Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முறையற்ற மாதவிலக்கும், பிரசவ தேதி குழப்பமும்
Page 1 of 1 • Share
முறையற்ற மாதவிலக்கும், பிரசவ தேதி குழப்பமும்
மாதவிலக்கு சுழற்சி என்பது எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. 28 முதல் 32 நாட்களுக்குள் மாதவிலக்காவதுதான் சரியான சுழற்சி என்றாலும், சிலருக்கு அந்த சுழற்சி சில மாத இடைவெளி விட்டுக் கூட வரலாம். ‘‘திருமணமாகிற வரை இந்த முறையற்ற மாதவிலக்கு சுழற்சி பெண்களைப் பெரிதாகப் பாதிப்பதில்லை. திருமணமாகி, கருத்தரித்த பெண்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என்கிறார் மருத்துவர் நிவேதிதா. மாதவிலக்கு சுழற்சி முறையற்று இருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களையும் தெளிவாக்குகிறார் அவர்.
‘‘பிரசவ தேதியைக் கணக்கிட கடைசி மாதவிலக்கு தேதியானது அவசியம். கடைசியாக மாதவிலக்கான தேதியுடன், 7 நாட்களைக் கூட்ட வேண்டும். பிறகு அதிலிருந்து 3 மாதங்கள் பின்னோக்கிக் கணக்கிட்டால் வருவதே பிரசவ தேதியாக சொல்லப் படுகிறது. உதாரணத்துக்கு ஒரு பெண்ணுக்கு கடைசியாக மாதவிலக்கு வந்தது ஜூன் 1ம் தேதி என வைத்துக் கொள்வோம். அத்துடன் 7 நாட்களைக் கூட்டினால் ஜூன் 8. அதிலிருந்து 3 மாதங்கள் பின்னோக்கிப் போனால், மார்ச் 8. எனவே மார்ச் 8 தான் அந்தப் பெண்ணுக்குப் பிரசவமாகும் என எதிர்பார்க்கப் படுகிற தேதி.
28 நாட்கள் முதல் 32 நாட்களுக்குள் மாதவிலக்காகிற பெண்களுக்கு இந்தக் கணக்கு சரியாக இருக்கும். மாதவிலக்கு சுழற்சி முறையின்றி இருப்பவர்களுக்கு இந்தக் கணக்கு தப்பாகலாம். எனவே மாதவிலக்கு முறையற்று இருந்து கருத்தரித்த பெண்கள், சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பத்தை உறுதி செய்தவுடனேயே, 45 நாட்களில் ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம். அந்த ஸ்கேனில் கருவானது, கர்ப்பப் பைக்குள்தான் வளர்கிறதா அல்லது வெளியில் வளர்கிறதா என்பது தெரியும். அந்த ஸ்கேனை குழந்தையின் இதயத் துடிப்பு வருவதற்கு முன் செய்வதன் மூலம், கருவின் வளர்ச்சியைக் கணித்து, பிரசவ தேதியைக் கணக்கிட முடியும்.
கருத்தரித்த பெண்கள் பலரும் அத்தனை சீக்கிரம் செய்யப்படுகிற ஸ்கேன் அவசியம்தானா என நினைக்கலாம். எத்தனை சீக்கிரம் எடுக்கப்படுகிறதோ, அத்தனை சீக்கிரத்தில் கரு தொடர்பான பிரச்னைகள் ஏதும் இருந்தால் கண்டுபிடித்து சரி செய்ய ஏதுவாக இருக்கும். குறிப்பாக ஒன்றுக்கு மேலான குழந்தைகளைச் சுமக்கும் பெண்களுக்கு ஒரு குழந்தை கருக்குழாயிலும், இன்னொன்று கர்ப்பப் பையிலும் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால் இந்த ஸ்கேன் மிக மிக அவசியம்.குழந்தையின் இதயத் துடிப்பானது பொதுவாக 6 வாரங்களில் ஆரம்பமாகும். திறமைமிக்க ஒரு சோனாலஜிஸ்ட் (ஸ்கேன் நிபுணர்) அதை வைத்தே கருவின் வளர்ச்சியைக் கணித்து விடுவார்.
பொதுவாக கர்ப்ப காலம் 280 நாட்கள். சரியான பிரசவ தேதி தெரியாமல், இந்த நாட்கள் கடக்கும் போதும் பிரச்னைதான். குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் குழந்தையின் நஞ்சுக் கொடி செயல்படாது. குழந்தைக்கும், தாய்க்குமான தொடர்பே அந்த நஞ்சுக் கொடிதான். அது முதிர்ந்து, செயல்பாட்டை நிறுத்தினாலும் ஆபத்துதான். எனவே மாதவிலக்கு முறையற்ற பெண்கள், கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட நொடி முதல், எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மருத்துவர் பரிந்துரைக்கிற எந்த ஸ்கேனையும் அநாவசியம் என அலட்சியப்படுத்த வேண்டாம்...’’ என்கிறார் மருத்துவர் நிவேதிதா.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» பிரசவ வலி வரப் போவதற்கான 6 அறிகுறிகள்::
» பிரசவ காலத்தைக் கணக்கிடும் முறை
» மரபணுக்களை பாதிக்கும் முறையற்ற தூக்கம்...
» உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும் சில முறையற்ற பழக்கங்கள்!
» தூத்துக்குடியில் 15ம் தேதி முதல் 144 தடை
» பிரசவ காலத்தைக் கணக்கிடும் முறை
» மரபணுக்களை பாதிக்கும் முறையற்ற தூக்கம்...
» உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும் சில முறையற்ற பழக்கங்கள்!
» தூத்துக்குடியில் 15ம் தேதி முதல் 144 தடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|