தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ப(பி)டித்த கவிதை

View previous topic View next topic Go down

 ப(பி)டித்த கவிதை  Empty ப(பி)டித்த கவிதை

Post by ஜோர்பா Thu Nov 08, 2012 5:18 pm

கலைஞன் - விநாயக முருகன்



இறைச்சிக்கடையொன்றில்

உதவியாளனா‌‌‌க பணியாற்றும் சிறுவனுக்கு

உண்மையில் அதுதான் முத‌ல் நாள்

அதுநாள் வரை

அவனுக்கு தரப்பட்ட வேலைகள் மென்மையானவை

வெட்டப்படும் ஆடுகளின் கால்களை கெட்டியாக பிடித்துக்கொள்வது

மரித்துப்போன கோழிகளின் இறகுகளை உரிப்பது

வெட்டுண்ட ஆட்டுக்கால்களை இளஞ்சூட்டு நெருப்பில் வாட்டுவது

மரத்துண்டுகளை கொலைவாட்களை கழுவுவது

முதல் கொலைக்கான

உத்தரவு வந்தக் கணம்

அவன் திகைக்கிறான்

கோழிகளையும், ஆடுகளையும்

மலங்க மலங்க பார்க்கிறான்

பழுப்பும் சிவப்பும் தீற்றலுமாயிருக்கும்

மரத்துண்டை பயங்கலந்து பார்க்கிறான்

நடுங்கும் கையோடு கத்தியை தொடுகிறான்

முன்பு இந்த உலகத்தில் தோன்றி

மறைந்துபோன இறைத்தூதர்களெல்லாம்

மனக்கண்ணில் வந்து மறைகிறார்கள்

ஒரு உயிர் கோழியை தூக்குகிறான்

கண்களை மூடிக்கொள்கிறான்

எதையோ தீவிரமாக யோசிக்கிறான்

அந்தக்கோழியை விட்டுவிட்டு

இன்னொரு கோழியை தேர்வு செய்கிறான்

அதன் கழுத்தை திருக

அவனுக்கு தயக்கமாக இருக்கிறது

கத்தியால் வெட்டுவதை தேர்வு செய்கிறான்

கூடுமானவரை வெட்டவிருக்கும் கோழியின்

கண்களை பார்ப்பதை தவிர்க்கவே விரும்புகிறான்

கடவுளை தொழுகிறான்

இறைச்சிக் கடை உரிமையாளர்

அவனை பார்த்து நட்பாக புன்னகை செய்கிறார்

தாயைப் போல அறிவுரைகள் சொல்கிறார்

ஆற்றுப்படுத்துகிறார்

கொலைக்கு பிறகு அவனுக்கு அடையும்

சமூக அந்தஸ்துகளை பட்டியலிடுகிறார்

கொலை செய்வது அவன் கடமை யென்கிறார்

கொலை செய்யவே அவன் அவதாரமெடுத்தவன் யென்கிறார்

அவன் கொலை செய்யும் உயிர்கள்

துர்தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டதாய் சொல்கிறார்

பருவத்துக்கு வந்துவிட்ட

போர்வீரனாய் கர்வம் கொள்ளும்

அந்த சிறுவன்

செய்யும் முத‌ல் கொலை

மிகுந்த கொடூரமானது

ஒரு கொலைக்கு முன்னர்

அவன் எடுத்துக்கொண்ட கால அளவு

மிகுந்த நீளமானது

ஒரு கொலைக்கு முன்னர்

அவன் மனதில் விவாதித்தது

மிகுந்த தத்துவார்த்தமானது

ஒரு கொலைக்கு முன்னர்

அவன் வாழ்ந்த வாழ்க்கை

மிகுந்த சிக்கலானது

அவனுக்கு போதிக்கப்பட்ட போதனைகள்

‌மிகுந்த எண்ணிக்கையிலானது

அந்த சிறுவனது

மரத்திலிருந்து உதிர்ந்த

இலைகள் மீண்டும் துளிர்க்கின்றன

இப்போதெல்லாம்

அவன் விரல்கள்

ஒரு புல்லாங்குழல் வாசிப்பவனாய்

ஒரு வீணைக்கருவியின் தந்தியை மீட்டுபவனாய்

ஒரு மிருதங்க கலைஞனாய்

இறைச்சியை வெட்டுவதற்கு

பழக்கமாகியிருந்தது


நன்றி :nvmonline.blogspot.in

வணக்கம்
எனக்கு பிடித்த கவிதைகளை ,,,,, ஏன் பிடித்தது என்ற காரணத்தோடு உங்களுடன் இந்த திரியில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்


விநாயக முருகன் எழுதிய இந்த கவிதையை படிக்கும்போது ...
கூலிக்கு கொலை செய்பவர்களுக்கும் .....அவர்கள் முதல் கொலை செய்யும்போது இப்படித்தான் தோன்றி இருக்க வேண்டும் ...
என்று நினைக்க தோன்றுகிறது
எதுவுமே பழக்கமகிவிட்டால் ....இயந்திரமாக மாறிப்போவது இயல்புதானோ ?????

ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

 ப(பி)டித்த கவிதை  Empty Re: ப(பி)டித்த கவிதை

Post by முரளிராஜா Thu Nov 08, 2012 7:42 pm

உண்மைதான் ஜோர்பா
முதல் தவறுக்குதான் மிகவும் யோசிப்பர்
பின்பு அதே தவறு தொடரும்போழுது அது நியாயமாக்க படுகிறது .

இந்த கவிதையும் அதைதான் உணர்த்துகிறது
அழகான கவிதை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 ப(பி)டித்த கவிதை  Empty Re: ப(பி)டித்த கவிதை

Post by mohaideen Thu Nov 08, 2012 8:07 pm


உண்மைதான் ஜோர்பா
முதல் தவறுக்குதான் மிகவும் யோசிப்பர்
பின்பு அதே தவறு தொடரும்போழுது அது நியாயமாக்க படுகிறது .

இந்த கவிதையும் அதைதான் உணர்த்துகிறது
அழகான கவிதை

 ப(பி)டித்த கவிதை  2459753045
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

 ப(பி)டித்த கவிதை  Empty Re: ப(பி)டித்த கவிதை

Post by ஜோர்பா Thu Nov 08, 2012 9:05 pm

நன்றி முரளி ராஜா மற்றும் முகைதீன்
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

 ப(பி)டித்த கவிதை  Empty Re: ப(பி)டித்த கவிதை

Post by ஸ்ரீராம் Fri Nov 09, 2012 12:35 am

அருமையான கவிதை. முற்றிலும் உண்மை.

கவிதையை பற்றி மேலும் ஜோர்பாவின் விளக்கம் அருமையிலும் அருமை
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

 ப(பி)டித்த கவிதை  Empty Re: ப(பி)டித்த கவிதை

Post by ஜோர்பா Fri Nov 09, 2012 6:50 am

நாம் ஏன் இப்படி இருக்கிறோம்

மனுஷ்ய புத்திரன் / நன்றி எஸ்,ரா



நாம் ஏன் இப்படி

இருக்கிறோம்

சதா முணுமுணுத்துக்கொண்டு

எப்போதும் துணிகளை மடித்துக்கொண்டு

எதையாவது சுத்தம் செய்துகொண்டு

யாரையாவது சபித்துக்கொண்டு

எதையாவது அடைய முயற்சித்துக்கொண்டு

எதனிடமாவது தோல்வியடைந்துகொண்டு

எப்போதும் நம்மை நிரூபித்துக்கொண்டு

ஒரு சிகரெட்டைப்போல எரிந்துகொண்டு

தேவையற்ற பொருட்களால் நம் தனிமையை நிரப்பிக்கொண்டு

யாரிடமாவது நம்மைப் பிணைக்க முயற்சித்துக்கொண்டு

ஒரு அபத்தமான சினிமாவின் முதல் காட்சியைப் பார்த்துக்கொண்டு

கடற்கரையில் கூட்டத்தோடு கூட்டமாய் நின்றுகொண்டு

நம் குழந்தைகளை சந்தேகித்துக்கொண்டு

நம் வீட்டிலேயே திருடிக்கொண்டு


மலிவான பொருட்கள் எங்கே கிடைக்கின்றன என்று எப்போதும் யோசித்துக்கொண்டு

பொறுக்கிகளுக்குப் பயந்துகொண்டு

புகழுள்ள மனிதர்களை அனாவசியமாய்த் தெரிந்துகொண்டு

சதா எதேனும் ஒரு நோயைப்பற்றி பேசிக்கொண்டு

எப்போதும் பருவநிலையினைப் பற்றி புகார் செய்துகொண்டு

சிறிய வருமானத்திற்கான சிறிய கணக்குகள் எழுதிக்கொண்டு

அதிர்ஷ்டத்தின் வருகையை எதிர்நோக்கிக்கொண்டு

யாருடைய சாவுக்காவது காத்துக்கொண்டு

நமது தூக்குக் கயிற்றின் உறுதியைச் சோதித்துக்கொண்டு

முட்டாள்களின் கவிதையைப் படித்துக்கொண்டு

குடிக்கும்போது அழுதுகொண்டு

புணர்ச்சியில் வேறு யாரையோ நினைத்துக்கொண்டு

அடுத்த முதல்வர் யார் என்று யோசித்துக்கொண்டு

சிறுவர்களையும் சிறுமிகளையும் ரகசியமாக முத்தமிட்டுக்கொண்டு

பௌர்ணமி தினங்களில் மனம் உடைந்து அழுதுகொண்டு

எதையாவது தொலைத்துக்கொண்டு

எதையாவது தேடிக்கொண்டு

தவறான முடிவுகளுக்காக வருந்திக்கொண்டு

தவறிப்போன சந்தர்ப்பங்களுக்காக ஏங்கிக்கொண்டு

யாருடைய அன்புக்காகவாவது ஏங்கிக்கொண்டு

யாரையாவது இணங்கச் செய்துகொண்டு

கடன் கொடுப்பவர்களிடம் நட்பு பாராட்டிக்கொண்டு

சிறிய தவறுகளுக்கு பெரிய தண்டனைகள் கொடுத்துக்கொண்டு

பிறரது கடிதங்களைத் திருடிப் படித்துக்கொண்டு

தன் வழியே போகும் எறும்புகளை நசுக்கி அழித்துக்கொண்டு

கூண்டுகளில் பறவைகளை அடைத்து வைத்துக்கொண்டு

போலிக் கடவுள்களிடம் கண்ணீர் சிந்திக்கொண்டு

எதிர்காலத்தை அவ்வளவு உறுதியாய் திட்டமிட்டுக்கொண்டு

தூக்க மாத்திரைகளை விழுங்கிக்கொண்டு

மற்றவர்களின் கடமைகளை நினைவூட்டிக்கொண்டு

நமது இயலாமையை மறைக்க யாரையாவது சவுக்கால் அடித்துக்கொண்டு

பூனைகளுக்கு உணவுதர மறுத்துக்கொண்டு

யாரையாவது இறுகப் பற்றிக்கொண்டு

உடல் குறைபாடுகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டு

மலிவான வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்திக்கொண்டு

யாருடைய உள்ளாடையையோ திருடி முகர்ந்துகொண்டு

பொது அறிவை வளர்த்துக்கொண்டு

எதற்காவது பயன்படுமென்று எல்லாவற்றையும் பாதுகாத்துக்கொண்டு

சொற்பொழிவுகளில் கைதட்டிக்கொண்டு

நிழல்களுக்குப் பயந்துகொண்டு

எப்போதும் யாரையாவது கண்காணித்துக்கொண்டு

உடல் பயிற்சியினால் மரணத்தை வெல்ல முயற்சித்துக்கொண்டு

எளிய இரக்கங்களால் நம் மனிதத் தன்மையை நிரூபித்துக்கொண்டு

தங்க முலாம் பூசப்பட்ட போலி ஆபரணங்களை அணிந்துகொண்டு

அவமதிப்புகளைப் பொருட்படுத்தாமலிருக்க கற்றுக்கொண்டு

புகைப்படங்களைப் பாதுகாத்துக்கொண்டு

திறக்க மறுக்கும் கதவுகளைத் தட்டிக்கொண்டு

வேலைகளுக்குள் நம்மை நாமே மறைத்துக்கொண்டு

நம் பால்யத்தை நினைவுகூர்ந்துகொண்டு

ஒரு மூலையில் சுருண்டு படுத்துக்கொண்டு

வேறு வழியில்லை என்று எழுந்துகொண்டு

யாருக்காகவோ தியாகம் செய்துகொண்டு

எளிய உணர்ச்சிகளுக்காகப் பலியிட்டுக்கொண்டு

எப்போதோ நன்றாக இருந்தோம் என்று நினைத்துக்கொண்டு

எப்போதோ நன்றாக இருப்போம் என்று நினைத்துக்கொண்டு

சாதாரணமானவற்றை சிறந்ததென ஏற்றுக்கொண்டு

மன்னிக்க முடியாதவற்றை

மன்னித்துக்கொண்டு

நாம் ஏன்

இப்படி இருக்கிறோம்



எனக்கு இந்த கவிதையை படிக்கும் போதெல்லாம் ஏற்படும் ஒரே ஆறுதல் நல்லவேளை நான் மட்டும் இல்லை....எல்லோரும் இப்படித்தானே என்ற நினைப்புதான்

இதை படிக்கும் நீங்களும் குறைந்தது பாதி விஷங்களிலாவது இப்படித்தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்

ஏனென்றால் நாம் எல்லோருமே இப்படித்தான்

அது சரி

எப்போதோ நன்றாக இருப்போம் என்று நினைத்துக்கொண்டு


இது ஒன்றுதானே வாழ்வை நடத்திச் செல்கிறது புன்முறுவல்
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

 ப(பி)டித்த கவிதை  Empty Re: ப(பி)டித்த கவிதை

Post by மகா பிரபு Fri Nov 09, 2012 7:11 am

எனக்கும் பிடித்திருக்கிறது!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

 ப(பி)டித்த கவிதை  Empty Re: ப(பி)டித்த கவிதை

Post by முரளிராஜா Fri Nov 09, 2012 7:19 am

தேடல்கள் வாழ்க்கையின் இறுதிவரை தொடரும்
தேடல்கள் இல்லையெனில் வாழ்க்கை ஏது?
மிகவும் சிந்தித்தால் வாழ்க்கையும் வெறுத்து போகும்


அழகான கவிதை நானும் ரசித்தேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 ப(பி)டித்த கவிதை  Empty Re: ப(பி)டித்த கவிதை

Post by ஜோர்பா Fri Nov 09, 2012 8:21 pm

நன்றி
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

 ப(பி)டித்த கவிதை  Empty Re: ப(பி)டித்த கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum