Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கல்யாணம் இன்னும் கலர்ஃபுல்!
Page 1 of 1 • Share
கல்யாணம் இன்னும் கலர்ஃபுல்!
[You must be registered and logged in to see this image.]
பிரைடல் மேக்கப்
‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பது வேறு எதற்குப் பொருந்துகிறதோ, இல்லையோ, திருமண வைபவங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தும். குறிப்பாக மணப்பெண் அலங்காரங்களுக்கு! போன வருடம் இருந்த ஃபேஷன், இந்த வருடம் இருக்காது. ‘அடடா... இன்னும் கொஞ்சம் லேட்டா கல்யாணம் பண்ணியிருக்கலாமோ...’ என ஒவ்வொரு பெண்ணையும் ஏங்க வைக்கிற மணப்பெண் அலங்காரத்தில், இன்றைய டிரெண்ட் என்ன? ‘நேச்சுரல்ஸ்’ வீணா குமாரவேல் விளக்கமாகப் பேசுகிறார்...
‘‘பல பெண்களுக்கும் கல்யாணம்கிற சம்பவம்தான் முதல் மேக்கப்புக்கான வாய்ப்பா அமையுது. அதுவரை பார்லருக்கு போய், புரொஃபஷனலா மேக்கப் போட்டுக்கிட்ட அனுபவம் இருக்காது. கல்யாணத் துக்கு மேக்கப் போடணும்னு வரும்போது, அது தனக்கு பொருந்துமா, எப்படி இருக்குமோனு ஏகப்பட்ட கேள்விகள் இருக்கும். அவங்க பார்த்த யாரோ ஒரு பிரபலம் அல்லது தோழியோட கல்யாண மேக்கப் மாதிரியே தனக்கும் பண்ணிக்கணும்னு மனசுல நினைச்சிருப்பாங்க. அது தனக்கு நல்லா இருக்குமாங்கிற சந்தேகமும் இருக்கும். இப்படி மேக்கப் தொடர்பான அவங்களோட எல்லா கேள்விகளுக்கும் விடை சொல்ற வாய்ப்புதான், இன்னிக்குப் பிரபலமாயிட்டிருக்கிற ‘ட்ரையல் மேக்கப்’. கல்யாணப் பெண்கள் மட்டுமில்லாம, அவங்களோட தோழிகளும்கூட இப்பல்லாம் இதை ட்ரை பண்றாங்க.
இன்னிக்கு 18, 19 வயசுல கல்யாணம் பண்ற பொண்ணுங்க ரொம்பக் கம்மி. பெரும் பாலும் 24, 25க்குப் பிறகு தான் பண்றாங்க. அது 30 வயசு வரைக்கும் போகுது. வேலை டென்ஷன், கல்யாண அலைச்சல், சுற்றுப்புற மாசு, வயசுனு பல காரணங்களாலயும், இவங்களோட சருமம் முதிர்ச்சியோடவும், பொலிவே இல்லா மலும் இருக்கிறதைப் பார்க்கறோம். கல்யாணத்துக்கு முந்தைய ப்ரீ பிரைடல் பேக்கேஜ்ல, கல்யாணப் பெண்களோட சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கிறது தான் முக்கியமான வேலை. 3 மாசத்துக்கு முன்பிருந்தே இந்த சிகிச்சைகளை ஆரம்பிக்கணும். கல்யாணப் பெண்ணோட சருமம் மற்றும் கூந்தலோட தன்மையையும் கண்டிஷனையும் பார்த்து, அவங்களுக்கு என்ன சிகிச்சை தேவைப்படுதுனு முடிவு பண்ணுவோம்.
ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங், கலரிங்னு கெமிக்கல் ட்ரீட்மென்ட்ஸ் அதிகம் பண்ணினதால பெரும்பாலும் அவங்களோட கூந்தல் வறண்டு, உயிரே இல்லாம இருக்கும். கூந்தலுக்கான ஸ்பாவும் மசாஜும் கொடுத்து, அதை சரி பண்ணணும். ‘என்னோட ஸ்கின்னை பளபளனு, சாஃப்டா மாத்த முடியுமா’ங்கிற கேள்வி எல்லா கல்யாணப் பெண்களுக்கும் இருக்கு. பாடி பாலீஷ் ட்ரீட்மென்ட்டுல அவங்களோட சருமத்தை ஆழமா சுத்தப்படுத்தி, இறந்த செல்களை நீக்கி, சொரசொரப்பு நீங்கி, ஊட்டம் கிடைக்கச் செய்யலாம். கல்யாணத்தன்னிக்கு அந்தப் பெண்ணோட சருமம், ரோஜா இதழ் மாதிரி அவ்ளோ மென்மையா, 10 வயசு குறைஞ்ச மாதிரி இளமையா மாறிடும். இதுல முக்கியமா சொல்ல வேண்டிய விஷயம் இருக்கு...
கல்யாணத்தன்னிக்கு மணமகள் மட்டும் இளவரசி மாதிரியும் மணமகன் சாதாரணமாகவும் நின்னா நல்லாருக்காதில்லையா? அதனால பிரைடல் பேக்கேஜ் புக் பண்ண வரும்போதே, மணமகனையும் சேர்த்துக் கூட்டிட்டு வந்து, அவங்களுக்கான ட்ரீட்மென்ட்டையும் ஆரம்பிச்சிடறாங்க கல்யாணப் பெண்கள்...’’ - புதிய தகவல் சொல்கிற வீணா, திருமண மேக்கப்பில் என்னவெல்லாம் லேட்டஸ்ட் என்றும் பேசுகிறார். ‘‘கல்யாணத்தைவிட, அதுக்கு முதல் நாள் ரிசப்ஷன்தான் மணமக்களைப் பொறுத்தவரை பெரிய நிகழ்ச்சி. ஃப்ரெண்ட்ஸ், முக்கியஸ்தர்கள்னு எல்லாரும் வருகை தரும் ரிசப்ஷன்ல ரொம்ப வித்தியாசமா தன்னைக் காட்டிக்கணும்னு நினைக்கிறாங்க.
லேட்டஸ்ட் டிரெண்ட் படி, நடுராத்திரி வரை நீளும் ரிசப்ஷனுக்கு 3 காஸ்ட்யூம், அதுக்கேத்த மேக்கப் மாத்தறாங்க. ஒரு வெஸ்டர்ன் காஸ்ட்யூம், ஒரு லெஹங்கா, அப்புறம் அவங்கவங்க விருப்பப்படி இன்னொரு காஸ்ட்யூம்னு மூணு கெட்டப்... ஒவ்வொண்ணுக்கும் மேக்கப்பும் ஹேர் ஸ்டைலும் மாறும். டிசைனர் புடவை கட்டறதானா, இடுப்பை மறைக்கிற மாதிரி லாங் பிளவுஸும், பின்பக்கத்துலேருந்து முன்னாடி வர்ற மாதிரி முந்தானையும் வச்சுக்கிறாங்க. ரிசப்ஷனுக்கான ஹேர் ஸ்டைல்ல அயர்ன் பண்றது, கிரிம்பிங்னு (கூர்மையான வேவ்ஸ்) எல்லாம் ஃபேஷன்.முகூர்த்த மேக்கப் பெரும்பாலும் பாரம்பரிய ஸ்டைல்லதான் இருக்கும். ரிசப்ஷனுக்கு தங்களோட விருப்பப்படி டிரெஸ், மேக்கப், ஹேர் ஸ்டைல்னு எல்லாத்தையும் செலக்ட் பண்ற மணப்பெண்கள், முகூர்த்தத்துக்கு பெரியவங்க விருப்பத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கறாங்க.
தலைவிரி கோலத்துக்கெல்லாம் இடமில்லை. ஜடை தச்சு, பூ வைக்கிறது, ஆண்டாள் கொண்டைக்குத் தான் முதலிடம். மடிசாரோ, பாரம்பரிய ஸ்டைல்லயோ புடவை கட்டிக்கிறாங்க. புடவை கட்டியே பழக்கமில்லாத பெண்கள்தான் அதிகம். அதனால அவங்களுக்கு பேன்ட்டுக்கு மேலதான் புடவை கட்டி விடறோம். அகலமான பட்டை வச்சுக்கிற ஃபேஷன் மாறி, மெலிசான ப்ளீட்ஸ் வச்சுப் புடவை கட்டறாங்க. முன்னல்லாம் வட இந்தியர்களோட கலாசாரமா இருந்த மெஹந்தி சடங்கு, இப்ப எல்லா கல்யாணங்கள்லயும் தவிர்க்க முடியாத ஃபங்ஷனாயிடுச்சு. கல்யாணத்துக்கு 2 நாள் முன்னாடி மெஹந்தி போட்டுக்கலாம். மணமகன், மணமகள் உருவங்களையும், பேரையும், பல்லக்குல தூக்கிட்டுப் போற மாதிரியும் டிசைன்ஸ் போட்டுக்கிறாங்க. சிவப்பு கலர்தான் இப்ப ஹாட். முழங்கை வரை போட்டுக்கிட்ட மெஹந்தி, இப்போ வங்கி போட்டுக்கிற இடம் வரைக்கும் நீண்டிருக்கு.
மேக்கப்லயும் மணப் பெண்களோட மனநிலை மாறியிருக்கு. முன்னல்லாம் மேக்கப் போட்டதே தெரியக் கூடாதுனு கேட்பாங்க. இப்ப கண்களையும், ஸ்கின் டோனையும் பிரைட்டா காட்டச் சொல்றாங்க. நல்ல சிவப்பு, ஆரஞ்சு கலர்கள்ல லிப்ஸ்டிக் போட்டுக்கத் தயாரா இருக்காங்க. கண்களுக்கு பெரும்பாலான பெண்கள் லென்ஸ் வச்சுக்கிறாங்க. செயற்கை ஐ லாஷ் வச்சுக்கிறாங்க. பாரம்பரியமான பூக்களுக்கான வரவேற்பு இப்பவும் குறையலை. அதே நேரம் பொக்கே ஃப்ளவர்ஸ் எல்லா கலர்கள்லயும் கிடைக்கிறதால, புடவைக்கு மேட்ச்சா அதுல கலர் ஸ்பிரே பண்ணி, பூ அலங்காரம் பண்ணிக்கிறதுலயும் பெண்கள் ஆர்வமா இருக்காங்க.மொத்தத்துல பழமைக்கும் புதுமைக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுக்கிற மன நிலைக்கு மாறிட்டிருக்கிற இன்றைய மணப்பெண்களால அவங்களோட கல்யாணங்கள் இன்னும் கலர்ஃபுல் நினைவுகளாகிட்டிருக்குனுதான் சொல்லணும்!’’
- தினகரன்
பிரைடல் மேக்கப்
‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பது வேறு எதற்குப் பொருந்துகிறதோ, இல்லையோ, திருமண வைபவங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தும். குறிப்பாக மணப்பெண் அலங்காரங்களுக்கு! போன வருடம் இருந்த ஃபேஷன், இந்த வருடம் இருக்காது. ‘அடடா... இன்னும் கொஞ்சம் லேட்டா கல்யாணம் பண்ணியிருக்கலாமோ...’ என ஒவ்வொரு பெண்ணையும் ஏங்க வைக்கிற மணப்பெண் அலங்காரத்தில், இன்றைய டிரெண்ட் என்ன? ‘நேச்சுரல்ஸ்’ வீணா குமாரவேல் விளக்கமாகப் பேசுகிறார்...
‘‘பல பெண்களுக்கும் கல்யாணம்கிற சம்பவம்தான் முதல் மேக்கப்புக்கான வாய்ப்பா அமையுது. அதுவரை பார்லருக்கு போய், புரொஃபஷனலா மேக்கப் போட்டுக்கிட்ட அனுபவம் இருக்காது. கல்யாணத் துக்கு மேக்கப் போடணும்னு வரும்போது, அது தனக்கு பொருந்துமா, எப்படி இருக்குமோனு ஏகப்பட்ட கேள்விகள் இருக்கும். அவங்க பார்த்த யாரோ ஒரு பிரபலம் அல்லது தோழியோட கல்யாண மேக்கப் மாதிரியே தனக்கும் பண்ணிக்கணும்னு மனசுல நினைச்சிருப்பாங்க. அது தனக்கு நல்லா இருக்குமாங்கிற சந்தேகமும் இருக்கும். இப்படி மேக்கப் தொடர்பான அவங்களோட எல்லா கேள்விகளுக்கும் விடை சொல்ற வாய்ப்புதான், இன்னிக்குப் பிரபலமாயிட்டிருக்கிற ‘ட்ரையல் மேக்கப்’. கல்யாணப் பெண்கள் மட்டுமில்லாம, அவங்களோட தோழிகளும்கூட இப்பல்லாம் இதை ட்ரை பண்றாங்க.
இன்னிக்கு 18, 19 வயசுல கல்யாணம் பண்ற பொண்ணுங்க ரொம்பக் கம்மி. பெரும் பாலும் 24, 25க்குப் பிறகு தான் பண்றாங்க. அது 30 வயசு வரைக்கும் போகுது. வேலை டென்ஷன், கல்யாண அலைச்சல், சுற்றுப்புற மாசு, வயசுனு பல காரணங்களாலயும், இவங்களோட சருமம் முதிர்ச்சியோடவும், பொலிவே இல்லா மலும் இருக்கிறதைப் பார்க்கறோம். கல்யாணத்துக்கு முந்தைய ப்ரீ பிரைடல் பேக்கேஜ்ல, கல்யாணப் பெண்களோட சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கிறது தான் முக்கியமான வேலை. 3 மாசத்துக்கு முன்பிருந்தே இந்த சிகிச்சைகளை ஆரம்பிக்கணும். கல்யாணப் பெண்ணோட சருமம் மற்றும் கூந்தலோட தன்மையையும் கண்டிஷனையும் பார்த்து, அவங்களுக்கு என்ன சிகிச்சை தேவைப்படுதுனு முடிவு பண்ணுவோம்.
ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங், கலரிங்னு கெமிக்கல் ட்ரீட்மென்ட்ஸ் அதிகம் பண்ணினதால பெரும்பாலும் அவங்களோட கூந்தல் வறண்டு, உயிரே இல்லாம இருக்கும். கூந்தலுக்கான ஸ்பாவும் மசாஜும் கொடுத்து, அதை சரி பண்ணணும். ‘என்னோட ஸ்கின்னை பளபளனு, சாஃப்டா மாத்த முடியுமா’ங்கிற கேள்வி எல்லா கல்யாணப் பெண்களுக்கும் இருக்கு. பாடி பாலீஷ் ட்ரீட்மென்ட்டுல அவங்களோட சருமத்தை ஆழமா சுத்தப்படுத்தி, இறந்த செல்களை நீக்கி, சொரசொரப்பு நீங்கி, ஊட்டம் கிடைக்கச் செய்யலாம். கல்யாணத்தன்னிக்கு அந்தப் பெண்ணோட சருமம், ரோஜா இதழ் மாதிரி அவ்ளோ மென்மையா, 10 வயசு குறைஞ்ச மாதிரி இளமையா மாறிடும். இதுல முக்கியமா சொல்ல வேண்டிய விஷயம் இருக்கு...
கல்யாணத்தன்னிக்கு மணமகள் மட்டும் இளவரசி மாதிரியும் மணமகன் சாதாரணமாகவும் நின்னா நல்லாருக்காதில்லையா? அதனால பிரைடல் பேக்கேஜ் புக் பண்ண வரும்போதே, மணமகனையும் சேர்த்துக் கூட்டிட்டு வந்து, அவங்களுக்கான ட்ரீட்மென்ட்டையும் ஆரம்பிச்சிடறாங்க கல்யாணப் பெண்கள்...’’ - புதிய தகவல் சொல்கிற வீணா, திருமண மேக்கப்பில் என்னவெல்லாம் லேட்டஸ்ட் என்றும் பேசுகிறார். ‘‘கல்யாணத்தைவிட, அதுக்கு முதல் நாள் ரிசப்ஷன்தான் மணமக்களைப் பொறுத்தவரை பெரிய நிகழ்ச்சி. ஃப்ரெண்ட்ஸ், முக்கியஸ்தர்கள்னு எல்லாரும் வருகை தரும் ரிசப்ஷன்ல ரொம்ப வித்தியாசமா தன்னைக் காட்டிக்கணும்னு நினைக்கிறாங்க.
லேட்டஸ்ட் டிரெண்ட் படி, நடுராத்திரி வரை நீளும் ரிசப்ஷனுக்கு 3 காஸ்ட்யூம், அதுக்கேத்த மேக்கப் மாத்தறாங்க. ஒரு வெஸ்டர்ன் காஸ்ட்யூம், ஒரு லெஹங்கா, அப்புறம் அவங்கவங்க விருப்பப்படி இன்னொரு காஸ்ட்யூம்னு மூணு கெட்டப்... ஒவ்வொண்ணுக்கும் மேக்கப்பும் ஹேர் ஸ்டைலும் மாறும். டிசைனர் புடவை கட்டறதானா, இடுப்பை மறைக்கிற மாதிரி லாங் பிளவுஸும், பின்பக்கத்துலேருந்து முன்னாடி வர்ற மாதிரி முந்தானையும் வச்சுக்கிறாங்க. ரிசப்ஷனுக்கான ஹேர் ஸ்டைல்ல அயர்ன் பண்றது, கிரிம்பிங்னு (கூர்மையான வேவ்ஸ்) எல்லாம் ஃபேஷன்.முகூர்த்த மேக்கப் பெரும்பாலும் பாரம்பரிய ஸ்டைல்லதான் இருக்கும். ரிசப்ஷனுக்கு தங்களோட விருப்பப்படி டிரெஸ், மேக்கப், ஹேர் ஸ்டைல்னு எல்லாத்தையும் செலக்ட் பண்ற மணப்பெண்கள், முகூர்த்தத்துக்கு பெரியவங்க விருப்பத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கறாங்க.
தலைவிரி கோலத்துக்கெல்லாம் இடமில்லை. ஜடை தச்சு, பூ வைக்கிறது, ஆண்டாள் கொண்டைக்குத் தான் முதலிடம். மடிசாரோ, பாரம்பரிய ஸ்டைல்லயோ புடவை கட்டிக்கிறாங்க. புடவை கட்டியே பழக்கமில்லாத பெண்கள்தான் அதிகம். அதனால அவங்களுக்கு பேன்ட்டுக்கு மேலதான் புடவை கட்டி விடறோம். அகலமான பட்டை வச்சுக்கிற ஃபேஷன் மாறி, மெலிசான ப்ளீட்ஸ் வச்சுப் புடவை கட்டறாங்க. முன்னல்லாம் வட இந்தியர்களோட கலாசாரமா இருந்த மெஹந்தி சடங்கு, இப்ப எல்லா கல்யாணங்கள்லயும் தவிர்க்க முடியாத ஃபங்ஷனாயிடுச்சு. கல்யாணத்துக்கு 2 நாள் முன்னாடி மெஹந்தி போட்டுக்கலாம். மணமகன், மணமகள் உருவங்களையும், பேரையும், பல்லக்குல தூக்கிட்டுப் போற மாதிரியும் டிசைன்ஸ் போட்டுக்கிறாங்க. சிவப்பு கலர்தான் இப்ப ஹாட். முழங்கை வரை போட்டுக்கிட்ட மெஹந்தி, இப்போ வங்கி போட்டுக்கிற இடம் வரைக்கும் நீண்டிருக்கு.
மேக்கப்லயும் மணப் பெண்களோட மனநிலை மாறியிருக்கு. முன்னல்லாம் மேக்கப் போட்டதே தெரியக் கூடாதுனு கேட்பாங்க. இப்ப கண்களையும், ஸ்கின் டோனையும் பிரைட்டா காட்டச் சொல்றாங்க. நல்ல சிவப்பு, ஆரஞ்சு கலர்கள்ல லிப்ஸ்டிக் போட்டுக்கத் தயாரா இருக்காங்க. கண்களுக்கு பெரும்பாலான பெண்கள் லென்ஸ் வச்சுக்கிறாங்க. செயற்கை ஐ லாஷ் வச்சுக்கிறாங்க. பாரம்பரியமான பூக்களுக்கான வரவேற்பு இப்பவும் குறையலை. அதே நேரம் பொக்கே ஃப்ளவர்ஸ் எல்லா கலர்கள்லயும் கிடைக்கிறதால, புடவைக்கு மேட்ச்சா அதுல கலர் ஸ்பிரே பண்ணி, பூ அலங்காரம் பண்ணிக்கிறதுலயும் பெண்கள் ஆர்வமா இருக்காங்க.மொத்தத்துல பழமைக்கும் புதுமைக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுக்கிற மன நிலைக்கு மாறிட்டிருக்கிற இன்றைய மணப்பெண்களால அவங்களோட கல்யாணங்கள் இன்னும் கலர்ஃபுல் நினைவுகளாகிட்டிருக்குனுதான் சொல்லணும்!’’
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» "நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்"
» கல்யாணம் செய்யப்போறீங்களா..
» கல்யாணம் செய்ய ஆசை..!
» கல்யாணம் ஒரே ஜாதியில் ஏன்?
» கறுப்புக் கல்யாணம்
» கல்யாணம் செய்யப்போறீங்களா..
» கல்யாணம் செய்ய ஆசை..!
» கல்யாணம் ஒரே ஜாதியில் ஏன்?
» கறுப்புக் கல்யாணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|