஹஸ்பெண்ட் இன்னொரு குழந்தையோட வருவார். எல்லாரும் ஆச்சர்யமா பார்ப்பாங்க. ‘ட்வின்ஸா’னு கேட்பாங்க. சின்னதா ஒரு கர்வம் எட்டிப் பார்க்கும். சிலிர்க்க வைக்கும்...’’ - கல்யாணியின் பேச்சிலும் பார்வையிலும் அந்தப் பெருமிதப் பிரதிபலிப்பு!

கல்யாணியின் டிப்ஸ்

‘‘ட்வின்ஸ்னு உறுதியானதுமே நீங்க கவனம் செலுத்த வேண்டிய விஷயம் உங்களோட பொருளாதார நிலைமை. குழந்தைங்க பிறந்த 2  வருஷங்களுக்கு கன்னாபின்னானு கண்ட திசைகள்லேருந்தும் செலவு வரலாம். ட்வின்ஸ் சுமக்கிற அம்மாக்கள் பிரசவத்துக்குப் பிறகு இன்னன்ன  பிரச்னைகள் வரலாம்னு லிஸ்ட் போட்டு வச்சிருப்பாங்க. லிஸ்ட்டுல இல்லாத ஒண்ணு புதுசா கிளம்பும். மன பலமும் பண பலமும் இருந்தா,  ட்வின்ஸை ஈஸியா வளர்த்துடலாம்...’’

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum