தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கொண்டாடும் மனநிலை வாய்த்தவர்களுக்கு தினந்தோறும் திருவிழா!

View previous topic View next topic Go down

கொண்டாடும் மனநிலை வாய்த்தவர்களுக்கு தினந்தோறும் திருவிழா! Empty கொண்டாடும் மனநிலை வாய்த்தவர்களுக்கு தினந்தோறும் திருவிழா!

Post by நாஞ்சில் குமார் Sat Sep 27, 2014 10:46 pm

கொண்டாடும் மனநிலை வாய்த்தவர்களுக்கு தினந்தோறும் திருவிழா! 2eds8rt


குறிப்பிட்ட ஊரில் உள்ள கோயில், கடவுளை மையப்படுத்திக் கொண்டாடப்படும் திரு விழாக்கள், பலதரப்பட்ட மக்களையும் ஒரே குடையின் கீழ்  கொண்டு வரும் வல்லமை பெற்றவை. ஒரே திருவிழாவில் நமக்கு பிடித்தமானவர்களை காண்பதைப் போல, பேச்சுவார்த்தை நின்று போன  உறவுகளையும் நட்புகளையும்  பார்க்கலாம். பொதுவாகவே அன்புக்கு உரியவர்களிடம் விரைவாக தோன்றும் கோபம், வெறுப்பு போன்றவை வந்த   வேகத்தில் ஆவியாகி காணாமல் போக பாசம் மட்டும் எஞ்சி நிற்கும். முதலில் சென்று யார் பேசுவது என்பதில் மட்டும் விட்டுக் கொடுக்காத  வீராப்புக்குச் சொந்தக்காரர்கள் தான் நம்மில் பலர். இவர்கள் உள்பட, நாம் அனைவரும் நம் கடந்த காலத்தின் நினைவுகளை மீட்டிப் பார்க்க உதவி செய்வனவற்றில் ஒன்றாக திருவிழாக்களும் இருக்கின்றன.

மழை என்ற அர்த்தத்தில் வரும் மாரி, அம்மனாக வீற்று இருக்காத ஊரே தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம். முன்னால் சேர்ந்து கொள்ளும்  பெயர் மட்டும், சந்தனம், முத்து, சமயபுரம் என்று இடத்துக்கு இடம் மாறுபடும். பொதுவாக இந்தக் கோயில்களில் எல்லாம் பங்குனி மாதம் திருவிழா  நடைபெறும். கொளுத்தும் கோடையில் மழை வேண்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கலாமோ இந்தத் திருவிழாக்கள்?  மதுரை ரிசர்வ்லைன் காவலர்  குடியிருப்பில் இருக்கின்ற மாரியம்மன் கோயிலில் வருடந்தோறும் பத்து நாட்கள் நடக்கும் பங்குனித் திருவிழா.  அம்மன் கோயில்களுக்கே உள்ள இலக்கணப்படி, இங்கும் திருவிளக்கு பூஜை, சுமங்கலி பூஜை போன்றவை நடத்தப்படும்.  கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக வரும்போதும், மீண்டும் அழகர் கோயில் செல்லும்போதும், இக்கோயிலில் தலையைக் காட்டி செல்லும்  அவரைக் காணக் கட்டுக்கடங்காமல் கூட்டம் இருக்கும்.

இந்தக் கோயில் ஓரளவு பெரிய கோயில். பங்குனித் திருவிழா ஆரம்பமானதின் அடையாளமாக முதல் நாளில் காப்பு கட்டப்படும். அங்கங்கே  வேப்பிலைகள் கயிற்றில் சீரான இடைவெளிகளில் முடிச்சிடப்பட்டு, வீதிகளின் இரண்டு பக்கங்களையும் இணைத்து தோரணமாக தொங்க விடப்படும்.  அன்று மாலையே பிரசாதமாக - தாராளமாக மோர் விட்டு, வெங்காயம் கலந்து  வழங்கப்படும் கேப்பைக்கூழுக்கே  உரிய அலாதி சுவை இன்று வரை  மாறவில்லை. அதற்கடுத்த நாட்களில் மாலை வேளைகளில் பிரசாதமாக வழங்குவதற்கென்றே பொங்கல் பிரியர்களுக்கு பிடித்த சுவையிலேயே  பெரிய பெரிய அண்டாக்களில் பொங்கல் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்.

விழாக்காலங்களில் கோயிலின் முன்புறம் விரிந்திருக்கும் பந்தல், வேலைப்பாடு நிறைந்த பந்தலின் உள், வெளி அலங்காரங்கள், இலை,  பழங்களாலான தோரணங்கள், தென்னம்பாளைகள், பக்கவாட்டில் பல வண்ணங்களில் கண்ணைப் பறிக்கும் சீரியல் பல்புகள், பாடல்களை அதிரவிட்டுக்  கொண்டிருக்கும் ஒலிப்பெருக்கிகள், திடீரென முளைக்கும் கடைகள், கோயிலின் நேரெதிரே பந்தலுக்கு அப்பால், சற்றுத் தொலைவில் சின்னஞ்சிறிய  இடைவெளிகளில் பொங்கல் கிண்டிக் கொண்டிருக்கும் எண்ணிக்கையற்றக் குடும்பங்கள், திரும்பிய பக்கமெல்லாம் மகிழ்ச்சி அல்லது அமைதி பூத்த  முகங்கள் என்று ஒட்டுமொத்த இடமே வண்ணமயமாக மயக்கும்.

பத்து நாட்களுமே மாலை நேரங்களில் திறந்தவெளி அரங்கில் பாட்டுக் கச்சேரி, பட்டிமன்றம், நடனம், நாடகங்கள் போன்ற பல கலைநிகழ்ச்சிகள்  நடைபெறும். பத்தாவது நாள் நடைபெறும் ‘வள்ளி திருமணம்’ நாடகம் மட்டும்  இன்று வரை மாறாமல் தொடர்கிறது.மற்ற மாரியம்மன் கோயில்களைப்  போலவே முளைப்பாரி எடுத்தல், அக்கினிச்சட்டி எடுத்தல், அங்கப்பிரதட்சணம் உள்பட சகலப் பிரார்த்தனைகளும் பிரார்த்தித்தவர்களால்  நிறைவேற்றப்படும். நவதானியங்களைத் தொட்டிகளில் பதித்து, நீர் விட்டுப்  பாதுகாத்து, மாலை நேரங்களில் காப்புக் கட்டி முளைப்பாரி சுமப்பவர்கள்  கும்மியடித்து, ‘தானானே’ பாட்டுப்பாட, செடிகள் ஒரு பக்கம் முளைத்து வளர ஆரம்பிக்கும். ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில்  வரும் அதே ரக ‘தானானே’வையே பெரும்பாலும் இங்கும் கேட்டிருக்கிறேன்.

எட்டாவது நாள் மாலை வேளையில் வைகை ஆற்றுக்கு சென்று சக்திக் கரகம் எடுத்து வந்து ஒவ்வொரு தெருவின் வழியாக மேள தாளத்துடன்  வருபவரை, அந்த தெய்வமே நேரில் வந்தது போன்று பயபக்தியுடன் கூடிய மரியாதையை அளிப்பர் குடியிருப்பு மக்கள். மாலை நேரத்தில் வாசல்  தெளித்து வண்ணங்களால் நிரம்பிய பெரிய கோலங்கள் இட்டு காத்திருப்பர். அத்தனை தூரம் நடந்து சென்று திரும்பி வந்த கால்களுக்கு பலரின் வீட்டு  வாசலில் தயாராக இருக்கும் மஞ்சள் பொடி, வேப்பிலை கலக்கப்பட்ட தண்ணீரை ஊற்றி, அவர் அளிக்கும் விபூதியைப் பெற்றுக் கொள்வர். அதற்கடுத்த  நாள் முளைப்பாரி ஊர்வலம் வரும். பத்தாவது நாள் மீண்டும் அவரவர் தொட்டிச் செடிகள் அவரவர் தலைகளில் சுமந்து வரப்பட்டு வைகை ஆற்றில்  கரைக்கப்படும்.

கரகம் எடுத்து வரும் அன்று மாலையில், ஊற வைத்த பச்சரிசியை உரலில் இட்டு, உலக்கையால் குத்தி எடுத்த மாவை  சல்லடையிலிட்டு சலிப்பர். சற்று ஈரமாக இருக்கும் அந்த சலித்த மாவுடன், மண்டவெல்லம், ஏலக்காய், சுக்குப்பொடி கலந்து ஒரு பாத்திரத்தில்  பத்திரப்படுத்தி வைப்பர். மறுநாள் காலையில் இந்த மாவில் ஒரு பகுதியை எடுத்து வேறொரு பாத்திரத்துக்கு மாற்றி, நடுவில் சிறிதாக உண்டாக்கியப்  பள்ளத்தை நெய்யால் நிரப்பி திரியை இட்டு, கோயிலுக்கு எடுத்து செல்லப்படும்..

மாவிளக்கு... மிகக்குறைவான பொருட்களின் சேர்மானத்தில், அடுப்பில் வைத்து பார்க்கும் எந்த வேலையும் இன்றி, தேங்காய்ச்சில்லுடன் சேர்த்து  சாப்பிடும்போது அற்புதமான சுவையாக மாறிவிடுவதை, சாப்பிட்டவர்கள் அனைவரும் அறிவர். ‘பொங்க வைக்கப்போறோம்’ என்று அக்கம்பக்கத்தில்  உள்ளோர் கோயிலுக்கு போகும்போது, பதிலுக்கு ‘மாவிளக்கு வைக்கப் போறோம் நாங்க’ என்று மிகப்பெருமையாக சின்ன வயதில் சொன்ன ஞாபகம்  இருக்கிறது. பெரிய பாத்திரத்திலிருக்கும் மாவிளக்கு கொஞ்சம் கொஞ்சமாக எடுக்கப்பட்டு, தேங்காய், வாழைப்பழத்துடன், அருகில் பொங்கல்  கொடுத்தவர்களுக்கு எல்லாம் அவர்கள் தந்த பாத்திரத்தில் நிரப்பப்பட்டுக் கொடுக்கப்படும்.

திருவிழாக்காலங்களில் வீதிக்கு வீதி கட்டப்பட்டிருக்கும் ஸ்பீக்கர்கள் வழியாக மாலை நேரங்களில்  வீடுகளை வந்தடையும் ‘தானேன்னே’ பாடல்களுக்கு முன்பாக, ‘ஏற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள்’, ‘கற்பூர நாயகியே கனகவல்லி’,  ‘செல்லாத்தா செல்ல மாரியாத்தா’, ‘தீர்த்தக்கரை மாரியம்மா’ போன்ற பல அம்மன் பாடல்கள் ஒலிக்கும். எட்டு நாட்களில் பக்திப் பாடல்களைத் தவிர  வேறு பாடல் வரிகள் தப்பித்தவறி கூட காதுக்குக் கேட்காது.

ஒன்பதாவது, பத்தாவது நாட்களில் திரைப்படப் பாடல்கள் ஒலிபரப்பாகும். பக்திப் பாடல்களில் இருந்து விடுபட்ட உடன் திரைப்படங்களில் வெளியாகி  புகழ் பெற்ற அம்மன், கோயில் திருவிழா சம்பந்தப்பட்ட பாடல்களில் சிலவற்றை ஊரெல்லாம் கேட்கச் செய்து, ஒரு சமநிலைக்கு கொண்டு  வருவார்.  குடியிருப்பில் கட்டிடங்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரிக்க, முப்பது வருடங்களுக்கு முன்பு பணியாற்றிய பலரும் ஓய்வுபெற்று வேறுவேறு  இடங்களுக்கு சென்றிருக்க, இப்போதெல்லாம் திருவிழாவில் தெரிந்த முகங்கள் தட்டுப்படுவதே அரிதாக உள்ளது.

கோயில் இன்னும் விரிவுபடுத்தப்பட்டு, சுத்தமாக, சுகாதார மாக, பாதுகாப்பாக சமீபத்திய திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. கூட்டத்துக்குள்   கிலோமீட்டராக நீளும் வரிசையில் நகர்ந்து செல்வதற்கு பதிலாக, கோயிலை மட்டும் சுற்றிவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டே, அரிதாக தெரிந்த  முகங்கள்  ஒன்றிரண்டை  அடையாளப்படுத்தி, வீட்டுக்கு வரும்போது வடிந்து விடுகிறது இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கும் சிறிய அளவிலான  திருவிழா ஆர்வம்.  கூட்டத்துடன்  கொண்டாடிக் கும்பிட்டது கடந்த காலமாக மாறி, ஓரிருவருடன் அமைதியாக கோயில் பிரகாரம் இருப்பதைப் பார்க்கும் பொழுதில் மனதில்  பொங்குகிறது கொண்டாட்டம்.

பிடித்தப் பல விஷயங்கள் ஒரே நேரத்தில் நடந்து கொண்டிருப்பது...நடந்து கொண்டிருக்கின்ற விஷயங்கள் அனைத்தும் பிடித்துப்  போவது... இப்படியான மகிழ்ச்சியான மனநிலையும் திருவிழாவும் ஒன்றே.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

கொண்டாடும் மனநிலை வாய்த்தவர்களுக்கு தினந்தோறும் திருவிழா! Empty Re: கொண்டாடும் மனநிலை வாய்த்தவர்களுக்கு தினந்தோறும் திருவிழா!

Post by முரளிராஜா Mon Jan 12, 2015 7:40 am

பிடித்தப் பல விஷயங்கள் ஒரே நேரத்தில் நடந்து கொண்டிருப்பது...நடந்து கொண்டிருக்கின்ற விஷயங்கள் அனைத்தும் பிடித்துப்  போவது... இப்படியான மகிழ்ச்சியான மனநிலையும் திருவிழாவும் ஒன்றே.
எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum