தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
RAJU AROCKIASAMY
பார்மஸி  Vote_lcapபார்மஸி  Voting_barபார்மஸி  Vote_rcap 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பார்மஸி

View previous topic View next topic Go down

பார்மஸி  Empty பார்மஸி

Post by mohaideen Sun Feb 01, 2015 12:26 pm

பார்மஸி  Ht3237
பார்மஸிஸ்ட் டே ஜனவரி 12 Know your medicineKnow your pharmacist என்கிறது பிரபல ஆங்கில வாசகம். ஆனாலும், நோயாளிகளுக்கும் மருந்துக் கடைக்காரர்களுக்குமான உறவு என்பது பெரும்பாலும் இணக்கமானதாக இருப்பதில்லை. மருத்துவர்களுக்கு இணையாக மதிக்கப்பட வேண்டியவர்கள் மருந்துக் கடைக்காரர்கள். மருத்துவரிடம் ஒரு நோயாளிக்கு உள்ள உரிமைகளைப் போலவே, மருந்துக் கடைக்காரரிடமும் அப்படி சில உள்ளன. மருந்து வாங்கும் போது மக்கள் கேட்க வேண்டிய கேள்விகளையும், எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில மருந்துத் தகவல் களையும் பற்றிப் பேசுகிறார் ‘ரீஜெனிக்ஸ் டிரக்ஸ் லிமிடெட்’டின் செயல் இயக்குநர் மேகநாதன்.

மருந்து வாங்குபவர், மருந்துக் கடைக்காரரிடம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்விகள் எவை?

நீங்கள் வாங்கும் மருந்துகளுக்கான பில்,அந்த மருந்துகளின் எக்ஸ்பைரி தேதி... மருத்துவரின் ப்ரிஸ்க்ரிப்ஷனில் எழுதப்பட்டிருப்பதும் மருந்துக் கடைக்காரர் உங்களுக்குக் கொடுத்திருப்பதும் ஒரே மருந்துதானா என்பதை உறுதிப்படுத்துகிற பதில்.

டாக்டர் எழுதிக் கொடுக்கும் மருந்து, ஒரு  பார்மஸியில் இல்லை என்றால், மருந்துக் கடைக்காரர் என்ன செய்ய வேண்டும்? அவராகவே வேறு கம்பெனி மருந்தை கொடுப்பது சரியா?

மிகவும் தவறு. மருத்துவர் எழுதியதைத் தவிர்த்து, மாற்றாக வேறு கம்பெனி அல்லது வேறு மூலக்கூறுகள் கொண்ட மருந்துகளைக் கொடுக்க மருந்துக் கடைக்காரருக்கு உரிமை கிடையாது. தனது கடையில் மருத்துவர் குறிப்பிட்ட அந்த மருந்து இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு போன் செய்து, அதற்கு இணையான வேறு நிறுவனம் அல்லது மூலக்கூறு மருந்துகள் என்னவெனக் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகே கொடுக்க வேண்டும்.

மருத்துவரின் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் மருந்துகளை விற்பது சரியா?


மருத்துவரின் ப்ரிஸ்க்ரிப்ஷன் இன்றி, மருந்துகளை விற்பது மிகப்பெரிய குற்றம். ‘ஓடிசி’ (Over The Counter) மருந்து களை மட்டும்தான் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் 

மருந்துக் கடைக்காரர்கள் விற்க முடியும்.எவை எல்லாம் ஓவர் தி கவுன்டர் மருந்துகள்?


குரோசின் போன்ற சிலவகை பாரசிட்டமால், டைஜின், ஜெலுசில் போன்ற சில செரிமான மருந்துகள், சில வகை இருமல் மருந்துகள் ஆகியவை இந்தப் பட்டியலில் வரும். சுருக்கமாகச் சொல்லப் போனால் டி.வி. விளம்பரங்களில் வருகிற மருந்துகள் எல்லாமே ஓடிசி வகையறாதான்!

எந்தெந்த மருந்துகளை அப்படி விற்கலாம்?  தலைவலி, காய்ச்சல் என மருந்து கேட்டு வருபவர்களுக்கு மருந்துக் கடைக்காரர்களே மருந்துகள் கொடுப்பது சரியா? 


தலைவலி, காய்ச்சலுக்குக் கூட மருந்துக்கடைக்காரர்கள் தாமாக மருந்துகள் கொடுக்கக் கூடாது. அப்படிக் கேட்பவர்களிடம், மருத்துவரை சந்தித்து, மருந்து எழுதி வாங்கி வரச் சொல்வதே நேர்மையான மருந்துக் கடைக்காரருக்கு அழகு. ஒருவேளை மருந்துக் கடைக்காரர் கொடுக்கும் மருந்துகள், நோயாளிக்கு ஏதேனும் பக்க விளைவுகளை உண்டாக்கினால், அதற்கான முழுப் பொறுப்பும் அந்த மருந்துக் கடைக்காரருடையதே...

சில மருந்துகளை ஒரு ஸ்ட்ரிப்பாகத்தான் வாங்க வேண்டும் என்கிற நிலையில், பணமில்லாத நோயாளிகள் அவற்றைக் குறைத்துக் கேட்டால் கொடுக்கலாமா?

கொடுக்கக்கூடாது. ஆன்ட்டிபயாடிக் மற்றும் சில உயிர் காக்கும் மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கிற நாட்களுக்கு, குறிப்பிட்ட அளவுகள் எடுத்துக் கொண்டால்தான் நோய் குணமாகும். நோயாளியின் வசதிக்காக அவர் கேட்கும் எண்ணிக்கையில் கொடுப்பதன் பின்னால் உள்ள ஆபத்தை மருந்துக் கடைக்காரர் அவருக்கு எடுத்துப் புரிய வைக்கலாம்.

எக்ஸ்பைரி தேதி இல்லாமல் வெட்டித் தரப்படுகிற மருந்துகளை மக்கள் வாங்கலாமா?


‘‘வாங்கக்கூடாது. எக்ஸ்பைரி தேதியை சரிபார்த்த பிறகே மருந்துகளை வாங்க வேண்டும். அதை சரிபார்ப்பது மருந்து வாங்குபவரின் உரிமையும் கூட.
எக்ஸ்பைரி ஆகும் மருந்துகளை 

மருந்துக் கடைக்காரர்கள் என்ன செய்வார்கள்? பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?


அரசாங்க விதிப்படி காலாவதியாகி விட்ட மருந்துகளை மருந்துக் கடையிலேயே ஒரு பகுதியில் தனித்து வைக்க வேண்டும். அந்த மருந்துகள் விநியோகஸ்தருக்கே திருப்பி அனுப்பப்படும். விநியோகஸ்தர்கள் அந்த மருந்துகளை மருந்து கம்பெனிகளுக்கு திருப்பி அனுப்புவார்கள். அங்கே அந்த மருந்துகள் அழிக்கப்பட்டு விடும். காலாவதியான மருந்துகளை பொது மக்கள் வாங்கவே கூடாது. தவறுதலாக வாங்கி விட்டாலும், உடனடியாக அவற்றை மருந்துக் கடைக்காரரிடமே திருப்பிக் கொடுத்து விட்டு, புதியதை வாங்கி உபயோகிக்க வேண்டும்.

எக்ஸ்பைரி ஆவதற்கு முன்பே சில மாத்திரைப் பட்டிகள் கசிந்து, மருந்து வெளியே வருகின்றனவே... அவற்றை மருந்துக் கடைக்காரர்களிடம் திருப்பிக் 
கொடுக்கலாமா?


டேமேஜ் ஆன மருந்துகளை மருந்துக் கடைக்காரரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு, புதியதைப் பெற்றுக் கொள்ள மக்களுக்கு 100 சதவிகிதம் உரிமை உண்டு. டேமேஜ் ஆன மருந்துகள், மேலே சொன்னது போல விநியோகஸ்தர்கள் வழியாக கம்பெனிகளுக்கே அனுப்பப்பட்டு அழிக்கப்படும்.

பார்மஸி படிக்காதவர்கள் மருந்துக் கடைகள் நடத்த முடியுமா?


மருத்துவச் சட்டத்தின் படி, ஒவ்வொரு பார்மஸியிலும் முறையாக படித்து, பயிற்சி பெற்ற ஒரு பார்மசிஸ்ட் இருந்து மருந்துகளை எடுத்துக் கொடுக்க வேண்டும்.

பார்மஸி படிக்க என்னென்ன அடிப்படை தகுதிகள் வேண்டும்?

டிப்ளமா இன் பார்மஸி (டி.பார்ம்) மற்றும் பேச்சிலர் ஆஃப் பார்மஸி (பி.பார்ம்) என இரண்டு பாடப்பிரிவுகள் உள்ளன. டி.பார்ம் மற்றும் பி.பார்ம் படிப்புகளுக்கு பிளஸ் டூவில் அறிவியலை பிரதானப் பாடமாக எடுத்துப் படித்துத் தேறியிருக்க வேண்டும். டி.பார்ம் என்பது 2 வருடப் பயிற்சி. பி.பார்ம் என்பது 4 வருடங்கள். இதில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.

வீட்டில் அவசியம் வைத்திருக்க வேண்டிய மருந்துகள்... அவ்வப்போது மட்டுமே வாங்கி உபயோகிக்க வேண்டிய மருந்துகள் எவை?

‘‘எல்லோர் வீட்டிலும் கட்டாயம் ஒரு முதலுதவிப் பெட்டி இருக்க வேண்டும். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஒரு ஸ்ட்ரிப் பாரசிட்டமால் மற்றும் ஆன்ட்டாசிட் (நெஞ்சு கரித்தல் மருந்துகள்) வைத்திருக்கலாம். ஜலதோஷம், முதுகுவலி மற்றும் தலைவலிக்கு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

தேவையின்றி வீட்டில் வைத்திருக்கிற மருந்துகளை (எக்ஸ்பைரி ஆகாத பட்சத்தில்) மக்கள் என்ன செய்யலாம்?

தேவையற்ற மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்குக் கொடுத்து விடலாம். அந்த மருந்துகளை மருத்துவர்கள் ஏழை நோயாளிகளுக்குத் தேவைக்கேற்ப இலவசமாகக் கொடுத்து உதவுவார்கள்.


தினகரன்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பார்மஸி  Empty Re: பார்மஸி

Post by ஜேக் Sun Feb 01, 2015 9:32 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

பார்மஸி  Empty Re: பார்மஸி

Post by செந்தில் Mon Feb 02, 2015 5:37 pm

விழிப்புணர்வு தரும் பகிர்வு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பார்மஸி  Empty Re: பார்மஸி

Post by முரளிராஜா Tue Feb 03, 2015 11:21 am

பயனுள்ள தகவல்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பார்மஸி  Empty Re: பார்மஸி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum