தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆற்காடு மக்கன் பேடா

View previous topic View next topic Go down

ஆற்காடு மக்கன் பேடா Empty ஆற்காடு மக்கன் பேடா

Post by நாஞ்சில் குமார் Wed Oct 22, 2014 3:11 pm

[You must be registered and logged in to see this image.]

சீக்ரெட் கிச்சன்

படிக்கவும் கேட்கவும் சுவையானது வரலாறு. அதுவும் இனிப்பைப் பற்றிய வரலாறு எனில் சுவை கூடுதல்தான். பொதுவாகவே தமிழ் நாட்டு  உணவுகளுக்கு ஒரு வரலாற்றுப் பின்னணி யும் சுவையான கதையும் இருக்கும். ஊருக்கு ஒரு சிறப்பான உணவில், இந்த முறை நாம் ஆற்காடு நோக்கி பயணம் செய்யலாம். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த நகரம், மக்கன் பேடாவுக்குப் புகழ் பெற்றது. அது என்ன மக்கன் பேடா?  குலாப் ஜாமூனின் அக்கா போல இருக்கும் இந்த இனிப்பு, சுவையிலும் போட்டி போட முடியாத அளவு மிகப்பெரியதாக இருக்கிறது!

180 ஆண்டுகளுக்கு முன் ஆற்காடு நவாப்பின் நண்பர் என்ற முறையில் அவர் வீட்டு விசேஷத்துக்குச் சென்றிருக்கிறார் கோவிந்தசாமி செட்டியார். விருந்தில் பரிமாறப்பட்ட ஒரு வகை இனிப்பு அவரை மிகவும் கவர்ந்திருக்கிறது. இனிப்பு மிட்டாய் கடை நடத்தி வந்த கோவிந்தசாமி, அந்த இனிப்புக்கு இன்னும் சிலபல செய்முறைகளால் சிறப்புச் சேர்த்திருக்கிறார். உயர்ந்த வகை உலர் பருப்புகளையும் சேர்த்து அவர் உருவாக்கிய மக்கன் பேடா பிற்காலத்தில் ஆற்காடின் அடையாளமாகவே ஆகிவிட்டது. கோவிந்தசாமி செட்டியாருக்குப்பின் அவர் வழித்தோன்றல்கள் கோவிந்தராஜ், வரதராஜர், வேணுகோபால் செட்டியார் என்று, 182வது வருடத்தில் ஐந்தாம் தலைமுறை இனிப்புக் கடையாக சுந்தரம் செட்டியாரால் நடத்தப்படுகிறது. பொறியியல் படிக்கும் இவரது மகன் சிவசங்கரும் அடுத்த தலைமுறைக்கு மக்கன் பேடாவை தொடரத்தயாராக உள்ளார்.

மக்கன் பேடா என்பது மைதா, கோவா சேர்த்த இனிப்பு... உள்ளே உலர் பருப்புகளால் பொதியப்பட்ட, வாயில் இட்டதும் கரையக்கூடிய சுவையுடன்  இருக்கும். பொன்னிறமான மக்கன் பேடாவை ஸ்பூனால் சிறிது எடுக்கும் போதே மிருதுவான அதன் உட்புறம் நம் விழிகளை நிறைக்கும். ‘செட்டியார் கடை’ என்று பெயர் பெற்ற இந்தக் கடையின் இனிப்பு பெரியார் முதல் அனைத்து  அரசியல், சினிமா நட்சத்திரங்களையும் கவர்ந்த சுவை. அது மட்டுமல்ல... வெளிநாடுகளுக்கும் பறந்து கொண்டிருக்கிறது. மக்கன் பேடா வாசனை  இல்லாத எந்த விசேஷங்களும் வேலூர் பகுதியில் நடப்பதில்லை.

சீக்ரெட் ரெசிபி ஆற்காடு மக்கன் பேடா

பண்டிகைக் காலம் நெருங்குகிறது. வழக்கமான ஜாமூன் மிக்ஸ் வாங்கி வேலையை சுலபமாக்கலாம். அல்லது சிறிது மெனக்கெட்டு ஆற்காடு மக்கன் பேடாவை நம் வீட்டிலேயே தயாரிக்கலாமே! வழக்கம் போல எந்த ஒரு இனிப்புக்கும் அளவும் பதமும் அதைவிட கூடுதல் பொறுமையும் அவசியம். நமது பாரம்பரிய இனிப்புகள் போல அன்றி  மக்கன் பேடா செய்முறை மிகவும் எளிதானது. மேலே பொன்னிறமாகவும் உள்ளே மிருதுவாகவும் வாயில் வைத்ததும் சுவையில் வழுக்கி செல்லும்  மக்கன் பேடா தயாரிப்பது, ஜாமூன் செய்வது போன்ற வேலையே... எனினும் பதம் அவசியம்.
என்னென்ன தேவை?

பால் கோவா
(சர்க்கரை இல்லாதது) - 100 கிராம்  
மைதா - கால் கிலோ
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை
தயிர் - 100 கிராம்
நெய் - 25 கிராம்
வனஸ்பதி - 50 கிராம்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

ஸ்டப்பிங்குக்கு...

பாதாம், பிஸ்தா, அக்ரூட், முந்திரி, திராட்சை, சாரைப் பருப்பு, வெள்ளரி விதை, பேரீச்சம்பழம் (சரிசமமான எடையில்) - 100 கிராம் தோராயமாக  பொடியாக நறுக்கியது. இத்துடன் ஏலக்காய் 3 பொடி செய்து கலக்கி வைக்கவும்.

பாகு செய்ய...

சர்க்கரை - 750 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்துக்கு பாகு காய்ச்சி ஆறவிடவும். மைதாவை ஆப்ப சோடாவுடன் சேர்த்து சலித்து வைக்கவும். பால்கோவா, வனஸ்பதி, மைதா, தயிர் சேர்த்து மென்மையான மாவாக பிசையவும். பிசைந்த மாவை 5 நிமிடம் ஊற விடவும். நெல்லிக்காய் அளவு மாவை எடுத்து மோதகம் செய்வது போல செய்து உள்ளே உலர் பருப்புகளின் கலவையை வைக்கவும்.  மாவை மூடி அடுக்கி வைக்கவும்.  கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ச்சவும்.  மக்கன் பேடாவை எடுத்து சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து வைக்கவும். எண்ணெய் வடிந்ததும் சர்க்கரைப் பாகில் போட்டு நெய் ஊற்றி மூடி வைக்கவும். 5 மணி நேரம் ஊற விடவும்.

உங்கள் கவனத்துக்கு...

பால்கோவாவை கட்டி இல்லாமல் மிருதுவாக பிசைந்து கொள்ள வேண்டும். சர்க்கரை ஒரு கம்பி பதம் போதுமானது.  அதிகம் ஊறவிட அவசியம் இல்லை. 5 நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம். உலர்பருப்புகள் மெலிதாக சீவி கலந்து போடுவது சுவை கூட்டும். ஜாமூன் செய்யும் போது எண்ணெயில் எடுத்த ஜாமூனை, உடனே பாகில் போடாவிட்டால், ஜாமூன் உடைந்து விடும். மக்கன் பேடா  சூடாகவும் சர்க்கரைப்பாகு சிறிது ஆறியும் இருக்க வேண்டும்.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

ஆற்காடு மக்கன் பேடா Empty Re: ஆற்காடு மக்கன் பேடா

Post by முரளிராஜா Mon Jan 05, 2015 9:46 am

சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆற்காடு மக்கன் பேடா Empty Re: ஆற்காடு மக்கன் பேடா

Post by mohaideen Mon Jan 05, 2015 4:28 pm

ஜொள்ளுஜொள்ளு
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆற்காடு மக்கன் பேடா Empty Re: ஆற்காடு மக்கன் பேடா

Post by செந்தில் Mon Jan 05, 2015 5:33 pm

ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆற்காடு மக்கன் பேடா Empty Re: ஆற்காடு மக்கன் பேடா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum