தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சர்க்கரைக்கு நிச்சயம் அக்கரை தேவை

View previous topic View next topic Go down

சர்க்கரைக்கு நிச்சயம் அக்கரை தேவை Empty சர்க்கரைக்கு நிச்சயம் அக்கரை தேவை

Post by mohaideen Mon Jan 12, 2015 3:47 pm

சர்க்கரைக்கு நிச்சயம் அக்கரை தேவை Ht3183
இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருக்கலாம் என்ற நிலை உருவாகி வருகிறது. முதுமை அடைந்தால்தான் வரும் என்ற நிலைமை மாறி, இளம் வயதிலேயே இந்தத் தொற்றாத நோய் பெருக ஆரம்பித்துவிட்டது. உடல் இயக்கம் இல்லாமை, கொழுப்பு-சர்க்கரை கொண்ட உணவை அதிகம் உட்கொள்ளுதல், மன அழுத்தம் அதிகரிப்பு போன்றவற்றால் இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படுவதும், உடல் ஊதுவதும்தான் இதற்குக் காரணங்கள்.
நீரிழிவு நோயின் அடிப்படைகளை முழுமையாக அறிந்துகொண்டு, விழிப்புணர்வுடன் செயல்பட்டால் இந்நோய் வராமல் தடுக்கவும், வந்த பின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் முடியும்.

மாற்றம் தேவை 


இதயம், கண் சார்ந்த பிரச்சினைகள், பக்கவாதம், சிறுநீரகக் கோளாறு என முக்கியமான நோய்களுக்கெல்லாம் ஆரம்பமே நீரிழிவு நோய்தான். நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது கிட்டத்தட்ட ஒரு வீரச்செயல் என்றுதான் சொல்ல வேண்டும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பராமரிப்பது அத்தனை சுலபமான விஷயமும் அல்ல. அதற்காகச் சிறிது நேரம் செலவு செய்தால் போதும். உணவு முறையில் மாற்றம், உணவு உட்கொள்வதில் மாற்றம், உடற்பயிற்சி செய்வதில் மாற்றம் எனப் பல மாற்றங்களை நீரிழிவு நோயாளிகள் செய்ய வேண்டியிருக்கிறது.. என்ன செய்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.?

சரியான உணவுமுறை, உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொண்டால் நீரிழிவு பிரச்சனையிலிருந்து நம்மை பாதுகாக்க முடியும்.

உணவு முறை

நீரிழிவைக் கட்டுக்குள் வைத்துககொள்ள சமச்சீரான உணவு அவசியம். தினமும் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று.. நீரிழிவுக்கு உகந்த பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், தானியங்கள் ஆகியவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவைகளில் கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதால் நன்மை கிடைக்கும்.

புரதச் சத்து உணவு வகைகளை மிதமாக உட்கொள்ள வேண்டும். மிக அதிகமாக உட்கொண்டால் சிறுநீரகங்களைப் பாதிக்கும். மாவுச் சத்து உணவு வகைகளை மிகவும் குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். நொறுக்குத் தீனிகளைத் தவிர்ப்பதும் நல்லது. சாக்லெட், இனிப்பு வகைகளை அறவே தவிர்க்க வேண்டும். மது அருந்துபவர்கள், மதுவை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி

உடல் நலத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க உடற்பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன. உடற்பயிற்சியானது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயன் அளிக்கும். ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைக்கவும், டைப் 2 எனப்படும் நீரிழிவு நோய் வராமல் தடுக்கவும் உடற்பயிற்சிகள் உதவுகின்றன.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சர்க்கரைக்கு நிச்சயம் அக்கரை தேவை Empty Re: சர்க்கரைக்கு நிச்சயம் அக்கரை தேவை

Post by mohaideen Mon Jan 12, 2015 3:48 pm

டைப் 1 நீரிழிவு

டைப் 1 நீரிழிவு நோயாளிகள் உடற்பயிற்சி செய்தாலும் கூட இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாது. அதோசமயம் நோயாளிகளுக்கு இன்சூலின் முழுமையாக செயல்பட வேண்டுமெனில் உடற்பயிற்சி செய்வதும் அவசியமாகிறது. உடற்பயிற்சி செய்யும் போது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு மாறாமல் இருக்கவேண்டுமானால், உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு போதுமான அளவு உணவு உட்கொள்ள வேண்டும்.


டைப் 2 நீரிழிவு 


டைப் 2 நீரிழிவு நோயாளிகள் முறையாக உடற்பயிற்சி செய்வதன் மூலமும், அளவான சத்துகள் கொண்ட உணவைச் சாப்பிடுவதன் மூலமும் இன்சுலின் பயன்பாட்டையோ, வேறு மருந்துகள் சாப்பிடுவதையோ குறைத்துக்கொள்ள முடியும்.

முறையான சோதனை


நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கிறதா இல்லையா என்பதை 2-3 மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது. டைப் 2 நோயாளிகள் ஹெச்பி.ஏ.1.சி. எனப்படும் மூன்று மாத ரத்த சர்க்கரை சராசரி அளவையும் எடுத்துப் பார்க்க வேண்டும். அதில் இன்னும் தெளிவான முடிவு கிடைக்கும். ஆண்டுக்கு எத்தனை முறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பது ஒருவருக்கு இருக்கும் நீரிழிவின் வகையைப் பொறுத்தும், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைப் பொறுத்தும் மாறுபடும்.

சிகிச்சை முறை -டைப் 1


ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுக்குள் வைக்க இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளலாம் அல்லது மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி இதைப் பின்பற்ற வேண்டும்.

டைப் 1 நீரிழிவு நோய் இருந்தால், இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். நீரிழிவின் தன்மையைப் பொறுத்துத் தினமும் எத்தனை முறை ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை மருத்துவரே முடிவு செய்வார். ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகமாக இருந்தால், அடிக்கடி இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். டைப் 1 நீரிழிவு நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொண்டாலும் உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிடக் கூடாது. உணவுக் கட்டுப்பாட்டையும் கைவிடக் கூடாது.

சிகிச்சை முறை - டைப் 2


டைப் 2 நீரிழிவு நோயாளிகள் முறையான உணவுப் பழக்கத்தையும், உடற்பயிற்சியையும் கடைப்பிடிக்க வேண்டும். ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு கட்டுக்குள் வரவில்லை என்றால், மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொண்டால், அவை உடலில் இன்சுலின் சிறப்பாகச் செயல்பட உதவும்.

ஒருவேளை மாத்திரையால் பலன் கிடைக்காவிட்டால், இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம் வேறு உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்க முடியும்.

எச்சரிக்கை

நீரிழிவு நோய் சில கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடலாம். அதிக அளவு இன்சுலின் எடுத்துக்கொள்வது அல்லது அதிக உடற்பயிற்சி காரணமாக ‘ஹைபோகிளைசிமியா’ ஏற்படலாம். அதாவது, ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைவது. இது நீடித்தால் வலிப்போ, சுயநினைவை இழக்கும் நிலையோ ஏற்படலாம்.

ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருப்பதாக உணர்ந்தால், உடனடியாகச் சிறிது சர்க்கரை, சாக்லெட், பழரசம் ஆகியவற்றில் ஒன்றைச் சாப்பிடலாம். பிறகு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைப் பரிசோதித்து மருத்துவர் உதவியை நாடலாம். ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு மிகவும் அதிகமாக இருந்தால் ‘டயாபெடிக் கீட்டோ அசிடோசிஸ்’என்ற பாதிப்பு வரலாம். இது பொதுவாக டைப் 1 நோயாளிகளுக்குக் காணப்படும்.

சிலர் உடல்நலம் சரியில்லாதபோது சரியாகச் சாப்பிட மாட்டார்கள். அப்போது இன்சுலின் ஊசியையோ, மாத்திரையையோ கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சரியாக சாப்பிடாதபோது குளுக்கோஸ் அளவு குறைந்தே காணப்படும். சாப்பிடாமல் மேற்கொண்டு ஊசி, மருந்து எடுத்துக்கொள்ளும்போது, அது பிரச்சினையை ஏற்படுத்திவிடலாம். எனவே, அந்த நேரத்தில் குளுக்கோஸ் அளவைப் பார்ப்பது நல்லது. 

http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3193
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum