தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மரமேறும் தைரிய ராணிகள்

View previous topic View next topic Go down

மரமேறும் தைரிய ராணிகள் Empty மரமேறும் தைரிய ராணிகள்

Post by நாஞ்சில் குமார் Sun Nov 02, 2014 8:23 pm

[You must be registered and logged in to see this image.]


இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் பெண்களின் கரங்கள் தொடாத துறை எதுவும் இல்லை. விண்ணிலும் மண்ணிலும் நிகழ்த்தாத சாதனைகள் ஏதுமில்லை. ஒவ்வொரு கணத்திலும் தாங்கள் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால் அமைப்புசாரா தொழில்களில் ஆணுக்கு வழங்கப்படும் கூலி, அதே வேலையைச் செய்யும் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை. விதிவிலக்காக, கர்நாடகத்தில் ஆண்களைப் போலவே பெண்களும் துணிச்சலாகத் தென்னை மரம் ஏறுகிறார்கள். ஆணுக்கு வழங்கப்படும் அதே கூலியைப் பெண் தொழிலாளர்களும் வாதாடிப் பெற்றிருக்கிறார்கள்!

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூர் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், படிக்காத கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நோக்கில் தென்னை மரம் ஏறும் பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்துக்குத் தொழிலாளர்கள் மத்தியிலும் விவசாயிகள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் முறையாக‌ தும்கூர் மாவட்டத்தில் 100 இளம்பெண்களுக்கு தென்னை மரம் ஏறும் பயிற்சி வழங்கப்ப‌ட்டது.

வானுயர்ந்த மரங்களில் பெண்கள் ஏறுவார்களா என சந்தேகம் எழுப்பியவர்களின் புருவங்கள் தற்போது ஆச்சரியத்தில் உயர்ந்துள்ளன. கடந்த மூன்று மாதங்களில் 100 தொழிலாளர்கள் 220 தொழிலாளர்களாகப் பெருகி இருக்கிறார்கள். அவர்களுடைய குடும்பப் பொருளாதாரச் சூழலும் சமூக அந்தஸ்தும் மேம்பட்டிருக்கின்றன. பகுதி நேரத்தில் மரம் ஏறி மாதம் 6000 முதல் 8000 ரூபாய்வரை சம்பாதிக்கிறார்கள்.

வழிகாட்டும் பயிற்சி

“கிராமத்தில் சரியான வேலையும், அதற்குரிய கூலியும் கிடைக்காமல் ரொம்ப கஷ்டப்பட்டோம். என் கணவரும் பக்கத்து வீட்டுக்காரரும் தென்னை மரம் ஏறி கைநிறைய சம்பாதிச்சாங்க. பழைய முறைப்படி காலில் கயிறுக் கட்டிக்கொண்டு ஏறாமல், மெஷின் மூலம் ஏறுவதால் ஈஸியாக இருப்பதாகச் சொன்னார்கள். ஒரு நாள் வீட்ல இருக்கும்போது அந்த மெஷினை வெச்சி நானே ஏறிப்பார்த்தேன். அவ்வளவு ஒண்ணும் கஷ்டமா இல்லை. அதனால் தென்னை மரம் ஏறும் பயிற்சியில் சேர்ந்தேன்” என்கிறார் அக்கை லட்சுமி.

இவர்களுக்கு வேளாண் விஞ்ஞானிகளும் மரம் ஏறும் தொழிலில் நல்ல அனுபவம் உள்ளவர்களும் ஒரு வாரம் பயிற்சியளிக்கிறார்கள். மரத்தைக் கவ்வி எவ்வாறு எளிதாக ஏறுவது, மர‌ம் ஏறும் கருவியை எப்படிக் கையாள்வது, அறுவடைக்குச் சரியான தேங்காயை எப்படிக் கண்டறிவது, பதமான இளநீரைக் கண்டுபிடிப்பது எப்படி, தேவையில்லாத மட்டைகளை எப்படிக் களையெடுப்பது, தென்னை மரங்களுக்கு எந்தெந்த இயற்கை உரங்களை இடுவது, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்வது, முதலுதவி போன்ற அனைத்து பயிற்சிகளும் இங்கே வழங்கப்படுகின்றன.

“சைக்கிள் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய மரம் ஏறும் கருவியை எங்களுக்கு இலவசமா கொடுத்தாங்க. கிட்டத்தட்ட எட்டரை கிலோ எடையுள்ள இந்தக் கருவி சுமார் 400 கிலோ எடையைத் தாங்கும். இதனால் பெண்களும் தைரியமாக மரம் ஏறி, தேங்காயைப் பறிக்க முடியும். உடல் வலிமை என்பதெல்லாம் அவ்வளவு முக்கியம் இல்லை. 18 வயசுல இருந்து 35 வயசு வரையிலான பெண்கள்தான் மரம் ஏறும் வேலை செய்கிறோம்” என்கிறார் கல்ப மரம் ஏறும் மகளிர் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் நாகம்மா.

வளமான வருமான‌ம்

பெண்கள் மரம் ஏறித் தேங்காய் பறிப்பதைப் பார்த்துப் பலரும் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். இவர்களைப் பார்க்கிறவர்கள் எல்லாம் மரம் ஏறுவது அத்தனை எளிதான வேலையா என்று கேட்கிறார்களாம். “வேறு வேலைக்கு போய்க்கொண்டிருந்தவங்ககூட இப்போ எங்களைப் பார்த்து தென்னை மரம் ஏறுகிறார்கள்.

முன்பெல்லாம் 60 ரூபா 80 ரூபா கூலிக்கு ஊர் ஊராகத் திரிஞ்சோம். பிழைப்புத் தேடி பெங்களூருக்குப் போனோம். வாடகை கட்ட முடியாம தவிச்சோம். பிள்ளைகளை படிக்கவைக்க முடியாம அலைஞ்சோம். சரியான சோறும் நிம்மதியான தூக்கமும் இல்லாம கிடந்தோம். வாழ்க்கையே நரகமாக இருந்தது. இப்போ பரவாயில்லை. சொந்த ஊர்ல,சொந்த வீட்ல எந்தக் குறையும் இல்லாம இருக்கிறோம். ஆடு, மாடுகளை கவனிச்சிக்கிட்டு காட்டுல ஏதோ வெள்ளாமை பண்ணிட்டு இருக்கிறோம். மீதி நேரத்துல மரம் ஏறும் வேலைக்குப் போறோம். பிள்ளைகளும் பக்கத்துப் பள்ளிக்கூடத்துக்குப் போறாங்க. படிப்பு கெடாம இருக்குறதே போதும்” என்கிறார் நாகம்மா.

மரத்தின் உயரத்தைப் பொறுத்து 30 ரூபாயிலிருந்து 40 ரூபாய்வரை வாங்குகிறார்கள். ஒரு நாளைக்குக் குறைந்தது 150 முதல் 250 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். மாத வருமானம் 6000 முதல் 8000 ரூபாய்வரை கிடைக்கிறது. “நல்ல வருமானம் கிடைப்பதால் செலவு போக மீதி பணத்தைச் சேமிக்கவும் முடிகிறது” என வெள்ளந்தியாகச் சிரிக்கிறார் நாகம்மா.​

- தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

மரமேறும் தைரிய ராணிகள் Empty Re: மரமேறும் தைரிய ராணிகள்

Post by முரளிராஜா Mon Nov 03, 2014 5:22 pm

சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மரமேறும் தைரிய ராணிகள் Empty Re: மரமேறும் தைரிய ராணிகள்

Post by mohaideen Tue Nov 04, 2014 12:02 pm

வறுமை இவர்களை தைரியமானவர்களாக ஆக்குகிறது.

தப்பான தொழிலுக்கு போகாமல் உழைத்து முன்னேறுகிறார்களே.

பாராட்டவேண்டியதுதான் கைதட்டல்கைதட்டல்கைதட்டல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மரமேறும் தைரிய ராணிகள் Empty Re: மரமேறும் தைரிய ராணிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum