தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சில நிமிடங்கள் சில நாட்கள் என்ன ஒரு மாற்றம்!

View previous topic View next topic Go down

சில நிமிடங்கள் சில நாட்கள் என்ன ஒரு மாற்றம்! Empty சில நிமிடங்கள் சில நாட்கள் என்ன ஒரு மாற்றம்!

Post by நாஞ்சில் குமார் Fri Oct 31, 2014 3:25 pm

[You must be registered and logged in to see this image.]


தீபாவளி மத்தாப்பு: பியா படுகோன்

2001 செப்டம்பர் 11 :தீவிரவாதிகளின் பயங்கரத் தாக்குதலால் உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் இரண்டு கோபுரங்கள் பற்றி எரிந்து, ஏராளமான  மக்கள் பலியான அவல நாள்!

2004 டிசம்பர் 26: சுனாமி என்கிற பெயரில் உலகத்தையே புரட்டிப் போட்டு, போகிற போக்கில் லட்சக்கணக்கான உயிர்களை சுருட்டிக் கொண்ட மரண  நாள்!

2013 ஏப்ரல் 15: அமெரிக்காவின் தேசப்பற்று நாளில், மாரத்தான் ஓடிய மக்கள் மத்தியில் குண்டு வெடித்து, மாற்றுத் திறனாளிகளாக்கிய ரத்த நாள்! இந்த மூன்று முக்கிய தினங்களை நினைவு கூரும் ஒவ்வொரு முறையும் நெஞ்சம் பதை பதைக்கும் யாருக்கும். எங்கேயோ கண்ணுக்குத் தெரியாத  இடத்தில் நடந்த இந்தச் சம்பவங்களைக் கேள்விப்படுகிற நமக்கே இத்தனை பதைபதைப்பு என்றால், பக்கத்தில் இருந்து,  மயிரிழையில் உயிர்  தப்பியவரின் மனநிலை எப்படியிருக்கும்? ‘வேர் எர்த் மீட்ஸ் வாட்டர்’ என்கிற தனது அறிமுக நாவலில் அப்படியொரு அனுபவத்தைப் பதிவு   செய்திருக்கிறார் நியூயார்க்கை சேர்ந்த பியா படுகோன்.

‘‘நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் நியூயார்க்ல. அந்த நாட்டோட அத்தனை வளங்களையும் திகட்டத் திகட்ட அனுபவிச்சிருக்கேன். ஆனாலும், எங்கம்மா  அப்பாவோட கடந்த கால இந்திய வாழ்க்கையின் தாக்கமும் என்கிட்ட உண்டு. இதை என்னோட நாவல்லயும் நீங்க உணரலாம்’’ என்கிற பியா, தனது  நாவலுக்கான பின்னணி பற்றி தொடர்கிறார்.

‘‘2001 செப்டம்பர் 11ம் தேதி நடந்த ட்வின் டவர் அட்டாக்குக்கு நாலு நாள் முன்னாடி வரைக்கும், அதே வேர்ல்ட் டிரேட் சென்டர்ல டவர் ஒன்ல  வேலை பார்த்திட்டிருந்தேன்.

2004ல சுனாமி வந்த போதும், கடற்கரைக்கு சில நூறு கிலோமீட்டர் தொலைவுல என் குடும்பத்தோட இருந்தேன்.

2013ல பாஸ்டன்ல மாரத்தான் ஓடினவங்க மேல குண்டுவெடிப்பு நடந்த போது, அதே ஏரியாவுல தான், நான் என் கணவரோட இருந்தேன். தொடர்ச்சியா மூணு சம்பவங்கள்... மூணுலயுமே மயிரிழையில உயிர் பிழைச்சிருக்கேன். சில நிமிடங்களும் நாட்களும் ஒருத்தரோட தலைவிதியையே  மாத்திடும்னு உணர்த்தின சம்பவங்கள் மூணும். விதியைப் பத்தி ஒரு புத்தகமே எழுதற அளவுக்கு என்னைத் தயார்படுத்தினதும் இந்தச்  சம்பவங்கள்தான்...’’ - நிறைமாதக் கருவைச் சுமந்தபடி, நிறுத்தி நிதானமாகப் பேசுகிறார் பியா.

தனது முதல் புத்தகமான ‘வேர் எர்த் மீட்ஸ் வாட்ட’ரில், தான் சந்தித்த அனுபவங்கள் ஒரு ஆண் கதாபாத்திரத்துக்கு நிகழ்வதாக மாற்றி  சித்தரித்திருக்கிறார். தொடர்ச்சியாக துயரங்களின் நுனி வரை சென்று, நூலிழையில் உயிர் தப்பும் கரோம் என்கிற ஆணுக்கு வாழ்க்கை குறித்து எழுகிற  கேள்விகளும் பதில்களுக்கான தேடலும்தான் கதையின் கரு.‘‘இந்த மூணு சம்பவங்கள்லேருந்தும் தப்பிச்சப்ப, ஒரு சராசரி மனுஷியா எனக்குள்ள ஒரு  ரிலீஃபும் ஆசுவாசமும் நன்றி உணர்ச்சியும் வந்தது உண்மை. என்னை மாதிரியே இந்தச் சம்பவங்கள்லேருந்து தப்பிச்ச ஒவ்வொருத்தருமே  இப்படித்தான் ஃபீல் பண்ணியிருப்பாங்க. அடுத்த நிமிஷமே, அந்தத் துயரங்கள்ல பலியானவங்களை நினைச்சு வருத்த மும் வேதனையும்  பட்டிருப்போம். என்னோட தனிப்பட்ட அனுபவங்களோட தொகுப்புதான் இந்தப் புத்தகம்.

எங்கே என்ன பேரிடர் நடந்தாலும், அதுல பலியாகறவங்களும் இருப்பாங்க. என்னை மாதிரி தப்பிக்கிறவங்களும் இருப்பாங்க. தப்பிச்சவங்களுக்கும்  அந்தச் சம்பவங்களுக்குப் பிறகு வாழ்க்கை மாறித்தான் போகுது. ட்வின் டவர் அட்டாக் நடந்ததுக்கு நாலு நாள் முன்னாடி வரைக்கும் எனக்கு  அங்கதான் வேலை. சம்பவம் நடந்தப்ப, அது ஒவ்வொரு அமெரிக்கரையும் உலுக்கிடுச்சு. அதையும் தாண்டி, நான் கேள்விப்பட்ட சில கதைகள்தான்  இந்தப் புத்தகத்துக்கான கரு. ‘என் பையனுக்கு அந்த பில்டிங்ல மீட்டிங் இருந்தது. நல்ல வேளையா காலையில கொஞ்ச நேரம் தூங்கிட்டதால  அவனால மீட்டிங் போக முடியலை’னும், ‘ட்ரெயினை மிஸ் பண்ணிட்டேன்.

இல்லைனா நானும் இதுல மாட்டியிருப்பேன்’னும், ‘இன்டர்வியூ மட்டும் கேன்சல் ஆகலைனா, இந்நேரம் நானும் இருந்த இடம் தெரியாமப்  போயிருந்திருப்பேன்’னும் ஆளாளுக்கு பெருமூச்சு விட்டு சொன்ன கதை களைக் கேட்டேன். சுனாமி நடந்தப்ப வும் உலகமே தண்ணீரைப்  பழிச்சிட்டிருக்க, நான் மட்டும் வங்காள விரிகுடா கரையோரம் நின்னபடி, கடலோட அமைதியை ரசிச்சிட்டிருந்தேன். எங்களோட அதிர்ஷ்டம்னு  சொல்றதானு தெரியலை.... கடற்கரை ஓரம் டூர் போகறதா பிளான் பண்ணியிருந்த எங்க குடும்பம், திடீர்னு மேற்கு வங்காளத்துக்குப் போனோம்.

2013ல பாஸ்டன் மாரத்தான்ல என் கணவரும் ஓடினார். அவர் மட்டும் கொஞ்சம் மெதுவா ஓடியிருந்தார்னா, குண்டு வெடிப்புல கால்களை  இழந்தவங்கள்ல அவரும் ஒருத்தராகியிருப்பார்.

இப்படி எல்லா சம்பவங்களும் என் ஆழ்மனசுல பல வருடங்களா ஏற்படுத் திக்கிட்டிருந்த தாக்கம்தான் இப்படியொரு புத்தகத்தைப் பத்தி யோசிக்க  வச்சது. இந்தக் கதையில தண்ணீருக்கு முக்கியமான பங்குண்டு. சாதாரண தண்ணீர்தான்... வாழ்க்கை க்கும் மரணத்துக்குமான கண நேர மாறுதலை  ஒரு அலை தீர்மானிச்சிடுது இல்லையா? அதனாலதான் என் புத்தகத்துக்கு இப்படியொரு பெயரை வச்சேன்...’’ என்கிறவரின் பேச்சில் உயிர் பிழைத்த  அதிர்ச்சியின் மிச்சம் இன்னும் இருக்கிறது.‘‘என் வாழ்க்கையில மூணு துயரச் சம்பவங்கள்லேருந்தும் நான் தப்பிச்சேன். அதுவே இந்த மூணுலயும்  தொடர்ந்து பாதிக்கப்பட்டவங்களும் இருந்தாங்கன்னா? மூணுலயும் தன்னோட அன்புக்குரியவங்களை இழந்திருந்தாங்கன்னா? அவங்க வாழ்க்கையை  எப்படிப் பார்த்திருப்பாங்கனு யோசிச்சேன். அப்படியொரு கேரக்டர்தான் என் நாவலோட மெயின் ஹீரோ கரோம் சேத்.

இந்த கேரக்டரோட சூழ்நிலையிலேருந்து என்னை விலக்கி வச்சுப் பார்க்க நினைச்சேன். இந்தக் கதைக்காக நான் எந்த ஆய்வையும் பண்ணலை.  இன்னும் சொல்லப் போனா, புத்தகத்தை எழுதி முடிச்சதும், மரணத்துலேருந்து தப்பிச்சவங்களோட குற்ற உணர்வுகளைப் பத்தி எனக்கு நிறைய தெரிய  வந்தது. கரோம், குடும்பத்தை இழந்து, நண்பர்களை இழந்து, மரணத்தோட விளிம்பு வரைக்கும் போய் பிழைச்சிருப்பான். ஆனா, அதுக்குப் பிறகு  யாருமே, எதுவுமே இல்லாத துரதிர்ஷ்டசாலியா, தனிமைப்படுத்தப்பட்டு வாழ வேண்டிய அவனோட வலியைத்தான் இதுல பதிவு பண்ணினேன்.  ‘விதியைப் பத்தியும், அதிர்ஷ்டத்தைப் பத்தியும் பேசியிருக்கீங்களே’னு நிறைய பேர் என்னைக் கேட்கறாங்க.

இந்த உலக நிகழ்வுகள் தற் செயலானவை... குழப்பமானவை... ஆபத்தானவை. யாருக்கு வேணாலும், எந்த நொடியிலயும் என்ன வேணாலும்  நடக்கலாம். அன்பும் நேர்மையும் மட்டும்தான் வாழறதுக்கான தகுதிகள்னு இந்த நாவல்ல சொல்லியிருக்கேன்...’’ - நீண்ட உரையாற்றி நிறுத்துகிற  பியா, தனது அடுத்த நாவலுக்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார். அதிலும் அன்பே மையக்கருவாம்!‘அன்புதானே அகிலத்தையே இயக்குகிற  சக்தி?’ என்கிறார் அமெரிக்க அழகி!

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

சில நிமிடங்கள் சில நாட்கள் என்ன ஒரு மாற்றம்! Empty Re: சில நிமிடங்கள் சில நாட்கள் என்ன ஒரு மாற்றம்!

Post by முரளிராஜா Tue Jan 06, 2015 10:31 am

அன்பும் நேர்மையும் மட்டும்தான் வாழறதுக்கான தகுதிகள்
எற்றுக்கொள்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சில நிமிடங்கள் சில நாட்கள் என்ன ஒரு மாற்றம்! Empty Re: சில நிமிடங்கள் சில நாட்கள் என்ன ஒரு மாற்றம்!

Post by செந்தில் Tue Jan 06, 2015 12:05 pm

முரளிராஜா wrote:
அன்பும் நேர்மையும் மட்டும்தான் வாழறதுக்கான தகுதிகள்
எற்றுக்கொள்கிறேன்
எற்றுக்கொள்கிறேன்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சில நிமிடங்கள் சில நாட்கள் என்ன ஒரு மாற்றம்! Empty Re: சில நிமிடங்கள் சில நாட்கள் என்ன ஒரு மாற்றம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum