தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பிறந்த குழந்தை இறப்பு ஏற்படுவது ஏன்?

View previous topic View next topic Go down

பிறந்த குழந்தை இறப்பு ஏற்படுவது ஏன்? Empty பிறந்த குழந்தை இறப்பு ஏற்படுவது ஏன்?

Post by நாஞ்சில் குமார் Thu Nov 20, 2014 11:18 pm



நாட்டின் ஒட்டு மொத்த நிலையை ஒப்பிடுகையில் பிறக்கும் குழந்தை இறப்பு விகிதம் தமிழகத்தில் தான் குறைவு என்று மார் தட்டும் மருத்துவத்துறையின் எண்ணத்தை தவிடுபொடியாக்கி வருகிறது தர்மபுரியில் கடந்த இரு நாட்களில் ஏற்பட்ட சிசு மரணங்கள். இதற்கு முன்பு சமீபத்தில் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரபலமான பி.சி.ராய் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 36 மணி நேரத்தில் 42 குழந்தைகள் இறந்தனர்.

கடந்த ஜூலை மாதம் கொல்கத்தா மலடா மருத்துவமனையில் 7 குழந்தைகள் இறந்தனர். இக்குழந்தைகள் அனைத்துமே பிறந்தபோது எடைக்குறைவாக இருந்ததால் பச்சிளம் குழந்தைகள் வார்டில் வைத்து பராமரிக்கப்பட்டவை. தற்போது தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் 3 நாட்களுக்குள் 11 குழந்தைகள் இறந்த சம்பவம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் பெண் சிசு கொலைகள், இளம்வயது திருமணங்கள் அதிகமாக நடக்கும் இந்த மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையில் உயிரிழப்புகள் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

எடை குறைந்த குழந்தைகள் இறப்பு விகிதம் மருத்துவத்துறையில் தடுக்கமுடியாதது என்றபோதிலும் ஒரே சமயத்தில் தொடர் இறப்புகளுக்கு மருத்துவமனையில் உள்ள குறைபாடுகளும் காரணமாக இருக்கலாம் என்றே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து மருத்துவத்துறை நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.

ஆனால் எடை குறைவு குழந்தைகள் இறப்பின் பின்னணியில் மற்றொரு அறிவியல் காரணமும் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 14ம் தேதி இறந்த 6 குழந்தைகளில் 2 பேரின் தாய் மட்டுமே 27 வயதானவர்கள். மேலும் 3 பேகுழந்தைகளின் தாயின் வயது 20க்குள் உள்ளது. ஒரு குழந்தையின் தாய் 18 வயது நிறைவடைந்தவர் என தெரியவந்துள்ளது. இளம்வயதில் திருமணம் செய்யும் பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை உரிய எடையை எட்டுவதில்லை.

அரசு மருத்துவமனைகளின் கணக்கெடுப்பு படி சேலம் மாவட்டத்தில் 5.6சதவீத குழந்தைகளும், தர்மபுரி மாவட்டத்தில் 10.8சதவீத குழந்தைகளும், நாமக்கல் மாவட்டத்தில் 4.3சதவீத குழந்தைகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4சதவீத குழந்தைகளும் குறைபிரசவத்தில் இறப்பை தழுவுகின்றன என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் மிக அதிகளவில் தர்மபுரி மாவட்டத்தில் 18 வயதுக்கு குறைந்த பெண்களுக்கு திருமணம் நடக்கிறது. அதேபோல் உறவுமுறை திருமணங்களும் அதிகம்.

சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 100க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்களும், நாமக்கல் மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்களும், தர்மபுரி மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் கண்டுபிடித்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

‘18வயது முடிந்த பின்னரே பெண்களுக்கு திருமணம் செய்யவேண்டும். உடல்ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பல்வேறு காரணங்கள் உள்ளது. 18வயது நிறைவடைந்த பின்னரே ஒரு பெண்ணின் உடல் தாய்மை அடைய தகுதி பெறுகிறது. இந்த வயதை எட்டும் முன்பு இனவிருத்திக்கான உறுப்புகள், தேவையான அளவுக்கு வளர்ச்சியடையாமல் இருக்கிறது. இதனால் அவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு குறைகிறது. அப்படியே கர்ப்பம் தரித்தாலும் குழந்தை ஊனமாகவே அல்லது குறை பிரசவத்தில் குறைந்த எடையுடனோ பிறக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் பச்சிளம் குழந்தைகள் மையத்தில் வைத்து பராமரிக்கப்படுகிறது. மேலும் பேறு காலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவும், தகுந்த மருத்துவ கண்காணிப்பும் அவசியம். அதை கருத்தில் கொண்டு தான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு பேருகால நிதியுதவி திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணிக்கு ரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது.
குழந்தை பிறப்புக்கு முன்பும், பின்பும் தலா 6 மாதம் பிரித்து இத்தொகை ரூ.ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது. இந்த நிதியை கொடுப்பதே கர்ப்பிணிகள் உடல் நல பராமரிப்புக்கு தான்.
அதேபோல் கர்ப்பிணிகளின் எடை மாதம் தோறும் கண்காணித்து ஆலோசனை வழங்க வேண்டியது ஆரம்ப சுகாதார நிலைய கிராம செவிலியர்கள் பொறுப்பு. இது பல இடங்களில் முறையாக நடப்பதில்லை. இதுபோன்ற குறைபாடுகளை தடுப்பது மூலம் தான் குழந்தை இறப்பையும் கட்டுப்படுத்தமுடியும்.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

பிறந்த குழந்தை இறப்பு ஏற்படுவது ஏன்? Empty Re: பிறந்த குழந்தை இறப்பு ஏற்படுவது ஏன்?

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Nov 21, 2014 6:49 am

இவ்வகை இறப்புகளைக் கண்கானித்து உரிய நடவடிக்கையை அரசு எடுக்கட்டும்... பெண்களும் விழிப்போடு இருக்கட்டும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பிறந்த குழந்தை இறப்பு ஏற்படுவது ஏன்? Empty Re: பிறந்த குழந்தை இறப்பு ஏற்படுவது ஏன்?

Post by முரளிராஜா Sat Nov 22, 2014 10:12 am

கவியருவி ம. ரமேஷ் wrote:இவ்வகை இறப்புகளைக் கண்கானித்து உரிய நடவடிக்கையை அரசு எடுக்கட்டும்... பெண்களும் விழிப்போடு இருக்கட்டும்...
எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பிறந்த குழந்தை இறப்பு ஏற்படுவது ஏன்? Empty Re: பிறந்த குழந்தை இறப்பு ஏற்படுவது ஏன்?

Post by ஜேக் Sat Nov 22, 2014 9:15 pm

சோகம் சோகம் சோகம்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

பிறந்த குழந்தை இறப்பு ஏற்படுவது ஏன்? Empty Re: பிறந்த குழந்தை இறப்பு ஏற்படுவது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ஒவ்வோர் ஆண்டும் பிறந்த 24 மணி நேரத்தில் 10 லட்சம் குழந்தைகள் இறப்பு: ஐ. நா. தகவல்
» எடை குறைவுடன் பிறந்த குழந்தை பராமரிப்பு முறைகள்
» எடை குறைவுடன் பிறந்த குழந்தை பராமரிப்பு முறைகள்
» குழந்தை பிறந்த பின் மனரீதியாக சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!
» குழந்தை பிறந்த பின் ஏற்படும் மலச்சிக்கலை தடுக்கும் உணவுகள்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum